search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guru Peyarchi"

    • சிறுகனூர் அருகே உள்ளது திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்.
    • தலையெழுத்தையே மாற்றி அமைக்கும் வல்லமை படைத்த தலமாக விளங்குகிறது.

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே உள்ளது திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில். தலையெழுத்தையே மாற்றி அமைக்கும் வல்லமை படைத்த தலமாக விளங்கும் இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    இதையொட்டி பிரம்மா மற்றும் தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்களுக்கு சிறப்பு யாகம் நாளை மாலை 5.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் கடம் புறப்பாடும், மகா அபிஷேகமும் நடைபெறுகிறது.

    இரவு 11.27 மணிக்கு குருப்பெயர்ச்சி மகா தீபாராதனை நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தின் சார்பில் செய்து வருகின்றனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • குருப்பெயர்ச்சி நாளை மீன ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

    சோழவந்தான் அருகே குருவித்துறையில் சித்திரரதவல்லப பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் குருபகவான் சுயம்புவாக இந்த கோவிலில் வீற்றிருக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார்.

    இங்கு ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி நாளை(சனிக்கிழமை) இரவு 11.24 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு இடம் பெயருவதால் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு குருப்பெயர்ச்சியையொட்டி நேற்று காலை 10.45 மணிக்கு மேல் ஸ்ரீதர்பட்டர், ரெங்கநாதபட்டர், சடகோபபட்டர், ஸ்ரீபாலாஜிபட்டர், ராஜாபட்டர், கோபால்பட்டர் உள்பட 12 பேர் லட்சார்ச்சனை நடத்தினர். லட்சார்ச்சனையுடன் குருப்பெயர்ச்சி விழா தொடங்கியது.

    நேற்று வியாழக்கிழமை என்பதால் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசித்தனர். விழாவையொட்டி சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி லட்சார்ச்சனை நடைபெறும். அதன்பிறகு இரவு 9 மணிக்கு பரிகார மகாயாகம் நடைபெறுகிறது. இரவு 11.24 மணி அளவில் மீனம் ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு குரு ப்பெயர்ச்சி ஆவதால் குரு பகவானுக்கு 21 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் பரிகார யாகத்தில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் மகா அபிஷேகம் நடைபெறும்.

    இதையொட்டி காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய் துறை, தீயணைப்புத் துறை, அரசு போக்குவரத்துதுறை மற்றும் அறநிலையத்துறை குருப்பெயர்ச்சிவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • குரு பகவான் தன் பார்வை பலத்தால் மக்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்குவார்.
    • நாளை இரவு 11.24 மணிக்கு மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார்.

    சுபஸ்ரீ சோபகிருது வருடம் சித்திரை மாதம் 9-ந் தேதி (22.4.2023) சனிக்கிழமையன்று இரவு 11.24 மணிக்கு அசுவதி நட்சத்திரம் முதல் பாதத்தில் மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். குருவின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ஆகிய ராசிகளில் பதிகின்றது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கு ஏற்ப, குரு பகவான் தன் பார்வை பலத்தால் மக்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்குவார்.

    குரு பகவான் 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்த்துப் புனிதப்படுத்துவார். அந்த இடங்களின் மூலம் நமக்கு அதிகப்பலன்கள் கிடைக்கும். மேஷத்திற்கு குருப்பெயர்ச்சியாகும் நேரத்தில் சூரியன் உச்சம் பெற்று புதனுடன் இணைந்து புத-ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகின்றார். சுக்ரன் மற்றும் சனி தங்களது சொந்த வீடுகளில் பலம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார்கள். இந்த குருப்பெயர்ச்சி நாட்டிற்கும், வீட்டிற்கும் நன்மை அளிக்கும் பெயர்ச்சியாகவே அமையும்.

    குருவின் பார்வையைப் பெறும் மூன்று ராசிகள்: சிம்மம், துலாம், தனுசு.

    குரு தன ஸ்தானத்தைப் பார்க்கும் ராசிகள்: கடகம், கன்னி, விருச்சிகம். மேற்கண்ட ராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும். தொல்லைகள் அகலும். பணவரவு திருப்தி தரும். பதவி வாய்ப்பு கைகூடும். செல்வாக்கு உயரும்.

    மேஷத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் இடையில் வக்ரமும் பெறுகின்றார். வக்ர காலத்தில் சிலருக்கு நன்மை ஏற்படும். சிலருக்கு வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். இதற்கிடையில் ராகு-கேதுக்களின் பெயர்ச்சியும் 8.10.2023-ல் ஏற்படுகின்றது.

    ஜென்ம குருவாக மேஷத்திற்கும், அஷ்டமத்து குருவாக கன்னிக்கும், அர்த்தாஷ்டம குருவாக மகரத்திற்கும், விரய குருவாக ரிஷபத்திற்கும் இந்த குருப்பெயர்ச்சி அமைவதால் மேற்கண்ட ராசியில் பிறந்தவர்கள் தங்கள் சுய ஜாதக அடிப்படையில் நடைபெறும் திசாபுத்தி பலம்பார்த்து, அதற்குரிய அனுகூலம் தரும் ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் திருமணம், புத்திரப்பேறு, தொழில் முன்னேற்றம், வீடு கட்டும் யோகம், பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி போன்றவற்றில் உள்ள தடைகள் அகன்று தக்க விதத்தில் பலன் கிடைக்கும்.

    இப்பொழுது பெயர்ச்சியாகும் குரு பகவான் சூரியன்- ராகு சேர்க்கை பெற்ற வீட்டிற்குள் வருகின்றார். ராகுவோடு குரு இணைவதால் குருவிற்குரிய முழுமையான பலன்கள் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பின்னரே கிடைக்கும்.

    நோய் தொற்று ஆபத்து

    இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக நோய்த் தொற்றுகள் கொஞ்சம் தீவிரமாகப் பரவும் சூழல் உருவாகலாம். சனியின் பார்வையும் ராகு மீது பதிவதால் சனி மீண்டும் 24.8.2023-ல் மகரத்திற்கு வக்ரமாகி வரும் வரை மக்கள் அனைவரும் மிகமிக கவனத்தோடு இருக்க வேண்டும்.

    சூரியனோடு ராகு இணைந்திருப்பதால் உஷ்ணாதிக்க நோய், காய்ச்சல் போன்றவை வேகமாகப் பரவக்கூடிய சூழ்நிலை உண்டு. முகக்கவசம் அணிவது மட்டுமல்லாமல் சுகாதாரத்துறை சொல்லும் வழிமுறைகளையும் கடைப்பிடிப்பதோடு, ஜூரஹரேஸ்வரர் வழிபாட்டையும் மேற்கொள்ளலாம்.

    விலை உயரும்

    குருப்பெயர்ச்சியின் விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு உண்டு. உணவுப் பொருள், காய்கறிகள், வெள்ளை நிறப் பொருட்களின் விலைகளும் உயரலாம். தங்கம், வெள்ளியின் விலை எப்பொழுதும் போல ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும். இரும்பு, மருந்து, மரம், கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் லாபம் குவிப்பர். எழுத்துத் துறை, பத்திரிக்கைத் துறை, கலைத்துறை சம்பந்தப்பட்டவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயரக்கூடிய வாய்ப்பே உண்டு.

    குருவின் வக்ர காலம் மற்றும் செவ்வாய்-சனி பார்வைக் காலங்களில் இயற்கை சீற்றங்கள், நில நடுக்கங்கள், மழை வெள்ளம், நெருப்புப் பாதிப்பு போன்றவைகளில் இருந்து நாம் விடுபட கூட்டுப் பிரார்த்தனைகளை மேற்கொள்வது நல்லது. அல்லது அவரவர் எல்லை தெய்வங்களை முறையாக வழிபடுவதும் பலனளிக்கும்.

    மேஷ குருவின் சஞ்சாரம்

    (22.4.2023 முதல் 1.5.2024 வரை)

    22.4.2023 முதல் 22.6.2023 வரை அசுவதி நட்சத்திரக்காலில் குரு பகவான் (கேது சாரம்)

    23.6.2023 முதல் 11.9.2023 வரை பரணி நட்சத்திரக்காலில் குரு பகவான் (சுக்ர சாரம்)

    12.9.2023 முதல் 21.11.2023 வரை பரணி நட்சத்திரக்காலில் வக்ர இயக்கத்தில் குரு பகவான் ( சுக்ர சாரம்)

    22.11.2023 முதல் 20.12.2023 வரை அசுவதி நட்சத்திரக்காலில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் (கேது சாரம்)

    21.12.2023 முதல் 5.2.2024 வரை அசுவதி நட்சத்திரக்காலில் குரு பகவான் (கேது சாரம்)

    6.2.2023 முதல் 16.4.2024 வரை பரணி நட்சத்திரக்காலில் குரு பவான் (சுக்ர சாரம்)

    17.4.2024 முதல் 1.5.2024 வரை கார்த்திகை நட்சத்திரக்காலில் குரு பகவான் (சூரிய சாரம்)

    12.9.2023 முதல் 20.12.2023 வரை குரு பகவான் வக்ரம் பெறுகின்றார். (அசுவதி மற்றும் பரணி நட்சத்திரக்கால்களில்)

    1.5.2024-ல் ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிச் செல்கின்றார்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    குருப்பெயர்ச்சி பலன் அறிய இங்கே கிளிக்செய்யவும்... https://www.maalaimalar.com/rasipalan

    • இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி வருகிற 22-ந் தேதி இரவு நடைபெறுகிறது.
    • மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார்.

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் குரு பெயர்ச்சியை யொட்டி வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு வழிபாடு நடக்கிறது. இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி வருகிற 22-ந் தேதி இரவு நடைபெறுகிறது. மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். இதையொட்டி 23-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள குரு தட்சிணாமூர்த்திக்கு ஹோம பூஜை நடக்கிறது.

    5 மணிக்கு அபிஷேகமும், 6 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது. கோவிலில் பக்தர்கள் பரிகாரங்கள் செய்யும் வகையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலைமாலை, வெள்ளை அரளிமாலை, மஞ்சள் நிற துண்டு, முல்லை பூ மாலை மற்றும் தங்களது ராசி பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் செய்து பயன்பெறலாம். என குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதேபோல் சுசீந்திரம் தாழக்குளம் பிள்ளையார் கோவில், களியல் மகாதேவர் கோவில், நாகர்கோவில் வடசேரி சோழராஜா கோவில், காசி விஸ்வநாதர் கோவில், பூதப்பாண்டி பூதலிங்க சாமி கோவில், தெரிசனங்கோப்பு ராகவேசுவரா கோவில், கன்னியாகுமரி குகநாதீஸ்வரர்கோவில், தாழக்குடி ஜெகதீஸ்வரர் கோவில், திருப்பதிசாரம் சடையப்பர் கோவில், அழகிய பாண்டியபுரம் மகாதேவர் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், களியங்காடு சிவன் கோவில், ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் குமரி மாவட்டத்தில் குரு பகவான் சன்னதி உள்ள கோவில்களில் குரு பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • குரு தட்சிணாமூர்த்திக்கு அஷ்டோத்ர சத சங்காபிஷேகம் நடக்கிறது.
    • அபிஷேக சேவையில் பக்தர்கள் பங்கேற்று வழிபடலாம் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் காலத்தில் குரு தட்சிணாமூர்த்தியை பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

    இந்த வருடம் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறுவதையொட்டி வருகிற 23-ந்தேதி உலக நன்மைக்காக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள குரு தட்சிணாமூர்த்திக்கு அஷ்டோத்ர சத சங்காபிஷேகம் நடக்கிறது.

    இந்த அபிஷேக சேவையில் பக்தர்கள் பங்கேற்று வழிபடலாம் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 22-ந் தேதி முதல் மூன்று நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும்.
    • கோவிலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரதவல்லப பெருமாள் கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு சித்திர ரத வல்லப பெருமாளை நோக்கி குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக இருக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார். ஒவ்வொரு குருப்பெயர்ச்சி அன்றும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது முன்னிட்டு குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக 3 நாட்கள் நடைபெறும்.

    இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து குரு பகவானைத் தரிசித்து செல்வார்கள்.

    இந்த நிலையில் வருகிற 20-ந் தேதி வியாழக்கிழமை காலை 10.45 அளவில் லட்சார்ச்சனை தொடங்குகிறது. 22-ந் தேதி சனிக்கிழமை மதியம் 12 மணி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும். இரவு 9 மணி அளவில் யாகசாலை தொடங்கி 11.24 மணிக்குள் பரிகார மகா யாகம், மகாபூர்ணாகுதி, திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    குருப்பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு பரிகாரம் செய்யவேண்டும். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் பாலமுருகன், தக்கார் இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன், சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம், தீயணைப்பு நிலைய அலுவலர் ரூபன் ஆகியோர் குருப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • காலகாலேஸ்வரர் கோவில் குரு பகவான் ஆசியாவிலேயே மிக உயரமானது.
    • இந்த கோவில் கொங்கு மண்டல குரு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.

    கோவை கோவில்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சுமார் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த காலகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள குரு பகவான் ஆசியாவிலேயே மிக உயரமானது. இந்த கோவில் கொங்கு மண்டல குரு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவிலில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை பூஜைகளுடன் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் வருகிற 22-ந்தேதி குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனையுடன் நடைபெறுகிறது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் அருண் பிரசாத் பிரகாஷ் கூறியதாவது:-

    குரு பகவான் வருகிற 22-ந் தேதி இரவு 11.26 மணிக்கு மேல் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கிறார். குரு பெயர்ச்சியையொட்டி இரவு 9 மணிக்கு சிறப்பு யாக பூஜை தொடங்கப்பட்டு பூஜைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு குருபகவானுக்கு சிறப்பு கலச அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையுடன் இரவு 11.26 மணிக்கு குரு மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையுடன் குரு பெயர்ச்சி விழா தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 24-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது.

    அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. குரு பெயர்ச்சியையொட்டி மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்யலாம். விழாவில் ரூ.400 செலுத்தி பக்தர்கள் பங்கு பெறலாம்.விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குருபகவான் உருவம் பொறித்த வெள்ளி நாணயம் மற்றும் லட்சார்ச்சனை பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செயல் அலுவலர் அருண் பிரகாஷ், தக்கார் வெற்றிச்செல்வன் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் மொத்தம் 22 லட்சத்து 80 ஆயிரத்து 493 பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
    தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தாமிரபரணி ஆற்றின் தீர்த்தக்கட்டங்கள், படித்துறைகளில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். இது தொடர்பாக போலீசார் எடுத்த கணக்கெடுப்பு விவரம் வருமாறு:-

    நெல்லை புறநகர் மாவட்டத்தில் உள்ள 25 தீர்த்தக்கட்டம் மற்றும் படித்துறைகளில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 693 ஆண்களும், 6 லட்சத்து 9 ஆயிரத்து 800 பெண்களும் என 10 லட்சத்து 95 ஆயிரத்து 493 பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். இதேபோல் நெல்லை மாநகரில் உள்ள 4 படித்துறைகளில் மட்டும் 2¼ லட்சம் பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 27 படித்துறைகளில் மொத்தம் 9 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.

    நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் மொத்தம் 22 லட்சத்து 80 ஆயிரத்து 493 பக்தர்கள் புனித நீராடி உள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

    நெல்லையில் நடைபெற்ற மகா புஷ்கர நிறைவு விழாவில் தாமிரபரணி அன்னைக்கு தீப ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் சிறப்பு வாய்ந்த தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி நெல்லை கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் மகா புஷ்கர நிறைவு விழா நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் 7 சிவாச்சாரியார்கள் நின்று வேத மந்திரங்கள் முழங்க தாமிரபரணி ஆற்றுக்கு தீப ஆரத்தி காண்பித்தனர். பின்னர் தாமிரபரணி ஆற்றில் மலர்களை தூவி விழா நிறைவு செய்யப்பட்டது. அப்போது தாமிரபரணி அன்னையை போற்றி எழுதப்பட்ட பாடல், இசையுடன் பாடப்பட்டது. மேலும் பக்தர்கள் மீது தாமிரபரணி புனிதநீரும் தெளிக்கப்பட்டது. 
    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி புஷ்கர விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது. நேற்று தீப ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினார்கள்.
    144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்கள், 149 படித்துறைகளிலும் இந்த விழா நடந்து வருகிறது.

    தினமும் காலையில் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடும் நிகழ்ச்சியும், மாலையில் ஆரத்தி எடுத்து வழிபடும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. இந்த புஷ்கர விழாவில் வெளி மாவட்டம் மட்டும் அல்லாமல், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் கலந்துகொண்டு புனித நீராடி வருகிறார்கள்.

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் படித்துறையில் தாமிரபரணிக்கு தீப ஆரத்தி நடந்தபோது எடுத்தபடம்.

    12-வது நாளான நேற்றும் புஷ்கர விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர். நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சியம்மன் கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில், கைலாசபுரம் தைப்பூச மண்டபம், நெல்லை மணிமூர்த்தீசுவரம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் ஜடாயு படித்துறைகளிலும், சீவலப்பேரி துர்காம்பிகை கோவில் படித்துறைகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதேபோல் பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி, திருப்புடைமருதூர், கோடகநல்லூர், அத்தாளநல்லூர் உள்ளிட்ட படித்துறைகளிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.


    சேரன்மாதேவி பக்தவச்சலபெருமாள் கோவில் வியாச தீர்த்தக்கட்டத்தில் நேற்று மாலை தாமிரபரணி அன்னைக்கு தீப ஆரத்தி நடந்தபோது எடுத்தபடம்.

    மேலும், பாபநாசத்தில் அகில பாரத துறவியர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட புஷ்கர விழா நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அதேபோல் நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் ஜடாயு படித்துறையிலும் நேற்று மாலையுடன் புஷ்கர விழா நிறைவடைந்தது.

    நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவிலில் நேற்று காலை 6 மணி முதல் 8 மணி வரை யாகசாலை பூஜை, மாலை 5.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனத்தின் புஷ்பாஞ்சலி, 6 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நெல்லை மாவட்டத்தில் 12 நாட்கள் நடைபெற்ற மகா புஷ்கர விழா இன்று மாலையுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது. 
    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் புஷ்கர விழா தொடங்கிய கடந்த 11-ந்தேதியில் இருந்து இன்று வரை சுமார் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளமாக்கும் வற்றாத ஜீவ நதியான தாமிர பரணியில் கடந்த 11-ந்தேதி முதல் மகா புஷ்கர விழா நடைபெற்று வருகிறது.

    குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணிக்கு மகா புஷ்கரம் நடத்தப்பட்டு வருகிறது.

    தாமிரபரணிக்கு நன்றி கூறும் விழாவாக இந்த விழா அமைந்துள்ளது. தாமிரபரணி யில் உள்ள 64 தீர்த்தகட்டங்கள், 149 படித்துறைகளில் இந்த விழா கோலாகலமாக நடந் தது. ஆன்மீக அமைப்புகள், பொதுமக்கள் இணைந்து நடத்திய இந்த விழாவில் தினமும் காலையில் தாமிர பரணிக்கு சிறப்பு வழிபாடு கள், வேள்விகள், யாகங்கள், கலை நிகழ்ச்சிகள், மாலையில் மகா ஆரத்தி நடைபெற்று வருகின்றன. 3 வேளை அன்ன தானமும் வழங்கப் பட்டு வருகிறது.

    புஷ்கர விழாவில் பங்கேற்று தாமிரபரணியில் புனித நீராட தினமும் ஏராளமான பக்தர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தின் பிற மாவட்டங் கள் மற்றும் புதுவை, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பிற‌ மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் தாமிரபரணியில் புனித நீராடி வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

    இதனால் தாமிரபரணி கரையோரங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது. படித்துறைகள் நிரம்பி வழிகின்றன. கடந்த 4 நாட்களாக ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை நாட்கள் என்பதால் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    விழாவில் உச்சக்கட்டமாக நேற்று தாமிரபரணியில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஒரே நாளில் 7 லட்சம் பக்தர்கள் புனித நீராடி தாமிரபரணியை வழிபட்டனர். மாலையில் நடந்த மகா ஆரத்தியையும் கண்டு தரிசித்தனர்.


    தைப்பூச மண்டபம் படித்துறையில் தண்ணீர் அதிகரித்ததால் பக்தர்கள் ஓரமாக நின்று நீராடிய காட்சி.

    புஷ்கர விழா நடைபெற்ற பகுதிகளில் நேற்று கட்டு கடங்காத கூட்டம் கூடியதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கூடுதல் போலீசார் வர வழைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். பாபநாசத்தில் இரு இடங்களில் புஷ்கர விழா நடைபெற்றதால் அங்குள்ள பாபநாசநாதர் கோவில், அகஸ்தியர் அருவிக்கு அதிகளவில் பக்தர்கள் வந்ததாலும் கடும் நெருக்கடி ஏற்பட்டது.

    ஏற்கனவே புஷ்கர விழாவிற்காக பல்வேறு இடங்களில் இருந்து வரும் வாகனங்கள் அகஸ்தியர் பட்டியிலேயே நிறுத்தப்பட்டன. அங்கிருந்து அரசு பஸ்களில் பாபநாசம் செல்ல ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. அதே போல வடக்கில் இருந்து வந்த வாகனங்கள் முதலியார்பட்டி அருகேயே நிறுத்தப்பட்டு அங்கிருந்து பஸ்களில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் மட்டுமே அந்த பாதையில் அனுமதிக்கப்பட்டன. பாபநாசம் தாமிரபரணியில் நேற்று ஒரே நாளில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். இதே போல் சிங்கை, அம்பை, சேரன் மகாதேவி, கல்லிடைக்குறிச்சி படித்துறைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    அம்பை காசிப தீர்த்தத்தில் புனித நீராடவும், தாமிரபரணியில் நீராடவும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் அங்கு போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. முக்கூடல், அத்தாளநல்லூர், திருப்புடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. நெல்லையில் எங்கு பார்த் தாலும் வெளிமாநில பக்தர் கள் கூட்டம் காணப்பட்டது.

    நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறை, தைப்பூச மண்டபம் படித்துறை, மேலநத்தம் அக்னி தீர்த்தம், மணிமூர்த்தீஸ்வரம் தீர்த்த கட்டம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், ஜடாயு துறை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் புனித நீராடினார்கள்.

    குருஸ்தலமான தூத் துக்குடி மாவட்டம் முறப்பநாடு கைலாசநாதர் கோவில் படித்துறையில் தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலையில் மகா ஆரத்தியை காணவும் அதிகளவில் பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடியதையும், அங்கு பாதுகாப்பிற்காக ஆற்றில் படகு நிறுத்தப்பட்டுள்ளதையும் படத்தில் காணலாம்.

    இதே போல ஸ்ரீவை குண்டம், தென்திருப்பேரை, ஆத்தூர் பகுதிகளிலும் பக்தர்கள் தாமிரபரணியில் புனித நீராடி வழிபட்டனர்.

    சித்தர்கள் கோட்டம் மற்றும் பொதுமக்கள் சார்பாக பாபநாசம் திரிநதி சங்கம தீர்த்தத்தில் நடை பெற்ற புஷ்கர விழாவில் இன்று காலை சிறப்பு வேள்வி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றார்கள். அகில பாரத துறவியர் சங்கம் சார்பாக பாபநாசத்தில் நடந்த புஷ்கர விழாவில் இன்று காலை லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை வழிபாடு நடந்தது. புஷ்கர விழா நிறைவு நாள் என்பதால் இன்று மதியம் இங்கு மகா ஆரத்தி நடந்தது. தொடர்ந்து சாத்தயதி பூஜை நடை பெற்றது.

    தொடர்ந்து அங்குள்ள சேனை தலைவர் சமுதாய கூடத்தில் பெண் துறவியர்கள் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது.

    நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி படித்துறையில் இன்று காலை சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து தாமிரபரணிக்கு வழிபாடு நடைபெற்றது.

    நெல்லை தைப்பூச மண்டபம் அருகே இன்று காலை வேத பாராயணம் மற்றும் மகா சண்டி ஹோமமும் நடைபெற்றது. சங்கீத சபாவில் பன்னிரு திருமுறை பாராயணம் நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றார்கள்.

    நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையாக சாலையில் இன்று காலை 5 மணிக்கு சுவாமிக்கு தீர்த்தவாரி, கோபூஜையும் மகா சண்டியாகமும் நடந்தது. காஞ்சி சங்கர மடம் சார்பாக திருப்புடை மருதூரில் நடந்த மகா புஷ்கர விழாவில் இன்று ருத்ர ஏகாதசி பூஜை நடைபெற்றது.

    முறப்பநாட்டில் இன்று காலை சிறப்பு வேள்வியும், தாமிரபரணிக்கு வழிபாடும் நடந்தது. ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த விழாவில் பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட வைகளை நீக்கும் சத்ருசம் ஹார ஹோமம் நடைபெற்றது. கடந்த 11-ந்தேதி புஷ்கர விழா தொடங்கப்பட்ட இடங்களில் இன்று மாலை மகா ஆரத்தியுடன் விழா நிறைவடைகிறது. இதனால் இந்த பகுதிகளில் பக்தர்கள் புனித நீராட அதிகளவில் திரண்டிருந்தனர்.


    நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த படித்துறையில் தாமிரபரணிக்கு தீப ஆரத்தி நடந்த போது எடுத்த படம்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் புஷ்கர விழா தொடங்கிய கடந்த 11-ந்தேதியில் இருந்து இன்று வரை சுமார் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    12-ந்தேதி புஷ்கர விழா தொடங்கிய பகுதிகளில் நாளை மாலை வரை வழிபாடுகள் நடக்கின்றன. புஷ்கர விழா நிறைவை யொட்டி இன்றும், நாளையும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது. இதனால் படித்துறைகள், தீர்த்த கட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. ஏற்கனவே மலை பகுதியில் பெய்த மழை காரணமாக தாமிரபரணியில் தண்ணீர் வரத்து அதிகரித் துள்ளதால் போலீசார் நீராடும் பக்தர்களை பாதுகாப்பாக நீராடுமாறு அறிவுறுத்தி வருகிறார்கள்.

    மேலும் 24 மணி நேரமும் ஆற்றில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு படையினர் அனைத்து பகுதிகளிலும் ரப்பர் படகு மற்றும் பாதுகாப்பு சாதனங்களுடன் ஆற்றில் நிறுத்தப்பட்டுள்ளார்கள். ஆற்றில் பக்தர்கள் நீராடும் பகுதியில் தண்ணீர் வரத்தை பொறுத்து பக்தர்களை போலீசார் நீண்ட வரிசையில் செல்ல அனுமதித்துள்ளனர்.

    கீழாம்பூர் மற்றும் ஆழ்வார்குறிச்சி வட்டார கடனா நதி பக்த ஜன சங்கம் மற்றும் கிராம மக்கள் இணைந்து புஷ்கர விழாவை முன்னிட்டு கடனா நதியில் வழிபாடு நடத்தினர்.

    இதையொட்டி வேதவிற் பன்னர்கள் தேவி பாராயணம், கும்ப ஜெபம், விசே‌ஷ ஜெபம் மற்றும் நாம சங்கீர்த்தனம், தேவார பண்ணிசை பாடினார்கள். பின்னர் வைதீகர்கள் கடனாநதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கடனாநதிக்கு தீப ஆராதனை, உபசாரங்களுடன் மகா தீப ஆரத்தி நடத்தினர்.

    நிகழ்ச்சியில் ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, சிவசைலம், பாப்பான்குளம், கல்யாணிபுரம், கடையம் உள்ளிட்ட பல்வேறு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் வாணவேடிக்கை நடந்தது.
    காசியே நெல்லை, தூத்துக்குடிக்கு வந்தது போன்று எங்கு பார்த்தாலும் ஆற்றின் கரைகளில் வடமாநில பக்தர்களை காண முடிகிறது. பக்தர்கள் நவ திருப்பதி, நவ கைலாய கோவில்களில் அதிகளவில் குவிந்துள்ளனர்.
    குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு குரு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆனதை தொடர்ந்து அந்த ராசிக்குரிய நதியான தாமிரபரணியில் புஷ்கர விழா நடத்தப்படுகிறது.

    இந்த விழா கடந்த 11-ந்தேதி தொடங்கியது. தாமிரபரணியில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்கள், 149 படித்துறைகளில் பக்தர்கள் புனித நீராடி வருகிறா ர்கள். பல்வேறு ஆன்மீக அமைப்புகள் புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணிக்கு சிறப்பு வழிபாடுகள், யாகங்கள், வேள்விகள் மற்றும் ஆன்மீக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றன.

    விழாவையொட்டி தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குவிந்துள்ளனர். இரு மாவட்டங்களிலும் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன.

    தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பாபநாசம் தொடங்கி புன்னக்காயல் வரை தாமிரபரணியின் அனைத்து படித்துறைகளிலும் விழாக் கோலமாக காட்சியளிக்கின்றன. புஷ்கர விழா நிறைவடைய இன்னும் 2 நாட்களே உள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்தவண்ணம் உள்ளனர். ஆற்றில் புனித நீராடும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    பாபநாசம் சித்தர்கள் கோட்டம் சார்பாக அங்குள்ள திரிநதி சங்கம தீர்த்தத்தில் புஷ்கர விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி இன்று காலை சிறப்பு வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து தாமிரபரணிக்கு வழிபாடு மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


    முறப்பநாட்டில் தாமிரபரணிக்கு தீப ஆரத்தி நடைபெற்ற காட்சி.

    அகில பாரத துறவியர் சங்கம் சார்பாக பாபநாசத்தில் இன்று நடைபெற்ற விழாவில் காலை சிறப்பு வேள்வி நடந்தது. தொடர்ந்து அங்குள்ள சேனைத்தலைவர் சமுதாய கூடத்தில் கிராம கோவில் பூஜாரிகள் மாநாடு நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    காஞ்சி சங்கரமடம் சார்பாக திருப்புடைமருதூரில் நடைபெற்ற புஷ்கர விழாவில் இன்று காலை தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    முக்கூடல் அருகே அத்தாளநல்லூர் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கஜேந்திர வரத பெருமாள் கோவிலில் இன்று காலை புஷ்கர பூஜை நடந்தது. தொடர்ந்து பெண்கள் நாராயணியம் பாடினர். இதையடுத்து பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

    இதேபோல கல் லிடைக்குறிச்சி, அம்பை, சேரன்மகாதேவி தீர்த்தக்கட்டங்களிலும் தாமிரபரணியில் சிறப்பு வழிபாடு நடந்தது. நெல்லை குறுக்குத்துறை படித்துறையில் நடந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றார்கள்.

    நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டப படித்துறையில் புஷ்கர விழாவை முன்னிட்டு இன்று காலை புரு‌ஷ ஸுக்த ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து திருப்புகழ் இசைவழிபாடு நடந்தது. கைலாசநாதர் கோவிலில் வேதபாராயணம், சங்கீதசபாவில் பண்ணிரு திருமுறை பாராயணம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து முருக பக்தர்கள் மாநாடு நடந்தது.

    அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் உள்ள யாகசாலையில் இன்று காலை சிறப்பு வேள்வி நடந்தது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

    முக்கூடல் அத்தாளநல்லூரில் தாமிரபரணிக்கு பெண்கள் பொங்கலிட்டு வழிபட்ட காட்சி.

    புஷ்கர விழாவையொட்டி படித்துறைகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த இடவசதிகள் செய்யப் பட்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மற்றும் சாதனங்களுடன் ஆற்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தாமிரபரணி நதிக்கு தினசரி மாலையில் காசியில் கங்கைக்கு நடப்பது போன்று மகா ஆரத்தி நடந்து வருகிறது. இதனால் ஆரத்தியை காண பக்தர்கள் அதிகளவில் திரண்டு வருகிறார்கள். காசியே நெல்லை, தூத்துக்குடிக்கு வந்தது போன்று எங்கு பார்த்தாலும் ஆற்றின் கரைகளில் வடமாநில பக்தர்களை காண முடிகிறது. பக்தர்கள் நவ திருப்பதி, நவ கைலாய கோவில்களில் அதிகளவில் குவிந்துள்ளனர்.

    நவக்கிரகங்களில் அதிபதிகளுக்கு உரிய கோவில்களான சூரிய அம்சம் உள்ள பாபநாசம் சிவன் கோவில், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில், சந்திரன் வழிபட்ட சேரன்மகாதேவி கைலாசநாதர் கோவில், நத்தம் விஹயாசன பெருமாள் கோவில், செவ்வாய் வழிபட்ட தலமான கோடகநல்லூர் சிவன் கோவில், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதேபோல் புதனுக்குரிய தென்திருபேரை கைலாசநாதர் கோவில், திருப்புளியங்குடி பெருமாள் கோவில், குரு பகவானுக்குரிய முறப்பநாடு கைலாசநாதர் கோவில், ஆழ்வார்திருநகரி பெருமாள் கோவில், சனி கிரகத்துக்குரிய பெருங்குளம் பெருமாள் கோவில், ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில், சுக்கிரனுக்குரிய சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோவில், தென்திருபேரை பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.

    மேலும் ராகு கேது தலங்களான இரட்டை திருப்பதி பெருமாள் கோவில், ராஜபதி கைலாசநாதர் கோவில்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் இந்த கோவில்களை தேடி கார், வேன்களில் சென்று சாமி ஹ்ரிசனம் செய்தார்கள். இது தவிர நெல்லையப்பர் கோவில், யரை தெட்சணாமூர்த்தி கோவில், தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில், குற்றாலம் குற்றாலநாதர் கோவில், இலத்தூர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
    ×