search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருகிற டிசம்பர் மாதத்திற்குள் சீரான குடிநீர் வினியோகம்
    X

    ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.

    வருகிற டிசம்பர் மாதத்திற்குள் சீரான குடிநீர் வினியோகம்

    • வருகிற டிசம்பர் மாதத்திற்குள் சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும்.
    • சீவலப்பேரியி லிருந்து சுமார் 115 கிலோ மீட்டர் தூரம் குழாய்கள் பதிக்கப்பட்டு, தாமிரபரணி தண்ணீர் கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். ரகுராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிற வகையில் முதல்-அமைச்சர் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர், விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை நகராட்சிகளுக்கு ரூ.444 கோடிசெலவில் சீவலப்பே ரியிலிருந்து புதிய குடிநீர் திட்டத்தை ஆரம்பித்து பணிகள் நடைபெற்று வருகிறது. சீவலப்பேரியி லிருந்து சுமார் 115 கிலோ மீட்டர் தூரம் குழாய்கள் பதிக்கப்பட்டு, தாமிரபரணி தண்ணீர் கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இத்திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கப்படும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குழாய்கள் பதிக்கும் பணிகளின் போது உள்ள நடைமுறை சிக்கல்களை நகராட்சித்துறை, நெடுஞ்சா லைத்துறை உள்ளிட்ட சம்மந்தப்பட்ட துறைகளின் ஒத்துழைப்போடு இணைந்து, பணியினை விரைவுபடுத்த வேண்டும், குழாய் பதிக்கும் இடங்களில் சீரானமின் விநியோகம் கிடைப்பதற்கு தேவையான மின்சாரகட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

    இந்த புதிய குடிநீர் திட்ட பணிகளை குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சா லைத்துறை, மின்சாரத்துறை, நகராட்சி உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள்ளாக அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர் நகராட்சிகளுக்கு சீரான தண்ணீர் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை களை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×