search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Request"

    • பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி ஆற வைத்து குடிக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுேகாள் விடுத்துள்ளார்.
    • டெங்கு காய்ச்சல் என்பது ஏடீஸ் வகை கொசுக்கள் மூலம் பரவுகின்ற வைரஸ் காய்ச்சல் ஆகும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட ககெ்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியினை முன்னிட்டு பல்வேறு வகையான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் என்பது ஏடீஸ் வகை கொசுக்கள் மூலம் பரவுகின்ற வைரஸ் காய்ச்சல் ஆகும். காய்ச்சல், தலைவலி ,கண்களை சுற்றி வலி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, உடம்பில் சிவப்புநிற தடிப்புகள் ஆகிய அறிகுறிகள் இருந்தால் டெங்கு காய்ச்சலாக இருக்கலாம். இவைகள் பொதுவாக தானாகவே சரியாகிவிடும் என்றாலும் சில சமயங்களில் இளம் வயதினரையும் முதியோர்களையும் அதிக அளவில் தாக்கி இறப்பினை உண்டாக்கும் தன்மை உடையது.

    இந்நோயினை பரப்பும் கொசுக்கள் திறந்த வெளியில் தூக்கி எறியப்படும் தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், உடைந்த மண்பானைகள், டீ கப்புகள், பிளாஸ்டிக் பைகள், வாகன டயர்கள் போன்றவற்றில் மழை நீர் போன்றவை தேங்குவதாலும் வீடுகளில் பயன்படுத்தப்படும் நீர் கொள்கலன்கள், குளிர்சாதனப்பெட்டி, காற்றுக்குளிருட்டிகள், ஏ.சி. எந்திரங்கள் போன்ற தண்ணீர் சேகரணமாகும் அனைத்து விதமான கொள்கலன்களில் பெருமளவில் உற்பத்தியாகின்றன.இவ்வகையான கொசுக்கள் பொதுவாக பகல் நேரங்களில் மனிதனை கடிப்பதினால் தன் முழு உணவான ரத்தத்தினை உறிஞ்ச பல நபர்களை கடித்து அதிக நபர்களுக்கு இக்கிருமியை பரப்புகிறது. இந்நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்திட கொசு உற்பத்தியை தடுப்பதே சிறந்த வழியாகும். இதன் பொருட்டு பொது மக்கள் மழை நீர் தேங்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவதன் மூலமாகவும், வீட்டு உபயோகப் பொருட்களில் நீர் சேகரம் ஆவதை தவிர்ப்பதின் மூலமும் நீர் கொள்கலன்களில் குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையாவது நன்கு சுத்தம் செய்து வெயிலில் உலர்த்துவதின் மூலமாகவும் இவ்வகையான கொசுக்களின் உற்பத்தியை பெரிதும் கட்டுப்படுத்தலாம். சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிகாப்பதின் மூலமாகவும் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வருவதை தவிர்க்கலாம்.

    பொதுமக்கள் தங்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் தன்னிச்சையாக மருந்து கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் போலி மருத்துவரிடம் சென்று மருத்துவம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான காய்ச்சல் பரிசோதனைகள் செய்து அதற்குண்டான அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே சுயமாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டாம் .கொசு புழுக்கள் உற்பத்தி ஆகாமல் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளும் படியும் குடிநீரை காய்ச்சி ஆறவைத்து குடிக்கும் படியும், 2அல்லது 3நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்து இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்த ரத்த பரிசோதனை செய்து காய்ச்சலுக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • 1432 -ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி வருகின்ற 6-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது.
    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 5, 12, 19 -ந்தேதி ஆகிய திங்கள் கிழமைகளில் நடைபெறாது என தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட த்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் 1432 -ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி வருகின்ற 6-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் தவிர்த்து மற்ற நாட்களில் வருவாய் தீர்வாய அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது. அதன்படி, மாவட்ட கலெக்டர் தலைமையில் கள்ளக்குறிச்சி வட்டத்தில் வருகிற 5-ந் தேதி முதல் 12 -ந் தேதி வரையிலும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் உளுந்தூ ர்பேட்டை வட்டத்தில் 5 -ந் தேதி முதல் 19-ந் தேதி வரையிலும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் திருக்கோவிலூர் வட்டத்தில் 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையிலும், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையில் கல்வராய ன்மலை வட்டத்தில் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரையிலும், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா தலைமையில் சின்னசேலம் வட்டத்தில் 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையிலும், திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் யோகஜோதி தலைமையில் சங்கராபுரம் வட்டத்தில் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறவுள்ளது.

    மேலும், 5-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவல கங்களில் வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் வருவாய்துறை தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். ஜமாபந்தி நடைபெறுவதால், மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 5, 12, 19 -ந்தேதி ஆகிய திங்கள் கிழமைகளில் நடைபெறாது என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • தனித்தாளில் விரிவாக எழுதி படிவத்துடன் இணைக்க வேண்டும்.
    • குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் அரசுசார்ந்த துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியப் பயன்கள் இதுவரை கிடைக்கப் பெறாமல் இருப்பவர்கள் அதைப்பற்றி விவரங்கள், பணியாற்றிய அரசு துறை மற்றும் எந்த அலுவலர் மூலம் குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிட்டு ஓய்வூதிய குறைதீர்ப்பு மாதிரிப் படிவத்தில் பூர்த்தி செய்து இரட்டை பிரதிகளில் 31 -ந் தேதிக்குள் கிடைக்கும்படி நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம்.

    ஓய்வூதிய குறைபற்றி மனுஅனுப்ப வேண்டிய மாதிரிப் படிவத்தில் பெயர் மற்றும் முகவரி, பி.பி.ஓ.எண், ஓய்வு பெற்ற நாள், கடைசியாக வகித்த பதவி மற்றும் துறை, குறைகள் விவரம் (தனித்தாளில் விரிவாக எழுதி படிவத்துடன் இணைக்க வேண்டும்), முந்தைய தகவல் ஏதும் இருப்பின் விவரம், இது தொடர்பாக வழக்கு ஏதும் தொடர்ந்திருந்தால் அதன் விவரம், குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அலுவலகம் மற்றும் அலுவலர் விவரம் ஆகியவை இடம்பெற்று இருக்க வேண்டும்.

    ஓய்வூதிய குறைதீர்ப்பு கூட்டம் எதிர்வரும் 25.11.2022 வெள்ளிக்கிழமை அன்றுகாலை மாவட்ட கலெக்டர் அலுவலகம், மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

    இந்த நேர்முகக் கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடையுமாறு ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடுவிலார்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்றார்.
    • பல்வேறு அரசின் திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது.

    தேனி:

    தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடுவிலார்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் முரளிதரன் பங்கேற்றார்.

    இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், தனி நபர் சுகாதாரம், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பா ட்டினை தடைசெய்தல், மத்திய, மாநில மற்றும் நிதிக்குழு மானிய திட்ட ங்களின் கீழ் செயல்படுத்த ப்பட்டு வரும் பணிகள்,

    ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல், நீர்நிலை களில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றுதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010- மறு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசின் திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நட வடிக்கைகள், திட்டப்பணி கள் குறித்து பொதுமக்கள் முன்னிலையில் விவாதித்து தீர்மானங்களை நிறை வேற்றி, அனைத்து நிலை களிலும் கிராம ஊராட்சிகள் தன்னிறைவு பெறும் வகையில் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதனடிப்படையில், தேனி மாவட்டத்திலுள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    அரசால் மட்டுமே போதைப் பொருள்களை முழுமையாக தடுத்திட இயலாது பொதுமக்களின் விழிப்புணர்வு இருந்தால் தான் போதைப் பொரு ள்களை பயன்படுத்துவதை தடுத்திட முடியும். எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் செயல்பட்டு வரும் மருந்துகடைகள், வாணிபக்கடைகளை முழுமையாக கண்காணித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து, தேனி மாவட்டத்தினை போதைப் பொருள் இல்லாத மாவட்ட மாக உருவாக்கிட வேண்டும்.

    கிராமங்களில் தடை செய்யபட்டுள்ள ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், டம்ளர் மற்றும் குடிநீர் பாக்கெட்டுகள் போன்றவற்றை தவிர்த்து துணிப்பை, வாழை இலை மற்றும் பாக்கு மட்டை தட்டுகள் பயன்படுத்திட வேண்டும். பொதுமக்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை தங்கள் பகுதிக்கே வரும் தூய்மை காவலர்களிடம் மக்கும் மற்றும் மக்காத குப்பை களாக வழங்கிட வேண்டும் என்றார்.

    • திண்டுக்கல் மாவட்டம், அகரம் பகுதியில் மனுநீதி நாள் கூட்டம் ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதை முன்னிட்டு முன்னோடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் இதுபோன்ற முகாம்களை சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் மாவட்டம், அகரம் பகுதியில் மனுநீதி நாள் கூட்டம் ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதை முன்னிட்டு முன்னோடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.

    இம்முகாமில் மாவட்ட கலெக்டர் விசாகன் பங்கேற்று அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பதிவு செய்வதை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து வருவாய்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

    இம்முகாமில் கலெக்டர் பேசியதாவது,

    திண்டுக்கல் அகரம் பகுதியில் அடுத்த மாதம் மனுநீதி நாள் முகாம் நடத்தப்படவுள்ளது. அதன் முன்னோடியாக இன்று முதல் 3 தினங்களுக்கு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது.

    பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வீடு வேண்டுதல், வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை வழங்கியுள்ளார்கள். தகுதியான அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, இலவச வீடுகள் கட்டும் திட்டம் உள்ளிட்ட பயன்கள் முழுமையாக சென்றடைய வேண்டும். குறிப்பாக வீட்டுமனை இல்லாத குடும்பங்கள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்திட வேண்டும்.

    தகுதியுள்ள நபர்கள் விடுபடாமல் அனைவருக்கும் அரசு திட்டங்கள் வழங்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் மூலம் பல்வேறு கடனுதவி திட்டங்கள் உள்ளது. ரூ.1 கோடியிலான கடனுதவிக்கு ரூ.5 லட்சம் முன்வைப்பு தொகை செலுத்தும் வகையிலான திட்டங்களும் உள்ளது. மேலும், நீட்ஸ் உள்ளிட்ட மானியத்துடன் கூடிய கடனுதவிகளும் பல உள்ளது.

    அவைகளை பொதுமக்கள் தெரிந்து கொண்டு கடனுதவிகளை பெற்று தொழில் அதிபராக மாற வேண்டும். வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை வேண்டி அதிக அளவிலான மனுக்கள் வரபெற்றுள்ளது. தகுதியான அனைவருக்கும் அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும், இம்முகாமில் அனைத்து துறை தொடர்பான மனுக்களும் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் தீர்வுகள் காண நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பொதுமக்கள் இதுபோன்ற முகாம்களை சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் லதா, கோட்டாட்சியர் பிரேம்குமார், துணை ஆட்சியர் ராஜசேகரன், மேற்கு வட்டாட்சியர் ரமேஷ்பாபு, சமூகபாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் அபுரீஸ்வரன், மண்டல துணை வட்டாட்சியர் சுல்தான் சிக்கந்தர், தி.மு.க ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், அகரம் பேரூராட்சி தலைவர் மணி என்ற நந்தகோபால், துணைத்தலைவர் ஜெயபால், செயல்அலுவலர் ஈஸ்வரி, தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் கவிதாசின்னதம்பி, துணைத்தலைவர் நாகப்பன், செயல்அலுவலர் சிவக்குமார் மற்றும் கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தன் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி
    • கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் எச்சரிக்கை

    கோவை :

    கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் பெயரில் போலியான வாட்ஸ் அப் ஐ.டி தொடங்கி பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக கலெக்டர், தனது டுவிட்டர் பக்கத்தில் சில மோசடி நபர்கள் தனது புகைப்படத்தை முகப்பு பக்கத்தில் வைத்து போலியான வாட்ஸ் அப் எண்ணில் அமேசான் பரிசு கூப்பன் இருக்கிறது.பணம் கொடுத்து இந்த கூப்பன் வாங்கி கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர். இது போலியான ஐ.டி யாரும் இதில் பணம் தர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த மோசடி தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    மோசடி நபர் பயன்படுத்திய செல்போன் எண் விவரங்களையும் கலெக் டர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். கலெக்டர் படம், பெயரை பயன்படுத்தி மோசடி கும்பல் கைவரிசை காட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த மோசடி நபர் யாரிடம் எவ்வளவு பணம் வசூலித்தார், எவ்வளவு மோசடி நடந்தது என்ற விவரங் கள் தெரியவில்லை. இது தொடர்பாக போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கலெக்டர் சமீரன் எச்சரிக்கை விடுத்து ள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் உள்ள உயர் அலுவலர்களின் புகைப்படங்களுடன் கூடிய வாட்ஸ் அப் எண் எனக்கூறி கொண்டு மர்ம நபர்கள் அவர்களுடன் தொடர்பில் இருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் சிலரின் தொலைபேசி எண்ணிற்கு தவறான தகவல்களை குறுஞ்செய்தியாக அனுப்பி பண மோசடியில் ஈடுபடும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக தெரியவருகிறது.

    மேற்கண்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது போலீசார் மூலம் குற்றவியல் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    மேலும், தொடர்ந்து இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்டறி யப்பட்டால் போலீசார் மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கலெக்டரின் பெயர், புகைப்படத்துடன் தெரியாத எண்ணில் இருந்து குறுஞ்செய்தி ஏதேனும் வந்தால் பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம். ஏதேனும் பொய்யான தகவல்கள் வந்தாலும் உடனடியாக பொதுமக்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

    தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளை காத்திடும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயனடையுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளை காத்திடும் நோக்கத்தில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட்டது.

    இத்திட்டம் இரண்டு வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் 1-ன் கீழ் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தையுடன் பெற்றோர் இருவரில் ஒருவர் கருத்தடை செய்திருந்தால், அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்பு தொகையாக ரூ.50 ஆயிரம், திட்டம் 2-ன் கீழ் குடும்பத்தில் 2 பெண் குழந்தைகளில் 2-வது பெண் குழந்தை பிறந்து 3 ஆண்டுகளுக்குள் பெற்றோர் இருவரில் ஒருவர் கருத்தடை செய்திருந்தால், இரண்டு பெண் குழந்தைகளின் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் வீதம் நிலையான வைப்பு தொகையாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. அக்குழந்தைக்கு 18 வயது பூர்த்தியடைந்ததும், வட்டியுடன் கூடிய முதிர்வு தொகை பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் அரியலூர் மாவட்ட பயனாளிகள் ஒரு பெண் குழந்தையுடன் அல்லது இரு பெண் குழந்தைகளுடன் அல்லது ஒரு பெண் குழந்தை இருந்தும், இரண்டாவது பிரசவத்தில் இரண்டும் பெண் குழந்தைகளாக உள்ள பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் கருத்தடை செய்தப்பின் இரண்டாவது குழந்தை மூன்று வயது முடிவதற்குள் குழந்தை பிறப்பு சான்று, பெற்றோர்கள் வயது சான்று, குடும்ப நல அறுவை சிகிச்சை செய்த சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, ஆண் வாரிசு இல்லை என சான்று, சாதிச்சான்றிதழ், குடும்ப அட்டை நகலுடன் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் முறையாக ஆலோசனை பெற்று விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    ×