search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்தணியில் வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    திருத்தணியில் வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை

    திருத்தணியில் வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணி:

    திருத்தணி, கம்பர் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் திருத்தணி பைபாஸ் சாலை ஏரிக்கரை பகுதியில் சிக்கன் பக்கோடா விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அரக்கோணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். ரவிக்குமார் மட்டும் வீட்டில் இருந்தார்.

    நேற்று இரவு அவர் வீட்டின் கதவை மூடிவிட்டு அறையில் தூங்கினார். நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்து புகுந்தனர். அவர்கள் மற்றொரு அறையில் இருந்த பீரோவை உடைத்து 11 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். ரவிக் குமார் வேறொரு அறையில் தூங்கியதால் அவருக்கு கொள்ளை நடந்தது தெரிய வில்லை.

    இன்று அதிகாலை அவர் எழுந்தபோது வீட்டில் நகை- பணம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து திருத்தணி போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. சேகர், இன்ஸ்பெக்டர் விநாயகம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×