search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்
    X

    கடலூர் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்

    • வேறு ஒருவருடன் திருமணமானதால் ரஞ்சித் குமார் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
    • அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே ரெட்டி ச்சாவடி போலீஸ் சரகம் சின்ன காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் ரஞ்சித்குமார் (வயது 30), டிரைவர். இவர் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணமானதால் ரஞ்சித் குமார் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். சம்பவத்தன்று வீட்டி லிருந்து வெளியே சென்ற ரஞ்சித் குமார் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ரெட்டிச்சாவடி எஸ்.ஆர்.வி. நகரில் உள்ள மரத்தில் ரஞ்சித் குமார் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் விரைந்து வந்து ரஞ்சித்குமார் உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரஞ்சித் குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×