search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pushkaram"

    காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழாவின் கடைசி நாளான நேற்று அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாய்க்கு பவுர்ணமி ஆரத்தி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
    காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறை விழா ஸ்ரீரங்கத்தில் கடந்த 21-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதையொட்டி அம்மா மண்டபம் சாலையில் உள்ள மாமுண்டி கோனார் திடலில் யாகசாலை அமைக்கப்பட்டு அங்கு கோபுரப்பட்டி பெருமாள் கோவில் உற்சவர்கள் ஆதிநாயக பெருமாள் மற்றும் ஆதிநாயகித் தாயாரை எழுந்தருள செய்தனர்.

    அங்கு தினமும் பல்வேறு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று வந்தன. முதல் நாள் காரியசித்தி, தடங்கல்கள் நீங்க ஹோமம், தொழில், விவசாயம் சிறக்க, தனவிருத்திக்கான ஸ்ரீயாகம், 2-ம் நாள் விவாஹ பிராப்தி, கல்வி, செல்வம் பெருக ஸ்ரீலட்சுமி நாராயண யாகம், 3-வது நாளான நேற்று முன்தினம்் தைரியம், வழக்குகளில் வெற்றி பெறவும் வீரலட்சுமி யாகம், நன்மக்களை பெற சந்தான யாகமும் நடைபெற்றது.

    காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழாவின் கடைசி நாளான நேற்று காலை 6 மணிக்கு திருமண தடை நீங்க, தம்பதிகள் ஒற்றுமையுடன் இருக்க, நினைத்த காரியங்களில் வெற்றிபெற, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் பெற ஸ்ரீநரசிம்ம, சுதர்சன, தன்வந்திரி யாகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு துலா காவிரி மாஹாத்மியம் பாராயணம் நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாய்க்கு பவுர்ணமி ஆரத்தி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் காவிரி தாய்க்கு மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பக்தர்கள் காவிரி ஆற்றில் மலர் தூவி வணங்கினர். இத்துடன் காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு விழா நிறைவடைந்தது.
    நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் மொத்தம் 22 லட்சத்து 80 ஆயிரத்து 493 பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
    தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தாமிரபரணி ஆற்றின் தீர்த்தக்கட்டங்கள், படித்துறைகளில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். இது தொடர்பாக போலீசார் எடுத்த கணக்கெடுப்பு விவரம் வருமாறு:-

    நெல்லை புறநகர் மாவட்டத்தில் உள்ள 25 தீர்த்தக்கட்டம் மற்றும் படித்துறைகளில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 693 ஆண்களும், 6 லட்சத்து 9 ஆயிரத்து 800 பெண்களும் என 10 லட்சத்து 95 ஆயிரத்து 493 பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். இதேபோல் நெல்லை மாநகரில் உள்ள 4 படித்துறைகளில் மட்டும் 2¼ லட்சம் பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 27 படித்துறைகளில் மொத்தம் 9 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.

    நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் மொத்தம் 22 லட்சத்து 80 ஆயிரத்து 493 பக்தர்கள் புனித நீராடி உள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

    நெல்லையில் நடைபெற்ற மகா புஷ்கர நிறைவு விழாவில் தாமிரபரணி அன்னைக்கு தீப ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் சிறப்பு வாய்ந்த தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி நெல்லை கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் மகா புஷ்கர நிறைவு விழா நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் 7 சிவாச்சாரியார்கள் நின்று வேத மந்திரங்கள் முழங்க தாமிரபரணி ஆற்றுக்கு தீப ஆரத்தி காண்பித்தனர். பின்னர் தாமிரபரணி ஆற்றில் மலர்களை தூவி விழா நிறைவு செய்யப்பட்டது. அப்போது தாமிரபரணி அன்னையை போற்றி எழுதப்பட்ட பாடல், இசையுடன் பாடப்பட்டது. மேலும் பக்தர்கள் மீது தாமிரபரணி புனிதநீரும் தெளிக்கப்பட்டது. 
    தகுதிநீக்க வழக்கில் சாதகமான தீர்ப்பு வரவேண்டும் என்பதற்காக தாமிரபரணி புஷ்கர நிகழ்வில் புனித நீராட வந்திருப்பதாக தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். #DisqualifiedMLAs #ThangaTamilSelvan
    குற்றாலம்:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்டு மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி எம்.சத்திய நாராயணன் ஒத்திவைத்து உத்தரவிட்டார். அநேகமாக நாளை தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குற்றாலம் வந்து சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். 18 பேரில் சிலர் வெளிநாடு செல்ல முடிவு செய்திருந்து தெரியவந்ததால், தீர்ப்பு வரும் வரை தமிழ்நாட்டில் இருக்கும்படி டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். அதன்படி குற்றாலம் வந்து தங்கியிருக்கின்றனர்.

    தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரவேண்டும் என்பதற்காக பாபநாசம் சென்று தாமிரபரணி புஷ்கர நிகழ்வில் புனித நீராட உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இன்றும் நாளையும் குற்றாலத்தில் தங்கி ஓய்வு எடுக்கப்போவதாகவும் கூறியிருக்கிறார்.



    மேலும், அமைச்சர் ஜெயக்குமார் தொடர்புடைய ஆடியோ வெளியானதில் அமமுகவுக்கு தொடர்பு இருப்பதாக ஜெயக்குமார் கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு, அந்த ஆடியோவுக்கும் அமமுக-வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

    தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என டிடிவி தரப்பினர் மிகுந்த நம்பிக்கையில் உள்ளனர். அவ்வாறு தீர்ப்பு வந்தால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்படும். அவர்கள் தரப்பில் இருந்து தொடர்பு கொள்வதை தவிர்க்கும் வகையில் குற்றாலம் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் பிளவு ஏற்பட்டபோது, எம்எல்ஏக்கள் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியிருந்ததுபோன்று இப்போது தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் முகாமிட்டிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #DisqualifiedMLAs #ThangaTamilSelvan
    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி புஷ்கர விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது. நேற்று தீப ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினார்கள்.
    144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்கள், 149 படித்துறைகளிலும் இந்த விழா நடந்து வருகிறது.

    தினமும் காலையில் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடும் நிகழ்ச்சியும், மாலையில் ஆரத்தி எடுத்து வழிபடும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. இந்த புஷ்கர விழாவில் வெளி மாவட்டம் மட்டும் அல்லாமல், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் கலந்துகொண்டு புனித நீராடி வருகிறார்கள்.

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் படித்துறையில் தாமிரபரணிக்கு தீப ஆரத்தி நடந்தபோது எடுத்தபடம்.

    12-வது நாளான நேற்றும் புஷ்கர விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர். நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சியம்மன் கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில், கைலாசபுரம் தைப்பூச மண்டபம், நெல்லை மணிமூர்த்தீசுவரம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் ஜடாயு படித்துறைகளிலும், சீவலப்பேரி துர்காம்பிகை கோவில் படித்துறைகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதேபோல் பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி, திருப்புடைமருதூர், கோடகநல்லூர், அத்தாளநல்லூர் உள்ளிட்ட படித்துறைகளிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.


    சேரன்மாதேவி பக்தவச்சலபெருமாள் கோவில் வியாச தீர்த்தக்கட்டத்தில் நேற்று மாலை தாமிரபரணி அன்னைக்கு தீப ஆரத்தி நடந்தபோது எடுத்தபடம்.

    மேலும், பாபநாசத்தில் அகில பாரத துறவியர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட புஷ்கர விழா நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அதேபோல் நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் ஜடாயு படித்துறையிலும் நேற்று மாலையுடன் புஷ்கர விழா நிறைவடைந்தது.

    நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவிலில் நேற்று காலை 6 மணி முதல் 8 மணி வரை யாகசாலை பூஜை, மாலை 5.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனத்தின் புஷ்பாஞ்சலி, 6 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நெல்லை மாவட்டத்தில் 12 நாட்கள் நடைபெற்ற மகா புஷ்கர விழா இன்று மாலையுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது. 
    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் புஷ்கர விழா தொடங்கிய கடந்த 11-ந்தேதியில் இருந்து இன்று வரை சுமார் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளமாக்கும் வற்றாத ஜீவ நதியான தாமிர பரணியில் கடந்த 11-ந்தேதி முதல் மகா புஷ்கர விழா நடைபெற்று வருகிறது.

    குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விருச்சிக ராசிக்குரிய நதியான தாமிரபரணிக்கு மகா புஷ்கரம் நடத்தப்பட்டு வருகிறது.

    தாமிரபரணிக்கு நன்றி கூறும் விழாவாக இந்த விழா அமைந்துள்ளது. தாமிரபரணி யில் உள்ள 64 தீர்த்தகட்டங்கள், 149 படித்துறைகளில் இந்த விழா கோலாகலமாக நடந் தது. ஆன்மீக அமைப்புகள், பொதுமக்கள் இணைந்து நடத்திய இந்த விழாவில் தினமும் காலையில் தாமிர பரணிக்கு சிறப்பு வழிபாடு கள், வேள்விகள், யாகங்கள், கலை நிகழ்ச்சிகள், மாலையில் மகா ஆரத்தி நடைபெற்று வருகின்றன. 3 வேளை அன்ன தானமும் வழங்கப் பட்டு வருகிறது.

    புஷ்கர விழாவில் பங்கேற்று தாமிரபரணியில் புனித நீராட தினமும் ஏராளமான பக்தர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தின் பிற மாவட்டங் கள் மற்றும் புதுவை, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பிற‌ மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் தாமிரபரணியில் புனித நீராடி வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

    இதனால் தாமிரபரணி கரையோரங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது. படித்துறைகள் நிரம்பி வழிகின்றன. கடந்த 4 நாட்களாக ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை நாட்கள் என்பதால் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    விழாவில் உச்சக்கட்டமாக நேற்று தாமிரபரணியில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஒரே நாளில் 7 லட்சம் பக்தர்கள் புனித நீராடி தாமிரபரணியை வழிபட்டனர். மாலையில் நடந்த மகா ஆரத்தியையும் கண்டு தரிசித்தனர்.


    தைப்பூச மண்டபம் படித்துறையில் தண்ணீர் அதிகரித்ததால் பக்தர்கள் ஓரமாக நின்று நீராடிய காட்சி.

    புஷ்கர விழா நடைபெற்ற பகுதிகளில் நேற்று கட்டு கடங்காத கூட்டம் கூடியதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கூடுதல் போலீசார் வர வழைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். பாபநாசத்தில் இரு இடங்களில் புஷ்கர விழா நடைபெற்றதால் அங்குள்ள பாபநாசநாதர் கோவில், அகஸ்தியர் அருவிக்கு அதிகளவில் பக்தர்கள் வந்ததாலும் கடும் நெருக்கடி ஏற்பட்டது.

    ஏற்கனவே புஷ்கர விழாவிற்காக பல்வேறு இடங்களில் இருந்து வரும் வாகனங்கள் அகஸ்தியர் பட்டியிலேயே நிறுத்தப்பட்டன. அங்கிருந்து அரசு பஸ்களில் பாபநாசம் செல்ல ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. அதே போல வடக்கில் இருந்து வந்த வாகனங்கள் முதலியார்பட்டி அருகேயே நிறுத்தப்பட்டு அங்கிருந்து பஸ்களில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் மட்டுமே அந்த பாதையில் அனுமதிக்கப்பட்டன. பாபநாசம் தாமிரபரணியில் நேற்று ஒரே நாளில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். இதே போல் சிங்கை, அம்பை, சேரன் மகாதேவி, கல்லிடைக்குறிச்சி படித்துறைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    அம்பை காசிப தீர்த்தத்தில் புனித நீராடவும், தாமிரபரணியில் நீராடவும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் அங்கு போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. முக்கூடல், அத்தாளநல்லூர், திருப்புடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. நெல்லையில் எங்கு பார்த் தாலும் வெளிமாநில பக்தர் கள் கூட்டம் காணப்பட்டது.

    நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறை, தைப்பூச மண்டபம் படித்துறை, மேலநத்தம் அக்னி தீர்த்தம், மணிமூர்த்தீஸ்வரம் தீர்த்த கட்டம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், ஜடாயு துறை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் புனித நீராடினார்கள்.

    குருஸ்தலமான தூத் துக்குடி மாவட்டம் முறப்பநாடு கைலாசநாதர் கோவில் படித்துறையில் தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலையில் மகா ஆரத்தியை காணவும் அதிகளவில் பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடியதையும், அங்கு பாதுகாப்பிற்காக ஆற்றில் படகு நிறுத்தப்பட்டுள்ளதையும் படத்தில் காணலாம்.

    இதே போல ஸ்ரீவை குண்டம், தென்திருப்பேரை, ஆத்தூர் பகுதிகளிலும் பக்தர்கள் தாமிரபரணியில் புனித நீராடி வழிபட்டனர்.

    சித்தர்கள் கோட்டம் மற்றும் பொதுமக்கள் சார்பாக பாபநாசம் திரிநதி சங்கம தீர்த்தத்தில் நடை பெற்ற புஷ்கர விழாவில் இன்று காலை சிறப்பு வேள்வி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றார்கள். அகில பாரத துறவியர் சங்கம் சார்பாக பாபநாசத்தில் நடந்த புஷ்கர விழாவில் இன்று காலை லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை வழிபாடு நடந்தது. புஷ்கர விழா நிறைவு நாள் என்பதால் இன்று மதியம் இங்கு மகா ஆரத்தி நடந்தது. தொடர்ந்து சாத்தயதி பூஜை நடை பெற்றது.

    தொடர்ந்து அங்குள்ள சேனை தலைவர் சமுதாய கூடத்தில் பெண் துறவியர்கள் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது.

    நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி படித்துறையில் இன்று காலை சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து தாமிரபரணிக்கு வழிபாடு நடைபெற்றது.

    நெல்லை தைப்பூச மண்டபம் அருகே இன்று காலை வேத பாராயணம் மற்றும் மகா சண்டி ஹோமமும் நடைபெற்றது. சங்கீத சபாவில் பன்னிரு திருமுறை பாராயணம் நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றார்கள்.

    நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையாக சாலையில் இன்று காலை 5 மணிக்கு சுவாமிக்கு தீர்த்தவாரி, கோபூஜையும் மகா சண்டியாகமும் நடந்தது. காஞ்சி சங்கர மடம் சார்பாக திருப்புடை மருதூரில் நடந்த மகா புஷ்கர விழாவில் இன்று ருத்ர ஏகாதசி பூஜை நடைபெற்றது.

    முறப்பநாட்டில் இன்று காலை சிறப்பு வேள்வியும், தாமிரபரணிக்கு வழிபாடும் நடந்தது. ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த விழாவில் பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட வைகளை நீக்கும் சத்ருசம் ஹார ஹோமம் நடைபெற்றது. கடந்த 11-ந்தேதி புஷ்கர விழா தொடங்கப்பட்ட இடங்களில் இன்று மாலை மகா ஆரத்தியுடன் விழா நிறைவடைகிறது. இதனால் இந்த பகுதிகளில் பக்தர்கள் புனித நீராட அதிகளவில் திரண்டிருந்தனர்.


    நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த படித்துறையில் தாமிரபரணிக்கு தீப ஆரத்தி நடந்த போது எடுத்த படம்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் புஷ்கர விழா தொடங்கிய கடந்த 11-ந்தேதியில் இருந்து இன்று வரை சுமார் 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    12-ந்தேதி புஷ்கர விழா தொடங்கிய பகுதிகளில் நாளை மாலை வரை வழிபாடுகள் நடக்கின்றன. புஷ்கர விழா நிறைவை யொட்டி இன்றும், நாளையும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது. இதனால் படித்துறைகள், தீர்த்த கட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. ஏற்கனவே மலை பகுதியில் பெய்த மழை காரணமாக தாமிரபரணியில் தண்ணீர் வரத்து அதிகரித் துள்ளதால் போலீசார் நீராடும் பக்தர்களை பாதுகாப்பாக நீராடுமாறு அறிவுறுத்தி வருகிறார்கள்.

    மேலும் 24 மணி நேரமும் ஆற்றில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு படையினர் அனைத்து பகுதிகளிலும் ரப்பர் படகு மற்றும் பாதுகாப்பு சாதனங்களுடன் ஆற்றில் நிறுத்தப்பட்டுள்ளார்கள். ஆற்றில் பக்தர்கள் நீராடும் பகுதியில் தண்ணீர் வரத்தை பொறுத்து பக்தர்களை போலீசார் நீண்ட வரிசையில் செல்ல அனுமதித்துள்ளனர்.

    கீழாம்பூர் மற்றும் ஆழ்வார்குறிச்சி வட்டார கடனா நதி பக்த ஜன சங்கம் மற்றும் கிராம மக்கள் இணைந்து புஷ்கர விழாவை முன்னிட்டு கடனா நதியில் வழிபாடு நடத்தினர்.

    இதையொட்டி வேதவிற் பன்னர்கள் தேவி பாராயணம், கும்ப ஜெபம், விசே‌ஷ ஜெபம் மற்றும் நாம சங்கீர்த்தனம், தேவார பண்ணிசை பாடினார்கள். பின்னர் வைதீகர்கள் கடனாநதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கடனாநதிக்கு தீப ஆராதனை, உபசாரங்களுடன் மகா தீப ஆரத்தி நடத்தினர்.

    நிகழ்ச்சியில் ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, சிவசைலம், பாப்பான்குளம், கல்யாணிபுரம், கடையம் உள்ளிட்ட பல்வேறு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் வாணவேடிக்கை நடந்தது.
    ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழா தொடங்கியது. இவ்விழா வருகிற 24-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
    புஷ்கரம் என்பது நதிகளுக்கு உரிய விழா. புஷ்கரம் என்றால் தீர்த்தகுரு, ஆதிகுரு என்று பொருள்படும். புஷ்கர திருவிழா ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது அந்தந்த ராசிகளுக்கு உரிய நதிகளில் நடைபெறுவது ஆகும். மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியான, பிரம்மாவின் கமண்டலத்தில் உள்ள புஷ்கரமானவர் குருப்பெயர்ச்சி சமயங்களில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் 12 நாள் பிரவேசம் செய்வதாகவும், குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு இடம் பெயரும் போது துலா ராசிக்கு உரியவரான காவிரி நதியில் புஷ்கரமானவர் 12 நாட்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.

    அதன்படி, காவிரி மகாபுஷ்கரம் கடந்த செப்டம்பர் மாதம் 12-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ஸ்ரீரங்கத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழாவிற்காக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே உள்ள மாமுண்டி கோனார் திடலில் கடந்த 12-ந் தேதி யாகசாலை பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. பின்னர் அங்கு யாகசாலை மற்றும் விழா மேடை அமைக்கப்பட்டது.

    காவிரி புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழாவின் தொடக்க நாளான நேற்று மண்ணச்சநல்லூரை அடுத்த கோபுரப்பட்டியில் இருந்து கல்யாண உற்சவர்கள் ஆதிநாயகப்பெருமாள், தாயாருடன் ஆன்மிக ஊர்வலம் புறப்பட்டு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் வழியாக மாமுண்டி கோனார் திடலில் உள்ள யாகசாலைக்கு வந்தடைந்தனர். பின்னர் காலை 5.45 மணிக்கு கோ-பூஜை, காலை 6 மணிக்கு விஷ்வக்சேன யாகம், காலை 9 மணிக்கு துலா காவிரி மாஹாத்மியம் பாராயணம், மாலை 3.30 மணிக்கு ஹரி நாம பஜனை நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாய்க்கு துலா மாத ஆரத்தி நடைபெற்றது. பின்னர் யாகசாலை திடலில் மாலை 6.15 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழா நடைபெறும் 4 நாட்களும் மாலை காவிரி தாய்க்கு துலா மாத ஆரத்தி மற்றும் மகான்களின் ஆசிஉரைகளும் பல்சுவை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
    மகா புஷ்கர விழாவையொட்டி முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் புனித நீராடினார்கள்.
    தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கர விழா நடந்து வருகிறது. விழாவின் 11-வது நாளான நேற்று தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் வரலாறு காணாத பக்தர்கள் வருகை தந்தனர்.

    நேற்று சிம்ம ராசிக்காரர்களுக்கு உகந்த நாள் என்பதால் அதற்குரிய ராசிக்காரர்களும், விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்ததால் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

    அதிகாலை 4 மணிக்கே பக்தர்கள் முறப்பநாடு காசி தீர்த்தகட்டத்துக்கு வந்து நீராடி கைலாசநாதரை வணங்கினர்.

    முறப்பநாடு பஸ் நிறுத்தத்தில் இருந்து கோவிலுக்கு ஆட்டோ வசதி நேற்று இல்லை.

    எனவே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு பக்தர்கள் நடந்து வந்து நீராடினர். கைலாசநாதர் கோவிலிலுக்குள் தரிசனம் செய்பவர்கள் கோவிலை சுற்றி சுமார் 1 கிலோ மீட்டருக்கு நீண்ட வரிசையில் காத்து இருந்தனர்.

    நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர். பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காமாட்சிபுரம் ஆதீனம் ஞானக்குரு சாக்த ஸ்ரீசிவலிங்கேசுவர சுவாமிகள் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் நீராடினர்

    தொடர்ந்து முறப்பநாட்டில் அதிருத்ர பெருவேள்வி நடைபெறுகிறது. அதில் 121 வைதீயர்கள் ருத்ர பாராயணம் செய்தனர். மாலை 5.30 மணிக்கு நதிக்கு சிறப்பு ஆராத்தி காட்டப்பட்டது. 6.30 மணிக்கு தாமிரபரணி ஈசுவரம் அறநிலை துறை சார்பாக நதிக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது.

    நெல்லை, தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் ஒரு வழிப்பாதை வழியாக மாற்றி விடப்பட்டது.

    அதேபோல் ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள படித்துறை, ஆழ்வார்திருநகரி சங்கு படித்துறை, குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் படித்துறை, மங்களகுறிச்சி, ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் படித்துறை, சுந்தர விநாயகர் கோவில் படித்துறை, வாழவல்லான், உமரிக்காடு, முக்காணி வெங்கடேச பெருமாள் கோவில் படித்துறை, ராம பரமேசுவரர் கோவில் படித்துறை, சேர்ந்தபூமங்கலம் கைலாசநாத சுவாமி கோவில் படித்துறை, சங்கமம் படித்துறை போன்றவற்றில் காலையில் யாகசாலை பூஜைகள், சிறப்பு பூஜைகள் நடந்தது.

    தொடர்ந்து திரளான பக்தர்கள் தாமிரபரணியில் புனித நீராடினர். 
    மகா புஷ்கர விழாவையொட்டி தாமிரபரணி ஆற்றில் புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் நெல்லை திணறியது. இதையொட்டி பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.
    தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. இந்த விழா நாளை (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெறுகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றில் உள்ள தீர்த்தகட்டங்கள், படித்துறைகளில் பகல் நேரத்தில் புனித நீராடும் நிகழ்ச்சியும், மாலையில் தாமிரபரணிக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

    இந்த விழாவில் தமிழக பக்தர்கள் மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நெல்லைக்கு வந்து புனித நீராடி வருகிறார்கள்.

    நேற்று 11-வது நாள் விழா தாமிரபரணி படித்துறைகளில் நடந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சியம்மன் கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில், கைலாசபுரம் தைப்பூச மண்டபம், நெல்லை மணிமூர்த்தீசுவரம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் ஜடாயு படித்துறைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதேபோல் அம்பை, சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதூர், கோடகநல்லூர், அத்தாளநல்லூர் உள்ளிட்ட படித்துறைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தாமிரபரணி ஆற்றில் நேற்று காணும் இடமெல்லாம் மக்கள் தலைகளாகவே காட்சி அளித்தது.

    வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் நெல்லை மாவட்டத்தில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட ஊர்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பாபநாசத்தில் அகில பாரத துறவியர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட புஷ்கர விழா இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறையில் நடைபெறும் விழா நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது.

    பாபநாசத்தில் அகில பாரத துறவியர் சங்கம் சார்பில், சேனைத் தலைவர் மண்டபத்தில் தினமும் தாமிரபரணி புஷ்கர விழா நிகழ்ச்சிகள், மாநாடுகள் நடைபெற்று வருகிறது. பாபநாசம் படித்துறை இந்திர தீர்த்தத்தில் தினமும் மாலையில் தீப ஆரத்தி எடுத்து வழிபாடு நடக்கிறது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கண்டுகளிக்கின்றனர். பாபநாசத்தில் நேற்று அதிகாலை 3 மணி முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர். வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வரும் பக்தர்களின் வாகனங்களை போலீசார் அகஸ்தியர்பட்டியில் நிறுத்தி விட்டு, அரசு பஸ்களில் மட்டுமே அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் கோவிலுக்கு அருகே நீண்ட வரிசையில் நின்று படித்துறை இந்திர தீர்த்தக்கட்டத்தில் நீராடினர். பின்னர் கோவிலுக்குள் சென்று சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.

    நேற்று காலை பாபநாசம் ராஜேசுவரி மண்டப படித்துறையில் தூத்துக்குடியை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் குளித்து கொண்டிருந்தனர். அவர்களை திடீரென தண்ணீர் இழுத்து சென்றது. உடனே அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பக்தர்கள் அதிக அளவில் புனித நீராட குவிந்ததால் நெல்லை திணறியது.

    தாமிரபரணி புஷ்கர விழாவுக்கு வெளிமாவட்டம், பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பஸ்கள், ரெயில்களில் நெல்லை வந்தனர். சில பக்தர்கள் வெளியூர்களில் இருந்து தனி வேன், கார்களில் வந்துள்ளனர். இதனால் நேற்று நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் பகுதியில் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன. தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து நெல்லை வந்த பஸ்கள், லாரிகள், கார்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. அதாவது நெல்லை டவுன் தொண்டர் சன்னதியில் இருந்து, நயினார்குளம் ரோடு வழியாக, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை வழியாக நெல்லை புதிய பஸ் நிலையம் சென்றனர். காலை முதல் இரவு வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நெல்லை ரெயில் நிலையத்தில் நேற்று வந்த அனைத்து ரெயில்களும் நிரம்பி வழிந்தன. முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கு வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதேபோல் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலையில் வெளியூர் சென்ற ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பிளாட்பாரங்கள் முழுவதும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி நெல்லை சந்திப்பு பஸ் நிலையம், புதிய பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. வெளியூர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 
    காசியே நெல்லை, தூத்துக்குடிக்கு வந்தது போன்று எங்கு பார்த்தாலும் ஆற்றின் கரைகளில் வடமாநில பக்தர்களை காண முடிகிறது. பக்தர்கள் நவ திருப்பதி, நவ கைலாய கோவில்களில் அதிகளவில் குவிந்துள்ளனர்.
    குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு குரு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆனதை தொடர்ந்து அந்த ராசிக்குரிய நதியான தாமிரபரணியில் புஷ்கர விழா நடத்தப்படுகிறது.

    இந்த விழா கடந்த 11-ந்தேதி தொடங்கியது. தாமிரபரணியில் உள்ள 64 தீர்த்தக்கட்டங்கள், 149 படித்துறைகளில் பக்தர்கள் புனித நீராடி வருகிறா ர்கள். பல்வேறு ஆன்மீக அமைப்புகள் புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணிக்கு சிறப்பு வழிபாடுகள், யாகங்கள், வேள்விகள் மற்றும் ஆன்மீக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றன.

    விழாவையொட்டி தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குவிந்துள்ளனர். இரு மாவட்டங்களிலும் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன.

    தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பாபநாசம் தொடங்கி புன்னக்காயல் வரை தாமிரபரணியின் அனைத்து படித்துறைகளிலும் விழாக் கோலமாக காட்சியளிக்கின்றன. புஷ்கர விழா நிறைவடைய இன்னும் 2 நாட்களே உள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்தவண்ணம் உள்ளனர். ஆற்றில் புனித நீராடும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    பாபநாசம் சித்தர்கள் கோட்டம் சார்பாக அங்குள்ள திரிநதி சங்கம தீர்த்தத்தில் புஷ்கர விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி இன்று காலை சிறப்பு வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து தாமிரபரணிக்கு வழிபாடு மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


    முறப்பநாட்டில் தாமிரபரணிக்கு தீப ஆரத்தி நடைபெற்ற காட்சி.

    அகில பாரத துறவியர் சங்கம் சார்பாக பாபநாசத்தில் இன்று நடைபெற்ற விழாவில் காலை சிறப்பு வேள்வி நடந்தது. தொடர்ந்து அங்குள்ள சேனைத்தலைவர் சமுதாய கூடத்தில் கிராம கோவில் பூஜாரிகள் மாநாடு நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    காஞ்சி சங்கரமடம் சார்பாக திருப்புடைமருதூரில் நடைபெற்ற புஷ்கர விழாவில் இன்று காலை தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    முக்கூடல் அருகே அத்தாளநல்லூர் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கஜேந்திர வரத பெருமாள் கோவிலில் இன்று காலை புஷ்கர பூஜை நடந்தது. தொடர்ந்து பெண்கள் நாராயணியம் பாடினர். இதையடுத்து பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

    இதேபோல கல் லிடைக்குறிச்சி, அம்பை, சேரன்மகாதேவி தீர்த்தக்கட்டங்களிலும் தாமிரபரணியில் சிறப்பு வழிபாடு நடந்தது. நெல்லை குறுக்குத்துறை படித்துறையில் நடந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றார்கள்.

    நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டப படித்துறையில் புஷ்கர விழாவை முன்னிட்டு இன்று காலை புரு‌ஷ ஸுக்த ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து திருப்புகழ் இசைவழிபாடு நடந்தது. கைலாசநாதர் கோவிலில் வேதபாராயணம், சங்கீதசபாவில் பண்ணிரு திருமுறை பாராயணம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து முருக பக்தர்கள் மாநாடு நடந்தது.

    அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் உள்ள யாகசாலையில் இன்று காலை சிறப்பு வேள்வி நடந்தது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

    முக்கூடல் அத்தாளநல்லூரில் தாமிரபரணிக்கு பெண்கள் பொங்கலிட்டு வழிபட்ட காட்சி.

    புஷ்கர விழாவையொட்டி படித்துறைகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த இடவசதிகள் செய்யப் பட்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மற்றும் சாதனங்களுடன் ஆற்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தாமிரபரணி நதிக்கு தினசரி மாலையில் காசியில் கங்கைக்கு நடப்பது போன்று மகா ஆரத்தி நடந்து வருகிறது. இதனால் ஆரத்தியை காண பக்தர்கள் அதிகளவில் திரண்டு வருகிறார்கள். காசியே நெல்லை, தூத்துக்குடிக்கு வந்தது போன்று எங்கு பார்த்தாலும் ஆற்றின் கரைகளில் வடமாநில பக்தர்களை காண முடிகிறது. பக்தர்கள் நவ திருப்பதி, நவ கைலாய கோவில்களில் அதிகளவில் குவிந்துள்ளனர்.

    நவக்கிரகங்களில் அதிபதிகளுக்கு உரிய கோவில்களான சூரிய அம்சம் உள்ள பாபநாசம் சிவன் கோவில், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில், சந்திரன் வழிபட்ட சேரன்மகாதேவி கைலாசநாதர் கோவில், நத்தம் விஹயாசன பெருமாள் கோவில், செவ்வாய் வழிபட்ட தலமான கோடகநல்லூர் சிவன் கோவில், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதேபோல் புதனுக்குரிய தென்திருபேரை கைலாசநாதர் கோவில், திருப்புளியங்குடி பெருமாள் கோவில், குரு பகவானுக்குரிய முறப்பநாடு கைலாசநாதர் கோவில், ஆழ்வார்திருநகரி பெருமாள் கோவில், சனி கிரகத்துக்குரிய பெருங்குளம் பெருமாள் கோவில், ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில், சுக்கிரனுக்குரிய சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோவில், தென்திருபேரை பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.

    மேலும் ராகு கேது தலங்களான இரட்டை திருப்பதி பெருமாள் கோவில், ராஜபதி கைலாசநாதர் கோவில்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் இந்த கோவில்களை தேடி கார், வேன்களில் சென்று சாமி ஹ்ரிசனம் செய்தார்கள். இது தவிர நெல்லையப்பர் கோவில், யரை தெட்சணாமூர்த்தி கோவில், தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில், குற்றாலம் குற்றாலநாதர் கோவில், இலத்தூர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
    புஷ்கரத்தின் போது மட்டுமல்ல மற்ற நாட்களிலும் தாமிரபரணியில் நீராட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அது என்னவென்று விரிவாக பார்க்கலாம்.
    தாமிரபரணியை தாயாகவும், தெய்வமாகவும் நெல்லை, தூத்துக்குடி மக்கள் போற்றி வருகிறார்கள். தாமிரபரணியில் எச்சில் உமிழ்வதையே பாவச்செயலாக இங்குள்ள மக்கள் கருதுகிறார்கள். புஷ்கரத்தின் போது மட்டுமல்ல மற்ற நாட்களிலும் தாமிரபரணியில் நீராட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. நீராடப் போகிறவர்கள் செருப்பு போட்டுக் கொண்டும், குடை பிடித்துக் கொண்டும் செல்லக் கூடாது. நதிக்கரையில் உள்ள மண்ணை எடுத்துத் தன் உடம்பில் பூசிக் கொண்டு, நதியை வணங்கி அதனுள் இறங்க வேண்டும்.

    சிகப்பு, கருப்பு, நீலநிற வஸ்திரம், தலைப்பு இல்லாத வஸ்திரம், ஓரத்தில் நீலக்கரை, கருப்பு கரை போட்ட வஸ்திரம் இவைகளை உடுத்திக் கொள்ளக் கூடாது. புனித குளங்களில் நீராடும் போது சூரியபகவானுக்கு எதிர் முகமாக நின்று நீராட வேண்டும் என்பது விதி. ஆனால், புனித நதிகளில் நீராடும் போது, நதியின் பிரவாகத்திற்கு (ஓட்டத்திற்கு) எதிர் முகமாக நின்றே நீராட வேண்டும். முதுகைக் காட்டக் கூடாது. நதியில் உள்ளம்குளிர குடைந்து மூன்று முறை மூழ்கி எழ வேண்டும். ஒவ்வொரு முறையும் ‘‘ஹரி, ஹரி’’ என்று சொல்ல வேண்டும். ஆண்கள் அரைஞாண்கயிறு இல்லாமல் நீராடுதல் கூடாது. அரைஞாண் கயிற்றில் வேஷ்டியை கட்டிக் கொண்டும் நீராடக் கூடாது. இது வேஷ்டி இல்லாததற்குச் சமம்.

    பெண்கள் தலைமுடியை முன்புறம் போட்டுக் கொண்டு நீராட வேண்டும். பின்புறம் போடக் கூடாது. நதியினுள் ஈரத்துணிகளைப் பிழியக் கூடாது. கரைக்கு வந்தே பிழிய வேண்டும். நீரிலிருந்து வெளியே வந்து தலைமுடிகளை உதறக் கூடாது. நீராடி முடித்தவுடன், காய்ந்த வஸ்திரத்தை மேலே சுற்றிக் கொண்டு, ஈர வஸ்திரத்தைக் கீழாக விட வேண்டும்.

    மேலாக எடுத்துப் போடக் கூடாது. நெற்றியில் கோபி சந்தனம் பூசிக் கொண்டு நதியை மீண்டும் ஒருமுறை வணங்கி முடிக்க வேண்டும். சூரிய உதயத்திற்கு முன்பு நான்கு நாழிகைகள் (96 நிமிடங்கள்) அருணோதய காலமாகும். இந்த 96 நிமிட காலத்தில் நீராடுவது மிக மிகப் புண்ணியமாம். திருமணமாகாத ஆண், பெண்கள் அதிகாலை வேளையில் நீராடினால் மட்டுமே நற்பலன் கிட்டும். திருமணமானவர்கள் அதிகாலை, மதியம் ஆகிய இரண்டு வேளைகளிலும் நீராடலாம். சந்நியாசிகள் அதிகாலை, மதியம், சூரிய அஸ்தமனம் ஆகிய மூன்று வேளைகளிலும் நீராடலாம்.
    தாமிரபரணியில் கடந்த 8 நாட்களில் நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை மட்டுமே 20 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது பக்தர்கள் அதிகளவில் வருவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
    தமிழகத்தில் உள்ள நதிகளில் வற்றாத ஜீவநதியாக திகழ்வது தாமிரபரணி. பாபநாசம் மலையில் பூங்குளம் என்ற இடத்தில் உற்பத்தியாகி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் இந்த நதி கடலில் கலக்கிறது. ஆன்மீக சிறப்பு மிக்க இந்த நதியின் இருகரைகளிலும் பிரசித்திபெற்ற ஆலயங்கள் அமைந்துள்ளன.

    சிவனால் தருவிக்கப்பட்டு அகஸ்தியரால் பூமியில் விடப்பட்ட சிறப்பு மிக்க தாமிரபரணி நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களையும் வளமாக்குகிறது. இந்த மாவட்டங்களோடு விருதுநகர் மாவட்டம் வரை குடிநீர் ஆதாரமாகவும் தாமிரபரணி விளங்குகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் குரு பெயர்ச்சியின்போது அந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையடுத்து விருச்சிக ராசிக்கு உரிய நதியான தாமிரபரணியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

    புஷ்கரம் என்பது புனித தீர்த்தமாகும். புஷ்கர விழாவின்போது அனைத்து தெய்வங்கள், தேவுக்கள், ரிஷிகள் மற்றும் அனைத்து நதிகள் நதியில் வாசம் செய்வதாக ஐதீகம். இதனால் புஷ்கர விழாவில் புனித நீராடினால் பெரும் புண்ணியம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    இதையடுத்து தாமிரபரணியில் புஷ்கர விழா நடத்த பல்வேறு ஆன்மீக அமைப்புகள், பொதுமக்கள் சிறப்பு ஏற்பாடுகள் செய்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. தொடக்கத்தில் இதுபற்றி விழிப்புணர்வு மக்களுக்கு போதிய அளவு இல்லை.

    பின்னர் ஆன்மீக அமைப்புகளின் முயற்சியால் புஷ்கரம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் புஷ்கர விழாவுக்கு கடும் எதிர்பார்ப்பு உண்டானது. புஷ்கர விழாவுக்காக தாமிரபரணியில் உள்ள 64 தீர்த்த கட்டங்கள், 149 படித்துறைகள் சரிசெய்யப்பட்டன. குறிப்பாக பாபநாசம், அம்பை, கல்லிடைகுறிச்சி, சேரன்மகாதேவி, திருப்புடைமருதூர், நெல்லை, அருகன்குளம், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    படித்துறைகளுக்கு செல்லும் பாதைகள் சரிசெய்யப்பட்டது. ஆற்றில் மணல் மூட்டைகள் போடப்பட்டு பக்தர்கள் நீராட வசதி செய்யப்பட்டன. இதை தொடர்ந்து கடந்த 11-ந்தேதி பாபநாசத்திலும், நெல்லையில் மகா புஷ்கர விழாவினை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்தார்.

    அன்று முதல் தொடர்ந்து தாமிரபரணி படித்துறைகள், தீர்த்தக்கட்டங்களில் காலையில் சிறப்பு வேள்விகள், யாகங்கள், வழிபாடுகளும், மாலையில் மகா ஆரத்தியும் நடைபெற்று வருகிறது. மகா ஆரத்தியை காணவும், ஆற்றில் புனித நீராடவும் ஏராளமான பக்தர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குவிந்துள்ளார்கள். காசியில் இருந்து வேத பண்டிதர்கள் மற்றும் சாமியார்கள், சாதுக்கள் நெல்லையில் முகாமிட்டுள்ளார்கள்.

    முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் தீப ஆரத்தி நடந்த போது எடுத்தபடம்

    உலகம் முழுவதும் உள்ள ஆன்மீகவாதிகளின் பார்வை நெல்லை தாமிரபரணியின் மீதே உள்ளது. அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள் என பலரும் தாமிரபரணியை நோக்கி படையெடுத்து வந்துள்ளார்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், புதுவை, ஆந்திரா, உத்தரபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்துள்ளனர். 12 நாட்களும் நீராடுவதற்காக நெல்லையில் தங்கும் விடுதிகள் அறை எடுத்தும், தனி வீடுகள் வாடகைக்கு எடுத்தும் தங்கியுள்ளார்கள். அனைவரும் இந்த சிறப்பு வழிபாட்டிற்காக தேவைப்படும் பூஜை பொருட்கள் மற்றும் மாலை, பூ என அனைத்தையும் கொடுத்து வழிப்பட்டு வருகின்றனர்.

    பாபநாசம் தொடங்கி புன்னாக்காயல் வரை அனைத்து தீர்த்தங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. தொடக்க நாட்களில் ஆற்றில் புனித நீராடும் பக்தர்கள் எண்ணிக்கை சற்று குறைவாக காணப்பட்டது. பின்னர் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 8 நாட்களில் நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை மட்டுமே 20 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது பக்தர்கள் அதிகளவில் வருவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    ஆற்றில் புனித நீராடும் பக்தர்கள் தாமிரபரணி கரையில் ஆன்மீக அமைப்புகளால் நடத்தப்படும் யாகங்கள், வேள்விகளில் பங்கேற்று சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்து வருகிறார்கள். மொத்தத்தில் புஷ்கர விழா தொடங்கிய நாளில் இருந்தே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் விழா கோலமாக காட்சியளிக்கின்றன. அன்னதானம் உள்ளிட்ட தான தர்மங்களும் நடைபெற்று வருகின்றன.

    தாமிரபரணியின் புகழுக்கு மகுடம் சூட்டும் அற்புத விழாவாக இது அமைந்துள்ளது. தாமிரபரணி மகா புஷ்கரம் இந்த ஆண்டில் வழிபாட்டோடு நின்றுவிடாமல், இயற்கை வனப்பினை கொண்டாடுவதற்கும், பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் வழிபாடு செய்வதற்கும், கலையை ரசிப்பதற்கும் இந்த புஷ்கரத்தினை ஒரு காரணமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

    அதன்படி ஆற்றின் கரையோர ஆலயங்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சாமிதரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

    குறிப்பாக பாபநாசம் கோவில் முன்புள்ள இந்திர கீல தீர்த்ததில் நீராடும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதேபோல் நெல்லை அருகன்குளம் தாமிரபரணி நதிக்கரையில் ராமாயணத்தில் ஜடாயு உயிர் நீத்த ஜடாயு தீர்த்தத்திலும், சீவலப்பேரியில் தாமிரபரணி நதியுடன் மேலும் இரண்டு ஆறுகள் இணையும் முக்கூடல் தீர்த்தம் முறப்பநாடு தாமிரபரணி நதிக்கரையில் உள்ள குரு ஸ்தலமான கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது.

    நீராட வரும் பக்தர்களுக்காக மாவட்ட, உள்ளாட்சி நிர்வாகங்கள் குடிநீர், சுகாதார வசதிகளை செய்துள்ளன. இரு மாவட்ட போலீசார் 12 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். தீயணைப்பு படையினர் ரப்பர் படகுகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களுடன் ஆற்றில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளார்கள். புஷ்கரணி எனப்படும் பக்தர்கள் நீராடும் இடங்களில் ஆற்றில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது.

    இனி இப்படி ஒரு விழாவை காண இன்னும் 12 ஆண்டுகளும், மகா புஷ்கரத்தை காண 144 ஆண்டுகளும் காத்திருக்க வேண்டும். அடுத்த 12-வது ஆண்டில் புஷ்கரத்தை காண நமக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் மகா புஷ்கரம் என்பது காணக்கிடைக்காத அரிய வாய்ப்பு. இதை உணர்ந்து பலரும் ஆற்றில் புனித நீராடி , வழிபாட்டில் பங்கேற்று வருகிறார்கள்.
    ×