search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காப்பு காடு"

    • விக்கிரவாண்டி கடை வீதியில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது
    • தீயணைப்பு வீரர்கள் நல்ல பாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி பெரு மாள் கோவில் கருவறைக் குள் புகுந்த நல்லபாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டு காப்பு காட்டில் விட்டனர். விக்கிரவாண்டி கடை வீதியில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.கோவில் அர்ச்சகராக மாலோலன் பட்டாச்சாரியார் உள்ளார். இவர் நேற்று மாலை நடை திறக்க 6 மணியளவில் கோவில் கருவறை கதவை திறந்தார்.

    நில வாயிற்படி யின் மேல் நல்ல பாம்பு ஒன்று சத்தம் போட்டபடி பட மெடுத்து படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார் இது பற்றி விக்கிரவாண்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வேல்முருகன், ஆகியோர் கொண்ட குழுவி னர் நல்ல பாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.

    • நேற்று பகலில் இவரது வீட்டு பின்பக்கத் தோட்டத்தில் மலைப்பாம்பு வந்ததை கண்டு அலறியடித்து ஓடி வந்தார்
    • சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து செஞ்சி காப்பு காட்டில் விட்டனர்.

    விழுப்புரம்:

    செஞ்சியை அடுத்த சின்ன பொன்னம்பூண்டி யை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. நேற்று பகலில் இவரது வீட்டு பின்பக்கத் தோட்டத்தில் மலைப்பாம்பு வந்ததை கண்டு அலறியடித்து ஓடி வந்தார். அதை பொதுமக்களுக்கு தெரிவிக்க பொதுமக்கள் செஞ்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்புபடை வீரர்கள் விரைந்து சென்று ராமசாமி யின் வீட்டுத் தோட்டத்தில் இருந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து செஞ்சி காப்பு காட்டில் விட்டனர்.

    ×