search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் விநியோகம்
    X

    அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் விநியோகம்

    • அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தின் துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தமிழக அரசின் வேலை வாய்ப்புத் துறையின் சார்பாக படித்து முடித்து வேலைவாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் பொது பிரிவு பதிவுதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு உதவித் தொகை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி பொதுப்பிரிவு பதிவுரார்கள் கல்வித்தகுதி யினை இவ்வலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற பள்ளியிறுதி வகுப்பில் தேர்ச்சி பெறாத வர்கள் பள்ளியிறுதி வகுப்பு, மேல்நிலைக்கல்வி மற்றும் பட்டதாரி கல்வித் தகுதியை உடைய பதிவு தாரர்களுக்கு தற்போது உதவித்தொகை பெறுவ தற்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். பட்டியல் இனத்தவருக்கு 45 வயது, இதர வகுப்பினர் 40 வயது இருக்க வேண்டும். உதவித்தொகை பெறுபவர் தமிழ்நாட்டி லேயே பள்ளி, கல்லூரிக் கல்வியை முடித்தவராக இருத்தல் வேண்டும்.

    உதவித்தொகை பெறுபவர் ஊதியம் பெறும் எந்த பணியிலோ அல்லது சுய வேலைவாய்ப்பிலோ இருக்க கூடாது. அரசு மற்றும் பிற முகமைகளின் வாயிலாக எந்த நிதி உதவியையும் பெறுபவராக இருத்தல் கூடாது. அன்றாடம் பள்ளிக்கு, கல்லூரிக்கு சென்று பயில் பவராகவோ இருக்க கூடாது.

    மேலும் அனைத் துவகை மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கென சிறப்பான உதவித்தொகை வழங்கும் திட்டமும் நடை முறையில் உள்ளது. மாற்றுத் திறனாளி பதிவுதாரர் இவ்வலுவலகத்தில் பதிவு செய்து குறைந்த பட்சம் ஓராண்டு முடிவுற்ற எழுதப்படிக்கத் தெரிந்த வர்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைவருக்கும் வருமானம் மற்றும் வயது வரம்பின்றி தற்போது உதவித்தொகை பெறு வதற்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பயன்தாரர்கள் நவ.30-ந் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளித்து பயன்பெறலாம். மேலும், ஏற்கெனவே வேலை வாய்ப்பற்ற இளைஞர் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகள் உதவித்தொகை பெற்று ஓராண்டு முடிவுற்றிருப்பின் தொடர்ந்து உதவித்தொகை பெறுவதற்கு வேலை வாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுச்சான்றிதழ், சுய உறுதிமொழி ஆவணம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் உடன் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தினை தொடர்பு கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத் தின் துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள் ளார்.

    Next Story
    ×