search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடல்புதூரில் வியாபாரி வீட்டில் கொள்ளை
    X

    கூடல்புதூரில் வியாபாரி வீட்டில் கொள்ளை

    கூடல்புதூரில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

    மதுரை:

    மதுரை எஸ்.ஆலங்குளம் அழகுமலையான் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது43). மாட்டுத்தாவணி காய்கறி கமி‌ஷன் மண்டியில் வியாபாரியாக உள்ளார்.

    இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டார். இதனை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடிச் சென்று விட்டனர்.

    இதுகுறித்து கூடல்புதூர் போலீசில் செல்வகுமார் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×