search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harassment case"

    • கடைக்கு மதுபோதையில் வந்த டைமண்ட் பாபு என்ற வாலிபர் எண்ணெய் சட்டியை எட்டி உதைத்து ரகளையில் ஈடுபட்டார்.
    • தட்டிக்கேட்ட இளம்பெண்ணை கையை பிடித்து இழுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    போரூர்:

    சென்னை அசோக் நகர், அடுத்த புதூர் பகுதியை சேர்ந்த இளம்பெண். அதே பகுதி 3-வது அவென்யூவில் பிளாட்பாரத்தில் "சிக்கன் பக்கோடா" கடை நடத்தி வருகிறார்.

    கடந்த பிப்ரவரி மாதம் 6-ந்தேதி இரவு இவரது கடைக்கு மதுபோதையில் வந்த டைமண்ட் பாபு என்ற வாலிபர் எண்ணெய் சட்டியை எட்டி உதைத்து ரகளையில் ஈடுபட்டார். இதை தட்டிக்கேட்ட இளம்பெண்ணை கையை பிடித்து இழுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    அசோக் நகர் இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் போலீசார் டைமண்ட் பாபுவை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு அல்லிகுளம் மகளிர் நீதிமன்ற நீதிபதி முகமது பரூக் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த நிலையில் டைமண்ட் பாபுவுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.10,500 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    • பூங்காவில் நடைபயிற்சி செல்லும் போது மாணவிக்கு, ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜெபக்குமார் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
    • அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் ராயபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    ராயபுரம்:

    ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஜெபக்குமார் (வயது 55). இவர் போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர். அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 14 வயது சிறுமி தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    குடியிருப்பில் உள்ள பூங்காவில் நடைபயிற்சி செல்லும் போது மாணவிக்கு, ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜெபக்குமார் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். மேலும் அவர் மாணவிக்கு தொடர்ந்து இதுபோல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது தொடர்பாக ராயபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    விசாரணையில் ஜெபக்குமார், மாணவிக்கு பாலியல் தொலை கொடுத்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • பஸ்சில் சென்ற கல்லூரி மாணவிக்கு வின்சென்ட் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
    • பஸ்சில் சென்ற மற்ற பயணிகள் வின்சென்ட்டை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மேக்காட்டு குளம் பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 48). சம்பவத்தன்று இவர், குன்னம்குளம்-பாவரட்டி வழித்தடத்தில் சென்ற தனியார் பஸ்சில் பயணித்துள்ளார்.

    அப்போது அதே பஸ்சில் சென்ற கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அவரை அந்த பஸ்சில் சென்ற மற்ற பயணிகள் கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    பின்பு வின்சென்டை குருவாயூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

    • வேடசந்தூர் டி.எஸ்.பி துர்காதேவி உத்தரவின்பேரில் வடமதுரை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
    • விசாரணையில் ரங்கநாதன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கூம்பூர் ராமநாயக்கனூர் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன்கள் ரங்கநாதன்(24), கருப்பசாமி(21). இவர்கள் 2 பேரும் பக்கத்து கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றனர். அப்போது சில நாட்கள் அங்கேயே தங்கினர்.

    உறவினரின் 9 மற்றும் 5 வயது மகள்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ரங்கநாதன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் 2 பள்ளி குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் சிறுமிகள் உடல் சோர்ந்து காணப்பட்டனர்.

    இதைஅறிந்ததும் அவர்களின் தாயார் 2 சிறுமிகளையும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்து சென்றார். அப்போது அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது டாக்டர்கள் மூலம் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் போலீசில் புகார் அளித்தார்.

    வேடசந்தூர் டி.எஸ்.பி துர்காதேவி உத்தரவின்பேரில் வடமதுரை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் ரங்கநாதன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வேடசந்தூர் சிறையில் அடைத்தனர்.

    • விவேக் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
    • தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார்.

    இந்தூர்:

    மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் தனியார் நீட் பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் விவேக் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் அங்கு படித்து வரும் 17 வயது மாணவியை படிப்புக்கு உதவுகிறேன் என கூறி காபி சாப்பிட அழைத்தார். இதை நம்பி அந்த மாணவியும் அவருடன் ஓட்டலுக்கு சென்றார். அப்போது விவேக் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். விவேக்குடன் பணியாற்றும் மற்றொரு ஆசிரியரான சைலேந்திரா என்பவர் மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு இது பற்றி வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டினார்.

    தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் உறவினர்கள் நீட் பயிற்சி மையத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் அங்கிருந்த ஆசிரியர் விவேக்கை பிடித்து அவர் அணிந்து இருந்த ஆடையை களைந்தனர். பின்னர் அவரை நிர்வாணமாக ரோட்டில் ஊர்வலமாக அழைத்து சென்று போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சைக்கு வந்த சிறுவனை கழிவறைக்கு அழைத்துச்சென்று, அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கழிவறைக்கு அழைத்துச் சென்று சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ரமீஸ் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளான். இதையடுத்து அவனை அவனது தாய், தலச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருந்தார்.

    அங்கு புறநோயாளிகள் பிரிவில் சிறுவனை அமர வைத்துவிட்டு, ஆதார் தொடர்பான விவரங்கள் கொடுக்க சென்றிருந்தார். அப்போது சிறுவனை, அந்த மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் ரமீஸ் என்பவர் கழிவறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

    அப்போது அவர், சிறுவனுக்கு கழிவறையில் வைத்து பாலியல்தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியிருக்கிறார். ஆனால் கழிவறையை விட்டு வெளியே வந்த சிறுவன், ஆஸ்பத்திரி ஊழியர் ரமீஸ், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து அழுதபடியே தனது தாயிடம் தெரிவித்தார்.

    இதனை சிறுவனின் தாய் மற்றும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தவர்கள் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். சிறுவன் குற்றம் சுமத்திய ஊழியர் ரமீசை மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்பு அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    கழிவறைக்கு அழைத்துச் சென்று சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ரமீஸ் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், ரமீஸ் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

    சிகிச்சைக்கு வந்த சிறுவனை கழிவறைக்கு அழைத்துச்சென்று, அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தலச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு வெண்ணிலா வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த போது அவரை ஒரு வாலிபர் வழிமறித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த வாலிபரை தேடிவந்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, அனுமந்தீர்த்தம், மத்தூர் ஆகிய பகுதிகளில் பெண்கள் சிலர் தங்களது குடும்பத்தின் வறுமையை போக்குவதற்காக கிடைக்கும் வேலைக்கு சென்று வருகின்றனர்.

    அவ்வாறு வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டிற்கு திரும்பி வரும்போது இரவு நேரம் ஆகிவிடுவதால், தனியாக நடந்து வர அஞ்சி வந்தனர்.

    இந்த நிலையில் ஊத்தங்கரையை அடுத்த அனுமந்தீர்த்தம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு தனியாக திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை வழிமறித்து கட்டிபிடித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அந்த பெண் சத்தம் போட்டார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    இதேபோன்று சாமல்பட்டியைச் சேர்ந்த வெண்ணிலா (வயது23) என்பவர் அங்குள்ள தனியார் நூல் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வெண்ணிலா வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த போது அவரை ஒரு வாலிபர் வழிமறித்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் சத்தம்போடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிஓடி விட்டார்.

    இதுகுறித்து வெண்ணிலா சாமல்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த வாலிபரை தேடிவந்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து தலைமறைவான வாலிபரை பிடிக்க உஷார்படுத்தினர். மேலும், சம்பவ இடங்களில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் 2 இடங்களில் பெண்களை வழிமறித்து பாலியல் சில்மிஷ சம்பவங்களில் ஈடுபட்டவர் ஒரே நபர் என்பது தெரியவந்தது. இதனால் தலைமறைவான வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அந்த வாலிபரை நேற்று ஊத்தங்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், கைதான வாலிபர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மடத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (38) என்பதும் இவர் தான் 2 பெண்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், இவர் மீது தருமபுரி, சென்னை, கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைதான முருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    பெண்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த முருகனை போலீசார் கைது செய்ததன் மூலம் ஊத்தங்கரை, மத்தூர், சாமல்பட்டி ஆகிய பகுதிகளில் வேலைக்கு செல்லும் பெண்கள் நிம்மதி அடைந்தனர்.

    • கடந்த ஒரு வருடமாக மாணவியிடம் தகாத முறையில் நடந்து உள்ளார்.
    • பாலியல் சீண்டல் குறித்த விவரங்களை சிறுமி கூறியவுடன் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.

    சென்னை:

    சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவிக்கு தேனாம்பேட்டையை சேர்ந்த எலக்ட்ரீசியன் கணேசன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    கடந்த ஒரு வருடமாக மாணவியிடம் தகாத முறையில் நடந்து உள்ளார். இதுபற்றி மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். பாலியல் சீண்டல் குறித்த விவரங்களை சிறுமி கூறியவுடன் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கணேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    • கண்ணூர் ரெயில் நிலையம் வரை பெண்ணுக்கு 3 பேரும் தொடர்ந்து தொல்லை கொடுத்தபடி இருந்துள்ளனர்.
    • நடந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலிசாரிடம் பெண் பயணி புகார் தெரிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    நாகர்கோவிலில் இருந்து மங்களூருவுக்கு ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் அதிகாலை 2.15 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.

    அதிகாலை இயக்கப்பட்ட போதிலும் இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் பயணிக்கிறார்கள். இந்த ரெயிலின் பொதுப்பெட்டியில் நேற்று இளம்பெண் ஒருவர் பயணித்தார்.

    அந்த பெண் பயணித்த பொதுப்பெட்டியில் பயாஸ்(26), முகம்மது ஷபி(36), அப்துல் வாஹித் (35) ஆகியோரும் பயணித்துள்ளனர். குடிபோதையில் இருந்த அவர்கள், அந்த பெண் பயணியிடம் தவறாக நடந்துள்ளனர்.

    கண்ணூர் ரெயில் நிலையம் வரை அந்த பெண்ணுக்கு அவர்கள் 3 பேரும் தொடர்ந்து தொல்லை கொடுத்தபடி இருந்துள்ளனர். அவர் கண்டித்தும் வாலிபர்கள் 3 பேரும் தொடர்ந்து அத்துமீறியபடி இருந்துள்ளனர்.

    இதனால் அந்த பெண் ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதையடுத்து ரெயில் நடுவழியில் நின்றது. டிக்கெட் பரிசோதகர் பொதுப்பெட்டிக்கு வந்து அபாய சங்கிலியை பிடித்து இழுத்தது யார்? என்று விசாரித்தார்.

    அப்போது அந்த பெண், வாலிபர்கள் 3 பேரும் தன்னிடம் தவறாக நடந்ததால் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து 3 வாலிபர்களையும் சக பயணிகள் பிடித்து ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    நடந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலிசாரிடம் அந்த பெண் பயணி புகார் தெரிவித்தார். அதன்பேரில் 3 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

    • கணவர் வீட்டில் இல்லாத சமயம் பெண்ணிடம் ஆனந்த் செல்போனில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
    • வாலிபர் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    லக்னோ:

    பீகார் மாநிலம் காதிர்கர் மாவட்டம் காபர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் அங்குள்ள ஒரு மாவு மில்லில் வேலை பார்த்து வந்தார். வேலை தொடர்பாக உரிமையாளரின் வீட்டுக்கு செல்வது வழக்கம். அப்போது அவரது மனைவிடம் பேசுவது உண்டு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அடிக்கடி அவர் தனது உரிமையாளரின் மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    கணவர் வீட்டில் இல்லாத சமயம் அந்த பெண்ணிடம் ஆனந்த் செல்போனில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதை அவர் கண்டித்தார். சம்பவத்தன்று உரிமையாளர் வீட்டுக்கு சென்ற அவர் அவரது மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது பற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டினார். ஆனந்தின் தொந்தரவு தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதை கேட்டு அருகில் இருந்த அவரது உறவினர்கள் அங்கு திரண்டனர்.

    அவர்களை பார்த்ததும் ஆனந்த் தப்பி ஓட முயன்றார், ஆனால் அவர்கள் அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர், மேலும் அவரது தலையை மொட்டையடித்து அருகில் இருந்த கம்பத்தில் கட்டி வைத்தனர், செருப்பு மாலையும் அணிவித்தனர். இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து ஆனந்தை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    ஆனால் இந்த பாலியல் தொந்தரவு குறித்து போலீசில் யாரும் புகார் கொடுக்காததால் போலீசார் அவரை விடுவித்தனர்.

    ஆனந்த் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • பல்லடம் அரசு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கல்லூரி பேராசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    • பேராசிரியர் பாலமுருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் பாலமுருகன். இவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவி ஆன்லைன் மூலமாக திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு புகார் தெரிவித்தார்.

    இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் அகிலன் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பேராசிரியர் பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதை அறிந்த பேராசிரியர் பாலமுருகன் தலைமறைவானார்.

    இதையடுத்து தலைமறைவாக உள்ள பேராசிரியரை பிடிக்க பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் பேராசிரியர் பாலமுருகன் நிற்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று பாலமுருகனை கைது செய்தனர்.

    பின்னர் பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் இதேபோல் ஊட்டி, நாமக்கல் அரசு கல்லூரியில் பணியாற்றிய போது இதே புகாரில் சிக்கி உள்ளார். ஆனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுக்க முன் வராததால் கல்லூரி நிர்வாகம் அவரை பல்லடம் அரசு கல்லூரிக்கு மாற்றியுள்ளனர்.

    இங்கு வந்து சில மாதங்களிலேயே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

    இதனையடுத்து பேராசிரியர் பாலமுருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

    • பயிற்சி வகுப்பில் 10-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று வந்துள்ளனர்.
    • பயிற்சி பெற்று வந்த 2 மாணவிகளிடம் சத்தியமூர்த்தி பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு காந்திஜி சாலை, ஜவான் பவான் அலுவலகம் எதிரே உள்ள கட்டிடத்தின் 2-ம் தளத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (41). ஆடிட்டர். இவர் அதே தரைத்தளத்தில் அலுவலகம் வைத்து ஆடிட்டிங் பயிற்சி வகுப்பினை நடத்தி வருகிறார்.

    இந்த பயிற்சி வகுப்பில் 10-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று வந்துள்ளனர். இங்கு பயிற்சி பெற்று வந்த 2 மாணவிகளிடம் சத்தியமூர்த்தி பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து உடன்படிக்கும் மாணவரிடம் கூறியுள்ளார்.

    இதையடுத்து அந்த மாணவர் இது பற்றி பயிற்சியாளர் சத்திய மூர்த்தியிடம் கேட்டுள்ளார். அப்போது சத்தியமூர்த்தி அந்த மாணவரிடமும், சம்பந்தப்பட்ட மாணவியிடமும் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சத்தியமூர்த்தி, மாணவிக்கு நியாயம் கேட்டு வந்த மாணவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் சம்பந்தப்பட்ட மாணவரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாணவர் பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரரிடம் சத்திய மூர்த்தியின் பாலியல் சில்மிஷம் குறித்து கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் நேற்று மாலை சத்தியமூர்த்தி அலுவலகத்திற்கு வந்தனர்.

    அங்கு சத்தியமூர்த்தியை அவர்கள் அடித்து உதைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்து வந்த சத்தியமூர்த்தி ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்தார்.

    இந்நிலையில் சத்தியமூர்த்தியின் அலுவலகம் முன்பு திரண்ட மாணவ-மாணவிகள், உறவினர்கள் சத்தியமூர்த்தியை கைது செய்ய கோரி வலியுறுத்தி கோஷமிட்டனர். கைது செய்யவில்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சூரம்பட்டி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்று அவர்கள் கலந்து சென்றனர்.

    இந்நிலையில் சூரம்பட்டி போலீசார் ஆடிட்டர் சத்தியமூர்த்தி மீது 506 (2) மிரட்டல் விடுப்பது, 294 (பி) கெட்ட வார்த்தைகள் பேசுவது, பெண்களுக்கு எதிரான கொடுமை செய்வது உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தற்போது ஆடிட்டர் சத்தியமூர்த்தி ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை முடிந்ததும் இன்று மாலை அவர் கைது செய்யப்படலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    ×