search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த தனியார் நிறுவனங்கள் உதவிகள் செய்ய வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்
    X

    கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.  

    அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த தனியார் நிறுவனங்கள் உதவிகள் செய்ய வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்

    • தனியார் சங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
    • உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் பள்ளிகளின் வளர்ச்சி பணிகளுக்கு பங்களிப்பை வழங்குவது தொடர்பான அனைத்து தனியார் சங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம் மற்றும் தரத்தை அனைத்து அரசுப்பள்ளிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு தனியார் பங்களிப்பை வழங்கும் முன்னோடி திட்டமான நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து நிலையில் உள்ள அரசுப்பள்ளிகளுக்கும் தரமான கல்வி கிடைத்திடும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தனியார் பங்களிப்புடன் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 1,331 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.இப்பள்ளிகளுக்கு தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் தொழில்துறையினர், முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்திட அடித்தளமாக அமைந்திருக்கிறது. குழந்தைகளின் கல்வி மற்றும் பள்ளிகளின் வளர்ச்சிக்காகத்தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் நீங்கள் செலுத்தக்கூடிய நன்கொடையை பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எந்த பள்ளிகளுக்கு என்ன வசதிகள் தேவை என்கிற விபரம் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் www.nammaschool.tnschools.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நிதியுதவி செய்ய விரும்பும் நிறுவனங்கள் தங்களால் என்ன விதமான வசதிகளை பள்ளிக்கு ஏற்படுத்தி தர முடியும் என்பதை அறிந்து அதற்கேற்ற பங்களிப்பை வழங்கலாம். வழங்குபவர்கள் நிதியாகவும், பொருளாகவும் மற்றும் சேவையாகவும் வழங்கலாம். ஒவ்வொரு நிறுவனத்தின் முதலீடு என்பது அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கான முதலீடாக இருக்கும். இத்திட்டத்தில் நிறுவனங்களால் வழங்கும் பங்களிப்பானது நாளைய சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பயன்படும். திருப்பூர் மாவட்டம் தொழில் நிறுவனங்கள் கொண்ட வளர்ச்சி பெற்ற மாவட்டமாக உள்ளதால் நிறுவங்களின் பங்களிப்போடு பள்ளிகளில் சிறப்பாக பயின்று உயர்கல்வி பயிலும் போது திறமையான மாணவர்களை உருவாக்க முடியும். இன்றைய மாணவர்கள் வருங்காலத்தில் தொழில்முனைவோர்களாக உருவாக்கிடவும், கல்வி மேம்பட பள்ளி உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடவும் நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கிய பங்கு வகிக்கும். எனவே அனைத்து தனியார் நிறுவனங்களை சார்ந்தவர்கள் நல்உள்ளத்துடன் தங்களது பங்களிப்பை தாராளமாக வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் திருப்பூர் மாவட்டத்தில் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம் தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் .அண்ணாதுரை ( உதவி திட்ட அலுவலர்) 94438-56934, தனலட்சுமி (முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்) 88387-99374, கெரோலீன் (மாவட்ட திட்ட ஒருங்கிணை ப்பாளர்) 90804-41057 ஆகியோரை தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களைபெறலாம்.

    மேலும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த தனியார் தொழில் நிறுவனங்கள் தங்களது சமூக பங்களிப்பு நிதியை வழங்கலாம். அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சமூக பங்களிப்பு நிதி வழங்க பொறுப்பு அலுவலர் அருண்பாபுவை 99949-94944 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, பொதுமேலாளர் (மாவட்ட தொழில்மையம்) ராமலிங்கம், இணை இயக்குநர்(மருத்துவ நலப்பணிகள்) கனகராணி, இணை இயக்குநர்கள் (தொழிலகப்பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்) புகழேந்தி, சரவணன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கம், அச்சுக்கூடம் உரிமையாளர்கள் சங்கம், கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம், அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம், ரோட்டரி சங்கம், திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம், உணவு எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம், திருப்பூர் தொழில் பாதுகாப்பு சங்கம் மற்றும் அனைத்து உற்பத்தியாளர்கள் சங்கம், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×