search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்கம்
    X

    தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்கம்

    • பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகத்தில் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமையில் ஜமாபந்தி நடந்தது.
    • இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 86 மனுக்களை வழங்கினர்.

    பரமத்தி வேலூர்:

    பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகத்தில் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமையில் ஜமாபந்தி நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 86 மனுக்களை வழங்கினர். பொதுமக்கள் கொடுத்த 12 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுத்து ஜூன் 2-ந் தேதி ஜமாபந்தி முடிவதற்குள் தீர்வு வழங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் வி.ஏ.ஓ.,க்களிடம் உள்ள கிராம புலப்பட தகவல் பதிவேடு கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் பயிரிடப்பட்ட பயிர்களில் விவரங்கள் அடங்கிய பதிவேடு, பட்டா மாறுதல் பதிவேடு, தடையணை பதிவேடு, பிறப்பு ,இறப்பு பதிவேடு, நிலவரி வசூல் பதிவேடு, கிராம அ பதிவேடு உள்ளிட்ட பல்வேறு வகையான பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    இதில் தாசில்தார் கலைச்செல்வி வி.ஏ.ஓ.,க்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×