search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jamabandhi"

    • அளவீடு, பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பித்தால், பல மாதங்கள் அலைகழிக்கின்றனர்.
    • முதியோர், விதவை உதவி தொகை பலருக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    உடுமலை :

    உடுமலையில் நடந்த ஜமாபந்தியில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழங்கிய மனுவில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில், கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்களில் பாதி பஸ்கள் இயக்கப்படுவதில்லை.சர்வே துறையில் அளவீடு, பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பித்தால், பல மாதங்கள் அலைகழிக்கின்றனர்.

    முதியோர், விதவை உதவி தொகை பலருக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உடுமலை தங்கம்மாள் ஓடை பகுதியில் கான்கிரீட் கரை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பருவ மழைக்கு முன் முடிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பா.ஜ.க., சார்பில் வழங்கிய மனுவில், கபூர்கான் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.இந்திய கம்யூனிஸ்டு சார்பில், கணக்கம்பாளையம், கணேசபுரம் பகுதியில் 20 ஆண்டுக்கும் மேலாக வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

    மேலும் சின்ன வீரம்பட்டி பகுதி நேர ரேஷன் கடையை முழு நேர கடையாக மாற்றவும், இந்திராநகரில் ஓட்டுச்சாவடி அமைக்க வேண்டும்.உடுமலை, சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை, அய்யம்பாளையம், மடத்துக்குளம் தாலுகா, தாந்தோணி, மைவாடி, ராஜாவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த ஒரு ஆண்டாக மர்ம விலங்குகள் கடித்து நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகள் இறந்துள்ளன. பெருமளவு விவசாயிகள் பாதித்துள்ள நிலையில் இதற்கு தீர்வு காணவும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

    • பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகத்தில் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமையில் ஜமாபந்தி நடந்தது.
    • இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 86 மனுக்களை வழங்கினர்.

    பரமத்தி வேலூர்:

    பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகத்தில் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமையில் ஜமாபந்தி நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 86 மனுக்களை வழங்கினர். பொதுமக்கள் கொடுத்த 12 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுத்து ஜூன் 2-ந் தேதி ஜமாபந்தி முடிவதற்குள் தீர்வு வழங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் வி.ஏ.ஓ.,க்களிடம் உள்ள கிராம புலப்பட தகவல் பதிவேடு கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் பயிரிடப்பட்ட பயிர்களில் விவரங்கள் அடங்கிய பதிவேடு, பட்டா மாறுதல் பதிவேடு, தடையணை பதிவேடு, பிறப்பு ,இறப்பு பதிவேடு, நிலவரி வசூல் பதிவேடு, கிராம அ பதிவேடு உள்ளிட்ட பல்வேறு வகையான பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    இதில் தாசில்தார் கலைச்செல்வி வி.ஏ.ஓ.,க்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

    • அடிப்படை வசதிகள் குறித்த 103 கோரிக்கை மனுக்களை கலெக்டர் சாருஸ்ரீயிடம் அளித்தனர்.
    • 18 கிராமங்களுக்கா வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் பாலையூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட 18 கிராமங்களுக்கான 1432-ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு முதல் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நேற்று நடைபெற்றது.

    இதில் பாலையூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட பாலையூர், மானங்காத்தான் கோட்டகம், வெங்க த்தான்குடி, குறிச்சிமூலை-2, நாராயணபுரம் களப்பால், குறிச்சிமூலை-1, நருவளிகளப்பாள், தெற்கு நாணலூர், பெருவிடைமருதூர், குலமாணிக்கம், பெருகவாழ்ந்தான்-1, மண்ணுக்குமுண்டான், தேவதானம், பெருகவாழ்ந்தான்-2, செருகளத்தூர், சித்தமல்லி, நொச்சியூர், புத்தகரம் ஆகிய 18 கிராமங்களுக்கான தீர்வாயத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், பட்டா உட்பரிவு மாற்றம், அடிப்படை வசதிகள் குறித்த 103 கோரிக்கை மனுக்களை கலெக்டர் சாருஸ்ரீயிடம் அளித்தனர்.

    இதில் 2 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, 2 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டார்.

    இதில் முத்துப்பேட்டை தாசில்தார் மகேஷ்குமார், தனி தாசில்தார்கள் மலர்கொடி, சிவக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் வசுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் நேற்று முதல் வருவாய் தீர்வாயம் என்று அழைக்கப்படும் ஜமாபந்தி தொடங்கியது.
    • இதில் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதன் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரி களிடம் நடவடி க்கை எடுக்க அறிவுறுத்தினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் நேற்று முதல் வருவாய் தீர்வாயம் என்று அழைக்கப்படும் ஜமாபந்தி தொடங்கியது.

    கோரிக்கை மனு

    இதில் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதன் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரி களிடம் நடவடி க்கை எடுக்க அறிவுறுத்தினர்.

    நேற்று முதல் நாள் பாளை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனு க்களை பெற்றுக் கொண்ட நிலை யில் இன்று 2-வது நாளாக அங்கு நடந்த கூட்ட த்தில் கலெக்டர் பங்கேற்றார்.

    2-ம் நாள்

    2-ம் நாளான இன்று பாளை வட்டம் மேலப்பா ட்டம் குறு வட்டத்திற்குட்பட்ட அரியகுளம், திருத்து, கீழப்பாட்டம், கான்சாபுரம், மருதூர், கீழநத்தம், நடுவக்கு றிச்சி, சீவலப்பேரி, அவினா ப்பேரி உள்ளிட்ட கிராமங்க ளில் ஜமாபந்தி நடைபெற்றது.

    இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரி க்கை தொடர்பான மனுக்களை அளித்தனர். பாளை தாலுகா அலுவல கத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் தாசில்தார் சரவணன், உதவி இயக்கு னர்கள் வாசு தேவன், கிருஷ்ண குமார், வருவாய் ஆய்வாளர் ராஜசெல்வி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஜமாபந்தி கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தல்
    • வந்தவாசி தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த பெலகாம்பூண்டி கிராம பழங்குடியினர் மயானத்துக்கு பாதை வசதி கோரி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள மயானத்துக்கு செல்ல உரிய பாதை வசதி இல்லை. எனவே மயானத்துக்கு பாதை வசதி செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

    • பெறப்பட்ட மனுக்கள் மீது உதவி கலெக்டர் விசாரணை
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் தச்சம்பட்டு பகுதியில் ஜமாபந்தி நேற்று நடைபெற்றது.

    திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி தலைமை தாங்கினார். தாசில்தார் சரளா, தலைமையிடத்து துணை தாசில்தார் சாந்தி, மண்டல துணை தாசில்தார் சிவலிங்கம், வருவாய் ஆய்வாளர் பாரதி உட்பட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஜமாபந்தியில் காட்டாம்பூண்டி, சின்னகல்லப்பாடி, தலையாம்பள்ளம், நரியாப்பட்டு, பழையனூர், கண்டியங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.

    பெறப்பட்ட மனுக்கள் மீது உதவி கலெக்டர் மந்தாகினி விசாரணை மேற்கொண்டார். மேலும் கிராமங்களின் வருவாய் ஆவணங்களையும் தணிக்கைக்கு உட்படுத்தினார்.

    • பொதுமக்களிடம் இருந்து 125 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
    • 3 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயத்தில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து 125 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

    காங்கயம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் திருப்பூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் மகாராஜ் தலைமையில், ஊதியூா் உள்வட்டதைச் சோ்ந்த ஆரத்தொழுவு, வட சின்னாரிபாளையம், சம்மந்தம்பாளையம், காங்கயம்பாளையம், குருக்கபாளையம், நெழலி, ஊதியூா், முதலிபாளையம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து 125 போ் மனு அளித்தனா். இந்த மனுக்களில் முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட 3 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.

    • திருச்சுழியில் ஜமாபந்தி 2-ந் தேதி வரை நடக்கிறது.
    • மண்டல துணை வட்டாட்சியர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நேற்று முதல் வருகிற 2-ந் தேதி வரை ஜமாபந்தி நடைபெறும் என கலெக்டர் ஜெயசீலன் அறிவித்திருந்தார். அதன்படி திருச்சுழி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. இதில் சென்னிலைகுடி, புலிக்குறிச்சி, விடத்தக்குளம் உள்ளிட்ட 8 வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட 28 வருவாய் மற்றும் கூடுதல் வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

    இதில் தாசில்தார் பாண்டி சங்கர் ராஜா, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சிவக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வருவாய்த் துறையின் ஓராண்டு கணக்கு விவரங்களை தணிக்கை செய்து சரி பார்த்து ஒப்புதல் அளிக்க ஜமாபந்தி நடத்தப்படுகிறது.
    • ஜமாபந்தியில் அவற்றை சமர்ப்பித்து ஜமாபந்தி அலுவலரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

    உடுமலை:

    உடுமலையில் வரும் 23-ந் தேதி ஜமாபந்தி துவங்குகிறது.வருவாய் துறை சார்பில் உடுமலை தாலுகாவில் வரும் 23-ந் தேதி ஜமாபந்தி துவங்குகிறது.வருவாய்த் துறையின் ஓராண்டு கணக்கு விவரங்களை தணிக்கை செய்து சரி பார்த்து ஒப்புதல் அளிக்க ஜமாபந்தி நடத்தப்படுகிறது.

    வருவாய் கிராம அளவில் பட்டா ,சிட்டா, புல வரைபடம் ,அ பதிவு, பிறப்பு, இறப்பு ,விவசாயப் பணி மகசூல் என 24 வகையான பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன. மேலும் நிலஅளவைக்கு பயன்படுத்தப்படும் நில அளவை சங்கிலிகளும் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ளன.

    ஜமாபந்தியில் அவற்றை சமர்ப்பித்து ஜமாபந்தி அலுவலரிடம் ஒப்புதல் பெற வேண்டும். மேலும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் முன்னிலையில் நடக்கும் ஜமாபந்தி நிகழ்வில் கிராம வாரியாக பொது மக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு உடனடி தீர்வு காணப்படுகிறது.

    அவ்வகையில் உடுமலை வட்டத்தில் உள்ள கிராமங்களின் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) திருப்பூர் தனி துணை ஆட்சியர் ( சமூக பாதுகாப்பு திட்டம்) தலைமையில் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் 23-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    23-ந்தேதி உடுமலை உள் வட்டம் சின்ன வீரம்பட்டி, குறுஞ்சேரி ,அந்தியூர் ,வெனசுப்பட்டி, கணபதிபாளையம், உடுமலை, பெரியகோட்டை ,கணக்கம்பாளையம், தென்பூதி நத்தம், பூலாங்கிணறு ,ராகல் பாவி, ரா .வேலூர் ,வடபுதினத்தம், போடி பட்டி, கணக்கம்பாளையம், 1 கணக்கம்பாளையம் 2 ஆகிய கிராமங்கள்.

    24 ந் தேதி குறிச்சி கோட்டை உள் வட்டம் ஜல்லிபட்டி, லிங்கம்மாவூர், வெங்கடாபுரம் ,சின்ன குமாரபாளையம். குறிச்சிக்கோட்டை, பள்ளபாளையம், ஆலாம்பாளையம், தும்பலபட்டி, தளி , போகி கவுண்டன் தாசர்பட்டி ,குரல் குட்டை, குருவப்பநாயக்கனூர், ஆண்டிய கவுண்டனூர் 1, ஆண்டிய கவுண்டனூர் 2,மானுப்பட்டி,எலையமுத்தூர், கல்லாபுரம் உள்ளிட்ட கிராமங்கள்.

    25 ந் தேதி பெரிய வாளவாடி உள் வட்டம் வலைய பாளையம், எரிசனம்பட்டி,கொடுங்கியம் ,தின்னப்பட்டி, சர்க்கார் புதூர், ரெட்டிபாளையம், ஜிலேபி நாயக்கன்பாளையம், அரசூர் ,கிருஷ்ணாபுரம் ,சின்ன பாப்பனூத்து,பெரிய பாப்பனூத்து ,உடுக்கம்பாளையம், புங்க முத்தூர் ,செல்லப்பம்பாளையம், தேவனூர் புதூர் ,ராவணாபுரம் ,பெரிய வாளவாடி, சின்ன வாளவாடி, தீபாலப்பட்டி ,மொடக்குபட்டி உள்ளிட்ட கிராமங்கள்.

    26 ந் தேதி குடிமங்கலம் உள் வட்டம் பூளவாடி ,ஆத்து கிணத்துப்பட்டி, கொண்டம்பட்டி, பெரிய பட்டி ,குப்பம்பாளையம் ,ஆமந்தகடவு, வடுகபாளையம் ,குடிமங்கலம், கோட்டமங்கலம், பொன்னேரி, புக்குளம் உள்ளிட்ட கிராமங்கள்.

    30ந் தேதி பெதப்பம்பட்டி உள் வட்டம் மூங்கில் தொழுவு ,வாகை தொழுவு ,வீரம்பட்டி, பொங்கல் நகரம், சோமவாரப்பட்டி, தொட்டம்பட்டி, முக்கூடு, ஜல்லிபட்டி, கொசவம்பாளையம், அணிக்கடவு, விருகல்பட்டி ,புதுப்பாளையம், இலுப்ப நகரம் ,பண்ணை கிணறு ஆகிய கிராமங்கள்.

    • சேலம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா தலைமையில் கடந்த 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 3 நாட்கள் ஜமாபந்தி நடைபெற்றது.
    • ஜமாபந்தி முகாமில் கடந்த 3 நாட்களில் பொது மக்களிடம் இருந்து 151 மனுக்கள் பெறப்பட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் மேலாண்மைத் துறை சார்பில் சேலம் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா தலைமையில் கடந்த 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 3 நாட்கள் ஜமாபந்தி நடைபெற்றது.

    முகாமில் ஏற்காடு தாசில்தார் தாமோதரன், தனி தாசில்தார் தீபசித்தரா, துணை தாசில்தார் ஹரிபிர சாத் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஜமாபந்தி முகாமில் கடந்த 3 நாட்களில் பொது மக்களிடம் இருந்து 151 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா மற்றும் துணை ஆய்வுக்குழு அலுவலர் முருகேசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அந்த மனுக்களில் வாரிசு சான்று, பட்டா மாறுதல், இறப்புச் சான்றிதழ் உட்பட்ட மனுக்களில் 18 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. அதை தொடர்ந்து தீர்வு காணப்பட்ட மனுக்களின் சான்றிதழ்களை பயனாளர்களுக்கு நேற்று ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா வழங்கினார்.

    மேலும் மீதமுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு விரைவில் தீர்வு காண வழிவகை செய்யப்படும் என்று ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா கூறினார்.

    • மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துணை கலெக்டர் நாணயம் பங்கேற்று மனுக்கள் பெற்றார்.
    • முதல் நாள் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் குறு வட்டத்துக்குட்பட்ட மீரான்குளம் உட்பட்ட கிராமமக்களிடம் பட்டாமாறுதல், முதியோர் உதவிதொகை கேட்டு 145 மனுக்கள் பெறப்பட்டன.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வட்டத்தில் ஜமாபந்தி முகாம் நேற்று தொடங்கியது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துணை கலெக்டர் நாணயம் பங்கேற்று மனுக்கள் பெற்றார்.

    முதல் நாள் ஸ்ரீவெங் கடேஸ்வரபுரம் குறு வட்டத்துக்குட்பட்ட மீரான்குளம், 1, 2 கிராமம், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், கருங்கடல், கட்டாரிமங்கலம், பழங்குளம் கிராமமக்களிடம் பட்டாமாறுதல், முதியோர் உதவிதொகை கேட்டு 145 மனுக்கள் பெறப்பட்டன.

    இதில் தாசில்தார் ரதிகலா, தங்கையா, கலெக்டர் அலுவலக மேலாளர் இளங்கோ, அலுவலர்கள் ஜவகர்லால், ஜெயச்சந்திரன், பழனி வேலாயுதம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலாதேவி, மாசானமுத்து உள்ளிட்ட வர்கள் பங்கேற்ற னர்.

    2-ம் நாளான இன்று ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் குறுவட்டம் பிடானேரி, எழுவரைமுக்கி கிராமம், சாத்தான்குளம் குறு வட்டம் பன்னம்பாறை, சாத்தான்குளம், செட்டி யிருப்பு, புதுக்குளம், ஆகிய கிராமத்துக்கும், நாளை (18-ந்தேதி) நெடுங்குளம், கோமானேரி, கொம்பன்குளம், தச்சமொழி ஆகிய கிராம மக்களுக்கும், பள்ளக்குறிச்சி குறு வட்டத்துக்குள்பட்ட முதலூர், பள்ளக்குறிச்சி, சாஸ்தாவிநல்லூர் ஆகிய கிராமத்துக்கும், 19-ந்தேதி கொம்மடிக்கோட்டை, நடுவக்குறிச்சி, அரசூர் பகுதி 1, 2, திருப்பணி புத்தன்தருவை, படுக்கப்பத்து ஆகிய கிராம மக்களிடமிருந்தும் மனுக்கள் பெறப்படுகிறது.

    • வருவாய்த்துறை அதிகாரிகள் ஆண்டுக்கு ஒருமுறை தணிக்கை செய்யும் ‘ஜமாபந்தி’ முகாம், வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.
    • இன்று அருநூற்றுமலை குறுவட்ட கிராமங்களுக்கும், நாளை காரிப்பட்டி குறுவட்ட கிராமங்களுக்கும், நாளை மறுதினம் வாழப்பாடி குறுவட்ட கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட கிராம நிலவரி கணக்குகளை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆண்டுக்கு ஒருமுறை தணிக்கை செய்யும் 'ஜமாபந்தி' முகாம், வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.

    சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை) கவிதா தலைமையில் நடைபெற்ற முதல் நாள் ஜமாபந்தியில், பேளூர் வருவாய் குரு வட்டத்தைச் சேர்ந்த கிராமங்களின், நிலவரி கணக்குகள் மற்றும் நில உடமை ஆவணங்கள் தணிக்கை செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, முதியோர் உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், இலவச வீட்டு மனை பட்டா கோரி 100-க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர்.

    பேளூர் பேரூராட்சியில் குடியிருந்து வரும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும், பயனாளிகளுக்கு நிறுத்தப்பட்ட முதியோர் உதவித் தொகையை மீண்டும் வழங்க கோரியும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

    வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.

    இன்று அருநூற்றுமலை குறுவட்ட கிராமங்களுக்கும், நாளை காரிப்பட்டி குறுவட்ட கிராமங்களுக்கும், நாளை மறுதினம் வாழப்பாடி குறுவட்ட கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

    ஜமாபந்தியில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து, தகுதி வாய்ந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என, வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ×