search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "information"

    • விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கிட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது
    • இத்திட்டத்தின் கீழ் நெல் சம்பா பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் கடந்த 15-ந் தேதியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    2023-24-ராபி சிறப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் சம்பா பயிர் எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும்பொழுது விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கிட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் நெல் சம்பா பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் கடந்த 15-ந் தேதியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதனை மேலும் நீட்டிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, பயிர் காப்பீடு செய்ய வருகிற 22-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு ள்ளது.

    எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் நெல் சம்பா பயிரிட்டுள்ள அனைத்து விவசாயிகளும் நடப்பில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரிமியம் தொகை செலுத்தி வரும் 22-ந் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    திருச்சி திருநங்கை கொலையில் திடுக்கிடும் தகவல்கள்

    திருச்சி,  

    திருச்சி மண்ணச்ச நல்லூர் அருகே உள்ள மேல காவல் கார தெருவை சேர்ந்தவர் மணிமேகலை என்கிற மணிகண்டன் (வயது 30) திருநங்கையான இவர் திருச்சி கொள்ளிடம் ஆற்றுப்பாலம் அருகே நேற்று இரவு நடந்து சென்றார்.

    பின்னர் திடீரென மாயமான அவர் இரவு 9 மணி அளவில் அங்குள்ள முட்புதரில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக மீட்கப்பட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சக தோழி இறந்த தகவல் அறிந்த திருநங்கைகள் நூற்றுக்கு மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு கடந்த கத்தி மற்றும் ஆணுறைகளை கைப்பற்றினர்.

    கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட மணிமேகலை கடந்த 4 ஆண்டுகளாக இரவு நேரங்களில் அதே பகுதியில் நடமாடி வந்துள்ளார்.

    ஆகவே அவரை புதர் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் பின்னர் ஏற்பட்ட தகராறில் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அந்த நபர் அவருக்கு ஏற்கனவே அறிமுகமான நபராக இருக்கலாம் என கருதுகிறார்கள். ஆகவே மணிமேகலையின் தோழிகள் மூலமாக கொலையாளியை துப்பு துலக்கி வருகின்றனர்.

    பொதுவாக மணிமேகலை மட்டுமல்லாமல் வேறு திருநங்கைகளும் அந்த ஆற்றுப் பாலத்தில் இருப்பார்கள். ஆகவே மணிமேகலைக்கு நெருக்கமான நபர்கள் யார்? யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருகிற 18-ந்தேதி குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.
    • மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோக திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) கீழ்க்காணும் கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் உள்வட்டம் தெற்குத்தரவை (நியாய விலைக்கடை), ராமேசுவரம் வட்டம்-புதுரோடு- (நியாய விலைக்கடை), திருவா டானை வட்டம் - மல்லனூர் (நியாய விலைக்கடை), பரமக்குடி வட்டம் - கள்ளிக்குடி (நியாய விலைக்கடை), முது குளத்தூர் வட்டம் - புல்வாய்க்குளம் (நியாய விலைக்கடை), கடலாடி வட்டம் - பிள்ளையார்குளம் (பஞ்சாயத்து இ-சேவை மையம்), கமுதி வட்டம் - பாக்குவெட்டி (நியாய விலைக்கடை) கீழக்கரை வட்டம் - நேருபுரம், (நியாயவிலைக்கடை), ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் - மோர்ப்பண்ணையில் (நியாயவிலைக் கடை) குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெறும்.

    இதில் அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப் பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத் திருத்தம், புகைப்படம் பதி வேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற் கொள்ளப்படும்.

    மேலும் நியாய விலைக்கடைகளில் பொருள்பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறை பாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ராமநாதபுரம் மாவட்டத் திலுள்ள 9 வட்டங்களில் உள்ள குடும்ப அட்டை தாரர்கள் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற உள்ள குறைதீர் முகாமில் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கல்வி கற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
    • இந்த தகவலை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலை மையில் செயல்படும் குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழு மூலம் கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்களை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க மாதம் இருமுறை கூட்டாய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    பள்ளி செல்லா, இடை நின்ற குழந்தைகள் பிற் காலத்தில் குழந்தை தொழி லாளர்களாக மாறுவதை தடுக்கும் வகையில் தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, காவல் துறை ஆள்கடத்தல் பிரிவு, மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகு அலுவலர், மாவட்ட குழந்தைகள் நலக்குழு ஆகியோர் அடங்கிய குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழுவின் மூலம் கடந்த 13-ந்தேதி சிவகங்கை மற்றும் மானாமதுரை, 18-ந்தேதி இளையான்குடி புதூர் மற்றும் 20-ந்தேதி

    திருப்பாச்சேத்தி அருகில் டி.வேலாங்குளம் பகுதிகளில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

    இளையான்குடி புதூர் பகுதியில் 4 பள்ளி செல்லா இடைநின்ற மாணவ-மாணவிகள், மானாமதுரை மூங்கில் ஊரணியைச் சேர்ந்த 1 மாணவி ஆகி யோரை அவர்கள் வீட் டிற்கு சென்று அவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கி, பள்ளிகளில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

    மேலும் வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி செல்லா இடைநின்ற 1 மாணவியை மீட்டு, மாவட்ட குழந்தைகள் நல குழுவில் ஆஜர்படுத்தப்பட்டு அரசு இல்லத்தில் சேர்க்கப் பட்டுள்ளார். இதுபோன்று குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழுவின் மூலம் மாவட்டத்திலுள்ள பள்ளிச்செல்லா இடை நின்ற குழந்தைகளை கண்ட றிந்து பள்ளிகளில் சேர்க்கப் பட்டு கல்வி கற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பழனிச் சாமி தனது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்கு நேரில் சென்றார்.
    • பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நடுவீரப் பட்டு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 27). இவருக்கும் பிரியா என்ப வருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திரு மணம் நடைபெற்றது. தற்போது பிரியாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று பழனிச் சாமி தனது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்கு நேரில் சென்றார். பின்னர் தனது மனைவி பிரியாவிடம் தீபாவளி சீட்டு கட்டுவதற்கு பணம் கேட்டதாக கூறப்படு கிறது ஆனால் பிரியா பணம் தராததால் பழனிச் சாமி மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் தனது வீட்டில் பழனிச்சாமி தூக்கில் தொங்கிய நிலையில் பிண மாக கிடந்தார். இத்தகவல் அறிந்த நடுவீரப்பட்டு போலீசார் பழனிசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • 3 நாட்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2306051.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இருந்து வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு ஏராளமான மக்கள் செல்ல உள்ளனர்.

    இதன் காரணமாக சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று முதல் வருகிற 11-் தேதி வரை 3 நாட்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    எனவே பயணிகள் கூட்ட நெரிசலினறி இந்த பஸ்களில் பயணித்து கொள்ளலாம். மேலும் பயணிகள் ஆம்னி பஸ்களில் அதிக கட்டண வசூல் அல்லது போக்குவரத்து நெரிசல் குறித்தும் புகார் செய்ய கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று முதல் வருகிற 11-ந் தேதி வரை மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் வகையில் கட்டுபாட்டு அறை பொதுமக்கள் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மேற்கண்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-0422-2306051. மேலும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் அது குறித்து 9384808304 வாட்ஸ் அப் மூலம் புகார் அனுப்பலாம் .

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • தீபாவளி பண்டிகை தினத்தில் காலை 6-7 மணி, இரவு 7-8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.
    • ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    தீபாவளித் திருநாளில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின் றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோ திகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார் கள்.

    பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொட ரப்பட்ட பொது நல வழக் கில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன் படுத்தி பட்டாசுகளை உற் பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது.

    அந்த தீர்ப்பின் அடிப்ப டையில், தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ண யம் செய்து அனுமதி வழங்கி யது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட் டாசுகளை வெடிக்க வேண் டும் எனத் தெரிவிக்கப்படு கிறது.மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித் தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்பு ணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

    இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசு களை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வா கம், உள்ளாட்சி அமைப்புக ளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளி யில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்ப தற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழி பாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங் களில் பட்டாசுகள் வெடிப்ப தைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

    • சமீபத்தில் மராட்டிய மாநில உளவுப்பிரிவு போலீசார் பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
    • பயங்கரவாத சக்திகள் அசுர வேகத்தில் வளர்வதால் தமிழகத்தில் மேலும் ஒரு என்.ஐ.ஏ. அலுவலகம் திறக்க வேண்டியது கட்டாயம்.

    கோவை,

    இலங்கையில் கடந்த பிப்ரவரி மாதம் 2-ந் தேதி பாகிஸ்தானை ேசர்ந்த 3 பேரை அந்தநாட்டு போலீசார் பிடித்தனர்.

    விசாரணையில் அவர் சட்டவிரோத செயலில் ஈடுபட முயன்றது தெரிய வந்தது.இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், 3 பேரும் தமிழகம் மற்றும் கேரளாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது.

    சமீபத்தில் மராட்டிய மாநில உளவுப்பிரிவு போலீசார் பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் பாகிஸ்தானின் லஷ்கர்-இ தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பு, இந்தியாவில், குறிப்பாக தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்த மூளைச்சலவை செய்யப்பட்ட வாலிபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

    இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து கள்ளத்தோணி மூலம் தமிழகம், கேரளாவில் ஊடுருவி தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

    இதற்காக 2 மாநிலங்களிலும் அவர்கள் ஆட்களை நியமித்துள்ளத கவும், இவர்கள் மூலம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து வருவதும் தெரியவந்தது.

    இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியதாவது:-

    பயங்கரவாதிகள் தென்மாநிலங்களை குறி வைத்து செயல்படுவதால், என்.ஐ.ஏ. எனும் அமைப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

    தமிழகத்தில் ஏற்கனவே சென்னை புரசை வாக்கத்தில் என்.ஐ.ஏ. கிளை அலுவலகம் செயல்படுகிறது. இதையடுத்து கோவையிலும் என்.ஐ.ஏ. அலுவலகம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பயங்கரவாத சக்திகள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த தமிழகத்தில் மேலும் ஒரு என்.ஐ.ஏ. அலுவலகம் திறக்க வேண்டியது கட்டாயம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தில் ராமநாதபுரத்தில் 8 கி.மீ. தூர வழிப்பாைதகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 04.11.2023 அன்று காலை 6 மணிய ளவில் துவக்கி வைக்கப்படவுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்தி ரன், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-2024 சட்டசபை அறிவிப்பு எண்: 105-ன் படி 'நடப்போம் நலம் பெறு வோம்' எனும் திட்டம் மருத் துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாட் டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ. தூரம் கொண்ட நடைபாதை கள் கண்டறியப்பட்டுள்ளது.

    அதன்படி பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நலவாழ்வு பெறுவ தற்கான நடைபயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்ச ரால் வருகிற 04.11.2023 அன்று காலை 6 மணிய ளவில் துவக்கி வைக்கப்பட வுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்புடன் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்த டுப்பு மருந்துத்துறை நடத் தும் சுகாதார நடை பயிற்சி நடப்போம் நலம் பெறு வோம் திட்டம் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கேணிக்கரை காவல் நிலையத்தில் தொடங்கி, ஆஷி பன்னோக்கு மருத்துவ மனை, அம்மா பூங்கா, வேலு மாணிக்கம் ஹாக்கி மைதா னம், புதிய மாவட்ட ஆட்சி யர் அலுவலக பின்புறம், காவல் கண்காணிப்பாளர் முகாம், மகாத்மா காந்தி நகர், கிழக்கு கடற்கரை சாலை, புதிய சோதனை சாவடி, காவல் கண்கா ணிப்பாளர் முகாம், விருந்தினர் மாளிகை வழியாக கேணிக் கரை கா வல் நிலையம் வரை மொத்தம் 8 கி.மீ. உள்ள வழிப்பாதைகள் அனைத்தும் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தின் துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தமிழக அரசின் வேலை வாய்ப்புத் துறையின் சார்பாக படித்து முடித்து வேலைவாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் பொது பிரிவு பதிவுதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு உதவித் தொகை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி பொதுப்பிரிவு பதிவுரார்கள் கல்வித்தகுதி யினை இவ்வலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற பள்ளியிறுதி வகுப்பில் தேர்ச்சி பெறாத வர்கள் பள்ளியிறுதி வகுப்பு, மேல்நிலைக்கல்வி மற்றும் பட்டதாரி கல்வித் தகுதியை உடைய பதிவு தாரர்களுக்கு தற்போது உதவித்தொகை பெறுவ தற்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். பட்டியல் இனத்தவருக்கு 45 வயது, இதர வகுப்பினர் 40 வயது இருக்க வேண்டும். உதவித்தொகை பெறுபவர் தமிழ்நாட்டி லேயே பள்ளி, கல்லூரிக் கல்வியை முடித்தவராக இருத்தல் வேண்டும்.

    உதவித்தொகை பெறுபவர் ஊதியம் பெறும் எந்த பணியிலோ அல்லது சுய வேலைவாய்ப்பிலோ இருக்க கூடாது. அரசு மற்றும் பிற முகமைகளின் வாயிலாக எந்த நிதி உதவியையும் பெறுபவராக இருத்தல் கூடாது. அன்றாடம் பள்ளிக்கு, கல்லூரிக்கு சென்று பயில் பவராகவோ இருக்க கூடாது.

    மேலும் அனைத் துவகை மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கென சிறப்பான உதவித்தொகை வழங்கும் திட்டமும் நடை முறையில் உள்ளது. மாற்றுத் திறனாளி பதிவுதாரர் இவ்வலுவலகத்தில் பதிவு செய்து குறைந்த பட்சம் ஓராண்டு முடிவுற்ற எழுதப்படிக்கத் தெரிந்த வர்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைவருக்கும் வருமானம் மற்றும் வயது வரம்பின்றி தற்போது உதவித்தொகை பெறு வதற்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பயன்தாரர்கள் நவ.30-ந் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளித்து பயன்பெறலாம். மேலும், ஏற்கெனவே வேலை வாய்ப்பற்ற இளைஞர் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகள் உதவித்தொகை பெற்று ஓராண்டு முடிவுற்றிருப்பின் தொடர்ந்து உதவித்தொகை பெறுவதற்கு வேலை வாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுச்சான்றிதழ், சுய உறுதிமொழி ஆவணம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் உடன் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தினை தொடர்பு கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தின் துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள் ளார்.

    • ‘பி.டபிள்யூ. என். 0001’ என்ற ஒரு ஹேக்கர் மூலம் இந்த கசிவு விவகாரம் வெளிகொண்டு வரப்பட்டு உள்ளது.
    • தரவுகள் கசிவை அமெரிக்க ஏஜென்சியான ரெசெக்யூரிட்டி கண்டு பிடித்தது.

    புதுடெல்லி:

    கொரோனா கால கட்டத்தின் போது நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்காக அவர்களது பெயர், ஆதார் எண் உள்ளிட்ட தரவுகள் பெறப்பட்டன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டன.

    இந்நிலையில் 81.5 கோடி இந்தியர்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் கசிந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'பி.டபிள்யூ. என். 0001' என்ற ஒரு ஹேக்கர் மூலம் இந்த கசிவு விவகாரம் வெளிகொண்டு வரப்பட்டு உள்ளது.

    இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கொரோனா சோதனையின் போது சேகரித்த தரவுகளில் இருந்து எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அந்த ஹேக்கர் கூறும்போது, திருடப்பட்ட தகவல்களில் ஆதார், பாஸ்போர்ட் விவரங்கள், கோடிக்கணக்கான இந்தியர்களின் பெயர்கள், போன் எண்கள், தற்காலிக, நிரந்தர முகவரிகள் உள்ளன. கொரோனா சோதனையின் போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சேகரிக்கப்பட்ட தகவலில் இருந்து இந்த தரவுகள் எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.

    இந்த தரவுகள் கசிவை அமெரிக்க ஏஜென்சியான ரெசெக்யூரிட்டி கண்டு பிடித்தது. இந்திய குடிமகன் ஆதார் மற்றும் பாஸ்போர்ட் தகவல் உள்பட 81.5 கோடி பதிவுகள் கிடைக்கும் என்று ஹேக்கர் விளம்பரப்படுத்தி உள்ளார்.

    இதில் இந்திய குடிமக்களின் தனிப்பட்ட விவரங்களுடன் ஒரு லட்சம் கோப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே வேளையில் கொரோனா சோதனை தகவல்கள், தேசிய தகவல் மையம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சுகாதார அமைச்சகம் போன்ற பல்வேறு அரசாங்க அமைப்புகளில் உள்ளன. இதனால் இந்த தகவல்கள் எங்கிருந்து கசிந்தது என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

    • அழகர்கோவிலில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • இந்த தகவலை கல்லம் பட்டி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    அலங்காநல்லூர்

    அழகர்கோவில் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொய் கை கரைப்பட்டி, நாயக்கன் பட்டி. அழகர் கோவில், கெமிக்கல்ஸ், கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, பூண்டி, தூயநெறி, மாத்தூர், வெள்ளியங்குன்றம் புதூர், கடவூர், தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாந்தூர்பட்டி தொப் பலாம் பட்டி, கொடிமங்க லம், கருவனூர், தேத்தாம் பட்டி ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    இந்த தகவலை கல்லம் பட்டி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ×