search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hanging"

    • டேனிஷ்பேட்டை ராஜமன்னார் காலனியை சேர்ந்தவர் லோகநாதன் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் தனியார் நிறுவன காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் புதுடெல்லியை சேர்ந்த சுதா என்பவருக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.
    • நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லோகநாதன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை ராஜமன்னார் காலனியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 36). இவர் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் தனியார் நிறுவன காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் புதுடெல்லியை சேர்ந்த சுதா என்பவருக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.

    இவர்களுக்கு சுதர்சன் (13), தியா (9) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். சுதர்சன் மற்றும் தியா ஆகிய 2 பேரும், புதுடெல்லியில் உள்ள சுதாவின் பெற்றோருடன் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லோகநாதன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்த அவருடைய மனைவி மற்றும் பெற்றோர் லோகநாதன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து நேற்று தீவட்டிப்பட்டி போலீசில் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், லோகநாதன் உடலை கைப்பற்றி போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மியம்பட்டி ஆண்டிக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன் மத்திய ரிசர்வ் படையில் போலீஸ்காரராக மணிப்பூரில் பணியாற்றி வந்தார்.
    • கடந்த மாதம் 6-ந் தேதி 40 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மியம்பட்டி ஆண்டிக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன் (வயது 32). இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், மிலன் (7), நிதன் (5) என்ற மகன்களும் உள்ளனர். அலெக்ஸ் பாண்டியன் மத்திய ரிசர்வ் படையில் போலீஸ்காரராக மணிப்பூரில் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 6-ந் தேதி 40 நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். இன்றுடன்(வெள்ளிக்கிழமை) விடுமுறை முடிய உள்ள நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அலெக்ஸ் பாண்டியன் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கையில் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளது ெதரியவந்தது. இருப்பினும் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் விசாரித்து வருகிறார்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நல்லூர் கவுண்டம்பாளையம் அருகே பொம்மக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சேலையால் தூக்குப் போட்டுக் கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார்.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு, பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நல்லூர் கவுண்டம்பாளையம் அருகே பொம்மக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 38). இவரது மனைவி ராஜேஸ்வரி (34). இவர்கள் புட்டு வியாபாரம் செய்து வந்தனர். இவர்களுக்கு தருணிதரன் (16) என்ற மகனும், ரூபவர்ஷினி என்ற மகளும் உள்ளனர்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன் சதீஷ் சாலை விபத்தில் சிக்கினார். இதனால் கடந்த சில தினங்களாக அவருக்கு கடுமையான தலைவலி இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இரவு, சதீஷ் வீட்டுக்கு வெளியே கட்டி லில் படுத்து தூங்கினார். ராஜேஸ்வரியும், குழந்தை களும் வீட்டுக்குள் படுத்துக்கொண்டனர். அதிகாலை ராஜேஸ்வரி எழுந்து பார்த்தபோது, சதீஷ் சேலையால் தூக்குப் போட்டுக் கொண்ட நிலை யில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த ராஜேஸ்வரி கதறி துடித்தார். பின்னர் இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு, பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, சதீஷ் தற்கொலை செய்து கொண்ட தற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் லைன்மேடு மெகபூப் நகர் பகுதியில் டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கடனை கட்ட முடியததால் மனமுடைந்த காதர்கான் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சேலம்:

    சேலம் லைன்மேடு மெகபூப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பஷீர்கான். இவரது மகன் காதர்கான் (வயது 23). இவர் லைன்மேடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்து டீக்கடை மாடியில் இருக்கும் அறையில் தங்குவது வழக்கம்.

    நேற்று வழக்கம் போல் வேலை முடிந்து அறைக்கு சென்று தங்கி உள்ளார். இன்று காலை வெகு நேரம் ஆகியும் கடைக்கு வராததால் சந்தேகம் அடைந்த கடையின் உரிமையாளர் அறைக்கு சென்று பார்த்த போது அங்கு காதர்கான் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது பற்றி அவர், உடனடியாக அன்ன தானப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் காதர்கானுக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள், பணத்தை அடிக்கடி கேட்டு, தொல்லை கொடுத்தனர். கடனை கட்ட முடியததால் மனமுடைந்த காதர்கான் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • பரமத்தி வேலூர் தாலுகா கரிச்சிபாளையம் அருகே நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, மகேஸ்வரி சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கரிச்சிபாளையம் அருகே வைராபாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 58). கூலித் தொழிலாளி. இவரது மகள் மகேஸ்வரி(34). மாற்றுத்திறனாளி.

    இவருக்கும் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சௌந்தர்ராஜ் (36) என்பவருக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. சௌந்தர்ராஜ் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆபீஸ் அசிஸ்டெண்டாக வேலை பார்த்து வருகிறார். 4 மாத கர்பிணியாக இருந்த மகேஸ்வரி, கடந்த 8-ந் தேதி பெற்றோர் வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார்.

    அப்போது, தான் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் குழந்தை நல்லபடியாக பிறக்குமா? என்ற பயத்தில் இருந்த அவர், தான் பலவீனமாக இருப்பதால் பிரசவ வலியை தன்னால் தாங்க முடியுமா என்றும் தனது அம்மாவிடம் அடிக்கடி கூறி அழுது வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, மகேஸ்வரி சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது தாய் சாவித்திரி கதறி துடித்தார். பின்னர் இதுகுறித்து நல்லூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    இந்நிலையில் மகேஸ்வரிக்கு திருமணம் ஆகி 5 மாதங்களே ஆவதால், தற்கொலை தொடர்பாக திருச்செங்கோடு சப் கலெக்டர் கவுசல்யா விசா ரணை நடத்தி வருகிறார்.

    • சேலம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி ஊராட்சி சீனிவாசா நகர் பகுதியில் நள்ளிரவில் மின்விசிறியில் தூக்கிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • உடல் கூறு ஆய்வுக்காக சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கருப்பூர்:

    சேலம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி ஊராட்சி சீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவர் எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா( வயது 34). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் நள்ளிரவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் சம்பவ இடத்தில் விருந்து சென்று உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன கீர்த்தனாவிற்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    • குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் பகுதியில் மது குடிப்பதற்கு பணம் ெகாடுக்காததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்,
    • கொக்கியில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் கோபி ( வயது 29). இவர் கடந்த ஏப்ரல் மாதம் குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு சாலையில் நடந்த கொலை வழக்கில் கைதாகி வெளியே வந்துள்ளார்.

    பெயிண்டராக பணியாற்றிய இவர் வேலைக்கு செல்லாமல், மது குடிப்பதற்கு வீட்டில் மனைவி மாலினியிடம் பணம் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். மிகவும் கஷ்டப்பட்டு 2 வயது குழந்தையை காப்பாற்றி வரும் அவர், பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

    இதனால் கோபி தனது அக்காள் மேகலா, அம்மா சந்திராவிடம் பணம் கேட்டுள்ளார். அவர்களும் பணம் இல்லை என கூறி யுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த கோபி கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிற்பகலில் வீட்டின் படுக்கை அறைக்குள் சென்று கதவை தாழிட்டுகொண்டார். வீட்டில் இருந்தவர்கள் வழக்கம்போல் அவர் பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று எண்ணி, வெளியில் சென்றனர். ஆனால் கோபி படுக்கை அறையில் உள்ள

    கொக்கியில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த குடும்பத்தினர், வீட்டின் அறை கதவு வெகுநேரம் ஆகியும் திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்தனர். கதவை உடைத்து பார்த்தபோது அங்கு கோபி பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து காட்டிய போது, அவர் இறந்து விட்டதாக டாக்டர் கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • வீட்டில் தனியாக இருந்த முகமது ராஜா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்தவர் மஸ்தான். இவரது மகன் முகமது ராஜா (18). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் விபத்து ஏற்பட்டு தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    விபத்து ஏற்பட்டதில் இருந்து அவருக்கு அடிக்கடி தலைவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த முகமது ராஜா திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முகமது ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ–மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தண்டபாணி வீட்டில் சமையல் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குபோட்டு கொண்டார்.
    • இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, நசியனூர் ரோடு, காந்திஜி நகர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (77). ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை ஊழியர். வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வயிற்றில் அதிக வலி ஏற்பட்டதால் மனம் உடைந்த தண்டபாணி வீட்டில் சமையல் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குபோட்டு கொண்டார்.

    அதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே தண்டபாணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி பிரிந்து சென்ற வேதனையில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • அடிக்கடி மது குடித்து விட்டு தனது பெற்றோரிடம் மனைவி பிரிந்து சென்றதை கூறி வருத்தப்பட்டு வந்தார்.

    புதுச்சேரி:

    மனைவி பிரிந்து சென்ற வேதனையில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர் அருகே மேல் திருக்காஞ்சி ஆனந்தா நகரை சேர்ந்தவர் அந்தோணி சாமி. இவரது இளைய மகன் பெலிக்ஸ் (வயது 33) இவருக்கும் சென்னையை சேர்ந்த ஜெனிபர் என்ற பெண்ணுக்கும் கடந்த 2018 -ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரண மாக ஜெனிபர் கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் பெலிக்ஸ் மன வேதனைக்கு உள்ளானார்.இதனால் அவர் மது பழக்கத்துக்கு ஆளானார்.

    அடிக்கடி மது குடித்து விட்டு தனது பெற்றோரிடம் மனைவி பிரிந்து சென்றதை கூறி வருத்தப்பட்டு வந்தார்.

    அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி வந்தார்.

    இந்த நிலையில் மனமுடைந்த பெலிக்ஸ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    வீட்டின் அருகே காலி மனையில் உள்ள வேப்ப மரத்தில் அவர் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவரது தந்தை அந்தோணி சாமி கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வில்லியனூரில் சி.பி.சி.ஐ.டி. ஏட்டு திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கடந்த 19 ஆண்டு காவல்துறையில் பல்வேறு இடங்களில் பணியாற்றிய சக்திவேலுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் சி.பி.சி.ஐ.டி. ஏட்டு திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுவை காவல்துறை சி.பி.சி.ஐ.டி. பிரிவில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் சக்திவேல் (வயது 52). இவர் வில்லியனூர் ஜி.என் பாளையத்தில் குடும்பத்தோடு வசித்து வந்தார்.

    இவருக்கு வள்ளி என்ற மனைவி, வெங்கடேசன் என்ற மகன், பிரதீபா என்ற மகள் உள்ளனர். பிரதீபா மற்றும் வெங்கடேசன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 19 ஆண்டு காவல்துறையில் பல்வேறு இடங்களில் பணியாற்றிய சக்திவேலுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. சிறுநீரகத்தில் கல் இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடி க்கப்பட்டது.

    இந்நிலையில், நோய் குணமடைய தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 நாட்களாக விடுமுறையில் வீட்டிலிருந்த சக்திவேல் வீட்டுக்குள் மாடிக்குச் செல்லும் படிக்கட்டு இரும்பு தூணில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்ததும் வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலையன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சக்திவேல் வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    சக்திவேல் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    சி.பி.சி.ஐ.டி. ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வேறு ஒருவருடன் திருமணமானதால் ரஞ்சித் குமார் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
    • அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே ரெட்டி ச்சாவடி போலீஸ் சரகம் சின்ன காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் ரஞ்சித்குமார் (வயது 30), டிரைவர். இவர் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணமானதால் ரஞ்சித் குமார் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். சம்பவத்தன்று வீட்டி லிருந்து வெளியே சென்ற ரஞ்சித் குமார் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ரெட்டிச்சாவடி எஸ்.ஆர்.வி. நகரில் உள்ள மரத்தில் ரஞ்சித் குமார் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் விரைந்து வந்து ரஞ்சித்குமார் உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரஞ்சித் குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×