search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீழக்கரை"

    • தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.
    • மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

    கீழக்கரை

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாத புரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை சார்பில் இன்று காலை தாய்கார்டன் இடத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட செயலாளர் தினாஜ்கான் பெருநாள் சொற்பொழிவு நிகழ்த்தினார். ஆயிரக் கணக்கான ஆண்களும் பெண்களும், முதிய வர்களும், குழந்தைகளும் திடலில் நடைபெற்ற இந்த பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.

    மாவட்ட செயலாளர் தினாஜ்கான் நிருபர்களிடம் கூறுகையில், இறைத்தூதர் இப்ராஹிமின் வாழ்வில் அவர் செய்த தியாகங்களை நினைவூட்டும் விதமாக இந்த பெருநாளின் பல வணக்கங்கள் அமைந்துள் ளன, தொழுகைக்கு பிறகு அவரவர் சக்திக்குட்பட்டு பலி பிராணிகளை அறுத்து அவற்றின் இறைச்சியை சொந்த பந்தங்கள், நண்பர்கள் ஏழை எளியோருக்கு அன்பளிப்பாக தர உள்ளோம், இந்த பெருநாளில் அனைவரும் நல்வாழ்வு பெறவும் அழகிய வாழ்க்கையை வாழவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தோம்,

    மனிதருக்கு மனிதர் தியாக உணர்வை வளர்த்துக் கொள்வதையே இப் பெருநாள் வலியுறுத்துகிறது என்றார்.

    இந்த சிறப்பு தொழுகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களுக்குள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர், இப்ராஹீம்சாபிர், செய லாளர் தினாஜ்கான் மற்றும் நிர்வாகிகள் கீழக்கரை தெற்கு கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரை பள்ளியில் இஹ்ராம் தின நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவ-மாணவிகள் விளக்கி கூறினர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள அல்பையினா மெட்ரிகுலேஷன் பள்ளியின் இஸ்லாமிய கல்வித்துறை சார்பாக இஹ்ராம் தின நிகழ்ச்சி நடந்தது.

    இதில் இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணம் செய்வது பற்றி விழிப்புணர்வு மற்றும் வழிமுறைகளை மாணவ-மாணவிகள் விளக்கி கூறினர்.

    இதில் ஹஜ் பயணம் செல்லும்போது எங்கு செல்வார்கள்? என்னென்ன முறையில் பயன்படுத்துவார்கள்? என்பது போன்ற பல்வேறு வழிமுறைகள் குறித்து மாணவ-மாணவிகள் நடித்துக்காட்டினர்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அல்பையினா மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் செய்திருந்தனர். 

    • முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை தாங்கினார்.

    கீழக்கரை

    கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் அலாவுதீன், துணை முதல்வர் ஷேக்தாவூது ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் தவசிலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை பயிற்றுவித்தார். இதில், 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை லெப்டினன்ட் மருதாச்சலமூர்த்தி, சப்-லெப்டினன்ட் வினோத், ராஜேஷ்கண்ணா ஆகியோர் செய்திருந்தனர்.

    • கீழக்கரை தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது.
    • 9 கிராமங்களில் 8-ந் தேதி ஜமாபந்தி நடைபெற உள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று (6-ந்தேதி) தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை (சனி, ஞாயிறு, திங்கள், விடுமுறை நாட்கள் தவிர) ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, கீழக்கரை, ராமேசுவரம், ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் தாலுகா வாரியாக நடைபெற உள்ளது. மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் சிவசுப்ரமணியன் தலைமையில் உத்திரகோசமங்கை உள் வட்டம் எக்ககுடி, பனை குளம், மாலங்குடி, மல்லல், ஆலங்குளம், நல்லிருக்கை, உத்திரகோசமங்கை ஆகிய 7 கிராமங்களில் இன்று ஜமாபந்தி நடந்தது.

    பனையடியேந்தல், வேளானூர், மாணிக்கநேரி, புல்லந்தை, மாயாகுளம், கீழக்கரை, காஞ்சிரங்குடி, குள பதம், இதம்பாடல், ஏர்வாடி ஆகிய 9 கிராமங்களில் நாளை (7-ந் தேதி) நடைபெற உள்ளது. திருப்புல்லாணி, பள்ளமோர்குளம், களரி 1, 2, வெள்ளாமறிச்சுகட்டி, குதக்கோட்டை, களிமண்குண்டு, வண்ணாங்குண்டு, பெரியபட்டினம், ரெகுநாதபுரம் ஆகிய 9 கிராமங்களில் (8-ந் தேதி ) ஜமாபந்தி நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

    • கீழக்கரையில் பள்ளி செல்லும் சாலை சீரமைக்கப்படாமல் கிடக்கிறது.
    • பள்ளி திறப்பதற்கு முன் நிறைவு செய்யப்படும்

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்லும் வழியில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலை சேதம் அடைந்த தால் புதிய சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு சாலை அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டது.

    ஒப்பந்ததாரர் அலட்சியம் காரணமாக பணி தொடங்க வில்லை. குறுகலான சாலையின் ஒரு பக்கம் உடைக்கப்பட்ட பேவர் பிளாக் கற்கள் கிடக்கின்றன. மறுபக்கம் மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. வருகிற 7-ந் தேதி பள்ளி திறக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் இன்னமும் சாலை அமைக்கப்படாமல் இருப்பதால் பள்ளி வாகனங்கள் செல்வதற்கும், மாணவர்கள் நடந்து செல்வதற்கும், மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்கள் வாகனங்களை ஓட்டி வருவதற்கும் சிரமமாக இருக்கும்.

    இதுகுறித்து கீழக்கரை நகராட்சி கமிஷனர் செல்வராஜ் கூறுகையில், கீழக்கரை தெற்கு தெரு பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமியா பள்ளி செல்லும் சாலை பணிகள் 5-ந்தேதி தொடங்கி பள்ளி திறப்பதற்கு முன் நிறைவு செய்யப்படும் என்றார்.

    வழக்கம்போல் கண்துடைப்பு அறிவிப்பாக இல்லாமல் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நலன் கருதி விரைவாக இந்த சாலையை அமைக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • கீழக்கரை தாசில்தார் பொறுப்பேற்றார்.
    • அலுவலக பணியாளர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய தாசில்தாராக பழனிக்குமார் பொறுப்பேற்றார். அவரை துணை தாசில்தார் பரமசிவம், சமூக நலத்துறை தாசில்தார் ஜலால், தலைமை நிலஅளவர் சொக்கநாதன், வருவாய் அலுவலர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் காசிநாதத்துரை, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அழகப்பா ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    இதுவரை அங்கு தாசில்தாராக பணியாற்றிய சரவணன் புதிய தாசில்தாரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.புதிதாக பொறுப்பேற்ற தாசில்தார் பழனிக்குமாருக்கு வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    • கீழக்கரை மரைன் காவல் நிலையத்திற்கு செல்ல வழியில்லாமல் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.
    • நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மரைன் காவல் நிலையம் இல்லாமல் இருந்ததை தொடர்ந்து காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பல ஆண்டு களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    கீழக்கரை தொழிலதிபர் சலாவுதீன் தனது சொந்த இடத்தில் 30 சென்ட் இடத்தை மரைன் காவல் நிலையம் கட்ட அரசுக்கு தான மாக வழங்கினார். அந்த இடத்தில் 2017-ம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்போது முதல் இன்று வரை காவல் நிலை யத்திற்கு சென்று வர வழி ஏற்படுத்தவில்லை. இதனால் மரைன் காவல் நிலையத்திற்கு கடற்கரை வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. வெள்ளம் ஏற்படும் காலங்களில் காவல் நிலையத்திற்கு நடந்தோ, வாகனத்திலோ செல்வதற்கு முடியாமல் போலீசார் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே காவல் நிலையத்திற்கு கடற்கரை வழியை தவிர்த்து மாற்று வழியை ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கீழக்கரை தாசீம்பீவி மகளிர் கல்லூரியில் 34-வது விளையாட்டு விழா நடந்தது.
    • ஆமினா பர்வீன் ஹக்கீம் இறைவணக்கம் பாடினார்.

    கீழக்கரை

    கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 34-வது விளையாட்டு விழா மூன்றாமாண்டு மாணவி பி.ஏ. (ஆங்கிலம்) ஆமினா பர்வீன் ஹக்கீம் இறைவணக்கத்துடன் தொடங்கியது. முதல்வர் சுமையா வரவேற்றார்.

    ராமநாதபுர மாவட்ட வருவாய் கோட்ட அலுவலர் சேக் மன்சூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். ராமநாதபுர மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, ஒலிம்பிக் கொடியையும், கல்லூரியின் செயலாளர் காலித் ஏ.கே புஹாரி கல்லூரிக் கொடியையும் ஏற்றினர். பின்னர் மாணவியரின் அணி வகுப்பு நடைபெற்று ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து 100, 200, 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்கள், சாகசங்கள், யோகாசனங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விளையாட்டு தின விழா அறிக்கையினை உதவி பேராசிரியர் சீனி ரக்பு நிஷா வாசித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மேலும் இவ்விழாவில் சர்வதேச அளவில் நடைபெற்ற இந்தோ நேபாளம் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர். மாணவியர் பேரவையின் விளையாட்டுச் செயலர் முஜாஹித் ஜசீரா நன்றி கூறினார்.

    இவ்விழாவில் சீதக்காதி அறக்கட்டளையின் துணைப் பொது மேலாளர் சேக் தாவூத் கான், கல்லூரியின் ஆராய்ச்சி இயக்குநர் இர்பான் அஹமது மற்றும் பல்வேறு துறைத் தலைவர்களும் பேராசிரியர்களும், மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். 

    • கீழக்கரை மாணவர்ஆசிய அளவில் சாதனை படைத்தார்.
    • ஒரு மணிநேரம் 11 நிமிடம் 14 விநாடிகள் யோகா நிலையில் தண்ணீரில் மிதந்து ரெக்கார்டு புக் ஆப் இந்தியாவில் இடம் பிடித்துள்ளார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த இம்பாலா சுல்தான். இவரது மகன் இன்ஷாப் முகமது. கொடைக்கானல் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு தாயார் நித்தாஷா பர்வீன் மற்றும் அல் ரய்யான் என்ற சகோதரியும் உள்ளனர்.

    இவர் தண்ணீரில் அதிக நேரம் மிதந்து ரெக்கார்டு புக் ஆப் இந்தியா புத்த கத்தில் புதிய சாதனை புரிந்துள்ளார். முந்தைய சாதனையில் கேரளாவைச் சேர்ந்த சிறுவன் 60 நிமிடம் தண்ணீரில் மிதந்து சாதனை புரிந்தான்.

    அதனை முறியடிக்கும் வகையில் ஒரு மணிநேரம் 11 நிமிடம் 14 விநாடிகள் யோகா நிலையில் தண்ணீரில் மிதந்து ரெக்கார்டு புக் ஆப் இந்தியாவில் இடம் பிடித்துள்ளார். மேலும் 2022 ரெக்கார்டு புக் ஆப் இந்தியாவில் தண்ணீரில் மிதந்து சாதனை புரிந்து ள்ளதை மாணவனை பாராட்டும் வகையில் தமிழக அரசு சார்பில் கபீர் சாகர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இவருடைய சாதனை 18 நாடுகளை சேர்ந்த ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் க்கு இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டு அதற்கான விருதும் பெற்றுள்ளார். 11 வயதைச் சேர்ந்த இளம் சாதனையாளர் இன்ஷாப் முஹம்மதை கவுரவிக்கும் வகையில் துபாய் வருகை தந்த அவருக்கு இந்திய துணை தூதரகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தூதரக அதிகாரி ராம்குமார் வரவேற்று பாராட்டி பரிசு வழங்கினார். ஈமான் சார்பில் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் ஆகியோர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    எமிரேட்ஸ் டென் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஆடிட்டர் இளவரசன் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. மேலும் இவர் கின்னஸ் சாதனைக்கு முயன்று வருகிறார். ஒலிம்பிக்கில் மத்திய, மாநில அரசுகள் தனக்கு வாய்ப்பு வழங்கினால் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வெல்வேன், என்றார்.

    கீழக்கரையில் வியாபாரி வீட்டில் கதவை உடைத்து 51 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    கீழக்கரை:

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஸ்ரீநகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50) இவர் இரண்டு மளிகை கடையும், ஒரு காய்கறி கடையும் நடத்தி வருகிறார். கீழக்கரை தட்டான் தோப்பில் இவருடைய மாமியார் புஷ்பம் என்பவர் நேற்று இறந்து விட்டதை தொடர்ந்து வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மாமியார் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 51 பவுன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து கீழக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

    ×