search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "route"

    • நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தில் ராமநாதபுரத்தில் 8 கி.மீ. தூர வழிப்பாைதகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 04.11.2023 அன்று காலை 6 மணிய ளவில் துவக்கி வைக்கப்படவுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்தி ரன், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-2024 சட்டசபை அறிவிப்பு எண்: 105-ன் படி 'நடப்போம் நலம் பெறு வோம்' எனும் திட்டம் மருத் துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாட் டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ. தூரம் கொண்ட நடைபாதை கள் கண்டறியப்பட்டுள்ளது.

    அதன்படி பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நலவாழ்வு பெறுவ தற்கான நடைபயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்ச ரால் வருகிற 04.11.2023 அன்று காலை 6 மணிய ளவில் துவக்கி வைக்கப்பட வுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்புடன் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்த டுப்பு மருந்துத்துறை நடத் தும் சுகாதார நடை பயிற்சி நடப்போம் நலம் பெறு வோம் திட்டம் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கேணிக்கரை காவல் நிலையத்தில் தொடங்கி, ஆஷி பன்னோக்கு மருத்துவ மனை, அம்மா பூங்கா, வேலு மாணிக்கம் ஹாக்கி மைதா னம், புதிய மாவட்ட ஆட்சி யர் அலுவலக பின்புறம், காவல் கண்காணிப்பாளர் முகாம், மகாத்மா காந்தி நகர், கிழக்கு கடற்கரை சாலை, புதிய சோதனை சாவடி, காவல் கண்கா ணிப்பாளர் முகாம், விருந்தினர் மாளிகை வழியாக கேணிக் கரை கா வல் நிலையம் வரை மொத்தம் 8 கி.மீ. உள்ள வழிப்பாதைகள் அனைத்தும் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாய்மேடு கடைத்தெருவில் இருந்து சுடுகாடு வரை உள்ள சாலை ஒற்றையடி பாதையாக உள்ளது.
    • சுடுகாட்டுக்கு ெசல்லும் சாலையை தார்சாலையாக மாற்றி தரவேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா வாய்மேடு ஊராட்சி சேனாதிகாட்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் சுடுகாடு உள்ளது. வாய்மேடு கடைத்தெருவில் இருந்து சுடுகாடு வரை உள்ள சாலை ஒற்றையடி பாதையாக உள்ளது.

    இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும், கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேனாதிகாட்டில் உள்ளசுடுகாட்டுக்கு செல்லும் சாலையை தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாதையை பல ஆண்டு காலமாக சிலர் முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர்.
    • தனியார் பள்ளிக்கு மேற்கு பகுதியில் இருந்து கொத்தாடப்பட்டி பகுதி வரை உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரியில் இருந்து விஸ்வநாதபேரி, தென்மலை, ராயகிரி போன்ற பகுதிகளுக்கு தார் சாலை வசதி இல்லாத காலத்தில் மக்கள், வாகனங்கள், கால்நடைகள் போக்குவரத்து பாதையாகவும், தென்மலை, வடுகபட்டி, ராயகிரி விஸ்வநாதபேரி போன்ற பகுதிகளில் இருந்து சிவகிரியில் உள்ள பள்ளிக்கூடங்களில் மாணவ - மாணவிகள் கல்வி பயில்வதற்கு சென்று வர முக்கிய பாதையாகவும், தேவிப்பட்டணத்திற்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள வனபகுதிகளுக்கும், புஞ்செய் பகுதிகளுக்கு கால்நடைகள் மேய்ச்சலுக்காக சென்று வருவதற்காகவும் பயன்படுத்தி வந்த 30 அடி அகலம் கொண்ட பசுப்பாதை என்று அழைக்கப்பட்ட பாதையை பல ஆண்டு காலமாக சிலர் முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர்.

    சிவகிரி தாலுகா பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடங்களை கைப்பற்ற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதின்பேரில் சிவகிரி தாசில்தார் ஆனந்த் தலைமையில், வாசு தேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வள்ளி மயில், ஊர் நல அலுவலர் தெய்வானை ஆகியோர் முன்னிலையில், சிவகிரி அருகே விஸ்வநாதபேரி தனியார் உயர்நிலைப்பள்ளிக்கு மேற்கு பகுதியில் இருந்து சிவகிரி பேரூராட்சி பகுதியை சேர்ந்த கொத்தாடப்பட்டி பகுதி வரை உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் பணி நடைபெற்றது.

    இதில் மண்டல துணைத் தாசில்தார் வெங்கடசேகர், சிவகிரி வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார், கிராம நிர்வாக அலுவலர் சங்கர வடிவு, தலையாரி வேல்மு ருகன், சர்வேயர் பாண்டி செல்வி, விஸ்வநாதபேரி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மணிகண்டன், துணைத்தலைவர் காளீஸ்வரி, செயலர் உமா மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.

    • ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் பஸ்கள் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.
    • இதனால் பரமக்குடி பயணிகள் வழக்கம் போல் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு வழக்கமாக பரமக்குடி வழியாக செல்லும் பஸ்களின் வழித்தடம் இன்று காலை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு பஸ்கள், லாரி, கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் கைகாட்டி, சிவகங்கை வழித்தடங்களில் மதுரைக்கு புறப்பட்டு சென்றது. வழக்கமாக பரமக்குடி வழியாக அரசு பஸ்கள் இயக்கப்படும். ஆனால் இன்று காலை முதல் திடீர் மாற்றம் காரணமாக ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி செல்லும் பயணிகள் பஸ் கிடைக்காமல் கடும் அவதி அடைந்தனர்.

    அவர்கள் இது தொடர்பாக கண்டக்டர், டிரைவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பரமக்குடிக்கு செல்லும் பயணிகள் வேறு வழியின்றி அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் பொறியியல் மேலாண்மை பணி நடக்கிறது.
    • டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள், பயணத்தை திட்டமிட்டு கொள்ள வேண்டும்.

    திருப்பூர் :

    சேலம் - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் உள்ள, திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் மின்வழித்தடம், தண்டவாளம் சீரமைப்பு, பொறியியல் மேலாண்மை பணி இன்று, நாளை 2-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.

    இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக செல்லும், 10 ரெயில்களின் நேரம், வழித்தடம் மாற்றப்படுகிறது. அவ்வகையில் இன்று ஆலப்புழா - தன்பாத், ஈரோடு - சென்னை - ஏற்காடு எக்ஸ்பிரஸ், திருப்பத்தூர் நிலையத்தில் நிற்காது. நாளை 2-ந் தேதி கன்னியாகுமரி - பெங்களூரு, கோவை - ராஜ்கோட், கொச்சுவேலி - மைசூரு, மங்களூரு - சென்னை வெஸ்ட்கோஸ்ட், திருப்பத்தூரில் நிற்காது.இந்த ரெயில்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள், பயணத்தை திட்டமிட்டு கொள்ள வேண்டும்.

    2 நாட்களும் ஈரோடு - ஜோலார்பேட்டை பாசஞ்சர் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பட்டுக்கோட்டைக்கு மதியம் 1.13 மணிக்கு வந்தடைந்து மீண்டும் சென்னை எழும்பூருக்கு இரவு 9.50 மணிக்கு சென்றடைகிறது.
    • ராமேஸ்வரம் பகுதிக்கு வியாழக்கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளில் சென்னை எழும்பூர் செகந்திராபாத் பகுதிகளுக்கும் செல்லலாம்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு 16 வருடங்களுக்கு பிறகு திருவாரூர்-பட்டுக்கோட்டை -காரைக்குடி ரெயில் தடத்தில் முதன் முறையாக செகந்திரபாத்தில் இருந்து சென்னை வழியாக ராமேஸ்வரத்திற்கு விரைவு ரெயில் இயக்கப்படும்.

    சிறப்பு விரைவு ரெயிலுக்கு பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் நாளை வரவேற்பு அளிக்கப்–படுகிறது.

    தென்மத்திய ரெயில்வே சார்பில் இன்று 24-ந்தேதி முதல் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திலிருந்து வாராந்திர சிறப்பு விரைவு ரெயில் (வண்டி எண் 07695) இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு நல்கொண்டா குண்டூர் தெனாலி ஓங்கோல் நெல்லூர் கூடூர் வழியாக மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைந்து, தொடர்ந்து செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம் வழியாக பட்டுக்கோட்டைக்கு மாலை 4.50 மணிக்கு வருகிறது.

    தொடர்ந்து அறந்தாங்கி- காரைக்குடி- சிவகங்கை- மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக வியாழக்கிழமை இரவு 11.40 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்று அடைகிறது.

    மீண்டும் இந்த ரெயில் (வண்டி எண் 07696) இதே வழி தடத்தில் ராமேஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.50 மணிக்கு புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு மதியம் 1.13 மணிக்கு வந்தடைந்து மீண்டும் சென்னை எழும்பூருக்கு இரவு 9.50 மணிக்கு சென்றடைகிறது.

    அதனைத் தொடர்ந்து செகந்திராபாத்திற்கு சனிக்கிழமை நண்பகல் 12.50 மணிக்கு சென்றடைகிறது.

    இந்த வாராந்திர சிறப்பு விரைவு ரெயில் புதன்கிழமைகளில் இரவு செகந்தராபாத்தில் புறப்பட்டு வியாழக்கிழமை சென்னை எழும்பூர் பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரத்திற்கு இரவு சென்று சேரும். மீண்டும் ராமேஸ்வரத்தில் வெள்ளிக்கிழமைகளில் காலை புறப்பட்டு பட்டுக்கோட்டை சென்னை வழியாக செகந்திரா பாத்திற்கு சனிக்கிழமைகளில் நண்பகலில் சென்று சேரும்.

    இந்த ரெயில் மூலமாக பட்டுக்கோட்டை பகுதி மக்கள் ராமேஸ்வரம் பகுதிக்கு வியாழக்கிழமைகளிலும், வெள்ளிக்கிழமைகளில் சென்னை எழும்பூர் செகந்தி ராபாத் பகுதிகளுக்கும் செல்லலாம்.

    இந்த ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் 5, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 10, முதல் வகுப்பு குளிர் சாதன வசதி கொண்ட பெட்டிகள் 2, இரண்டாம் வகுப்பு குளிர் சாதன வசதி கொண்ட பெட்டிகள் 2 சரக்கு மற்றும் மேலாளர் பெட்டிகள் 2 ஆக மொத்தம் 21 ரெயில் பெட்டிகளை கொண்டிருக்கும்

    இந்த சிறப்பு விரைவு ரெயிலுக்கு பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நாளை வியாழக்கிழமை மாலை 4.50 மணிக்கு வாழை மரங்கள் தோரணங்கள் கட்டி வாணவேடிக்கைகளுடன் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்பு நிகழ்ச்சி நடத்த உள்ளனர்.

    • சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    ஓமலூர்-மேட்டூர் அணை பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை 27-ந் தேதி ரெயில் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி எர்ணாகுளம்-கே.எஸ்.ஆர்.பெங்களூரு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.12678) நாளை 27-ந் தேதி காலை 9.10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு சேலம், திருப்பத்தூர், பங்கார்பேட்டை, பையப்பனகள்ளி வழியாக மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும். அந்த ரெயில் வழக்கமாக செல்லும் தர்மபுரி, ஓசூர், கார்மேளரம் வழியாக செல்லாது.இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தேவகோட்டை- திருச்சி இடையே ஆத்தங்குடி வழியாக இயக்கப்படும் அரசு விரைவு பஸ் நிறுத்தப்பட்டதால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ளது ஆத்தங்குடி கிராமம். முத்துப்பட்டி ஊராட்சி, ஆற்காடுவெளுவூர், அரண்மனைப்பட்டி ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இது தவிர சுற்றுலாத்தலமாக உள்ள இந்த கிராமத்தில் மிகப் பெரிய வீடுகள் கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்டுள்ளன.

    இதையடுத்து இந்த வீட்டை காண்பதற்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாட்டு சுற்றுலாப்பயணிகள் இந்த கிராமத்திற்கு வந்து இந்த வீட்டை பார்த்து ரசித்து செல்கின்றனர். இது தவிர இங்கு புகழ்பெற்ற டைல்ஸ் தயாரிக்கும் ஆலைகள் மற்றும் கட்டுமான தொழில்களும் நடைபெற்று வருகின்றன.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கிராமத்திற்கு பல்வேறு அடிப்படை வசதிகள் ஏதும் கிடையாது. குறிப்பாக இந்த பகுதியில் சரியான பஸ்வசதிகள் இல்லாததால் இப்பகுதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். கிராம மக்கள் சரக்குவாகனங்களில் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர்.

    இது குறித்து ஆத்தங்குடியைச் சேர்ந்த சாகுல் என்பவர் கூறியதாவது:- பொதுவாக இந்த வழியாக காரைக்குடியில் இருந்து தினந்தோறும் 6ஏ, 9ஏ, 5,8, 2சி ஆகிய 4அரசு டவுன் பஸ்களும், காரைக்குடி-திருமயத்திற்கு தனியார் பஸ் ஒன்றும் இயங்கி வருகிறது.

    இதுதவிர கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு தேவகோட்டையில் இருந்து அரசு விரைவு பஸ் ஒன்று காரைக்குடி மற்றும் ஆத்தங்குடி வழியாக திருச்சிக்கு சென்று வந்துக்கொண்டிருந்தது. இந்த பஸ் தேவகோட்டையில் தினந்தோறும் அதிகாலை 3.50மணிக்கு புறப்பட்டு காரைக்குடி வழியாக ஆத்தங்குடி கிராமத்திற்கு காலை 4.30மணிக்கு வரும். அதன் பின்னர் கோனாப்பட்டு வழியாக திருச்சிக்கு காலை 6.45மணிக்கு சென்றடையும், மறு மார்க்கத்தில் திருச்சியில் காலை 10மணிக்கு புறப்பட்டு ஆத்தங்குடி கிராமத்திற்கு காலை 11.45மணிக்கு வந்து சேரும்.

    மகளிர் பஸ்

    அதன் பின்னர் தேவகோட்டைக்கு மதியம் 1மணிக்கு சென்றடையும். 1.30மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு மாலை 5 மணிக்கு சென்றடையும். இவ்வாறு தினந்தோறும் விரைவு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் மூலம் ஆத்தங்குடி, கோனாப்பட்டு, பலவான்குடி, திருமயம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் பயன் அடைந்து வந்தனர். இந்நிலையில் இந்த பஸ் ஆத்தங்குடி வழியாக செல்வது நிறுத்தப்பட்டு திருச்சியில் இருந்து பை-பாஸ் சாலையில் காரைக்குடி நோக்கி செல்கிறது. இதனால் இந்த கிராமப்புற மக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிஅடைந்து வருகின்றனர்.

    மேலும் இந்த அரசு பஸ் திருச்சியில் இருந்தோ அல்லது தேவகோட்டை, காரைக்குடி பஸ் நிலையத்தில் புறப்படும்போது அதன் கண்டக்டர் ஆத்தங்குடி செல்லாது என்று கூறி பின்னர்தான் பஸ்சை இயக்குகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டால் அதற்கு தகுந்த பதில் கூறுவதில்லை. மேலும் ஆத்தங்குடி பகுதியில் இருந்து கல்லூரி மாணவிகள் 60 பேர் காரைக்குடி, பள்ளத்தூர், திருப்பத்தூர் பகுதியில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

    காலை நேரங்களில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் இந்த கல்லூரி மாணவிகள் அந்த பஸ்சில் செல்ல மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கல்லூரி மாணவிகளுக்கு என்று மகளிர் பஸ் ஒன்று இந்த வழியாக இயக்க வேண்டும்.

    நடவடிக்கை

    இது தவிர புகழ்பெற்ற ஆத்தங்குடி நகருக்கு பலவான்குடியில் இருந்து வரும் சாலை ஒருவழி சாலையாகவும் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளதால் சில அரசு பஸ்கள் ஊருக்குள் வராமல் சென்று விடுகின்றன. மேலும் ஆத்தங்குடியில் இருந்து மதுரைக்கு செல்ல வேண்டுமானால் இந்த பகுதி மக்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள காரைக்குடியில் இருந்தோ அல்லது சுமார் 7கிலோ மீட்டர் தூரம் உள்ள குன்றக்குடிக்கு சென்று அதன் பின்னர்தான் செல்ல வேண்டும்.

    இது தவிர ஆத்தங்குடியில் இருந்து குன்றக்குடிக்கு நேரடியாக அரசு பஸ்கள் இல்லை. இதனால் இந்த பகுதி மக்கள் கனரக சரக்கு வாகனத்தில் தினந்தோறும் உயிரை பணயம் வைத்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே காரைக்குடியில் உள்ள போக்குவரத்து கழக அதிகாரிகள் ஏற்கனவே தேவகோட்டையில் இருந்து காரைக்குடி, ஆத்தங்குடி வழியாக இயக்கப்பட்ட இந்த அரசு விரைவு பஸ்சை தினந்தோறும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆத்தங்குடி வழியாக ஒரு வழிச்சாலையாக உள்ள சாலையை விரிவுப்படுத்த சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×