search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் வேண்டுகோள்"

    • தனியார் சங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
    • உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் பள்ளிகளின் வளர்ச்சி பணிகளுக்கு பங்களிப்பை வழங்குவது தொடர்பான அனைத்து தனியார் சங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம் மற்றும் தரத்தை அனைத்து அரசுப்பள்ளிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு தனியார் பங்களிப்பை வழங்கும் முன்னோடி திட்டமான நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து நிலையில் உள்ள அரசுப்பள்ளிகளுக்கும் தரமான கல்வி கிடைத்திடும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தனியார் பங்களிப்புடன் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 1,331 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.இப்பள்ளிகளுக்கு தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் தொழில்துறையினர், முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்திட அடித்தளமாக அமைந்திருக்கிறது. குழந்தைகளின் கல்வி மற்றும் பள்ளிகளின் வளர்ச்சிக்காகத்தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் நீங்கள் செலுத்தக்கூடிய நன்கொடையை பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எந்த பள்ளிகளுக்கு என்ன வசதிகள் தேவை என்கிற விபரம் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் www.nammaschool.tnschools.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நிதியுதவி செய்ய விரும்பும் நிறுவனங்கள் தங்களால் என்ன விதமான வசதிகளை பள்ளிக்கு ஏற்படுத்தி தர முடியும் என்பதை அறிந்து அதற்கேற்ற பங்களிப்பை வழங்கலாம். வழங்குபவர்கள் நிதியாகவும், பொருளாகவும் மற்றும் சேவையாகவும் வழங்கலாம். ஒவ்வொரு நிறுவனத்தின் முதலீடு என்பது அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கான முதலீடாக இருக்கும். இத்திட்டத்தில் நிறுவனங்களால் வழங்கும் பங்களிப்பானது நாளைய சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பயன்படும். திருப்பூர் மாவட்டம் தொழில் நிறுவனங்கள் கொண்ட வளர்ச்சி பெற்ற மாவட்டமாக உள்ளதால் நிறுவங்களின் பங்களிப்போடு பள்ளிகளில் சிறப்பாக பயின்று உயர்கல்வி பயிலும் போது திறமையான மாணவர்களை உருவாக்க முடியும். இன்றைய மாணவர்கள் வருங்காலத்தில் தொழில்முனைவோர்களாக உருவாக்கிடவும், கல்வி மேம்பட பள்ளி உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடவும் நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கிய பங்கு வகிக்கும். எனவே அனைத்து தனியார் நிறுவனங்களை சார்ந்தவர்கள் நல்உள்ளத்துடன் தங்களது பங்களிப்பை தாராளமாக வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் திருப்பூர் மாவட்டத்தில் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம் தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் .அண்ணாதுரை ( உதவி திட்ட அலுவலர்) 94438-56934, தனலட்சுமி (முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்) 88387-99374, கெரோலீன் (மாவட்ட திட்ட ஒருங்கிணை ப்பாளர்) 90804-41057 ஆகியோரை தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களைபெறலாம்.

    மேலும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த தனியார் தொழில் நிறுவனங்கள் தங்களது சமூக பங்களிப்பு நிதியை வழங்கலாம். அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சமூக பங்களிப்பு நிதி வழங்க பொறுப்பு அலுவலர் அருண்பாபுவை 99949-94944 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, பொதுமேலாளர் (மாவட்ட தொழில்மையம்) ராமலிங்கம், இணை இயக்குநர்(மருத்துவ நலப்பணிகள்) கனகராணி, இணை இயக்குநர்கள் (தொழிலகப்பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்) புகழேந்தி, சரவணன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கம், அச்சுக்கூடம் உரிமையாளர்கள் சங்கம், கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம், அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம், ரோட்டரி சங்கம், திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம், உணவு எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம், திருப்பூர் தொழில் பாதுகாப்பு சங்கம் மற்றும் அனைத்து உற்பத்தியாளர்கள் சங்கம், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி ஆற வைத்து குடிக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுேகாள் விடுத்துள்ளார்.
    • டெங்கு காய்ச்சல் என்பது ஏடீஸ் வகை கொசுக்கள் மூலம் பரவுகின்ற வைரஸ் காய்ச்சல் ஆகும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட ககெ்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியினை முன்னிட்டு பல்வேறு வகையான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் என்பது ஏடீஸ் வகை கொசுக்கள் மூலம் பரவுகின்ற வைரஸ் காய்ச்சல் ஆகும். காய்ச்சல், தலைவலி ,கண்களை சுற்றி வலி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, உடம்பில் சிவப்புநிற தடிப்புகள் ஆகிய அறிகுறிகள் இருந்தால் டெங்கு காய்ச்சலாக இருக்கலாம். இவைகள் பொதுவாக தானாகவே சரியாகிவிடும் என்றாலும் சில சமயங்களில் இளம் வயதினரையும் முதியோர்களையும் அதிக அளவில் தாக்கி இறப்பினை உண்டாக்கும் தன்மை உடையது.

    இந்நோயினை பரப்பும் கொசுக்கள் திறந்த வெளியில் தூக்கி எறியப்படும் தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், உடைந்த மண்பானைகள், டீ கப்புகள், பிளாஸ்டிக் பைகள், வாகன டயர்கள் போன்றவற்றில் மழை நீர் போன்றவை தேங்குவதாலும் வீடுகளில் பயன்படுத்தப்படும் நீர் கொள்கலன்கள், குளிர்சாதனப்பெட்டி, காற்றுக்குளிருட்டிகள், ஏ.சி. எந்திரங்கள் போன்ற தண்ணீர் சேகரணமாகும் அனைத்து விதமான கொள்கலன்களில் பெருமளவில் உற்பத்தியாகின்றன.இவ்வகையான கொசுக்கள் பொதுவாக பகல் நேரங்களில் மனிதனை கடிப்பதினால் தன் முழு உணவான ரத்தத்தினை உறிஞ்ச பல நபர்களை கடித்து அதிக நபர்களுக்கு இக்கிருமியை பரப்புகிறது. இந்நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்திட கொசு உற்பத்தியை தடுப்பதே சிறந்த வழியாகும். இதன் பொருட்டு பொது மக்கள் மழை நீர் தேங்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவதன் மூலமாகவும், வீட்டு உபயோகப் பொருட்களில் நீர் சேகரம் ஆவதை தவிர்ப்பதின் மூலமும் நீர் கொள்கலன்களில் குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையாவது நன்கு சுத்தம் செய்து வெயிலில் உலர்த்துவதின் மூலமாகவும் இவ்வகையான கொசுக்களின் உற்பத்தியை பெரிதும் கட்டுப்படுத்தலாம். சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிகாப்பதின் மூலமாகவும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வருவதை தவிர்க்கலாம்.

    பொதுமக்கள் தங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் தன்னிச்சையாக மருந்து கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் போலி மருத்துவரிடம் சென்று மருத்துவம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான காய்ச்சல் பரிசோதனைகள் செய்து அதற்குண்டான அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே சுயமாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டாம் .கொசு புழுக்கள் உற்பத்தி ஆகாமல் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளும் படியும் குடிநீரை காய்ச்சி ஆறவைத்து குடிக்கும் படியும், 2அல்லது 3நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்து இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்த ரத்த பரிசோதனை செய்து காய்ச்சலுக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • 1432 -ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி வருகின்ற 6-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது.
    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 5, 12, 19 -ந்தேதி ஆகிய திங்கள் கிழமைகளில் நடைபெறாது என தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட த்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் 1432 -ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி வருகின்ற 6-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் தவிர்த்து மற்ற நாட்களில் வருவாய் தீர்வாய அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது. அதன்படி, மாவட்ட கலெக்டர் தலைமையில் கள்ளக்குறிச்சி வட்டத்தில் வருகிற 5-ந் தேதி முதல் 12 -ந் தேதி வரையிலும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் உளுந்தூ ர்பேட்டை வட்டத்தில் 5 -ந் தேதி முதல் 19-ந் தேதி வரையிலும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் திருக்கோவிலூர் வட்டத்தில் 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையிலும், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையில் கல்வராய ன்மலை வட்டத்தில் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரையிலும், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா தலைமையில் சின்னசேலம் வட்டத்தில் 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையிலும், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் யோகஜோதி தலைமையில் சங்கராபுரம் வட்டத்தில் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறவுள்ளது.

    மேலும், 5-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவல கங்களில் வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் வருவாய்துறை தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். ஜமாபந்தி நடைபெறுவதால், மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 5, 12, 19 -ந்தேதி ஆகிய திங்கள் கிழமைகளில் நடைபெறாது என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்ட விழிப்பு ணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது.
    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பட்டியல் இனத்தவர் சுமார் 40 முதல் 50 சதவீதம் பேர் வசித்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்ட விழிப்பு ணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெ க்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசே கரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், டிட்கோ அறக்கட்டளை தலைவர் சுந்தரவடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-

    இந்த திட்டம் பட்டியலின மற்றும் பழங்குடியின தொழிலாளர்களை தொழிலதி பராக ஆக்குவதற்கும், பயன்பெறுவதற்காகவும், பொருளாதாரத்தை உயர்த்து வதற்காகவும், புதிய தொழில் முனைவோராக உருவாக்கு வதற்காகவும் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பட்டியல் இனத்தவர் சுமார் 40 முதல் 50 சதவீதம் பேர் வசித்து வருகின்றனர். குறிப்பாக கல்வராயன் மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் 90 சதவிதம் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் இத்தி ட்டதை அறிந்து செயல்ப டவேண்டும். அரசின் இந்த திட்டத்தை முழுமையாக அறிந்து முழு ஈடுபாட்டுடனும், முழு முயற்சியுடனும் செயல்ப டவேண்டும். படித்த இளை ஞர்கள் தங்கள் நண்பர்களுடன் இணைந்து தொழில் தொடங்கு வதற்கு மிகச்சிறந்த ஒன்றாகும். மேலும், அனைத்து வங்கி அலுவலர்களும் புதிதாக தொழில் தொடங்க இருக்கும் தொழில் முனைவோர்களுக்கு தகுந்த வழிகாட்டியாகவும், தொழிலில் உள்ள நுணுக்க ங்களையும் பற்றி பயனாளி களுக்கு தெளிவு படுத்தியும், அவர்களுக்கு தேவையான அறிவுறைகளை வழங்கி, தொழில் முனைவோராக உருவாக்கிட வேண்டும். மேலும், நடப்பு நிதியாண்டில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்ட த்தின்கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.106.05 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.37.13 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய விண்ணப்பங்கள் வங்கி களுக்கு பரிந்துரை செய்யப்ப ட்டுள்ளது என்று அவர் கூறினார்.

    இதனைதொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த நிதியாண்டில் அரசு திட்டங்களில் சிறப்பாக கடன் வழங்கிய வங்கி மேலாள ர்களுக்கு பாராட்டு கேடய ங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். கருத்தரங்கில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள், சங்கத் தலைவர் பிர்மதேவன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, திட்ட அலுவலர் (பழங்குடியினர் நலம்) கதிர்சங்கர், மாவட்ட தாட்கோ மேலாளர் அனந்த மோகன், மாவட்ட தொழில் மைய திட்ட அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட தொழில் மைய உதவி ப்பொறியாளர் சிவநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் வங்கி மேலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு நாட்டிலும், மின்சாரம் மிக அத்தியா வசியமான ஒன்றாகும்.
    • பேரணி மந்தவெளியில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர் நிலையை வந்ததடைந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மந்தவெளியில் தமிழ்நாடு அனைத்து மின்பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது,

    ஒவ்வொரு நாட்டிலும், மின்சாரம் மிக அத்தியா வசியமான ஒன்றாகும். எனவே மின் பயன்பாடு மற்றும் மின் பாதுகாப்பு தொடர்பாக அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொண்டு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கூறினார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி மந்தவெளியில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர் நிலையை வந்ததடைந்தது. இதில் மின்சாரத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டு மின் சிக்கனம் தேவை இக்கனம், வீட்டுக்கு சரியான நில இணைப்பு அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும், மின்கம்பத்தின் மீது கயிறை கட்டி துணி காயவைப்பதை தவிர்க்க வேண்டும், மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் மின் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் தமிழ்நாடு அனைத்து மின்பணியாளர் முன்னேற்ற நலசங்கம் நிறுவனர் நாகலிங்கம், கள்ளக்குறிச்சி நகர்மன்றத் தலைவர் சுப்ராயலு, கல்லைத் தமிழ்ச்சங்க அருட்பேராசிரியர் புகழேந்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில சங்க காப்பாளர் இராமாநுசன், மாநில செயல் தலைவர் சேக்கிழார், மாநில இணை செயலாளர் தயாநிதி, மாநில பொரு ளாளர் அன்புக்குமார், மின்னனு தொழிலாளர் சங்கம் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் பெஞ்சமின் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • மீண்டும் மஞ்சப்பை என்பதை நினைவில் கொண்டு துணிப்பைகளை எடுத்துச்செல்ல வேண்டும்.
    • பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி ஊராட்சி ஒன்றியம், கோடுஅள்ளி ஊராட்சியில்உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    கிராம சபைக்கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசும்போது தெரிவித்ததாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கும், படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த "அனைவருக்கும் இ-சேவை மையம்" என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைத்து நடத்திட ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பைகளை முற்றிலும் பயன்படுத்தக்கூடாது. வெளியில் கழிவுநீர் ஓடைகளிலோ அல்லது பொது இடங்களிலோ குப்பைகளை கொட்டுவது, நெகிழிப்ப்பைகளை தூக்கி எறிவது போன்ற செயல்களை செய்யக்கூடாது. கடைகளுக்கு பொருள்கள் வாங்கச் செல்லும் போது மீண்டும் மஞ்சப்பை என்பதை நினைவில் கொண்டு துணிப்பைகளை எடுத்துச்செல்ல வேண்டும்.

    மழைநீர் சேமிப்பு இன்றைய காலக்கட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்து மழைநீர் சேகரிப்பதன் மூலம் மண்வளம் மேம்படுவதோடு, நிலத்தடி நீர் மட்டமும் உயரும். பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் தருமபுரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மாலா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பத்ஹி முகம்மது நசீர், தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பொங்கல் நன்னாளுக்கு முதல் நாள் நாம் போகிப் பண்டிகையை கொண்டாடுகிறோம்.
    • இதுபோன்ற செயல்கள் மூலம் காற்றை மாசுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    பொதுமக்கள் அனைவருக்கும் இனிய தை திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்களை த ெரிவித்துக்கொள்கிறேன். தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளுக்கு முதல் நாள் நாம் போகிப் பண்டிகையை கொண்டாடுகிறோம்.

    இந்நாளில் சில பழைய பொருட்களை எரிப்பதென்பது பழையன கழிதல் என்ற வழக்கத்திற்கான அடையாளமாகும். இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடப்பங்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள். பெரும்பாலும் நமது கிராமங்களில் கடைபிடிக்கப்படும் இப்பழக்கம் சுற்றுச் சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தாத ஒன்றாகும்.

    ஆனால் தற்சமயம் போகியன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை எரிக்கையில் நச்சுப் புகைமூட்டம் ஏற்பட்டு, மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    நச்சுக்காற்றாலும், கரிப்புகையாலும் காற்று மாசுபட்டு, நம் நகரமே கருப்பு நகரமாக மாறுகிறது. நச்சு புகை கலந்த பனி மூட்டத்தால் சுகாதார பாதிப்பும், சாலை போக்குவரத்திற்கும் தடை ஏற்படுகிறது. இதுபோன்ற செயல்கள் மூலம் காற்றை மாசுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

    மேலும், உயர்நீதிமன்றம் பழைய மரம், வறட்டி தவிர வேறு எதையும் எரிப்பதற்கு தடை விதித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே, புகை நமக்கு பகை என்பதை உணர்ந்து போகிப் பண்டிகையன்று டயர், ரப்பர்,

    பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருட்களை எரிக்க வேண்டாம். போகிப்பண்டிகை நமக்கு இனிய ஆரம்பமாக இருக்கட்டும்.

    அன்று குப்பையை முறைப்படி ஒழித்து பொங்கல் திருநாளை மிகழ்ச்சியுடனும், மாசு இல்லாமலும் கொண்டாடுவோம்.

    இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார். 

    • விபத்து, ஒலி இல்லாமல் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்.
    • பொதுமக்களுக்கு மதுரை கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இந்த திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடு கின்றன.

    பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

    பட்டாசுகளை வெடிப்ப தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும், உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டா சுகளை மட்டுமே வெடிக்க வேண்டும், மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும், மருத்து வமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும், குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    எனவே பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடுவிலார்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்றார்.
    • பல்வேறு அரசின் திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது.

    தேனி:

    தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடுவிலார்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் முரளிதரன் பங்கேற்றார்.

    இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், தனி நபர் சுகாதாரம், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பா ட்டினை தடைசெய்தல், மத்திய, மாநில மற்றும் நிதிக்குழு மானிய திட்ட ங்களின் கீழ் செயல்படுத்த ப்பட்டு வரும் பணிகள்,

    ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல், நீர்நிலை களில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றுதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010- மறு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசின் திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நட வடிக்கைகள், திட்டப்பணி கள் குறித்து பொதுமக்கள் முன்னிலையில் விவாதித்து தீர்மானங்களை நிறை வேற்றி, அனைத்து நிலை களிலும் கிராம ஊராட்சிகள் தன்னிறைவு பெறும் வகையில் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதனடிப்படையில், தேனி மாவட்டத்திலுள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    அரசால் மட்டுமே போதைப் பொருள்களை முழுமையாக தடுத்திட இயலாது பொதுமக்களின் விழிப்புணர்வு இருந்தால் தான் போதைப் பொரு ள்களை பயன்படுத்துவதை தடுத்திட முடியும். எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் செயல்பட்டு வரும் மருந்துகடைகள், வாணிபக்கடைகளை முழுமையாக கண்காணித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து, தேனி மாவட்டத்தினை போதைப் பொருள் இல்லாத மாவட்ட மாக உருவாக்கிட வேண்டும்.

    கிராமங்களில் தடை செய்யபட்டுள்ள ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், டம்ளர் மற்றும் குடிநீர் பாக்கெட்டுகள் போன்றவற்றை தவிர்த்து துணிப்பை, வாழை இலை மற்றும் பாக்கு மட்டை தட்டுகள் பயன்படுத்திட வேண்டும். பொதுமக்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை தங்கள் பகுதிக்கே வரும் தூய்மை காவலர்களிடம் மக்கும் மற்றும் மக்காத குப்பை களாக வழங்கிட வேண்டும் என்றார்.

    • அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    • தேசிய கொடியை ஏற்றுவதில் ஏதேனும் விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் சட்டப்படி கடும் தண்டனை எடுக்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலக வளாகங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தேசிய கொடியை ஏற்றி வைப்பது மரபாகும்.

    எதிர்வரும் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு, அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    கிராம ஊராட்சிகளில் சாதியப் பாகுபாடுகள் காரணமாக தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்சனைகளிலும், தேசியக் கொடியையும், அதனை ஏற்றுபவரையும் அவமதிக்கும் செயலிலும் ஈடுபடக் கூடாது.

    அதுபோல, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்திலும், எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொதுமக்கள் போன்றோர் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    தேசிய கொடியை ஏற்றுவதில் ஏதேனும் விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் சட்டப்படி கடும் தண்டனை எடுக்கப்படும்.

    இது குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை உதவி எண் 1077 அல்லது உதவி இயக்குநர் கைப்பேசி எண் 7402607002 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

    • நாட்டின் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா தேசிய அளவிலும், மாநில அளவிலும் சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது
    • ஆகஸ்டு 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    கோவை:

    75-வது ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ஆகஸ்டு 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்த பொது மக்களுக்கு கலெக்டர் சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாட்டின் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா தேசிய அளவிலும், மாநில அளவிலும் சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவினை மேலும் சிறப்பாக கொண்டாடும் வகையில் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும், வணிக நிறுவனங்களும் ஆகஸ்டு 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    வீடுகள், வணிக நிறுவனங்களில் தேசியக் கொடி ஏற்றிய பிறகு அதனைப் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். தேசியக் கொடியின் புனிதத் தன்மைக்கு எந்தவித அவமரியாதையும் நிகழாமல் கையாளுதல் வேண்டும்.

    தேசியக் கொடியை திறந்தவெளியிலோ, குப்பைத்தொட்டியிலோ, வயல்வெளிகளிலோ ஏற்றக் கூடாது. 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை கொண்டாடும் வகையில் பொது மக்கள் அனைவரும் வீடுகள், வணிக நிறுவனங்களில் தேசியக் கொடியேற்றி சிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இணை மானிய திட்ட பயிற்சி நடந்தது.
    • தொழில் முனைவோருக்கு உறு துணையாக இருக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் இணை மானிய திட்ட பயிற்சி நேற்று நடந்தது. இதை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்து பேசியதாவது: -

    மாவட்டத்தில் பர்கூர், காவேரிப்பட்டணம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஒன்றியங்களில் உலக வங்கி நிதியுதவியுடன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் ஊராட்சி பகுதிகளில் தொழில் முனைவோர்களை உருவாக்கி வருகிறது.

    வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் வழங்கப்படும் இணை மானிய திட்டத்தினை ஊரகப் பகுதிகளில் உள்ள தொழில்முனை வோர்களுக்கு வங்கி கடன் வழங்கி, ஊரக பகுதிகளில் வேலை வாய்ப்பு பெருக்கிட வங்கியாளர்கள் தொழில் முனைவோருக்கு உறு துணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பயிற்சியில் மாவட்ட செயல் அலுவலர் தமிழ்மாறன், நபார்டு உதவி பொது மேலாளர் ஜெய்பிரகாஷ், முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, தாட்கோ பொது மேலாளர் யுவராஜ் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் செயல் அலுவலர்கள் பிரதீப்குமார், ஜெய்குமார், சிவலிங்கம், முத்துகுமார் மற்றும் இளம் வல்லுனர் ஆனந்த், திட்ட பணியாளர்கள் மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×