search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDIA Bloc"

    • விவி பேட் ரசீது வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பின் சேமிக்கப்பட வேண்டும்.
    • சேமிக்கப்பட்ட ரசீதுகள் 100 சதவீதம் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட வேண்டும்.

    இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி டெல்லியில் நடைபெற்றது. இதில் 28 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    அந்த கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகளில் ஏராளமான சந்தேகம் இருக்கிறது. இதனால் புதிய நடைமுறையை தேவை. விவி பேட் (வாக்கு அளித்ததற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம்) ரசீது வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பின் சேமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    வாக்கு எந்திரம் அறிமுகப்படுத்திய காலத்தில் இருந்தே அதன் செயல்பாட்டில் சந்தேகம் இருந்து வருகிறது. வல்லுனர்கள் உள்ளிட்ட பலர் இதுகுறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். நாங்கள் பலமுறை தேர்தல் ஆணையத்திற்கு விரிவாக குறிப்புகளை கொடுத்துள்ளோம்.

    எங்களுடைய பரிந்துரை எளிதானது. வாக்காளர்கள் வாக்கு அளிக்கும்போது விவிபாட் எந்திரத்தில் ஒரு ஸ்லிப் தோன்றி யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பது காட்டுகிறது. ஆனால் அந்த ஸ்லிப் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு, பின்னர் ஒரு பாக்சில் சேகரிக்கப்பட வேண்டும். 100 சதவீதம் இந்த ஸ்லிப்களை எண்ண வேண்டும். இது வாக்காளர்களுக்கு தேர்தல் நேர்மையாக நடத்தப்படும் என்ற நம்பிக்கை கொடுக்கும் இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. பல கேள்விகளை எழுப்பி நாங்கள் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளோம். ஆனால் இந்தியா கூட்டணி பிரதிநிதிகளை சந்திக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுகிறது எனவும் இந்தியா கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் விவிபேட் தொடர்பாக தங்களை சந்திக்க இந்தியா கூட்டணி குழுவுக்கு நேரம் ஒதுக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "இந்தியா கூட்டணியில் நாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தின் நகலை தேர்தல் ஆணையத்தின் தலைவரை சந்தித்து வழங்கி, ஆலோசனை நடத்த முயற்சி செய்து வருகிறோம். ஆனால், அவ்வாறு செய்வதில் எங்களுக்கு இதுவரை வெற்றி கிடைக்கவில்லை.

    "இந்தியா கூடடணியின் 3 அல்லது 4 பேர் உங்களை சந்தித்து விவிபேட் குறித்து சில நிமிடங்கள் தகவல்களை பரிமாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கும்படி மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறேன்" என ஜெய்ராம் ரமேஷ் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    30-ந்தேதியிடப்பட்டு இந்த கடினம் எழுதப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி இது தொட்ரபானை அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கிழக்கு மண்டலத்தில் உள்ள 153 இடங்களில் 80 முதல் 90 இடங்களை பா.ஜனதா கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும்,
    • தெற்கு மண்டலத்தில் 132 இடங்களில் 20 முதல் 30 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

    2014 மற்றும் 2015-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் பா.ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. குஜராத் மாநில முதல்வராக இருந்த மோடி, பிரதமாக பதவி ஏற்றார். தொடர்ந்து இரண்டு முறை பிரதமராக இருந்து வருகிறார்.

    அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலிலும் இவர்தான் பா.ஜனதா கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட இருக்கிறார். 2014-ல் கூட்டணியுடன் ஆட்சி அமைத்த பா.ஜனதா, 2019-ல் தனிப்பெரும்பான்மை பெற்றது.

    2024-ல் கூடுதல் இடங்களை பிடித்து வெற்றிபெற வேண்டும் என திட்டம் வகுத்துள்ளது. அதேவேளையில் மோடி தலைமையிலான மத்திய அரசை இந்த முறை வீழ்த்தவில்லை என்றால், பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்றுவது மிகவும் கடினம் என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன.

    இதனால் சுமார் 28 கட்சிகள் சேர்ந்து "இந்தியா கூட்டணி" என்பதை அமைத்துள்ளன. இருந்தபோதிலும் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படாமல் கூட்டணிக்குள் தனித்தனியே பிரச்சனை இருந்துதான் வருகிறது.

    இதற்கிடையே மக்களவை தேர்தல் குறித்த கருத்து கணிப்புகள் பா.ஜனதாவுக்கு சாதகமாக இருந்து வருகின்றன. தற்போது ஐந்து மாநில தேர்தல் பா.ஜனதாவுக்கு மேலும் பலம் சேர்ப்பதாக உள்ளது.

    இந்த நிலையில் ஏபிபி நியூஸ் மற்றும் சி-வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் பா.ஜனதா தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி 295 முதல் 335 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியா கூட்டணி 165 முதல் 205 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் பீகார், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி பா.ஜனதாவை விட ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்இந்தியாவில் இந்தியா கூட்டணிதான் ஆதிக்கம் செலுத்தும். பா.ஜனதாவுக்கு கடும் சவாலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

    கடந்த டிசம்பர் 15-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 18 வயதிற்கு மேற்பட்டோரிடம் மாநில அளவில் கருத்து கேட்கப்பட்டு இந்த கணிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட அனைவரும் வாக்காளர்கள் எனவும், 543 இடங்களிலும் 13,115 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.

    கிழக்கு மண்டலத்தில் உள்ள 153 இடங்களில் 80 முதல் 90 இடங்களை பா.ஜனதா கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், வடக்கு மண்டலத்தில் 180 இடங்களில் 150 முதல் 180 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், மேற்கு மண்டலத்தில் 78 இடங்களில் 45 முதல் 55 இடங்களை கைப்பற்றும் எனவும், தெற்கு மண்டலத்தில் 132 இடங்களில் 20 முதல் 30 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

    மத்திய பிரதேசம் (27-29), சத்தீஸ்கர் (9-11), ராஜஸ்தான் (23-25), உத்தர பிரதேசம் (73-75) பா.ஜனதா கூட்டணி அதிக அளவில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவில் கூட பா.ஜனதா கை ஓங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

    மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 23 முதல் 25 இடங்களையும், பா.ஜனதா 16 முதல் 18 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    பிரதமர் மோடியின் பணி திருப்பிகரமாக இருப்பதாக 47.2 பேர் ஆதரவு அளித்துள்ளனர். 30.2 சதவீதம் பேர் மிகவும் திருப்தி, 21.3 சதவீதம் பேர் திருப்தியில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

    பெரும்பாலானோர் 2024 தேர்தல் வரை இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து செல்லாது எனவும் தெரிவித்துள்ளனர்.

    • ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார்.
    • இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் நிதிஷ் குமார்.

    பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தற்போது ராஜிவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக உள்ளார். வருகிற 29-ந்தேதி இந்த கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது இந்த முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. கட்சியின் பெரும்பாலான மூத்த தலைவர்கள் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

    அதேவேளையில் வேறு ஒருவர் தலைவராக நியமிக்கபடலாம் எனவும் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், அது கட்சியில் உள்ள தலைவர்களிடையே பிளவை ஏற்படுத்தும் எனவும் கருதுகின்றனர்.

    லாலன் சிங்- பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் இடையிலான நட்பு தற்போது சிறப்பான முறையில் வளர்ந்து வருவது நிதிஷ் குமாரை அப்செட்டில் ஆழ்த்தியதாக தெரிகிறது.

    சமீபத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியில் ஜனவரி மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதியை பங்கீட்டை முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இந்தியா கூட்டணி நிதிஷ் குமார் அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்க தயக்கம் காட்டுவதாகவும், அதனால் அவர் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இருந்து பாதிலேயே வெளியேறியதாகவும் தகவல் வெளியானது. இதை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளர் மறுத்துள்ளார்.

    • பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.
    • இதனால் இரு அவைகளில் இருந்தும் 146 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    பாராளுமன்ற மக்களவையில் இருவர் புகுந்து வண்ண புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இது மிகப்பெரிய பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    இதனால் 146 எம்.பி.க்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்திய பாராளுமன்ற வரலாற்றில் இவ்வளவு எண்ணிக்கையில் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

    இந்த நடவடிக்கையை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் "ஜனநாயகத்தை பாதுகாப்போம்" என்ற தலைப்பில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கம்யூனிஸ்ட் தலைவர்கள் டி. ராசா, சீத்தாரம் யெச்சூரி, மல்லிகார்ஜூன கார்கே, திருச்சி சிவா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் "ஜனநாயகத்தை காப்பாற்ற எந்த விலையையும் கொடுக்க தயாராக இருக்கிறோம்" என்றார்.

    உலக ஜனநாயக வரலாற்றில் 146 எம்.பி.க்கள் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டது கிடையாது. ஜனநாயகம் அபாயகரமான நிலையில் உள்ளது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த போராட்டம் மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகத்தான் என சசி தரூர் தெரிவித்தார்.

    "உள்துறை அமைச்சரிடம் அறிக்கை கேட்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் எங்களது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காமல் பிடிவாதமாக இருந்தது. அதனால் பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. அதற்கு எதிர்வினையாக 146 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர்" என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

    இரண்டு இளைஞர்கள் பாராளுமன்ற மக்களவையில் நுழைந்து புகை குண்டுகளை வீசினர். அப்போது பா.ஜனதா எம்.பி.க்கள் ஓட்டம் பிடித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு குளறுபடி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அவர்கள் இந்த வழியில் போராட்டம் நடத்துகிறார்கள் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை இல்லாதது என்பதுதான்" என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    • இந்தியா கூட்டணி எனப் பெயர் வைக்கும்போது நிதிஷ் குமார் எதிர்ப்பு தெரிவித்தார்.
    • மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முன்மொழிந்துள்ளனர்.

    பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா இரண்டு முறை தொடர்ச்சியாக மத்தியில் ஆட்சியமைத்துள்ளது. அடுத்த வருடம் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் 3-வது முறையாக மோடி தலைமையில் ஆட்சியை பிடித்துவிட்டால் இந்தியாவில் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலை ஏற்பட்டு விடும் என முக்கிய எதிர்க்கட்சிகள் தலைவர்களின் கணிப்பாக உள்ளது.

    காங்கிரஸ் தற்போது மிகப்பெரிய அளவில் பா.ஜனதாவை எதிர்க்கும் வல்லமையோடு இருப்பதாக தெரியவில்லை. இதனால் 2024 மக்களை தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் அச்சாரம்போட்டார்.

    இதற்கு லாலு பிரசாத்தின் மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆதரவு அளித்தார். உத்தர பிரதேசத்தின் அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் ஆதரவு தெரிவிக்க பீகாரில் முதல் கூட்டம் நடைபெற்றது.

    பின்னர் 2-வது கூட்டம் கர்நாடகாவில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைமை ஏற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா கூட்டணி (INDIA Bloc) எனப் பெயர் வைக்கப்பட்டது. அப்போதுதான் இந்தியா கூட்டணியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.


    இந்த கூட்டணிக்கு வித்திட்ட நிதிஷ் குமார், இந்தியா எனப் பெயர் வைக்க தனது எதிர்ப்பை தெரிவித்தார். பின்னர் மகாராஷ்டிரா மாநிலத்தில் 3-வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு இந்தியா கூட்டணியின் வேகம் அதிகமாக இருந்தது. கூட்டணி கட்சிகளுக்கு இடையில் தொகுதிகளை பிரிப்பது மட்டும்தான் மீதமுள்ளது போன்று தோன்றின.

    அப்போதுதான் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியா கூட்டணி வேலைகளை அப்படியே விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சி ஐந்து மாநில தேர்தலில் கவனம் செலுத்தியது.

    ஐந்து மாநிலங்களில் தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவற்றில் எப்படியும் ஆட்சியை பிடித்து விடலாம் என காங்கிரஸ் நினைத்தது. இதனால் அகிலேஷ் யாதவ், நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்களிடம் ஆலோசிக்காமலும், கூட்டணி தேவையில்லை எனவும் தனியாக களம் இறங்கியது.

    இந்த ஐந்து மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி இந்தியா கூட்டணியில் நாங்கள்தான முதன்மையான கட்சி என்பதை காண்பிக்க திட்டமிட்டிருந்தது. தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போது நிதிஷ் குமார், ஆகிலேஷ் யாதவ் ஆகியோர் வெளிப்படையாக காங்கிரஸ் கட்சி மீது குற்றம்சுமத்தினர்.

    ஏற்கனவே வெவ்வேறு கருத்துகளை கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்துள்ள நிலையில், இந்த கூட்டணி நீடிக்காது என பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்தன.

    இந்த நிலையில்தான் தற்போது 4-வது கூட்டணி டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் முன்மொழிந்துள்ளனர்.

    இது நிதிஷ் குமாருக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. மேலும், அவரது கட்சியினர் தேர்தலுக்கு பிறகு நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளர் போட்டியில் முன்னணி வகிப்பார் என நினைத்திருந்தனர்.


    இந்த கூட்டத்தின்போது நிதிஷ் குமார் இந்தியில் பேசியதை திமுக தலைவருக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் மனோஜ் ஷா மொழிமாற்றம் செய்து விளக்கியுள்ளார். திமுக தலைவரிடம் இருந்து ஆதாயம் பெற இவ்வாறு செய்வதாக மனோஜ் ஷா மீது கோபம் அடைந்துள்ளார்.

    மேலும், கூட்டத்தின் பாதியிலேயே நிதிஷ் குமார் வெளியேறியதாக கூறப்படுகிறது. நான்கு மாநில தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு ஆதாயத்தை கொடுத்துள்ள நிலையில், இந்தியா கூட்டணியில் மாறுப்பட்ட கருத்து நிலவி வருவதால் கூட்டணி முழுமையடைந்து தேர்தலை சந்திக்காது என வெளிப்படையாக எதிர்க்கட்சிகள் பேசத் தொடங்கியுள்ளனர்.

    நிதிஷ் குமார் போன்ற தலைவர்கள் வெளியேறினால் அது இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

    இதனால் அதிருப்தியில் உள்ள நிதிஷ் குமார் சமாதானம் செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதன் முயற்சியாக ராகுல் காந்தி நிதிஷ் குமாரிடம் போன் மூலம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. ஆனால், ராகுல் காந்தி இணைந்து செயல்படுவோம் என்பது குறித்து பேசி அவரை சமாதானப்படுத்தியிருக்கலாம் எனத் தெரிகிறது.

    • யாருக்கு வாக்களித்தோம் என்பதை விவிபாட் எந்திரம் மூலம் வாக்காளர்களுக்கு காட்டப்படும்.
    • இந்த ரசீது மக்களிடம் காண்பிக்கப்பட்டு, பின்னர் ஒரு பாக்சில் சேகரிக்கப்பட வேண்டும்.

    இந்திய கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் 28 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தின் பல்வேறு விசயங்களை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகளில் ஏராளமான சந்தேகம் இருக்கிறது. இதனால் புதிய நடைமுறையை தேவை. விவி பேட் (வாக்கு அளித்ததற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம்) ரசீது வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பின் சேமிக்கப்பட வேண்டும் ஆகிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    வாக்கு எந்திரம் அறிமுகப்படுத்திய காலத்தில் இருந்தே அதன் செயல்பாட்டில் சந்தேகம் இருந்து வருகிறது. வல்லுனர்கள் உள்ளிட்ட பலர் இதுகுறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். நாங்கள் பலமுறை தேர்தல் ஆணையத்திற்கு விரிவாக குறிப்புகளை கொடுத்துள்ளோம். ஆனால் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. பல கேள்விகளை எழுப்பி நாங்கள் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளோம். ஆனால் இந்தியா கூட்டணி பிரதிநிதிகளை சந்திக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுகிறது.

    எங்களுடைய பரிந்துரை எளிதானது. வாக்காளர்கள் வாக்கு அளிக்கும்போது விவிபாட் எந்திரத்தில் ஒரு ஸ்லிப் தோன்றி யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பது காட்டுகிறது. ஆனால் அந்த ஸ்லிப் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு, பின்னர் ஒரு பாக்சில் சேகரிக்கப்பட வேண்டும். 100 சதவீதம் இந்த ஸ்லிப்களை எண்ண வேண்டும். இது வாக்காளர்களுக்கு தேர்தல் நேர்மையாக நடத்தப்படும் என்ற நம்பிக்கை கொடுக்கும் இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஒரு தொகுதியின் முடிவு வெளியிடுவதற்கு முன்பாக, ஐந்து வாக்கு மையத்தில் உள்ள விவிபாட் எந்திரத்தில் உள்ள ரசீதுகள் எடுத்து எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பின் பேரில் ஆலோசனை கூட்டம்.
    • ஆலோசனை கூட்டம் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடைபெற்றது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.-வை எதிர்கொள்ளும் நோக்கில் எதிர் கட்சிகள் சார்பில் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 17 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இந்தியா கூட்டணியின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் மற்றொரு ஆலோசனை கூட்டம் இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் நடைபெற இருக்கிறது. இன்றைய ஆலோசனை கூட்டம் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடைபெற்றது.

     

    இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரமோத் திவாரி, கே.சி. வேனுகோபால் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் தவிர, ஜெ.எம்.எம். கட்சியின் மஹூவா மஜி, ம.தி.மு.க. சார்பில் வைகோ, ஆர்.எஸ்.பி. கட்சியின் என்.கே. பிரேமசந்திரன், சி.பி.ஐ. சார்பில் பினோய் விஸ்வம், ஜெ.டி.யு. சார்பில் லாலன் சிங், எஸ்.பி. கட்சி சார்பில் ராம் கோபால் யாதவ் மற்றும் எஸ்.டி. ஹாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    இத்துடன் ஆர்.எல்.டி. சார்பில் ஜெயந்த் சவுத்ரி, என்.சி.பி. கட்சியின் வந்தனா சாவன், ஆம் ஆத்மி கட்சி சார்பில் ராகவ் சத்தா, தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, டி.ஆர். பாலு, காங்கிரஸ் கட்சியின் சவுரவ் கோகோய், நசீர் ஹூசைன் மற்றும் ராஜானி பாட்டீல், சி.பி.ஐ.எம். சார்பில் எலமரம் கரீம், ஆர்.ஜே.டி. சார்பில் ஃபயாஸ் அகமது, கேரளா காங்கிரஸ் சார்பில் ஜோஸ் கே மணி, என்.சி. சார்பில் ஹஸ்னைன் மசூதி, ஐ.யு.எம்.எல். சார்பில் முகமது பஷீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஐந்து மாநில தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க. கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் இன்றைய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

    ×