என் மலர்
இந்தியா

ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
- பஸ்சில் சென்ற கல்லூரி மாணவிக்கு வின்சென்ட் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
- பஸ்சில் சென்ற மற்ற பயணிகள் வின்சென்ட்டை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மேக்காட்டு குளம் பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 48). சம்பவத்தன்று இவர், குன்னம்குளம்-பாவரட்டி வழித்தடத்தில் சென்ற தனியார் பஸ்சில் பயணித்துள்ளார்.
அப்போது அதே பஸ்சில் சென்ற கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அவரை அந்த பஸ்சில் சென்ற மற்ற பயணிகள் கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்பு வின்சென்டை குருவாயூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.
Next Story






