search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    விஸ்ட்ரன் ஐபோன் உற்பத்தி ஆலையை கையகப்படுத்தும் பணிகள் - இறுதிக்கட்டத்தில் டாடா குழுமம்!
    X

    விஸ்ட்ரன் ஐபோன் உற்பத்தி ஆலையை கையகப்படுத்தும் பணிகள் - இறுதிக்கட்டத்தில் டாடா குழுமம்!

    • விஸ்ட்ரன் உற்பத்தி ஆலையில் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 12 மாடல்களின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
    • ஐபோன் 15 மற்றும் அதன் பின் அறிமுகமாகும் புதிய ஐபோன்களை உற்பத்தி செய்ய டாடா திட்டமிட்டுள்ளது.

    இந்தியாவில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரன் ஐபோன் உற்பத்தி ஆலையை முழுமையாக கைப்பற்றும் பணிகளில் டாடா குழுமம் இறுதிக்கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு நிறுவனங்கள் இடையே ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இம்மாத இறுதியில் கையகப்படுத்தும் பணிகள் முழுமை பெறும் என கூறப்படுகிறது.

    கர்நாடக மாநிலத்தில் அமைந்து இருக்கும் விஸ்ட்ரன் உற்பத்தி ஆலையில் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 12 மாடல்களின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதற்காக ஆலையில் பாகங்களை ஒருங்கிணைக்கும் எட்டு அசெம்ப்ளி லைன்கள் உள்ளன. ஆலையை கையகப்படுத்தியதும் டாடா குழுமம் ஐபோன் 15 மற்றும் அதன் பின் அறிமுகமாகும் புதிய ஐபோன்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

    இதன் மூலம் ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தியின் முக்கிய பகுதியாக இந்தியாவை மாற்ற முடியும். ஏற்கனவே விஸ்ட்ரன், பெகட்ரான் மற்றும் ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் ஆப்பிள் நிறுவன சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்றன. இதில் விஸ்ட்ரன் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேற இருக்கும் நிலையில், ஃபாக்ஸ்கான் மற்றும் பெகட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளன.

    மத்திய அரசு இந்தியாவை உற்பத்தி களமாக மாற்றும் திட்டத்தை ஊக்குவித்து வருவதோடு, ஆப்பிள் நிறுவனம் தனது பெரும்பாலான உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மாற்ற நினைப்பதை அடுத்து டாடா குழுமம் ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தியை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்தது. விஸ்ட்ரன் நிறுவனத்தை கைப்பற்றியதும், டாடா குழுமம் பெகட்ரான் உற்பத்தி ஆலைகளை கையகப்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×