search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரம் ஜமாபந்தியில் 308 பேர் மனு
    X

      ஜமாபந்தியில்  மனு அளித்தபோது எடுத்தபடம். 

    தாராபுரம் ஜமாபந்தியில் 308 பேர் மனு

    • பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கை–கள் அடங்கிய மொத்தம் 308 பேர் மனு கொடுத்தனர்.
    • வட்ட வழஙகல் அலுவலர் செந்தில் பிரபு, வருவாய் ஆய்வாளர்கள் சரவணன், பாரதி, செல்வி, பொற்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தாராபுரம்:

    தாராபுரம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன் தலைமையில் கன்னிவாடி, தாராபுரம், மூலனூர், அலங்கியம் உள்ளிட்ட வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கல்வி உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 308 பேர் மனு கொடுத்தனர். அதில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட ஒரு சில மனுக்களுக்கு மட்டும் உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்தி அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றபட உள்ளது.இந்த நிகழ்ச்சியின் போது தாராபுரம் தாசில்தார் ஜெகஜோதி, தலைமையிடத்து துணை தாசில்தார் பரமேஷ், மண்டல துணை தாசில்தார் மகேஸ்வரி, வட்ட வழங்கல் அலுவலர் செந்தில் பிரபு, வருவாய் ஆய்வாளர்கள் சரவணன், பாரதி, செல்வி, பொற்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×