search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்கில் பிணம்"

    • வேறு ஒருவருடன் திருமணமானதால் ரஞ்சித் குமார் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
    • அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே ரெட்டி ச்சாவடி போலீஸ் சரகம் சின்ன காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் ரஞ்சித்குமார் (வயது 30), டிரைவர். இவர் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணமானதால் ரஞ்சித் குமார் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். சம்பவத்தன்று வீட்டி லிருந்து வெளியே சென்ற ரஞ்சித் குமார் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ரெட்டிச்சாவடி எஸ்.ஆர்.வி. நகரில் உள்ள மரத்தில் ரஞ்சித் குமார் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் விரைந்து வந்து ரஞ்சித்குமார் உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரஞ்சித் குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூங்கில்துறைப்பட்டு அருகே மல்லாபுரத்தில் உள்ள ஒரு வேப்பமரத்தில் ராஜா பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
    • கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பாவளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 42) கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மனைவி பூங்கொடியிடம் வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நி லையில் மூங்கில்துறைப்பட்டு அருகே மல்லாபுரத்தில் உள்ள ஒரு வேப்பமரத்தில் ராஜா பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பசலைராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலம் நீதிமன்றம் அருகே தூக்கில் பிணமாக வாலிபர் தொங்கினார்.

    கடலூர்:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த செல்வராஜ்.அவரது மகன் அருள் செல்வன் (வயது20), இவர் பிளஸ்-2 வரை படித்துள்ளார்.

    கடந்த 11ஆம் தேதியன்று வீட்டில் இருந்து காணாமல் போன இவர் விருத்தாசலம் நீதிமன்றம் அருகே உள்ள இடத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவலறிந்து அங்கு வந்த விருத்தாசலம் போலீசார் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விருத்தாசலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • விருத்தாசலம் அருகே வாலிபர் பிணம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது.
    • வேல்முருகனை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே புதுக்கூரப்பேட்டையை சேர்ந்தவர் வேல்முருகன் (31). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இவர் கோவையில் தங்கி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வப்போது தமது ஊருக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று ஊருக்கு வந்திருந்த வேல்முருக னுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இன்று காலை இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்ற வேல்முருகன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் வேல்முருகனை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்பொழுது அவரது வீட்டின் அருகே இருந்த மரத்தில் வேல்முருகன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே கீற்று கொட்டகையில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
    • அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே ரெட்டிசாவடி பெரிய காட்டு பாளையம் பகுதியில் கீற்றுக் கொட்டகை உள்ளது. இதில் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கு மாட்டி இறந்த நிலையில் இறந்து கிடந்தார். அப்போது அவழியாக சென்ற பொதுமக்கள் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த நிலையில் இருந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நபர் யார்? எதற்காக இங்கு தூக்கு மாட்டி இறந்தார்? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×