என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செஞ்சூரியன் டெஸ்ட்: இரண்டே நாளில் 30 விக்கெட்- தென்ஆப்பிரிக்காவிற்கு 149 ரன்கள் வெற்றி இலக்கு
Byமாலை மலர்27 Dec 2018 3:54 PM GMT (Updated: 27 Dec 2018 3:54 PM GMT)
செஞ்சூரியனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 149 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான். #SAvPAK
தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் ஆலிவியரின் (6) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ரன்னில் சுருண்டது.
பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. நேற்றும் மட்டும் 15 விக்கெட்டுக்கள் வீழ்ந்தன.
மசூத்
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பவுமா 53 ரன்களும், டி காக் 45 ரன்களும், ஸ்டெயின் 23 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 223 ரன்கள் சேர்த்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தானை விட 42 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த 42 ரன்கள் தென்ஆப்பிரிக்காவிற்கு மிகமிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
42 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் (57), 3-வது வீரராக களம் இறங்கிய ஷான் மசூத் (65) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் 190 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அத்துடன் இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.
இமாம் உல் ஹக்
முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய ஆலிவியர் 2-வது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார். ரபாடா 3 விக்கெட்டும், ஸ்டெயின் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
முதல் இன்னிங்சில் 42 ரன்கள் பின்தங்கியிருந்தால் 148 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 149 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருப்பதால் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீசினால் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்த வாய்ப்புள்ளது.
நேற்று 15 விக்கெட்டுக்கள் வீழ்ந்த நிலையில் இன்றும் 15 விக்கெட்டுக்கள் வீழ்ந்துள்ளன. நாளை எந்தவொரு முடிவு எட்டினாலும் தேனீர் இடைவேளைக்கு முன் போட்டி முடிவடைந்துவிடும்.
பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. நேற்றும் மட்டும் 15 விக்கெட்டுக்கள் வீழ்ந்தன.
மசூத்
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பவுமா 53 ரன்களும், டி காக் 45 ரன்களும், ஸ்டெயின் 23 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 223 ரன்கள் சேர்த்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தானை விட 42 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த 42 ரன்கள் தென்ஆப்பிரிக்காவிற்கு மிகமிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
42 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் (57), 3-வது வீரராக களம் இறங்கிய ஷான் மசூத் (65) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் 190 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அத்துடன் இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.
இமாம் உல் ஹக்
முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய ஆலிவியர் 2-வது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார். ரபாடா 3 விக்கெட்டும், ஸ்டெயின் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
முதல் இன்னிங்சில் 42 ரன்கள் பின்தங்கியிருந்தால் 148 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 149 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருப்பதால் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீசினால் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்த வாய்ப்புள்ளது.
நேற்று 15 விக்கெட்டுக்கள் வீழ்ந்த நிலையில் இன்றும் 15 விக்கெட்டுக்கள் வீழ்ந்துள்ளன. நாளை எந்தவொரு முடிவு எட்டினாலும் தேனீர் இடைவேளைக்கு முன் போட்டி முடிவடைந்துவிடும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X