search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jamabandhi"

    • தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது.
    • விசுவநாதன் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாசில்தார் அலு வலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் தனித்துணை கலெக்டரும், மாவட்ட ஜமா பந்தி அலுவலருமான விசுவ நாதன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். தாசில்தார் நெகருன்னிசா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ஒன்றிய குழு தலைவர்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் நிகழ்ச்சியாக அக லூர், முக்குணம், தாமனூர், சின்னகரம், அருகாவூர், பணப்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஜமாபந்தி மேலாளர் கண்ணன் தனி தாசில்தார்கள் கோவிந்த ராஜ், மனோகரன் துணை தாசில்தார்கள் குணசேகரன், உமாமகேஸ்வரி, ரவி வட்ட வழங்கல் அலுவலர் வெங்க டேசன் வட்ட துணை ஆய்வாளர் முனியன் வருவாய் ஆய்வாளர்கள் கண்ணன், பரமசிவம், பழனி, கார்த்திகேயன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். நேற்று 22 கிராமங்களில் உள்ள பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. மேலும் 22 கிராமங்களின் கணக்குகளும் சரிபார்க்கப்பட்டன. தொடர்ந்து இன்று கள்ளப்புலியூர், மேலத்திப் பாக்கம், எடமலை, பென்னகர் உட்பட 20 கிராமங்களின் கணக்குகள் சரி பார்க்கப்பட்டு பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட உள்ளன. ஜமா பந்தி வருகிற 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை முதல் ஜமாபந்தி தொடங்கி நடை பெற உள்ளது.
    • பொது மக்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் வழங்க அனுமதிக்கப்படுவார்கள்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களிலும் 1432-ம் பசலிக்கான ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் நாளை (புதன்கிழமை) தொடங்கி வருகிற 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. வருவாய் தீர்வாயம் நடத்த அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற உள்ள வருவாய் தீர்வாயம் பற்றிய விவரம் வருமாறு:-

    தரங்கம்பாடி தாலுகாவில் வருவாய் தீர்வாய அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் நாளை முதல் 16-ந் தேதி வரை அங்கு ஜமாபந்தி நடத்துகிறார்.

    குத்தாலம் தாலுகாவிற்கு வருவாய் தீர்வாய அலுவலராக, மாவட்ட வழங்கல் அலுவலர் நாளை முதல் 15-ந் தேதி வரையும், மயிலாடுதுறை தாலுகாவிற்கு வருவாய் தீர்வாய அலுவலராக மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் நாளை முதல் 15-ந் தேதி வரையும், சீர்காழி தாலுகாவிற்கு வருவாய் தீர்வாய அலுவலராக சீர்காழி வருவாய் கோட்ட அலுவலர் நாளை முதல் 22-ந் தேதி வரையும் ஜமாபந்தி நடத்த உள்ளனர்.

    வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்த்து சமூக இடைவெளி விட்டு வரிசையில் சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் வழங்க அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கீழக்கரை தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது.
    • 9 கிராமங்களில் 8-ந் தேதி ஜமாபந்தி நடைபெற உள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று (6-ந்தேதி) தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை (சனி, ஞாயிறு, திங்கள், விடுமுறை நாட்கள் தவிர) ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, கீழக்கரை, ராமேசுவரம், ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் தாலுகா வாரியாக நடைபெற உள்ளது. மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் சிவசுப்ரமணியன் தலைமையில் உத்திரகோசமங்கை உள் வட்டம் எக்ககுடி, பனை குளம், மாலங்குடி, மல்லல், ஆலங்குளம், நல்லிருக்கை, உத்திரகோசமங்கை ஆகிய 7 கிராமங்களில் இன்று ஜமாபந்தி நடந்தது.

    பனையடியேந்தல், வேளானூர், மாணிக்கநேரி, புல்லந்தை, மாயாகுளம், கீழக்கரை, காஞ்சிரங்குடி, குள பதம், இதம்பாடல், ஏர்வாடி ஆகிய 9 கிராமங்களில் நாளை (7-ந் தேதி) நடைபெற உள்ளது. திருப்புல்லாணி, பள்ளமோர்குளம், களரி 1, 2, வெள்ளாமறிச்சுகட்டி, குதக்கோட்டை, களிமண்குண்டு, வண்ணாங்குண்டு, பெரியபட்டினம், ரெகுநாதபுரம் ஆகிய 9 கிராமங்களில் (8-ந் தேதி ) ஜமாபந்தி நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

    • இதில் கலெக்டர் கலந்து கொள்கிறார்
    • ஆண்டிமடம் தாலுக்கா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமையில் ஜமாபந்தி நடைபெறுகின்றது.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், உடையார்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய 4 தாலுக்கா அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெறுகின்றது. உடையார்பாளையம் வட்டாட்சியர்அலுவலகத்தில் வரும் 13ம் தேதி மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் துவங்குகின்றது. இருகையூர், காரைகுறிச்சி, வாழைக்குறிச்சி, தென்கச்சிபெருமாள்நத்தம், தா.பழுர், கோடங்குடி, நாயகனைப்பிரியாள், இடங்கன்னி, உதயநத்தம், அனைக்குடம், சோழமாதேவி, கோடாலிகருப்பூர், வேம்புக்குடி ஆகிய கிராமங்களில் 13ந்தேதியும், 14ம் தேதி மணகெதி, உல்லியக்குடி, வெண்மாண்கொண்டான், பருக்கல், கோவிந்தபுத்தூர், நடுவலூர், சுத்தமல்லி, கீழநத்தம். ஆம்பாபூர். உடையவரிதியனூர், கடம்பூர், சாத்தம்பாடி, ஸ்ரீபுரந்தான் ஆகிய கிராமங்களிலும், 15ம் தேதி பாப்பாக்குடி, தர்மசமுத்திரம், இளையபெருமாள்நல்லூர், குண்டவெளி, முத்துசேர்வைமடம், காட்டாகரம், குலோத்துங்கநல்லூர், தழுதாயமேடு, குருவாலப்பர்கோவில் ஆகிய கிராமங்களுக்கும், 16ம் தேதி தேவமங்கலம், அங்குராயநல்லூர், சூரியமணல், இடையார், வாணதிரையான்பட்டிணம். புpலிச்சைகுழி, உடையார்பாளையம், கோழங்குறிச்சி, தத்னூர் ஆகிய கிராமங்களுக்கும், 20ம் தேதி எரவாங்குடி, தண்டலை, கீழக்குடியிருப்பு, பிராஞ்சோரி, பிச்சனூர், வெட்டியர்வெட்டு, ஆமணக்கம்தோண்டி, உட்கோட்டை, பெரியவளையம், ஜெயங்கொண்டம் ஆகிய கிராமங்களிலும் நடைபெறுகிறது.

    ஆண்டிமடம் தாலுக்கா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமையில் ஜமாபந்தி நடைபெறுகின்றது. 13ம் தேதி ஓலையூர், ஆத்துக்குறிச்சி, ஸ்ரீராமன், ராங்கியம், சிலுவைச்சேரி, அழகாபுரம், ஆண்டிமடம், விளந்தை, வரதராஜன்பேட்டை, பெரியகிருஷ்ணாபுரம், திருகளப்பூர், அணிக்குதிச்சான் ஆகிய கிராமங்களுக்கும், 14ம் தேதி சிலம்பூர், இடையக்குறிச்சி, அய்யூர், கூவத்தூர், காட்டாத்தூர், குவாகம், கொடுக்கூர், மருதூர், வாரியங்காவல், தேவனூர், இலையூர், மேலூர் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகின்றது.

    செந்துறை தாலுக்கா அலுவலகத்தில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் தலைமையில் ஜமாபந்தி நடைபெறுகின்றது. 13ம் தேதி ஆணந்தவாடி, உஞ்சினி,மருவத்தூர், பெரியகுறிச்சி, வஞ்சினாபுரம், நமங்குணம், நக்கம்பாடி, செந்துறை ஆகிய கிராமங்களுக்கும், 14ம் தேதி சிறுகளத்தூர், பொண்பரப்பி, நாகல்குழி, பரணம், கிளிமங்கலம், இரும்புலிக்குறிச்சி, கீழமாளிகை, பிலாக்குறிச்சி, சிறுகனூர் ஆகிய கிராமங்களுக்கும், 15ம் தேதி சன்னாசிநல்லூர், தளவாய், ஆலத்தியூர், ஆதனக்குறிச்சி, மணக்குடையான், அயன்தத்னூர், மணப்பத்தூர், அசாவீரன்குடிக்காடு, தொளார் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகின்றது.

    அரியலூர் தாலுகா அலுவலகத்தில் கோட்டாட்சியர் இராமகிருஷ்ணன் தலைமையில் 13ம் தேதி ஜமாபந்தி துவங்குகின்றது. பொட்டவெளி, இலுப்பையூர், இராயம்புரம், சென்னிவணம், ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், அமீனாபாத், அரியலூர் வாலாஜாநகரம், கயர்லாபாத், கல்லங்குறிச்சி, கடுகூர், அயன்ஆத்தூர், பெரியநாகலூர், தேளுர், காவனூர், விளாங்குடி ஆகிய கிராமங்களுக்கும், 14ம் தேதி நாகமங்கலம். ரெட்டிபாளையம், புதுபாளையம், சிறுவளுர், கருப்பூர்சேனாபதி, இடையத்தான்குடி, பெரியதிருக்கோணம், ஆலந்துறையார்கட்டளை, கருப்பிலாகட்டளை, அருங்கால், ஆண்டிபட்டாக்காடு, புங்கங்குழி, ஓரியூர் ஆகிய கிராமங்களுக்கும், 15ம் தேதி மல்லூர், வாரணவாசி, பார்ப்பனச்சேரி, பூண்டி, மேலப்பழுர், கீழப்பழுர், கீழையூர், சாத்தமங்கலம், அயன்சுத்தமல்லி, வெங்கனூர், சன்னாவூர், பளிங்காநத்தம், கரைவெட்டி, கீழக்காவாட்டாங்குறிச்சி, வெற்றியூர் ஆகிய கிராமங்களுக்கும், 16ம் தேதி கோவில்எசனை, எலந்தைகூடம், குலமாணிக்கம், கண்டிராதீத்தம், திருமழப்பாடி, அண்ணிமங்கலம், மஞ்சமேடு, திருமானூர், வடுகபாளையம் ஆகிய கிராமங்களுக்கும், 20ம் தேதி விழுப்பணங்குறிச்சி, கீழகொளத்தூர், சின்னபட்டாக்காடு, கோவிலூர், சுள்ளங்குடி, ஏலாக்குறிச்சி, அழகியமணவாளம், காமரசவல்லி, தூத்தூர் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகின்றது.

    • நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. வருவாய் தீர்வாய அலுவலரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருமான முரளி தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக சு.ரவி எம் எல் ஏ கலந்து கொண்டார். பெறப்பட்ட மனுக்ளை ஆய்வு செய்து அதில் தேர்வு செய்யப்பட்ட 222 பயனாளிகளுக்கு 91 லட்சத்து 32 ஆயிரத்து 71 ரூபாய் மதிப்பிலான ஒய்வுதியம், இலவச வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, எஸ்.டி.,சாதி சான்றிதழ், தையல் எந்திரம் உள்ளிட்ட நல திட்ட உதவிகளை வழங்கினார்.

    கூட்டத்தில் திமுகவை சேர்ந்த அரக்கோணம் ஒன்றிய குழு பெருந்தலைவர் நிர்மலா சவுந்தர், தாசில்தார்கள் சண்முகசுந்தரம், கந்திர் பாவை, வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரி, வருவாய் துறையினர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.63 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழக்கப்பட்டது
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் ஆண்டுக்கான ஜமாபந்தி நிறைவு விழா நேற்று நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். துணை தாசில்தார்கள் ரமேஷ், சுபிச்சந்தர், வாசுகி, வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர்கள் பலராமபாஸ்கர், மஞ்சுநாதன், சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தாசில்தார் விஜயகுமார் அனைவ ரையும் வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு 25 நபர்களுக்கு ரூ. 63 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, அரசு வழக்கறிஞர்கள் எஸ்.விஜய குமார், கே.லோகநாதன், மருத்துவ அலுவலர் மாறன்பாபு, வேளாண்மை உதவி இயக்குனர் உமாசங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துரைசெல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாமிநாதன் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 1432 -ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி வருகின்ற 6-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது.
    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 5, 12, 19 -ந்தேதி ஆகிய திங்கள் கிழமைகளில் நடைபெறாது என தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட த்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் 1432 -ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி வருகின்ற 6-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் தவிர்த்து மற்ற நாட்களில் வருவாய் தீர்வாய அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது. அதன்படி, மாவட்ட கலெக்டர் தலைமையில் கள்ளக்குறிச்சி வட்டத்தில் வருகிற 5-ந் தேதி முதல் 12 -ந் தேதி வரையிலும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் உளுந்தூ ர்பேட்டை வட்டத்தில் 5 -ந் தேதி முதல் 19-ந் தேதி வரையிலும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் திருக்கோவிலூர் வட்டத்தில் 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையிலும், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையில் கல்வராய ன்மலை வட்டத்தில் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரையிலும், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா தலைமையில் சின்னசேலம் வட்டத்தில் 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையிலும், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் யோகஜோதி தலைமையில் சங்கராபுரம் வட்டத்தில் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறவுள்ளது.

    மேலும், 5-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவல கங்களில் வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் வருவாய்துறை தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். ஜமாபந்தி நடைபெறுவதால், மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 5, 12, 19 -ந்தேதி ஆகிய திங்கள் கிழமைகளில் நடைபெறாது என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கை–கள் அடங்கிய மொத்தம் 308 பேர் மனு கொடுத்தனர்.
    • வட்ட வழஙகல் அலுவலர் செந்தில் பிரபு, வருவாய் ஆய்வாளர்கள் சரவணன், பாரதி, செல்வி, பொற்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தாராபுரம்:

    தாராபுரம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன் தலைமையில் கன்னிவாடி, தாராபுரம், மூலனூர், அலங்கியம் உள்ளிட்ட வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கல்வி உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 308 பேர் மனு கொடுத்தனர். அதில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட ஒரு சில மனுக்களுக்கு மட்டும் உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்தி அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றபட உள்ளது.இந்த நிகழ்ச்சியின் போது தாராபுரம் தாசில்தார் ஜெகஜோதி, தலைமையிடத்து துணை தாசில்தார் பரமேஷ், மண்டல துணை தாசில்தார் மகேஸ்வரி, வட்ட வழங்கல் அலுவலர் செந்தில் பிரபு, வருவாய் ஆய்வாளர்கள் சரவணன், பாரதி, செல்வி, பொற்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கணவனை இழந்த பெண்ணுக்கு இயற்கை மரண உதவித்தொகை
    • சப்- கலெக்டர் வழங்கினார்

    நெமிலி,

    நெமிலி தாலுகா, நாகவேடு கிராமத்தில் வசித்து வரும் பன் னீர்செல்வம் என்பவரின் மனைவி உமா நெமிலி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் இயற்கை மரண உதவித்தொகை கேட்டு மனு கொடுத்தார்.

    அவரின் மனு பரிசீலிக்கபட்டு வருவாய் தீர்வாய அலுவலரும், சப்-கலெக்ட ருமான பாத்திமா இயற்கை மரண உதவித்தொகை ரூ.20 ஆயிரத்திற்கான ஆணையை வழங்கினார்.

    இதில் நெமிலி தாசில்தார் பாலசந்தர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆனந்தன், மண்டல துணை தாசில்தார் பாஸ்கரன், தலை மையிடத்து தாசில்தார் பன்னீர்செல்வம், நாகவேடு கிராம நிர்வாக அலுவலர் சதிஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • 15 வருவாய் ஆவண கணக்குகளை ஆய்வு
    • கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்

    சோளிங்கர் :

    சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் சோளிங்கர் உள்வட்டத்திற்குட்பட்ட சோளிங்கர், சோம சமுத்திரம், வெங்குப்பட்டு, பரவத்தூர் உள்ளிட்ட 15 வருவாய் கிராமங்களின் வருவாய் ஆவண கணக்குகளை ஆய்வு செய்தார். பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

    பொது மக்கள் அளித்த மனுக்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டது.

    சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள நீர்நிலை மற்றும் ஏரி நீர் பாசன கால்வாயை ஆக்கிரமித்து தனிநபர் கட்டியுள்ள கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து நக ராட்சி முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மற்றும் அரசு மருத்துவமனை அருகே ஏரி பாசன கால்வாயில் கட் டப்பட்டுள்ள பொதுப்பணித்துறை கட்டிடத்தை அகற்றி நீர் நிலை மற்றும் ஏரி பாசன கால்வாய்களை பாதுகாக்க வேண் டும் என காங்கிரஸ் நகர தலைவர் டி.கோபால் மனு அளித்தார்.

    கலெக்டர் அலுவலக பொதுமேலாளர் (நீதியியல்) விஜய குமார், தாசில்தார் ஆனந்தன், மண்டல துணை தாசில்தார் அருட்செல்வம், வருவாய் ஆய்வாளர் தமிழரசி, வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், கிராமநிர்வாக அலுவலர்கள் ராஜகோபால், சானு, கணேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நில அளவிற்காக வைக்கப் பட்டிருந்த நில அளவீடு சங்கிலியை மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் பார்வையிட்டு உறுதி செய்தார்.

    • நேற்று கூடலூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட இனாம்கோவில்பட்டி, தென்மலை பாகம்-1, பாகம்-2, ஆகிய கிராமங்களில் மனுக்கள் பெறப்பட்டன.
    • குடிமைப்பொருள் வழங்கல்துறை மூலமாக ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) 10 நபர்களுக்கும், மொத்தம் 35 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 83 ஆயிரம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகாவில் சிவகிரி, வாசுதேவநல்லூர், கூடலூர் ஆகிய 3 வருவாய் குறுவட்ட பகுதிகள் உள்ளன. சிவகிரி தாலுகா அலுவலகத்தில் கடந்த 24-ந் தேதி தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சங்கர நாராயணன் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது.

    முதல் நாளன்று வாசுதேவநல்லூர் வருவாய் குறுவட்டத்திற்கு உட்பட்ட கிராமங்கள் சுப்பிரமணியபுரம், சங்கனாபேரி, வாசு தேவநல்லூர், நாரணபுரம் பாகம்-1, பாகம்-2, திருமலாபுரம் ஆகிய கிராமங்களுக்கு சிவகிரி தாலுகா அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டன. 25-ந் தேதி(வியாழக்கிழமை) சிவகிரி வருவாய் குறுவட்டத்திற்கு உட்பட்ட விஸ்வநாதபேரி பாகம்-1, பாகம்-2, சிவகிரி பாகம்-1, பாகம்-2, ராயகிரி பாகம்-1, பாகம்-2, ராமநாத புரம் ஆகிய கிராமங்களில் மனுக்கள் பெறப்பட்டன. நேற்று கூடலூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட இனாம்கோவில்பட்டி, தென்மலை பாகம்-1, பாகம்-2, கூடலூர், நெல்கட்டும்செவல், பட்டக்குறிச்சி, அரியூர் ஆகிய கிராமங்களில் மனுக்கள் பெறப்பட்டன. பொது மக்களிடம் இருந்து ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், குடிநீர் இணைப்பு, கழிப்பிட வசதி போன்ற கோரிக்கைகள் அடங்கிய 253 மனுக்கள் பெறப்பட்டன.

    இதில் இயற்கை மரண உதவித்தொகை 9 பேருக்கும், விபத்து மரண உதவித் தொகையாக ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் மற்றும் முதியோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கிட ஆணையும் பிறப்பிக்கப்பட்டன. குடிமைப்பொருள் வழங்கல்துறை மூலமாக ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) 10 நபர்களுக்கும், மொத்தம் 35 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 83 ஆயிரம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சிவகிரி தாசில்தார் ஆனந்த், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக தலைமை உதவி யாளர் செய்யது அலி பாத்திமா மில்லத், சிவகிரி தலைமை யிடத்து துணை தாசில்தார் சரவணன், மண்டல துணைத் தாசில்தார் வெங்கடசேகர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுடலை மணி, குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் சாந்தி, வருவாய் ஆய்வாளர்கள் கூடலூர் கோபாலகிருஷ்ணன், வாசு தேவநல்லூர் வள்ளி யம்மாள், சிவகிரி சரவணக்குமார், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் வீரசேகரன், ஜெயபிரகாஷ், சங்கரவடிவு, பாக்கியராஜ், உதவியாளர்கள் அழகுராஜா, வேல்முருகன், முனியாண்டி, முத்துசாமி, அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சங்கரநாராயணன் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் உரிய தகவல் அளிக்கப்படும் என கூறினார்

    • அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் நடந்தது
    • மனு அளிக்க குவிந்த மக்கள்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் வருடாந்திர ஜமாபந்தி நடைப்பெற்று வருகிறது.

    வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமையிலும், அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீரா பென் காந்தி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற கூட்டத்தில் அணைக்கட்டு பிடிஓக்கள் சுதாகரன், சாந்தி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் முதலாவதாக அணைக்கட்டு, ஊசூர், பள்ளிகொண்டா, அகரம், ஒடுகத்தூர் ஆகிய 5 உட்கோட்டத்திற்க்கு தனிதனியாக நடைப்பெற்று வருகின்றது.

    3-வது நாளான நேற்று பள்ளிகொண்டா உட்கோட்டத்திற்க்கு உட்பட்ட மக்கள் தங்களின் குறைகளை மனு அளித்தனர்.

    இதில் நேற்று மட்டும் 115 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை அளிக்கும் பெரும்பாலான மக்கள் இலவச வீட்டுமனை பட்டா வேண்டி மனுக்களை அளித்து வருகின்றனர்.

    ஜமாபந்தி கூட்டத்தில் அளிக்கப்படும் மணுக்களின் மீது நிச்சயம் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையில் மக்கள் அணைக்கட்டு தாலுகா அலுவலகங்களில் குவிந்த வணணம் உள்ளனர்.

    ×