search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழக்கரை மரைன் காவல் நிலையத்திற்கு செல்ல வழியில்லாமல் தவிப்பு
    X

    கீழக்கரை மரைன் காவல் நிலையத்திற்கு செல்ல வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.

    கீழக்கரை மரைன் காவல் நிலையத்திற்கு செல்ல வழியில்லாமல் தவிப்பு

    • கீழக்கரை மரைன் காவல் நிலையத்திற்கு செல்ல வழியில்லாமல் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.
    • நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மரைன் காவல் நிலையம் இல்லாமல் இருந்ததை தொடர்ந்து காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பல ஆண்டு களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    கீழக்கரை தொழிலதிபர் சலாவுதீன் தனது சொந்த இடத்தில் 30 சென்ட் இடத்தை மரைன் காவல் நிலையம் கட்ட அரசுக்கு தான மாக வழங்கினார். அந்த இடத்தில் 2017-ம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்போது முதல் இன்று வரை காவல் நிலை யத்திற்கு சென்று வர வழி ஏற்படுத்தவில்லை. இதனால் மரைன் காவல் நிலையத்திற்கு கடற்கரை வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. வெள்ளம் ஏற்படும் காலங்களில் காவல் நிலையத்திற்கு நடந்தோ, வாகனத்திலோ செல்வதற்கு முடியாமல் போலீசார் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே காவல் நிலையத்திற்கு கடற்கரை வழியை தவிர்த்து மாற்று வழியை ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×