search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "merchant home robbery"

    கீழக்கரையில் வியாபாரி வீட்டில் கதவை உடைத்து 51 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    கீழக்கரை:

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஸ்ரீநகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50) இவர் இரண்டு மளிகை கடையும், ஒரு காய்கறி கடையும் நடத்தி வருகிறார். கீழக்கரை தட்டான் தோப்பில் இவருடைய மாமியார் புஷ்பம் என்பவர் நேற்று இறந்து விட்டதை தொடர்ந்து வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மாமியார் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 51 பவுன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து கீழக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

    கூடல்புதூரில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

    மதுரை:

    மதுரை எஸ்.ஆலங்குளம் அழகுமலையான் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது43). மாட்டுத்தாவணி காய்கறி கமி‌ஷன் மண்டியில் வியாபாரியாக உள்ளார்.

    இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டார். இதனை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடிச் சென்று விட்டனர்.

    இதுகுறித்து கூடல்புதூர் போலீசில் செல்வகுமார் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே வியாபாரி வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகத்துக்குட்பட்ட வி.டி.மணி நகரைச் சேர்ந்தவர் கணேஷ் (வயது65). பழைய இரும்ப பொருட்கள் வாங்கி விற்று வருகிறார்.

    இவர் கடந்த 24-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கும்பகோணம் சென்றார். இன்று அதிகாலை அவர்கள் வீடு திரும்பினர். வீட்டிற்குள் சென்றபோது பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கள்ளிக்குடி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் பின்பக்க கிரீல்கேட்டை உடைத்து உள்ளே வந்த மர்ம மனிதர்கள் ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டிற்குள் புகுந்திருப்பது தெரிய வந்தது.

    வீட்டின் பீரோவில் இருந்த 2½ பவுன் தங்க நகைகள், ரூ.4 ஆயிரத்து 500 மற்றும் 1 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் கணேஷ் தெரிவித்தார்.

    இதே பகுதியில்தான் அரசு என்ஜினீயர் வீட்டில் நேற்று கொள்ளை சம்பவம் நடைபெற்றது. தற்போது வியாபாரி வீட்டிலும் அதே போன்று சம்பவம் நடை பெற்று இருப்பது மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    2 வீடுகளிலும் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு இருப்பதால் ஒரே கும்பல் தான் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணியில் வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணி:

    திருத்தணி, கம்பர் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் திருத்தணி பைபாஸ் சாலை ஏரிக்கரை பகுதியில் சிக்கன் பக்கோடா விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அரக்கோணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். ரவிக்குமார் மட்டும் வீட்டில் இருந்தார்.

    நேற்று இரவு அவர் வீட்டின் கதவை மூடிவிட்டு அறையில் தூங்கினார். நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்து புகுந்தனர். அவர்கள் மற்றொரு அறையில் இருந்த பீரோவை உடைத்து 11 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். ரவிக் குமார் வேறொரு அறையில் தூங்கியதால் அவருக்கு கொள்ளை நடந்தது தெரிய வில்லை.

    இன்று அதிகாலை அவர் எழுந்தபோது வீட்டில் நகை- பணம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து திருத்தணி போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. சேகர், இன்ஸ்பெக்டர் விநாயகம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    ×