search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "indvseng"

    • ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொண்டதாக அந்த அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்து இருந்தார்.
    • ஜெய்ஸ்வால் உங்களிடம் இருந்து அதிரடியாக விளையாட கற்றுக் கொள்ளவில்லை.

    புதுடெல்லி:

    பென்ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    5 போட்டிக் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் 3-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

    இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் இரண்டு இரட்டை சதங்களை அடித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 209 ரன்னும், ராஜ்கோட்டில் நடந்த 3-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 214 ரன்னும் எடுத்தார்.

    3 டெஸ்டின் 6 இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 545 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 109 ஆகும். 50 பவுண்டரிகளும், 22 சிக்சர்களும் அடித்துள்ளார்.

    இதற்கிடையே ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொண்டதாக அந்த அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்து இருந்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, "எதிர் அணி வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடுவதை பார்க்கும்போது நாம் கொஞ்சம் அதற்கான பெருமையை எடுத்துக் கொள்ளலாம். அதாவது மற்றவர்கள் டெஸ்டில் விளையாடும் விதத்துக்கும், நாம் ஆடும் விதத்திற்குமான வித்தியாசத்துக்கான பெருமை நம்முடையது என்ற உணர்வு ஏற்படுகிறது" என்றார்.

    டக்கெட் 3-வது டெஸ்டில் சதம் (153 ரன்) அடித்து இருந்தார். அவர் இந்த தொடரில் 288 ரன்கள் எடுத்து ஜெய்ஸ்வாலுக்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் உள்ளார்.

    இந்த நிலையில் டக்கெட் டின் இந்த வினோதமான கருத்துக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான நாசர் உசேன் பதிலடி கொடுத்துள்ளார். ஜெய்ஸ்வால் அதிரடியான, ஆக்ரோஷமான ஆட்டத்தை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொள்ளவில்லை என்று கடுமையாக சாடியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    அவர் (ஜெய்ஸ்வால்) உங்களிடம் இருந்து அதிரடியாக விளையாட கற்றுக் கொள்ளவில்லை. அவர் வளர்ப்பில் இருந்து கற்றுக் கொண்டவர். அவரது பாதையில் எதிர்கொண்ட கடினங்களால் வளர்ந்த ஆக்ரோஷம் இதுவாகும்.

    அவரிடம் இருந்து மற்றவர்கள் எதையாவது கற்றுக்கொள்ள விரும்பினால் அது இதுவாகத்தான் இருக்கும். கொஞ்சம் சுய பரிசோதனை நடக்கிறது என்று நினைக்கிறேன். இல்லையென்றால் இந்த 'பாஸ்பால்' ஒரு வழிபாடாகவே மாறிவிடும் என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு நாசர் உசேன் கூறியுள்ளார்.

    • இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை.
    • பும்ரா விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது.

    இதனிடையே இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (பிப்ரவரி 23-ம் தேதி) துவங்குகிறது. அந்த வகையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    இதே போன்று கே.எல். ராகுல் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவாரா என்பது அவரின் உடல்நிலையை பொருத்தே முடிவு செய்யப்படும் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

    மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்ட முகேஷ் குமார் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கவுள்ளார். முன்னதாக முகமது சிராஜ் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது விடுவிக்கப்பட்டு, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

    நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்:

    ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ராஜத் படிதர், சர்பராஸ் கான், துருவ் ஜூரெல், கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார் மற்றும் ஆகாஷ் தீப்.

    • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
    • இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் 22 வயதே ஆகும் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். 2-வது இன்னிங்சில் 236 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 214 ரன்கள் குவித்தார்.

    மற்றொரு இந்திய பேட்ஸ்மேன் சர்பராஸ் கான் இந்த போட்டியில்தான் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆகியுள்ளார். அவர் முதல் இன்னிங்சில் 62 ரன்களும், 2-வது இன்னிங்சில் 68 ரன்களும் எடுத்து இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார். குறிப்பாக சர்பராஸும் - ஜெய்ஸ்வாலும் இணைந்து 2-வது இன்னிங்சில் 5-வது விக்கெட்டுக்கு 172 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

    இதேபோன்று இந்த டெஸ்டில் அறிமுகமான விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியில் சீனியர் ஆட்டக்காரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்களே சிறப்பான ஆட்டத்தை விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளனர். இவர் 2-வது இன்னிங்சில் சிறப்பான ஒரு ரன் அவுட் செய்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.

    இந்நிலையில் இவர்கள் 3 பேரையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஸ்டோரியாக வைத்து இந்த நாட்களில் குழந்தைகள் என பதிவிட்டிருந்தார். இது தற்போது வைரலாகி வருகிறது.

    • இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது.
    • பணிச்சுமை காரணமாக அவருக்கு ஏற்கனவே 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

    ராஞ்சி:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியிலிருந்து ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணிச்சுமை காரணமாக அவருக்கு ஏற்கனவே 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இருப்பினும் அந்த போட்டியிலிருந்து மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

    இதனால் 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ராவிற்கு ஓய்வு அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 4-வது போட்டியின் முடிவை பொறுத்தே அவர் கடைசி போட்டியில் இடம்பெறுவாரா இல்லையா என்பது தெரிய வரும் என தகவல் வெளியாகியுள்ளது. 

    • 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • அலெஸ்டர் குக் விளையாடிய 161 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 11 சிக்சர்கள் மட்டுமே விளாசியுள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக தனது 11 சிக்ஸர்கள் சாதனையை முறியடித்துவிட்டார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் கூறியுள்ளார்.

    ராஜ்கோட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நடந்தது. இதில், இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது. இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசினார். இதில் 14 பவுண்டரி, 12 சிக்சர்கள் அடங்கும்.

    இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக், ஜெய்ஸ்வால் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் நான் எனது வாழ்வில் அடித்த ஒட்டு மொத்த சிக்சர்களை ஜெய்ஸ்வால் ஒரே இன்னிங்சில் அடித்துவிட்டார் என்று பெருமையாக கூறியுள்ளார். அலெஸ்டர் குக் விளையாடிய 161 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 11 சிக்சர்கள் மட்டுமே விளாசியுள்ளார்.

    • 3-வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
    • இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளின் முடிவில் இந்தியா 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    குறிப்பாக முதல் போட்டியில் தோல்வியை கொடுத்த இங்கிலாந்தை இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

    இந்த தொடரில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார். மேலும் 12 சிக்சர்கள் அடித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற வாசிம் அக்ரமின் உலக சாதனையை சமன் செய்தார்.

    இந்நிலையில் ஜெய்ஸ்வால் தான் இந்திய அணியின் புதிய சேவாக் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியா புதிய வீரேந்திர சேவாக்கை கொண்டுள்ளது. அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பல்வேறு பவுலிங் அட்டாக்கை சேவாக் அடித்து நொறுக்கியதை போலவே யசஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடக் கூடிய வீரராக திகழ்கிறார்.

    என்று கூறியுள்ளார்.

    இந்த தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி ரஞ்சி நகரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.

    • 3-வது டெஸ்ட்டில் இங்கிலாந்தை 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
    • அடுத்தடுத்து இரு டெஸ்டில் இரட்டை செஞ்சுரி அடித்த 11-வது வீரர் ஜெய்ஸ்வால் ஆவார்.

    3-வது டெஸ்டில் இரட்டை செஞ்சுரி அடித்த ஜெய்ஸ்வால் விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டிலும் இரட்டை சதம் (209 ரன்) அடித்திருந்தார். அடுத்தடுத்து இரு டெஸ்டில் இரட்டை செஞ்சுரி அடித்த 11-வது வீரர், இந்திய அளவில் 3-வது வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார். ஏற்கனவே வினோத் காம்ப்ளி (1993-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 224 ரன் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக 227 ரன்), விராட் கோலி (2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நாக்பூரில் 213 ரன், டெல்லியில் 243 ரன்) ) ஆகிய இந்தியர்கள் தொடர்ச்சியாக இரு டெஸ்டில் இரட்டை சதம் அடித்துள்ளனர்.

    ஜெய்ஸ்வாலின் வயது 22 ஆண்டு 49 நாட்கள். டெஸ்டில் இரண்டு இரட்டை சதம் அடித்த 3-வது இளம் வீரராகவும் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். இந்தியாவின் வினோத் காம்ப்ளி தனது வயது 21 ஆண்டு 54 நாளிலும், ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் வயது 21 ஆண்டு 318 நாளிலும் இச்சாதனையை செய்துள்ளனர்.

    இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை பெறுவது இது 10-வது முறையாகும். இதில் உள்நாட்டில் மட்டும் 9 முறை இவ்விருதை பெற்றுள்ளார். இதன் மூலம் சொந்த மண்ணில் அதிக தடவை ஆட்டநாயகன் விருதை பெற்ற இந்தியரான கும்பிளேவின் (இவரும் 9 முறை) சாதனையை சமன் செய்தார்.

    இந்த டெஸ்டில் அறிமுக வீரராக இடம் பிடித்த மும்பையைச் சேர்ந்த சர்ப்ராஸ் கான் இரு இன்னிங்சிலும் அரைசதம் (62 மற்றும் 68 ரன்) அடித்தார். திலவார் ஹூசைன் (1934-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக), சுனில் கவாஸ்கர் (1971-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக), ஸ்ரேயாஸ் அய்யர் (2021-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக) ஆகியோருக்கு பிறகு அறிமுக டெஸ்டின் இரு இன்னிங்சிலும் 50 ரன்களுக்கு மேல் எடுத்த 4-வது இந்தியராக சர்ப்ராஸ்கான் அறியப்படுகிறார்.

    இங்கிலாந்துக்கு எதிராக இதுவரை 134 டெஸ்டில் ஆடியுள்ள இந்தியா அதில் பெற்ற 33-வது வெற்றி இதுவாகும். இவற்றில் 24 வெற்றி சொந்த மண்ணில் கிடைத்தவையாகும். குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச வெற்றி இது தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 32 டெஸ்டில் வெற்றி பெற்றதே இந்தியாவின் முந்தைய அதிகபட்சமாக இருந்தது.

    இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதல் இன்னிங்சில் 131 ரன் எடுத்தார். இது அவரது 11-வது சதமாகும். அவர் சதம் அடித்த எல்லா டெஸ்டுகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. டெஸ்டில் 10-க்கு மேல் சதம் அடித்து எல்லாமே வெற்றியில் முடிந்திருப்பது ரோகித் சர்மாவுக்கு மட்டுமே.

    • 28 ஆண்டு கால வாசிம் அக்ரமின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார்.
    • 2019-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இந்தியா 27 சிக்சர் அடித்திருந்தது.

    இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 2-வது இன்னிங்சில் 12 சிக்சருடன் 214 ரன்கள் குவித்தார். 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனையை பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் தன்னகத்தே கொண்டுள்ளார். அவர் 1996-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக 12 சிக்சர் அடித்திருந்தார். அந்த 28 ஆண்டு கால சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார்.

    இரு இன்னிங்சையும் சேர்த்து இந்தியா ராஜ்கோட் டெஸ்டில் மொத்தம் 28 சிக்சர்களை நொறுக்கியது. ஒரு டெஸ்டில் அதிக சிக்சர் அடித்த அணி என்ற தங்களது உலக சாதனையை இந்தியா தற்போது மாற்றி அமைத்துள்ளது. 2019-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இந்தியா 27 சிக்சர் அடித்திருந்தது.

    3 டெஸ்ட் முடிந்துள்ள நிலையில் இந்த தொடரில் இந்தியா இதுவரை 48 சிக்சர் அடித்துள்ளது. ஒரு தொடரில் அணி ஒன்றின் அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கையாகவும் இது பதிவானது. ஏற்கனவே 2019-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 47 சிக்சர் அடித்திருந்த இந்தியா, இப்போது அதை கடந்துள்ளது.

    • 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.
    • 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை.

    ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்றது.

    இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இந்திய அணியின் வெற்றி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி அளித்தார். 

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    5 நாள் வரை போட்டி நடைபெறும் என்றுதான் நினைத்தேன். 150 ஓவர்கள் இருந்தால் இங்கிலாந்தை ஆல் அவுட் ஆக்கிவிடலாம் என்பதுதான் எனது கணக்காக இருந்தது.

    இவ்வளவு சீக்கிரம் போட்டி முடிவுக்கு வரும் என நான் எதிர்பார்க்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆட்ட நேரம் முடிய 15-20 நிமிடங்கள் இருந்த போது ஜடேஜாவின் தவறால், சர்ப்ராஸ் கான் ரன்-அவுட் ஆனார்.
    • சர்ப்ராஸ் கான் ரன்-அவுட்டில் சிக்கியதால், வீரர்கள் ஓய்வறையில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா கோபத்தில் தொப்பியை தூக்கி எறிந்தார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் எடுத்தது.

    இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்த சர்ப்ராஸ் கான் 62 ரன்னில் ரன் அவுட் ஆனார். ஜடேஜா 99 ரன்னில் இருந்த போது, பந்தை அருகில் தட்டிவிட்டு ஒரு ரன்னுக்கு ஓட முயற்சித்தார். பிறகு வேண்டாம் என்று திரும்பினார். அதற்குள் எதிர்முனையில் நின்ற சர்ப்ராஸ்கான் பாதி தூரம் வந்து விட்டு திரும்புவதற்குள் மார்க்வுட்டால் பிரமாதமாக ரன்-அவுட் செய்யப்பட்டார்.

    ஆட்ட நேரம் முடிய 15-20 நிமிடங்கள் இருந்த போது ஜடேஜாவின் தவறால், சர்ப்ராஸ் கான் ரன்-அவுட்டில் சிக்கியதால், வீரர்கள் ஓய்வறையில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா கோபத்தில் தொப்பியை தூக்கி எறிந்தார். சர்ப்ராஸ்கான் 62 ரன்களில் (66 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார்.

    இந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிந்ததும் ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'சர்ப்ராஸ்கானுக்காக வருந்துகிறேன். இந்த ரன்-அவுட் எனது தவறான அழைப்பால் தான் நடந்தது. அவர் அருமையாக ஆடினார்' என்று கூறியுள்ளார். 'கிரிக்கெட்டில் இது போல் நடப்பது சகஜம் தான். அதனால் இது ஒரு பெரிய விஷயமல்ல' என்று சர்ப்ராஸ் குறிப்பிட்டார்.

    • இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.
    • இந்திய அணியில் இரண்டு வீரர்கள் புதிதாக அறிமுகம்.

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.

    அந்த வரிசையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜூரல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி உள்ளனர். 

    • இங்கிலாந்து அணி இந்த தொடரில் 2 வேகப்பந்து வீரர்களுடன் விளையாட உள்ளனர்.
    • அணியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் இடத்தில் சர்பராஸ் கான் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

    ராஜ்கோட்:

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதற்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. 2 போட்டி முடிவில் 1-1 என்ற சமநிலை நிலவுகிறது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (15-ந்தேதி) தொடங்குகிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த டெஸ்டிலும் வென்று முன்னிலை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இந்தியாவின் அதிரடி இந்த போட்டியிலும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் 2 டெஸ்டில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி விலகினார். தற்போது தொடர் முழுவதும் ஆட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கே.எல். ராகுல் இந்த போட்டியிலும் ஆடவில்லை. காயம் காரணமாக அவர் 2-வது டெஸ்டில் விளையாடவில்லை. அதே நேரத்தில் கடந்த போட்டியில் ஆடாத ஜடேஜா அணிக்கு திரும்பி உள்ளார்.

    சர்பராஸ் கான், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் ஆகிய டெஸ்டில் அறிமுகமாகிறார்கள். அணியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் இடத்தில் சர்பராஸ் கான் இடம் பெற வாய்ப்பு உள்ளது. விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் பேட்டிங் தொடர்ந்து மோசமாக இருப்பதால் ஜூரலுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஒருவேளை ரஜத் படிதார் சுழற்றிவிடப்பட்டால் தேவ்தத் படிக்கல் இடம் பெறுவார். அவரும் இதுவரை டெஸ்டில் விளையாடவில்லை.

    ஜடேஜா அணிக்கு திரும்பியதால் குல்தீப் யாதவ் அல்லது அக்ஷர் படேல் நீக்கப்படலாம். முகமது சிராஜ் முழு உடல் தகுதியுடன் இருந்தால் முகேஷ் குமார் இடம் பெறமாட்டார்.

    கடந்த டெஸ்டில் ஜெய்ஷ்வாலின் இரட்டை சதமும், சுப்மன்கில்லின் சதமும், 9 விக்கெட் வீழ்த்திய பும்ராவின் அபார பந்துவீச்சும் வெற்றிக்கு காரணமாக இருந்தது.

    இங்கிலாந்து அணி இந்த தொடரில் முதல் முறையாக 2 வேகப்பந்து வீரர்களுடன் விளையாட உள்ளனர். ஆண்டர்சனும், மார்க்வுட்டும் இங்கிலாந்தின் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளனர்.

    அந்த அணியின் பேட்டிங்கில் ஆலி போப், கிராவ்லி, பென்ஸ்டோக்ஸ் ஆகியோரும் பந்துவீச்சில் ஹார்ட்லே, ரேகான் அகமது, ஆண்டர் சன் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். 2-வது டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்க்கும் வேட்கையில் இங்கிலாந்து அணி இருக்கிறது.

    நாளைய போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. 'ஸ்போர்ட்ஸ் 18' சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

    ×