search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிப்பாதை"

    • நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தில் ராமநாதபுரத்தில் 8 கி.மீ. தூர வழிப்பாைதகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 04.11.2023 அன்று காலை 6 மணிய ளவில் துவக்கி வைக்கப்படவுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்தி ரன், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-2024 சட்டசபை அறிவிப்பு எண்: 105-ன் படி 'நடப்போம் நலம் பெறு வோம்' எனும் திட்டம் மருத் துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாட் டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ. தூரம் கொண்ட நடைபாதை கள் கண்டறியப்பட்டுள்ளது.

    அதன்படி பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நலவாழ்வு பெறுவ தற்கான நடைபயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்ச ரால் வருகிற 04.11.2023 அன்று காலை 6 மணிய ளவில் துவக்கி வைக்கப்பட வுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்புடன் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்த டுப்பு மருந்துத்துறை நடத் தும் சுகாதார நடை பயிற்சி நடப்போம் நலம் பெறு வோம் திட்டம் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கேணிக்கரை காவல் நிலையத்தில் தொடங்கி, ஆஷி பன்னோக்கு மருத்துவ மனை, அம்மா பூங்கா, வேலு மாணிக்கம் ஹாக்கி மைதா னம், புதிய மாவட்ட ஆட்சி யர் அலுவலக பின்புறம், காவல் கண்காணிப்பாளர் முகாம், மகாத்மா காந்தி நகர், கிழக்கு கடற்கரை சாலை, புதிய சோதனை சாவடி, காவல் கண்கா ணிப்பாளர் முகாம், விருந்தினர் மாளிகை வழியாக கேணிக் கரை கா வல் நிலையம் வரை மொத்தம் 8 கி.மீ. உள்ள வழிப்பாதைகள் அனைத்தும் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மார்த்தாண்டம் நல்லூர் காரவிளை பகுதியில் ஒரு பிரிவினரின் கல்லறை இருந்து வருகிறது
    • இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது

    நாகர்கோவில் : மார்த்தாண்டம் நல்லூர் காரவிளை பகுதியில் ஒரு பிரிவினரின் கல்லறை இருந்து வருகிறது. அந்த கல்லறைக்கு வழி சம்பந்தமாக இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தக்கலை சப்-கலெக்டருக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் இரு பிரிவினரையும், தக்கலை சப்-கலெக்டர் கவுசிக் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விசாரணைக்கு ஒரு தரப்பினார் ஆஜ ராகி உள்ளனர். மறு தரப்பினர் விசாரணைக்கு ஆஜரா காததால், ஆஜராகா தவர்களை பிடித்து சப்-கலெக்டர் அலுவலகத்தில் விசாரணைக்கு கொண்டு செல்லும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் அடிப்படையில், மார்த்தாண்டம் போலீசார் ஒரு தரப்பை சேர்ந்த தங்கப்பன் என்பவரை பிடித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து தங்கப்பனின் ஆதரவாக ஒரு தரப்பினர், போலீஸ் நிலை யத்தில் முற்றுகை போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இதனால் போலீஸ் நிலையத்திற்கு முன்பு தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட னர். 

    ×