search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாணவிக்கு பாலியல் தொல்லை: நீட் பயிற்சி மைய ஆசிரியர் நிர்வாணப்படுத்தி ஊர்வலம்
    X

    மாணவிக்கு பாலியல் தொல்லை: நீட் பயிற்சி மைய ஆசிரியர் நிர்வாணப்படுத்தி ஊர்வலம்

    • விவேக் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
    • தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார்.

    இந்தூர்:

    மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் தனியார் நீட் பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் விவேக் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் அங்கு படித்து வரும் 17 வயது மாணவியை படிப்புக்கு உதவுகிறேன் என கூறி காபி சாப்பிட அழைத்தார். இதை நம்பி அந்த மாணவியும் அவருடன் ஓட்டலுக்கு சென்றார். அப்போது விவேக் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். விவேக்குடன் பணியாற்றும் மற்றொரு ஆசிரியரான சைலேந்திரா என்பவர் மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு இது பற்றி வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டினார்.

    தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் உறவினர்கள் நீட் பயிற்சி மையத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் அங்கிருந்த ஆசிரியர் விவேக்கை பிடித்து அவர் அணிந்து இருந்த ஆடையை களைந்தனர். பின்னர் அவரை நிர்வாணமாக ரோட்டில் ஊர்வலமாக அழைத்து சென்று போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×