என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மது குடிப்பதற்கு பணம் ெகாடுக்காததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
- குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் பகுதியில் மது குடிப்பதற்கு பணம் ெகாடுக்காததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்,
- கொக்கியில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் கோபி ( வயது 29). இவர் கடந்த ஏப்ரல் மாதம் குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு சாலையில் நடந்த கொலை வழக்கில் கைதாகி வெளியே வந்துள்ளார்.
பெயிண்டராக பணியாற்றிய இவர் வேலைக்கு செல்லாமல், மது குடிப்பதற்கு வீட்டில் மனைவி மாலினியிடம் பணம் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். மிகவும் கஷ்டப்பட்டு 2 வயது குழந்தையை காப்பாற்றி வரும் அவர், பணம் இல்லை என்று கூறியுள்ளார்.
இதனால் கோபி தனது அக்காள் மேகலா, அம்மா சந்திராவிடம் பணம் கேட்டுள்ளார். அவர்களும் பணம் இல்லை என கூறி யுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த கோபி கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிற்பகலில் வீட்டின் படுக்கை அறைக்குள் சென்று கதவை தாழிட்டுகொண்டார். வீட்டில் இருந்தவர்கள் வழக்கம்போல் அவர் பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று எண்ணி, வெளியில் சென்றனர். ஆனால் கோபி படுக்கை அறையில் உள்ள
கொக்கியில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த குடும்பத்தினர், வீட்டின் அறை கதவு வெகுநேரம் ஆகியும் திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்தனர். கதவை உடைத்து பார்த்தபோது அங்கு கோபி பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து காட்டிய போது, அவர் இறந்து விட்டதாக டாக்டர் கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்