search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "iPhone"

    • புதிய அம்சம் கொண்டு பயனர்கள் ஒற்றை அக்கவுண்டினை அதிக ஐபோன்களில் லாக் இன் செய்யலாம்.
    • இந்த அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.

    வாட்ஸ்அப் செயலியில் கம்பேனியன் மோடு (companion mode) பெயரில் புதிய அம்சம் வழங்கப்படுகிறது. புதிய வாட்ஸ்அப் ஐஒஎஸ் 23.10.76 வெர்ஷன் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட்டு வருகிறது. இதனை பயனர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த அம்சம் கொண்டு பயனர்கள் அதிகபட்சம் நான்கு ஐபோன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியும்.

    புதிய கம்பேனியன் மோடு அம்சம் கொண்டு பயனர்கள் ஒற்றை அக்கவுண்டினை அதிக ஐபோன்களில் லாக் இன் செய்து கொள்ளலாம். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. இந்த அம்சம் கொண்டு வாட்ஸ்அப் செயலி இரண்டாவது சாதனத்திலும் இயங்க செய்ய, வலதுபுறம் இருக்கும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும்.

    அடுத்து லின்க் டிவைஸ் (link device) ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இனி கியூஆர் கோடு திரையில் தோன்றும். வாட்ஸ்அப் பயன்படுத்தும் பிரைமரி சாதனத்தில், செட்டிங்ஸ் மற்றும் லின்க்டு டிவைசஸ் (linked devices) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதற்காக ஐபோனில் கேமராவை இயக்குவதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.

    இவ்வாறு செய்த பின் இரண்டு சாதனங்களிலும் வாட்ஸ்அப் சின்க் செய்யப்பட்டு விடும். பிரைமரி சாதனத்தில் இண்டர்நெட் இணைப்பு இல்லாத சமயத்திலும், இரண்டாவது சாதனத்தில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியும். இரண்டாவது ஐபோனில் வாட்ஸ்அப் வீடியோ / ஆடியோ அழைப்புகளை மேற்கொண்டு மற்ற அம்சங்களை இயக்கலாம்.

    சில சாட்கள் முழுமையாக லோடு ஆகாமலோ அல்லது, கால் லாக்ஸ் சரியாக தெரியாமல் போகும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். நான்கு சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் போதிலும், அனைத்தும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் முறையில் பாதுகாக்கப்படும் என்று வாட்ஸ்அப்-இன் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்து உள்ளது.

    • நகை மற்றும் செல்போன் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
    • 45 பவுன் நகை மற்றும் 10 ஐ போன்களை மரைக்காயரிடம் கொடுத்து அதனை பர்மா பஜாரில் உள்ள கடை ஒன்றில் கொடுக்குமாறு மோட்டார் சைக்கிளில் அனுப்பி வைத்தார்.

    போரூர்:

    சென்னை அசோக் நகர், 1-வது தெருவை சேர்ந்தவர் முஸ்தாக் அகமது. இவர் தனது வீட்டின் கீழே பழைய நகை மற்றும் செல்போன் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லாமுனார் மரைக்காயர் என்பவர் கடந்த 5 மாதங்களாக தங்கி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் முஸ்தாக் அகமது தன்னிடம் இருந்த 45 பவுன் நகை மற்றும் 10 ஐ போன்களை மரைக்காயரிடம் கொடுத்து அதனை பர்மா பஜாரில் உள்ள கடை ஒன்றில் கொடுக்குமாறு மோட்டார் சைக்கிளில் அனுப்பி வைத்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் மரைக்காயர் திரும்பி வரவில்லை. மேலும் அவரது செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. அவர் நகை மற்றும் செல்போன்களை சுருட்டிக் கொண்டு தப்பி சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஐபோன்களின் வேகத்தை ஆப்பிள் நிறுவனம் வேண்டுமென்றே குறைத்தது.
    • குறைபாடு கொண்ட யூனிட்களில் ஆப்பிள் நிறுவனம் பேட்டரிகளை இலவசமாக மாற்றிக் கொடுக்கிறது.

    ஆப்பிள் ஐபோன் திராட்லிங் பிரச்சினை தற்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. ஆப்பிள் நிறுவனம் 2 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 16 ஆயிரத்து 358 கோடி) இழப்பீடு வழங்க இங்கிலாந்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னதாக பழைய ஐபோன்களின் வேகத்தை ஆப்பிள் நிறுவனம் வேண்டுமென்றே குறைத்ததை ஒப்புக் கொண்டு அதற்கு இழப்பீடு வழங்குவதாக தெரிவித்து இருந்தது.

    இந்த சம்பவங்கள் நடந்து சிலகாலம் ஆகிவிட்ட நிலையில், ஆப்பிள் நிறுவனம் மீண்டும் இதேபோன்ற சிக்கலில் சிக்கியுள்ளது. இந்தமுறை ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களில் பாழாகிப் போன பேட்டரிகளை மறைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வழக்கை ஜஸ்டின் குட்மன் என்ற நபர் இங்கிலாந்து நீதிமன்றத்தில் தொடர்ந்து இருக்கிறார்.

     

    ஆப்பிள் நிறுவனம் பேட்டரிகளில் உள்ள குறையை மறைத்து, மென்பொருள் அப்டேட்களின் மூலம் ஐபோன் வேகத்தை குறைத்து இருக்கிறது. இந்த குற்றச்சாட்டை மறுத்து இருக்கும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 6s மாடல்களின் குறைந்த எண்ணிக்கையிலான யூனிட்ககளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

    குறைபாடு கொண்ட யூனிட்களில் ஆப்பிள் நிறுவனம் பேட்டரிகளை இலவசமாக மாற்றிக் கொடுக்கிறது. இந்த முறையும் ஐபோன்களை திராட்டில் செய்வதை ஒப்புக் கொண்ட ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 6 மாடல்களின் செயல்திறனை பத்து சதவீதம் வரை குறைத்ததாக தெரிவித்து இருக்கிறது.

    • விஸ்ட்ரன் உற்பத்தி ஆலையில் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 12 மாடல்களின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
    • ஐபோன் 15 மற்றும் அதன் பின் அறிமுகமாகும் புதிய ஐபோன்களை உற்பத்தி செய்ய டாடா திட்டமிட்டுள்ளது.

    இந்தியாவில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரன் ஐபோன் உற்பத்தி ஆலையை முழுமையாக கைப்பற்றும் பணிகளில் டாடா குழுமம் இறுதிக்கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு நிறுவனங்கள் இடையே ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இம்மாத இறுதியில் கையகப்படுத்தும் பணிகள் முழுமை பெறும் என கூறப்படுகிறது.

    கர்நாடக மாநிலத்தில் அமைந்து இருக்கும் விஸ்ட்ரன் உற்பத்தி ஆலையில் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 12 மாடல்களின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதற்காக ஆலையில் பாகங்களை ஒருங்கிணைக்கும் எட்டு அசெம்ப்ளி லைன்கள் உள்ளன. ஆலையை கையகப்படுத்தியதும் டாடா குழுமம் ஐபோன் 15 மற்றும் அதன் பின் அறிமுகமாகும் புதிய ஐபோன்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

     

    இதன் மூலம் ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தியின் முக்கிய பகுதியாக இந்தியாவை மாற்ற முடியும். ஏற்கனவே விஸ்ட்ரன், பெகட்ரான் மற்றும் ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் ஆப்பிள் நிறுவன சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்றன. இதில் விஸ்ட்ரன் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேற இருக்கும் நிலையில், ஃபாக்ஸ்கான் மற்றும் பெகட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளன.

    மத்திய அரசு இந்தியாவை உற்பத்தி களமாக மாற்றும் திட்டத்தை ஊக்குவித்து வருவதோடு, ஆப்பிள் நிறுவனம் தனது பெரும்பாலான உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மாற்ற நினைப்பதை அடுத்து டாடா குழுமம் ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தியை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்தது. விஸ்ட்ரன் நிறுவனத்தை கைப்பற்றியதும், டாடா குழுமம் பெகட்ரான் உற்பத்தி ஆலைகளை கையகப்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 

    • வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
    • ஐஒஎஸ் பயனர்களிடையே சிறிய வீடியோ நோட் அனுப்பும் வசதியும் வழங்கப்பட்டு வருகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பயனர்கள் செயலியை பயன்படுத்தும் அனுபவத்தை முற்றிலும் மாற்ற முடியும். சமீபத்தில் வாட்ஸ்அப் வழங்கிய அப்டேட் டெஸ்க்டாப் தளத்திற்கானது ஆகும். இதைத் தொடர்ந்து தற்போது பயனர்கள் மற்றவர்களுக்கு அனுப்பிய மெசேஞ்ச்களை எடிட் செய்யும் வசதி வழங்குவதற்கான பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வருகிறது.

    வாட்ஸ்அப் உருவாக்கி வரும் புதிய அம்சம் பயனர்கள் அனுப்பிய மெசேஞ்ச்களை அழிப்பதற்கு மாற்றாக அதில் ஏற்பட்ட பிழையை மட்டும் சரிசெய்யும் வகையில் எடிட் செய்ய முடியும். அனுப்பிய மெசேஞ்ச்களை எடிட் செய்வதற்கு தற்போது 15 நிமிடங்கள் வரை வழங்கப்படுகிறது. இந்த காலக்கெடுவுக்குள் அனுப்பிய மெசேஞ்ச்களை எடிட் செய்து கொள்ள வேண்டும்.

     

    தற்போது வழங்கப்பட்டு இருக்கும் டெலிட் அம்சத்திற்கு மாற்றாக, புதிய அம்சம் இருக்கும். டெலிட் அம்சம் குறுந்தகவலை முழுமையாக அழிக்கச் செய்து வேறொரு தகவலை அனுப்ப உதவி வருகிறது. புதிய அம்சம் குறுந்தகவல்களை அழிக்காமல், அதில் சிறு மாற்றங்களை மேற்கொள்ளச் செய்கிறது. இவ்வாறு செய்த பின் குறுந்தகவல் எடிட் செய்யப்பட்டு இருப்பதை அனுப்பியவர் மற்றும் அதனை பெறுபவர் என இருவருக்கும் தகவல் இடம்பெற்று இருக்கும்.

    புதிய அம்சம் வாட்ஸ்அப்-இன் சமீபத்திய வெர்ஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது. இது மெசேஞ்ச்களை எடிட் செய்வதற்கு மட்டுமே பொருந்தும். இந்த அம்சம் ஐஒஎஸ் பயனர்களுக்காக மட்டும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட இருக்கும் இந்த அம்சம் எதிர்கால அப்டேட்களில் அனைவருக்கும் கிடைக்கும்.

    இதுதவிர வாட்ஸ்அப் ஐஒஎஸ் வெர்ஷனில் வீடியோ மெசேஞ்ச் அம்சம் வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் அதிகபட்சம் 60 நொடிகளுக்கு சிறிய வீடியோ நோட்களை அனுப்பலாம். டெலிகிராமில் வழங்கப்பட்டு இருக்கும் வீடியோ நோட் போன்றே வாட்ஸ்அப்-இல் இந்த அம்சம் வழங்கப்பட இருக்கிறது. பயனர்கள் வாட்ஸ்அப்-இன் கேமரா பட்டனை க்ளிக் செய்து வீடியோக்களை பதிவு செய்து அனுப்பலாம்.

    • உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக ஆப்பிள் நிறுவனம் இருக்கிறது.
    • திறக்கப்படாத நிலையில் இருக்கும் பழைய ஐபோன் மாடல்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், முதல் தலைமுறை ஐபோனிற்கான மதிப்பு குறைந்ததாக தெரியவில்லை. கடந்த ஆண்டுகளில் பல்வேறு புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், பழைய ஐபோன் அதிக விலைக்கு விற்பனையாகி இருக்கிறது.

    அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் ஒரிஜினல் ஐபோன் மாடல் 50 ஆயிரம் டலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக முதல் தலைமுறை ஐபோன் மாடல் அதன் ஒரிஜினல் பெட்டியில் இருக்கும் நிலையில் 63 ஆயிரத்திற்கும் அதிக டாலர்களுக்கு விற்பனையாகி இருந்தது. தற்போது சீல் செய்யப்பட்ட நிலையில், இருக்கும் ஒரிஜினல் ஐபோன் மாடல் 55 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 45 லட்சத்து 44 ஆயிரத்து 402-க்கு விற்பனையாகி இருக்கிறது.

    முன்னதாக பலமுறை ஒரிஜினல் ஐபோன் மாடல்கள் அதன் திறக்கப்படாத நிலையில் 35 ஆயிரம் மற்றும் 39 ஆயிரம் டாலர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ. 28 லட்சத்து 91 ஆயிரத்து 892 மற்றும் ரூ. 32 லட்சத்து 22 ஆயிரத்து 394-க்கு விற்பனையாகி இருக்கின்றன. சுமார் 16 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட பழைய ஐபோனிற்கான மதிப்பு இன்றும் குறையவில்லை. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மட்டுமின்றி பல்வேறு இதர பொருட்களுக்கும் இதே போன்ற மதிப்பு கிடைக்கிறது.

    அதன்படி ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் மாடல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் கையொப்பமிட்ட ஐபோன் 11 மாடல் 4 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 30 ஆயிரத்து 490-க்கு விற்பனையாகி இருக்கிறது. இதே போன்று ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் தொழில்நுட்ப குறிப்புகள் 12 ஆயிரத்து 500 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 10 லட்சத்து 32 ஆயிரத்து 755-க்கு விற்பனையாகி இருக்கிறது.

    • ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் அமோக விற்பனையை பதிவு செய்கின்றன.
    • கவுண்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் 2022 ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

    2022 ஆண்டு ஆப்பிள் நிறுவனத்திற்கு தலைசிறந்த ஒன்றாக அமைந்து இருந்ததாக ஆய்வு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. உலகளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் கணிசமான பங்குகளை பெற்று இருக்கிறது.

    உலகளவில் அதிகம் விற்பனையாகும் டாப் 10 ஸ்மார்ட்போன்களில் எட்டு மாடல்கள் ஐபோன் ஆகும். 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் ஆக இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் அடுத்தடுத்த இடங்களை பிடித்து இருக்கின்றன.

    இந்த பட்டியலில் ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 12, ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் SE 2022 உள்ளிட்ட மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் சாம்சங் நிறுவனத்தின் இரண்டு எண்ட்ரி லெவல் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இடம்பிடித்துள்ளன. கவுண்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாக ஐபோன் 13 உள்ளது.

     

    2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் A15 பயோனிக் சிப் உள்ளது. ஒட்டுமொத்த ஐபோன் விற்பனையில் 28 சதவீதம் ஐபோன் 13 மாடல் ஆகும். ஐபோன் 14 சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து ஐபோன் 13 மாடலுக்கு அறிவிக்கப்பட்ட விலை குறைப்பு காரணமாக இதன் விற்பனை அதிகரித்து இருக்கும் என தெரிகிறது.

    சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஐபோன் 13 அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் ஆக இருந்துள்ளது. இந்த பட்டியலில் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன. 2022 ஆண்டு ப்ரோ மேக்ஸ் சீரிஸ் விற்பனை ப்ரோ மற்றும் பேஸ் வேரியண்ட்களை விட அதிகமாக இருந்துள்ளது.

    சாம்சங்கின் கேலக்ஸி A13 மாடல் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் நான்காவது இடத்திலும், ஐபோன் 13 ப்ரோ மாடல் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. ஐபோன் 12 மாடல் ஆறாவது இடம், ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ மாடல்கள் முறையே ஏழு மற்றும் எட்டாவது இடங்களை பிடித்துள்ளன.

    ஐபோன் SE 2022 மாடல் ஒன்பதாவது இடமும், சாம்சங் கேலக்ஸி A03 மாடல் பத்தாவது இடத்தை பிடித்துள்ளன. அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன் மாடல்களில் எட்டு இடங்களை பிடித்திருக்கும் முதல் நிறுவனமாக ஆப்பிள் உள்ளது.

    • ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய தொழில்நுட்பம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
    • முன்னதாக வெளியான தகவல்களில் இந்த தொழில்நுட்பம் ஐபோன் 14 சீரிசில் வழங்கப்படும் என கூறப்பட்டது.

    ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடல்களில் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் நீண்ட காலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. எனினும், ஆப்பிள் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மேலும் தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஐபோன் மாடல்களில் இந்த தொழில்நுட்பத்தை வழங்கலாம் என கூறப்படுகிறது.

    முழுமையான ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஐபோன்களில் வழங்குவதற்கான பணிகளை ஆப்பிள் இதுவரை நிறைவு செய்யவில்லை என்றே கூறப்படுகிறது. ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் ஸ்மார்ட்போனினை வயர்லெஸ் சார்ஜிங் பேட் ஆக மாற்றி விடும். இதை கொண்டு வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட இதர சாதனங்களை சார்ஜ் செய்யலாம்.

    அதாவது உங்களின் மொபைல் போன் கொண்டு ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அல்லது வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட சிறிய மின்சாதனங்களை சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். முன்னதாக இணையத்தில் வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் வழங்கும் என கூறப்பட்டது.

    எனினும், இந்த தொழில்நுட்பத்தை வழங்க ஆப்பிள் தவறிவிட்டதாக தெரிகிறது. இந்த முறை ஆப்பிள் பொறியாளர்கள், வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை வழங்கி முடிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்திற்கான மென்பொருள் ஆப்டிமைசேஷன்கள் உருவாக்கப்படுகிறது. ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் பைலேடரல் வயர்லெஸ் சார்ஜிங் என்றும் அழைக்கப்படுகிறது.

    ஐபோன் 12 சீரிசில் இருந்தே ஆப்பிள் நிறுவனம் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வழங்குவதற்கான உபகரணங்களை பயன்படுத்த துவங்கிவிட்டது. எனினும், இந்த அம்சம் பல்வேறு காரணங்களால் செயலிழக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகிறது. ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை முழுமையாக வழங்கியதும், ஐபோன்களில் இந்த அம்சம் வழங்கப்படலாம். புதிய தொழில்நுட்பம் வழங்கப்படும் பட்சத்தில் இதை கொண்டு ஐபோன் மூலம் ஏர்பாட்ஸ்-ஐ சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    • ஆப்பிள் நிறுவனம் சர்வதேச சந்தையில் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தியாளராக இருக்கிறது.
    • கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் ஆப்பிள் தனது புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது.

    ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் இருந்து ஒரே மாதத்தில் ஒரு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்த முதல் நிறுவனம் எனும் பெருமையை பெற்று இருக்கிறது. மத்திய அரசின் "மேக்-இன்-இந்தியா" திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் ரூ. 8 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான ஐபோன்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவில் இருந்து ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்வதில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இது குறித்த அரசு தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் முன்னணி மொபைல் போன் ஏற்றுமதியாளராக சாம்சங்கை முந்தி இருக்கிறது.

    ஐபோன் 12, ஐபோன் 13, ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் போன்ற மாடல்களை ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் ஃபாக்ஸ்கான் ஹான் ஹாய், பெகட்ரான் மற்றும் விஸ்ட்ரன் போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களின் ஆலைகளை தமிழ் நாடு மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் இயக்கி வருகின்றன. இவற்றுக்கு மத்திய அரசின் ஸ்மார்ட்போன் ப்ரோடக்ஷன்-லின்க்டு-இன்செண்டிவ் (PLI) திட்டத்தின் கீழ் உள்ளன. இந்த திட்டம் ஏப்ரல் 2020 வாக்கில் அறிவிக்கப்பட்டது.

    மத்திய அரசின் PLI திட்டமானது இந்தியாவை ஸ்மார்ட்போன் மற்றும் இதர மின்சாதன உதிரிபாகங்களின் உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தில் பங்கேற்க உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி , ஏற்றுமதி, முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றி அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக தகவல்களை வழங்க வேண்டும்.

    மூன்று ஒப்பந்த உற்பத்தியாளர்கள் தவிர, மேலும் சிறு இந்திய நிறுவனங்களும் இந்தியாவில் இருந்து ஐபோன்களை ஏற்றுமதி செய்து வருகின்றன. 2022-23 நிதியாண்டில் இந்தியா 9 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான மொபைல் போன்களை ஏற்றுமதி செய்யும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய ஆண்டில் இருந்த 5.8 பில்லியன் டாலர்களை விட அதிகம் ஆகும். 

    • ஆப்பிள் நிறுவனம் விண்ணப்பித்து இருக்கும் காப்புரிமை பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • ஐபோன் மாடல்களில் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி நீண்ட காலம் எதிர்பார்க்க ப்பட்டு வருகிறது.

    ஐபோன்களை கொண்டு பல்வேறு இதர சாதனங்களை சார்ஜ் செய்யும் வசதியை வழங்கும் அம்சத்திற்காக ஆப்பிள் நிறுவனம் காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. ஆப்பிள் காப்புரிமை விண்ணப்பத்தில் வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டம் பைமாடல் மாக்னடிக் அலைன்மெண்ட் பாகங்களை பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    அதன்படி இந்த அம்சம் எதிர்கால ஐபோன்களில் ஏர்பாட்ஸ், ஆப்பிள் வாட்ச் மற்றும் இதர அக்சஸரீக்களுக்கு வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கும். தற்போது ஐபோன்களின் பின்புறம் ஆப்பிள் வழங்கி வரும் வயர்லெஸ் சார்ஜிங் பெரிய காயில் கொண்டுள்ளது. ஆனால் இது வாட்ச்-ஐ சார்ஜ் செய்யாது.

    காப்புரிமை விண்ணப்ப குறிப்பில், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டம்கள் எலெக்ட்ரோமேக்னடிக் இண்டக்ஷன் முறையில் மின்சாதனங்களுக்கு சார்ஜ்-ஐ வழங்கும் என குறிப்பிட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் கொண்டு வயர்லெஸ் சார்ஜர் பகுதியில் இதர சாதனங்களையும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

    ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் தவிர ஆப்பிள் நிறுவனம் 2024 வாக்கில் அறிமுகம் செய்ய OLED கொண்ட ஐபேட் ப்ரோ 11.1 இன்ச் மற்றும் 13 இன்ச் மாடல்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் தனது 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல்களை அப்டேட் செய்து அவற்றில் M2 சிப்செட் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Photo Courtesy: Patentlyapple 

    • மடிக்கக்கூடிய சாதனங்கள் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் களமிறங்குவது பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.
    • மடிக்கக்கூடிய ஐபோன் மாடலில் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படும் என்றும் இது ஐபோன் ஃபோல்டு என்று அழைக்கப்படுகிறது.

    சாம்சங், ஹூவாய், ஒப்போ மற்றும் சியோமி என பல்வேறு நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிரிவில் களமிறங்கி விட்டன. ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இந்த பிரிவில் புது மாடல்களை அறிமுகம் செய்வது பற்றி அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    புதிய மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் "ஐபோன் ஃபோல்டு" பெயரில் அழைக்கப்படும் என்றும் இதில் யுஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் மேக்சேஃப் வசதி வழங்கப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இவைதவிர புதிய ஐபோன் ஃபோல்டு மாடலில் டச் ஐடி அல்லது ஃபேஸ் ஐடி போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் எல்ஜி-யுடன் இணைந்து மிக மெல்லிய கவர் கிலாஸ் உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

    இது மட்டுமின்றி ஆப்பிளஅ நிறுவனம் சொந்த சிப் டிசைன் பிரிவில் தொடர்ந்து முதலீடு செய்யும் என்றும் கூறப்படுகிறது. தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மற்றும் ஐபேட் மாடல்களுக்கான சொந்த சிப்செட்களை டிசைன் செய்து வருகிறது. எனினும், 5ஜி கனெக்டிவிட்டியை வழங்க ஆப்பிள் நிறுவனம் குவால்காம் நிறுவன மோடெம்களை சார்ந்து இருக்கிறது. டிஸ்ப்ளே சப்ளை செயின் கன்சல்டண்ட் ஆய்வாளர் ராஸ் யங் ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் 2025 வரை அறிமுகமாகாது என தெரிவித்து இருந்தார்.

    ஆப்பிள் நிறுவனம் தற்போது 20 இன்ச் அளவில் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே வாங்குவது குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அந்த வகையில் மடிக்கக்கூடிய மேக்புக் மாடல்களை ஆப்பிள் உருவாக்க நினைப்பதாகவே தெரிகிறது. மடிக்கப்பட்ட நிலையிலும், முழுமையாக திறக்கப்பட்ட நிலையிலும் பயன்படுத்தக்கூடிய மேக்புக் மாடல்கள் 2026 அல்லது 2027 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    Photo Courtesy: iOS Beta News/YouTube

    • வாட்ஸ்அப் செயலியின் ஐபோன் வெர்ஷனில் ஏராள மாற்றங்கள் அடங்கிய அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது.
    • தற்போது புது அம்சங்கள் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப், ஐபோனில் புது மாற்றங்களை பெற இருக்கிறது. அதன்படி ஐபோனிற்கான வாட்ஸ்அப் செயலியில் PiP மோட் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய அம்சம் வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் வீடியோ கால் பேசிக் கொண்டே மற்ற செயலிகளை தொடர்ந்து பயன்படுத்த வழி செய்கிறது.

    தற்போது வீடியோ கால் பேசும் போதே வாட்ஸ்அப் மற்ற செயலிகளை பயன்படுத்த வழி செய்கிறது. எனினும், இவ்வாறு செய்யும் போது வாட்ஸ்அப் செயலிக்கான கேமரா அக்சஸ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு விடும். இதன் காரணமாக பயனர்கள் மற்ற சேவைகளை பயன்படுத்த துவங்கும் போது வீடியோவை பார்க்க முடியாது. எனினும், புது அம்சம் மூலம் இந்த நிலை விரைவில் மாறும் நிலை வந்துள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த ஃபேஸ் டைம் வீடியோ காலிங் மற்றும் கான்ஃபெரன்சிங் செயலிகள் ஐஒஎஸ்-இல் இயங்குவதை போன்றே வாட்ஸ்அப் செயலியிலும் இயங்கும். ஏற்கனவே கான்ஃபெரன்சிங் செயலி வீடியோ கால் பேசும் போதே PiP மோட் மூலம் மற்ற செயலிகளை பயன்படுத்த வழி செய்கிறது.

    தற்போது வாட்ஸ்அப் செயலியில் இந்த அம்சம் வழங்கப்படுவதோடு, லின்க் மூலம் க்ரூப் கால்களில் இணைந்து கொள்ளும் வசதி, வீடியோ கால் பேசும் போது 32 பேரை இணைத்துக் கொள்வது மற்றும் வீடியோ காலில் யாரையாவது மியூட் அல்லது மற்றவருக்கு மெசேஜ் அனுப்புவது உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம். PiP மோடில் வீடியோ கால் அம்சம் மேலும் மேம்படுத்தப்படும் என தெரிகிறது.

    எனினும், தற்போது இந்த அம்சங்கள் அனைத்தும் பீட்டா வெர்ஷனிலேயே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், வாட்ஸ்அப் ஸ்டேபில் வெர்ஷனில் இவை கிடைக்க மேலும் சில காலம் ஆகலாம். வெளியாகும் போதே புது அம்சங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    ×