search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "information"

    • திண்டி வனம் நுகர்பொருள் வாணிப கிடங்கு குடோனுக்கு லாரி ஒன்று நேற்று இரவு புறப்பட்டது.
    • லாரியில் உள்ள அரிசி மூட்டைகளை வேறு லாரியில் மாற்றினர்

    கடலூர்: 

    கடலூர் அடுத்த செம்மங்குப் பத்தில் உள்ள அரசு அரிசி ஆலையில் இருந்து மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திண்டி வனம் நுகர் பொருள் வாணிப கிடங்கு குடோனுக்கு லாரி ஒன்று நேற்று இரவு புறப்பட்டது.

    இந்த லாரி அண்ணா கிராமம் சாலையில் சென்று கொண்டி ருந்த போது, சாலையின் நடுவே இருந்த தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லாரியில் உள்ள அரிசி மூட்டைகளை வேறு லாரியில் மாற்றினர். சாலை யின் நடுவே போக்கு வரத்துக்கு இடையூறாக நின்று கொண்டிருந்த லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி னர்.

    • வருகிற டிசம்பர் மாதத்திற்குள் சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும்.
    • சீவலப்பேரியி லிருந்து சுமார் 115 கிலோ மீட்டர் தூரம் குழாய்கள் பதிக்கப்பட்டு, தாமிரபரணி தண்ணீர் கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். ரகுராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிற வகையில் முதல்-அமைச்சர் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர், விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை நகராட்சிகளுக்கு ரூ.444 கோடிசெலவில் சீவலப்பே ரியிலிருந்து புதிய குடிநீர் திட்டத்தை ஆரம்பித்து பணிகள் நடைபெற்று வருகிறது. சீவலப்பேரியி லிருந்து சுமார் 115 கிலோ மீட்டர் தூரம் குழாய்கள் பதிக்கப்பட்டு, தாமிரபரணி தண்ணீர் கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இத்திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கப்படும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குழாய்கள் பதிக்கும் பணிகளின் போது உள்ள நடைமுறை சிக்கல்களை நகராட்சித்துறை, நெடுஞ்சா லைத்துறை உள்ளிட்ட சம்மந்தப்பட்ட துறைகளின் ஒத்துழைப்போடு இணைந்து, பணியினை விரைவுபடுத்த வேண்டும், குழாய் பதிக்கும் இடங்களில் சீரானமின் விநியோகம் கிடைப்பதற்கு தேவையான மின்சாரகட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

    இந்த புதிய குடிநீர் திட்ட பணிகளை குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சா லைத்துறை, மின்சாரத்துறை, நகராட்சி உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள்ளாக அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர் நகராட்சிகளுக்கு சீரான தண்ணீர் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை களை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ராமநாதபுரம் அரண்மனை, உப்பூர் பகுதியில் நாளை மின் தடை ஏற்படுகிறது.
    • இந்த தகவலை மின்சார உதவி செயற்பொறியாளர்கள் பாலமுருகன், சித்தி விநாயகர் மூர்த்தி ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (19-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆர். எஸ். மடை துணை மின் நிலையத்தில் உள்ள டவுன்-2, டவுன்-3, உயர் மின் அழுத்த பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் இதன் வழியாக மின் விநியோகம் செய்யப்படும் பகுதியான அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றி யுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன்கோயில் சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைகள் வீதி, கே.கே. நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு சிங்கார தோப்பு, பெரியார் நகர், லாந்தை.

    அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோ னீயர் சுற்று பகுதிகளில், பெரிய கருப்பன் நகர், கோட்டை மேடு, உப்பூர், கடலூர், ஊரனங்குடி, சித்தூர்வாடி, காவனூர், கலங்காபுளி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இந்த தகவலை மின்சார உதவி செயற்பொ றியாளர்கள் பாலமுருகன், சித்தி விநாயகர் மூர்த்தி ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

    • விக்கிரவாண்டி கடை வீதியில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது
    • தீயணைப்பு வீரர்கள் நல்ல பாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி பெரு மாள் கோவில் கருவறைக் குள் புகுந்த நல்லபாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டு காப்பு காட்டில் விட்டனர். விக்கிரவாண்டி கடை வீதியில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.கோவில் அர்ச்சகராக மாலோலன் பட்டாச்சாரியார் உள்ளார். இவர் நேற்று மாலை நடை திறக்க 6 மணியளவில் கோவில் கருவறை கதவை திறந்தார்.

    நில வாயிற்படி யின் மேல் நல்ல பாம்பு ஒன்று சத்தம் போட்டபடி பட மெடுத்து படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார் இது பற்றி விக்கிரவாண்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வேல்முருகன், ஆகியோர் கொண்ட குழுவி னர் நல்ல பாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.

    • சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தற்போது 650 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    • இத்தகவலை வாணாபுரம் தாசில்தார் குமரன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தற்போது 650 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை யாற்றின் தரைப்பாலங்களை பொதுமக்கள் யாரும் கடக்க வேண்டாம். ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். இதனை வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு ள்ளது. இத்தகவலை வாணாபுரம் தாசில்தார் குமரன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    • வரிகள் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய சிறப்பு முகாம் வாரந்தோறும் நடைபெறும்.
    • மேற்கண்ட தகவலை மேயர் இந்திராணி பொன் வசந்த் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநக ராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பராமரிப்பு கட்டணம் ஆகிய வரி வருவாய் இனங்கள் மூலமும் வரியில்லாத வருவாய் இனங்கள் மூலமும் மாநகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகளும், பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளி ட்டவை அனைத்திற்கும் வரி சீராய்வு செய்யப்பட்டு தற்போது வரி வசூல் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    வரி சீராய்வு செய்யப்பட்டதில் ஒரு சில குடியிருப்புகள்இ வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் கதவு எண் மாற்றம், தெருக்களின் பெயர் மாற்றம், வார்டு எண் மாற்றம், பாதாள சாக்கடை, குடிநீர் குழாய்கள் வரி விதிப்பு செய்தல், இரட்டைப் பதிவுகளை நீக்குதல் உள்ளிட்ட சொத்து வரியில் உள்ள அனைத்து குறைக ளையும் நீக்குவதற்கு மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் ஒவ்வொரு புதன்கிழமை தோறும் அனைத்து மண்டலங்களிலும் வரி குறைகள் தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    அதன்படி இன்று (புதன்கிழமை) அனைத்து மண்டலங்களிலும் வரி குறைகள் தொடர்பாக சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெற்றது.

    முகாம்களை மேயர் ஆய்வு செய்வார். இதில் பொதுமக்கள் தங்களது வரியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கு தொடர்புடைய ஆவ ணங்கள் அடிப்படையில் சரிப்பார்க்கப்பட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும்.

    எனவே மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன் படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மேயர் இந்திராணி பொன் வசந்த் தெரிவித்துள்ளார்.

    • காரைக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 14-ந்தேதி நடக்கிறது.
    • வேலை வாய்ப்பு பெற்று பணி நியமனம் பெறும் பதிவு தாரர்களுடைய வேலை வாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் 3 சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 2-வது தனியார் வேலை வாய்ப்பு முகாம் காரைக்குடி யில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியி டங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இம்முகாமில் 5-ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

    இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்ப முள்ள வர்கள் உரிய ஆவணங்க ளுடன் https://bitly/svgjobfair1 என்ற இணைப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்க உள்ள தனியார் துறை நிறுவனங்கள் https://b itly/svgempreg என்ற இணைப்பில் பதிவு செய்வது அவசியம்.

    மேலும் www.tnprivatejobs.tn.gov.in என்ற தனியார் வேலைவாய்ப்பு இணை யத்திலும் பதிவு செய்யலாம். வேலைவாய்ப்பு தொடர் பான பல்வேறு தகவல் களை பெற SIVAGANGAI EMPLOYMENT OFFICE என்ற Telegram channel—ல் இணைந்து பயன்பெற லாம். இம்முகாமில் வேலை வாய்ப்பு பெற்று பணி நியமனம் பெறும் பதிவு தாரர்களுடைய வேலை வாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது.

    மேலும் இந்த முகாமில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி சேர்க்கை விண்ணப்பம், திறன் பயிற்சி களுக்கான விண்ணப்பம், வேலை வாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் ஆகியவை வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குமரிக்கல்பாளையம் என்ற இடத்தில் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்லியல் எச்சங்கள், நடுகல் உள்ளிட்டவை இருக்கிறது.
    • 32 அடி உயர நடுகல், முதுமக்கள் தாழி, பல 100 ஆண்டுகளுக்கு முன் உள்ளவைகளை பார்வையிட்டனர்.

    ஊத்துக்குளி,அக்.9-

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா, காவுத்தம்பாளையம் பஞ்சாயத்தில் உயர்மின் கோபுர திட்டத்தின் கீழ் துணை மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குமரிக்கல்பாளையம் என்ற இடத்தில் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்லியல் எச்சங்கள், நடுகல் உள்ளிட்டவை இருப்பதால் அவற்றை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும். துணை மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் மத்திய தொல்லியல் துறை திருச்சி கண்காணிப்பாளர் காளிமுத்து மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் இங்குள்ள 32 அடி உயர நடுகல், முதுமக்கள் தாழி, பல 100 ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்த இரும்பு ஆலைக்கழிவுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.

    இது குறித்து களஞ்சியம் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் கூறுகையில், ஒரு வாரத்துக்குள் தொல்லியல் ஆய்வுக்குழுவினருடன் முகாமிட்டு, அங்குள்ள தொல்லியல் எச்சங்கள் குறித்து ஆய்வு செய்து அதன் அறிக்கையை மத்திய தொல்லியல் துறைக்கு அனுப்பி வைப்பதாக அதிகாரிகள் குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர். இங்குள்ள தொல்லியல் எச்சங்களை பார்க்கும் போது இது, கீழடி, ஆதிச்சநல்லுார் நாகரித்துக்கு முற்பட்டதாக கூட இருக்கலாம் எனவும் கணிக்கின்றனர்.

    இந்த இடத்தை விரிவாக ஆய்வு நடத்தும் போது தமிழர்களின் பல மறைக்கப்பட்ட பாரம்பரியம், கலாசார தகவல்கள் வெளிவர வாய்ப்புண்டு என்றார்.

    • காரமடை நகராட்சியில் நகர்மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது
    • அறிவிப்பு பலகையை மக்களின் பார்வைக்கு வைக்க நகராட்சி ஆணையாளர் உத்தரவு

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சி யில் நகர்மன்ற மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் உஷா தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் மனோகரன், துணை தலைவர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:

    விக்னேஷ்(பா.ஜ.க): காரமடை நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை உள்ளது. இந்த சூழ்நிலையில் புதிதாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. குடிநீர் பிரச்சினையை தீர்க்காமல் புதிதாக இணைப்புகள் வழங்குவதால் மேலும் பிரச்சினை அதிகமாகிறது.

    காரமடை சந்தையில் சுங்க கட்டணம் வசூலிப்பதில் முறைகேடு நடக்கிறது. சுங்கம் வசூலிப்பது தொடர்பாக, நகராட்சி சார்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணம் தொடர்பான அறிவிப்பு பலகையை சந்தையில் வைக்க வேண்டும். இல்லை என்றால் ஆர்ப்பாட்டம் செய்யப்படும்.

    நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் தூய்மை பணிகள் சரி வர மேற்கொள்ள ப்படுவ தில்லை. பள்ளிகளின் கழிப்பிடத்தை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது என பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதற்கு உடனடியாக ஆட்களை நியமித்து கழிப்பிடங்களை பராமரிக்கப்பட வேண்டும்.

    ராமுகுட்டி (தி.மு.க) : காரமடை நகராட்சிக்கு உட்பட்ட சந்தையை இடம் மாற்றம் செய்யக்கூடாது. தற்போது செயல்பட்டு வரும் சந்தையில் போது மான அளவு இடவசதி உள்ளது. புதிதாக சந்தை தேவையில்லை, மேம்ப டுத்தினால் போதுமானது.

    வனிதா (அ.தி.மு.க) : காரமடை சந்தையை இடமாற்றம் செய்தால், விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். சந்தை இடமாற்றம் செய்யக்கூடாது என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    குருபிரசாத் (தி.மு.க) : சந்தையை இடமாற்றம் செய்யக்கோரி தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. கவுன்சிலர்கள் முதலில் அதனை புரிந்து கொள்ள வேண்டும். புதிதாக சந்தை கொண்டுவர தான் தீர்மானம் வந்துள்ளது. இடமாற்றம் செய்யப்படவில்லை. திட்டங்கள் தொடர்பாக கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அரசுக்கு கருத்துரு அனுப்புவதற்கு முன்பாக, கவுன்சிலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். மக்கும் மக்காத குப்பைகள் தரம் பிரித்து தூய்மை பணியாளர்கள் வாங்க வேண்டும்.

    எஸ்.என்.எஸ் ரவிக்கு மார் (தி.மு.க): ராஜீவ் காந்தி நகர், அன்னை வேளாங்கண்ணி நகரில் கழிவுநீர் கால்வாய் அமைத்து சாலை அமைத்து தர வேண்டும். உப்பு தண்ணிக்கு போர்வெல் அமைத்து தர வேண்டும்.

    ராம்குமார் (தி.மு.க) : காரமடை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. 27 வார்டுகளிலும் தல ஒரு லட்சம் வீதம் ரூ.27 லட்சத்திற்கு சாலைக ளில் பேட்ச் ஒர்க் பார்க்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. ஆனால் 3 வார்டுகளில் மட்டும் தான் பணி நடந்துள்ளது. மற்ற வார்டுகளில் பேட்ச் ஒர்க் பார்க்கப்படவில்லை. இதற்கான பில்களை எங்களிடம் காண்பிக்க வேண்டும். ரவிக்குமார் (தி.மு.க): ராயல் கார்டனில் கடந்த ஒன்றரை ஆண்டுக ளாக தண்ணீர் பிரச்சினை உள்ளது. இதுதொடர்பாக போர்வெல் அமைத்து தர கோரி தொடர்ந்து கேட்டு வருகிறேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

    ஆணையாளர் மனோகரன்: தற்போது இயங்கி வரும் காரமடை சந்தையை இடமாற்றம் செய்யப் போவதில்லை. இந்த சந்தையில் இருந்து ரூ.44 லட்சம் அளவிற்கு நகராட்சிக்கு வருவாய் வருகிறது. இந்த சந்தை கண்டிப்பாக செயல்படும். அதே சமயம் புதிதாகவும் சந்தை அமைக்கலாமா என தான் கருத்து கேட்டு ள்ளோம்.

    பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்ப டும். இதை நான் எனது நேரடி கவனத்திற்கு எடுத்துக் கொள்கிறேன். கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பழுதடைந்து இடியும் தருவாயில் உள்ள கட்டிடங் களை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ. 4.25 கோடி நிதி ஒதுக்க கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி சார்பில் மக்கள் சேவைகள் தொடர்பாக, அந்த பணிகள் எத்தனை நாட்களுக்குள் முடிக்கப்படும் என்பதற்கான அறிவிப்பு பலகை மக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓட்டல்களில் உணவு தரம் குறித்து தொடர் சோதனைகள் நடத்தப்படும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள திருப்புல்லாணியில் உணவுப் பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவிற்கான மேளா நடைபெற்றது.

    சென்னை உணவு பாதுகாப்பு நிர்வாகத்துறை கமிஷனர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தலின் படி திருப்புல்லாணியில் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவிற்கான மேலா நடந்தது.

    உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமை தாங்கினார். கீழக்கரை மற்றும் திருப்புல் லாணி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார்.

    அதன் பின்னர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்யப்பட்டது.ஆய்வின் போது கெட்டுப் போன தோசை மாவு, மூன்று கிலோ பிளாஸ்டிக், 2 கிலோ கண்டறியப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.சுத்தம் இல்லாத ஓட்டல் களை கண்டறிந்து நோட் டீஸ் வழங்கப்பட்டு ரூ.4000 அபதாரம் விதிக்கப்பட்டது.

    இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.விஜயகுமார் மாலைமலர் நிருபரிடம் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் தொடர்ந்து சோதனை நடத்தி தவறுகள் கண்டறியப்பட்டால் அபராதம் விதித்து வருகிறோம்.

    இவ்வாறு தொடர்ந்து சோதனைகள் செய்வதால் மட்டும் தவறுகள் முற்றிலும் தடுக்கப்படாது.பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் முறையான அனுமதியின்றி,கா லாவதியான உணவுகளை விற்பனை செய்யும் கடைகள் குறித்து உணவுப் பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்.

    அரசுத் துறையுடன் பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தவறுகளை கண்டறிந்து அதனை தீர்ப்பதற்கு ஏதுவான வழிமுறைகளை கண்டறிய இயலும் என்றார்.

    • மாநகராட்சி பகுதிகளில் 25 இடங்கள் காய்ச்சல் அதிகம் பரவும் இடங்களாக அறியப்பட்டுள்ளது.
    • வீட்டின் பிரிட்ஜ் பின்புறம் வடியும் நீரை அடிக்கடி மாற்ற வேண்டும்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

    டெங்கு காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொ ண்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 60 இடங்கள், மாநகராட்சி பகுதிகளில் 25 இடங்கள் காய்ச்சல் அதிகம் பரவும் இடங்களாக அறியப்பட்டுள்ளது. அந்த இடங்களில் தனிக்கவனம் செலுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது.

    இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் மட்டும் டெங்கு காய்ச்சல் காரணமாக 56 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த 3 நாளில் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதுதவிர வைரஸ் காய்ச்சல் பாதிப்பினால் உள்நோயாளிகளாக தினமும் 5 பேர் வரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    ஊரக மற்றும் மாநகர பகுதிகளில் மொத்தம் 85 இடங்கள் காய்ச்சல் அதிகம் பரவும் இடங்களாக கண்டறியப்பட்டு உள்ளது.

    அந்த பகுதிகளில் கொசு புழு ஒழிப்பு, கொசு மருந்து அடித்தல், அபேட் மருந்து தெளித்தல், மாஸ் கிளினீங், சிறப்பு காய்ச்சல் முகாம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தவிர பொதுமக்களுக்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த, கொசு ஒழிப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    எனவே வீடுகளில் குடங்கள், டிரம் போன்றவை யில் சேகரிக்கும் தண்ணீரை வாரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். குடம், டிரம் போன்றவற்றை நார் வைத்து நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். கை வைத்து தேய்த்தால் கொசு முட்டை அழியாது. தண்ணீரை காற்று நுழையாத வகையில் நன்றாக மூடி வைக்க வேண்டும். வீடுகளில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.

    பயன்படுத்தாமல் உள்ள அறைகள், மொட்டை மாடி போன்ற இடங்களில் கொசு புழுஉற்பத்தியை தடுக்கும் வகையில் தூய்மையாக வைத்து கொள்ள வேண் டும். வீடுகளில் வளர்க்கும் மணி பிளான்ட் போன்றவை களில் வைக்கும் தண்ணீரை வாரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். வீட்டின் பிரிட்ஜ் பின்புறம் வடியும் நீரை அடிக்கடி மாற்ற வேண்டும்.

    கட்டுமானம் நடக்கும் பகுதிகளில் தங்கியுள்ள வெளியூர் தொழிலாளர்கள், ஊருக்கு செல்லும் போது அங்குள்ள பாத்திரங்கள், பொருட்களில் தண்ணீர் தேங்காத வகையில் சுத்தம் செய்து விட்டு தலைகீழாக வைத்து விட்டு செல்ல வேண்டும். இதனை கட்டு மான உரிமையா ளர்கள் உறுதி செய்ய வேண்டும். வீட்டின் கட்டுமானத்தின் போது கான்கிரீட் தளம் அமைக்கும் போது நீண்ட நாட்கள் தண்ணீரை தேங்க விடக்கூடாது. அடிக்கடி தண்ணீரை மாற்ற வேண்டும். அல்லது தண்ணீரின் மீது ஆயில் ஸ்பிரே செய்து விட வேண்டும்.

    இதுபோன்ற நடவடிக்கையால் கொசு உற்பத்தியை தடுக்க முடியும். வீட்டை சுற்றியுள்ள பழைய டயர், உடைந்த பானை போன்ற மழைநீர் தேங்க கூடிய அனைத்து பொருட்களையும் அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இப்போட்டியில் 17 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., தொலைவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம்.

    கோவை,

    கோவையில் வருகிற 7-ந் ேததி நடைபெற உள்ள அண்ணா மாராத்தான் ஓட்டப்போட்டியில் பங்கேற்க இளைஞர்களுக்கு கலெக்டர் கிராந்திகுமார் பாடி அழைப்பு விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்களிடையே உடல் தகுதி கலாசாரத்தை புகுத்தும் வகையில், அண்ணா மாராத்தான் ஓட்டப்போட்டி, அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டு தோறும் நடத்தப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட த்தில் இப்போட்டியானது வருகிற 7-ந் தேதி நடைபெறவுள்ளது. நேரு விளையாட்டு அரங்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முன் தொடங்கும் இப்போட்டி எல்.ஐ.சி, அண்ணா சிலை வழியாக மீண்டும் நேரு விளையாட்டு அரங்கத்தை வந்தடையும்.

    இப்போட்டியில் 17 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., மற்றும் 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., தொலைவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் பங்கேற்போர் தங்களது வயது சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதார் சான்றிதழ்களை அக்டோபர் 6-ந் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

    இதில், முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம், 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ.1000 மற்றும் தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×