கள்ளக்குறிச்சியில் வங்கி அலுவலர்கள் தொழில் முனைவோரை உருவாக்க வேண்டும் : மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்ட விழிப்பு ணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பட்டியல் இனத்தவர் சுமார் 40 முதல் 50 சதவீதம் பேர் வசித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்ட விழிப்பு ணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெ க்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசே கரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், டிட்கோ அறக்கட்டளை தலைவர் சுந்தரவடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-

இந்த திட்டம் பட்டியலின மற்றும் பழங்குடியின தொழிலாளர்களை தொழிலதி பராக ஆக்குவதற்கும், பயன்பெறுவதற்காகவும், பொருளாதாரத்தை உயர்த்து வதற்காகவும், புதிய தொழில் முனைவோராக உருவாக்கு வதற்காகவும் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பட்டியல் இனத்தவர் சுமார் 40 முதல் 50 சதவீதம் பேர் வசித்து வருகின்றனர். குறிப்பாக கல்வராயன் மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் 90 சதவிதம் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் இத்தி ட்டதை அறிந்து செயல்ப டவேண்டும். அரசின் இந்த திட்டத்தை முழுமையாக அறிந்து முழு ஈடுபாட்டுடனும், முழு முயற்சியுடனும் செயல்ப டவேண்டும். படித்த இளை ஞர்கள் தங்கள் நண்பர்களுடன் இணைந்து தொழில் தொடங்கு வதற்கு மிகச்சிறந்த ஒன்றாகும். மேலும், அனைத்து வங்கி அலுவலர்களும் புதிதாக தொழில் தொடங்க இருக்கும் தொழில் முனைவோர்களுக்கு தகுந்த வழிகாட்டியாகவும், தொழிலில் உள்ள நுணுக்க ங்களையும் பற்றி பயனாளி களுக்கு தெளிவு படுத்தியும், அவர்களுக்கு தேவையான அறிவுறைகளை வழங்கி, தொழில் முனைவோராக உருவாக்கிட வேண்டும். மேலும், நடப்பு நிதியாண்டில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்ட த்தின்கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.106.05 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.37.13 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய விண்ணப்பங்கள் வங்கி களுக்கு பரிந்துரை செய்யப்ப ட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இதனைதொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த நிதியாண்டில் அரசு திட்டங்களில் சிறப்பாக கடன் வழங்கிய வங்கி மேலாள ர்களுக்கு பாராட்டு கேடய ங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். கருத்தரங்கில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள், சங்கத் தலைவர் பிர்மதேவன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, திட்ட அலுவலர் (பழங்குடியினர் நலம்) கதிர்சங்கர், மாவட்ட தாட்கோ மேலாளர் அனந்த மோகன், மாவட்ட தொழில் மைய திட்ட அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட தொழில் மைய உதவி ப்பொறியாளர் சிவநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் வங்கி மேலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com