search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3rd Test match"

    • 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.
    • 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை.

    ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்றது.

    இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இந்திய அணியின் வெற்றி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி அளித்தார். 

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    5 நாள் வரை போட்டி நடைபெறும் என்றுதான் நினைத்தேன். 150 ஓவர்கள் இருந்தால் இங்கிலாந்தை ஆல் அவுட் ஆக்கிவிடலாம் என்பதுதான் எனது கணக்காக இருந்தது.

    இவ்வளவு சீக்கிரம் போட்டி முடிவுக்கு வரும் என நான் எதிர்பார்க்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவின் அனல் பறந்த பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
    • இந்திய தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும் உமேஷ் யாதவ், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. சுப்மன் கில் 21 ரன்னிலும், விராட் கோலி 22 ரன்னிலும், உமேஷ் யாதவ் 17 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஆஸ்திரேலிய அணியின் மேதிவ் குஹ்னிமென் 5 விக்கெட்டும், நாதன் லயன் 3 விக்கெட்டும், மோர்பி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா அதிரடியாக விளையாடி 60 ரன்கள் எடுத்து அவுட்டானார். லபுசாக்னே 31 ரன்னும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 26 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 54 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து, 47 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 7 ரன்களுடனும் கேமரூன் கிரீன் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்நிலையில் இன்று 2-வது நாள் நடைபெற்றது. சிறிது நேரம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவின் அனல் பறந்த பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    இறுதியில் ஆஸ்திரேலியா அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும் உமேஷ் யாதவ், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    • ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மெதிவ் குஹ்னிமென் 3 விக்கெட்டையும், நாதன் லயன் 2 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
    • உணவு இடைவெளியின்போது, இந்திய அணி 26 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்தது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன.

    நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

    இதனால் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை யில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

    இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன்கில் களம் இறங்கினர். முதல் ஓவரை மிட்டெல் ஸ்டார்க் வீசினார். இதில் முதல் பந்தில் ரோகித் சர்மாவுக்கு கேட்ச் அவுட் கேட்கப்பட்டது. ஆனால் நடுவர் அவுட் வழங்கவில்லை.

    அதன்பின் அல்ட்ரா எட்ஜில் பந்து பேட்டில் உரசி சென்றது தெரிய வந்தது. ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் பவுண்டரிகளை அடித்தனர். ஆனால் இந்த ஜோடி நிலைக்கவில்லை. குனேமேன் வீசிய 6வது ஓவரில் ரோகித் சர்மா (12 ரன்) ஸ்டம்பிங் ஆனார்.

    அடுத்த புஜாரா களம் வந்தார்.

    மற்றொரு தொடக்க வீரரான சுப்மன்கில் 21 ரன்னில் அவுட் ஆனார். அவர் குனேமேன் பந்தில் சுமித்திடம் கேட்ச் கொடுத் தார். அடுத்து புஜாராவுடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். புஜாரா ஒரு ரன்னிலும், அடுத்து களம் ஜடேஜா 4 ரன்னிலும், நாதன் லயன் பந்திலும், ஸ்ரேயாஸ் அய்யர் ரன் எதுவும் எடுக்காமல் குனேமேன் பந்திலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

    இந்தியா 45 ரன்னுக்கு 5 விக்கெட்டை (11.2 ஓவர்) இழந்து திணறியது. 10 மணி நிலவரப்படி இந்தியா 69 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. நிதானமாக ஆடி களத்தில் இருந்த விராட் கோலி 22 ரன்னிலும், பரத் 17 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

    ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மெதிவ் குஹ்னிமென் 3 விக்கெட்டையும், நாதன் லயன் 2 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். உணவு இடைவெளியின்போது, இந்திய அணி 26 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்தது.

    இறுதியில், 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தியா ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மேதிவ் குஹ்னிமென் 5 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 5 விக்கெட்டையும், மொர்பி 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

    இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் ஆஸ்திரேலிய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

    3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தினால், அந்நாட்டு மண்ணில் வெற்றி பெற்ற 6-வது இந்திய கேப்டன் என்ற சிறப்பை விராட் கோலி பெறுவார். #ENGvIND #Viratkohli
    நாட்டிங்காம்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங் காமில் நடந்து வருகிறது.

    முதல் இன்னிங்சில் இந்தியா 323 ரன்களும், இங்கிலாந்து 161 ரன்களும் எடுத்தன. 168 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 7 விக்கெட்டுக்கு 352 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு 521 ரன் நிர்ணயிக்கப்பட்டது.

    நேற்று நடந்த 4-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 62 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து அதன் ஜோஸ் பட்லர்- பென் ஸ்டோக்ஸ் ஜோடி தாக்கு பிடித்து விளையாடிது. ஜோஸ் பட்லர் தனது முதல் சதத்தை அடித்தார். 106 ரன்னில் அவுட் ஆனார். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 169 ரன் சேர்த்தனர்.

    அதன்பின் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தன. பேர்ஸ்டோவ் (0). கிறிஸ் லோக்ஸ் (4), பென்ஸ்டோக்ஸ் (62), பிராய் (20) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

    நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 311 ரன் எடுத்து இருந்தது. ரஷித் 30 ரன்னிலும், ஆன்டர்சன் 8 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    இன்று 5-து மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இந்தியா வெற்றிக்கு இன்று ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படுகிறது.

    இன்றைய ஆட்டத்தில் ஒரு விக்கெட்டை விரைவிலேயே கைப்பற்றி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்து மண்ணில் அஜித் வடகேர், கபில்தேவ், கங்குலி, ராகுல் டிராவிட், டோனி ஆகியோர் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் 1932-ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து மண்ணில் இந்தியா 1971-ம் ஆண்டு முதல் டெஸ்ட் வெற்றியை பெற்றது.

    அஜித்வடகேர் தலைமையிலான இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது. மேலும் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    1986-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்தியா 2 டெஸ்டில் (லார்ட்ஸ், மற்றும் சிட்னி) வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

    2002-ம் ஆண்டு கங்குலி தலைமையில் சிட்னி டெஸ்டில் வெற்றி கிடைத்தது. 2007-ம் ஆண்டு ராகுல்டிராவிட் தலைமையிலான இந்தியா 2-வது டெஸ்டில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் (1-0) கைப்பற்றியது.

    2014-ம் ஆண்டு டோனி தலைமையில் இந்தியா லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றி பெற்றது. அந்த வரிசையில் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் வெற்றியை ருசிக்க போகும் 6-வது இந்திய கேப்டன் விராட்கோலி என்ற சிறப்பை பெற போகிறார். #ENGvIND #Viratkohli
    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கு பதிலாக இளம் வீரர் ரிஷாப் பாண்ட் இடம் பெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #ENGvIND #INDvEng
    நாட்டிங்காம்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    பர்கிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வென்றது. இதனால் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    நாட்டிங்காமில் முதல் டெஸ்டில் போராடி தோற்ற இந்தியா 2-வது டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் படுதோல்வி அடைந்தது.

    பேட்ஸ்மேன்கள் சொதப்பி வருவது இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. இதில் இருந்து மீண்டு வருவது அவசியம். விராட் கோலி மட்டுமே நல்ல நிலையில் இருக்கிறார்.

    ஆனால் அவர் 2-வது டெஸ்ட் போட்டியின் போது முதுகுவலியால் அவதிப்பட்டார். அதில் இருந்து குணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மற்ற பேட்ஸ்மேன்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து ஆடினால் மட்டுமே எழுச்சி பெற முடியும். தவறுகளில் பாடம் கற்று கொண்டு திறமையை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    2-வது டெஸ்டில் வீரர்கள் தேர்வில் தவறு செய்தனர். இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம்இறங்கியது பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே ஆடும் லெவனை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துவது மிக முக்கியம்.

    காயத்தில் இருந்து குணமடைந்ததால் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம் பெற வாய்ப்பு உள்ளது. இதே போல் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கு பதிலாக இளம் வீரர் ரிஷாப் பாண்ட் இடம் பெறலாம்.



    கடந்தபோட்டியில் நீக்கப்பட்ட தொடக்க வீரர் ஷிகர் தவான் திரும்பவும் வாய்ப்பு உள்ளது.

    தோல்விகளால் இந்திய வீரர்கள் மீது கடும் விமர்சனங்கள் பாய்ந்து வருகிறது. இதனால் நாளை தொடங்கும் டெஸ்டில் நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் இந்திய வீரர்கள் உள்ளனர். மேலும் இப்போட்டியில் தோற்றால் தொடரை இழக்க வேண்டியதுதான்.

    அப்படி நடக்கும் பட்சத்தில் இந்திய வீரர்கள் மீதான விமர்சனங்கள் கடுமையாக மாறும். இதனால் 3-வது டெஸ்டில் கண்டிப்பாக எழுச்சி பெற்று வெற்றி பெற இந்திய வீரர்கள் போராடுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சில் பலமாக இருக்கிறது. ஆண்டர்சன், பிராட், சாம்குர்ரன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். முதல் 2- டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளதால் இங்கிலாந்து அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. 3-வது டெஸ்டிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் அந்த அணி உள்ளது. #ENGvIND #INDvEng
    ×