search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆரத்தி, மகா தீபாராதனையுடன் காவிரி புஷ்கரம் ஓராண்டு விழா நிறைவு
    X

    ஆரத்தி, மகா தீபாராதனையுடன் காவிரி புஷ்கரம் ஓராண்டு விழா நிறைவு

    காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழாவின் கடைசி நாளான நேற்று அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாய்க்கு பவுர்ணமி ஆரத்தி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
    காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறை விழா ஸ்ரீரங்கத்தில் கடந்த 21-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதையொட்டி அம்மா மண்டபம் சாலையில் உள்ள மாமுண்டி கோனார் திடலில் யாகசாலை அமைக்கப்பட்டு அங்கு கோபுரப்பட்டி பெருமாள் கோவில் உற்சவர்கள் ஆதிநாயக பெருமாள் மற்றும் ஆதிநாயகித் தாயாரை எழுந்தருள செய்தனர்.

    அங்கு தினமும் பல்வேறு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று வந்தன. முதல் நாள் காரியசித்தி, தடங்கல்கள் நீங்க ஹோமம், தொழில், விவசாயம் சிறக்க, தனவிருத்திக்கான ஸ்ரீயாகம், 2-ம் நாள் விவாஹ பிராப்தி, கல்வி, செல்வம் பெருக ஸ்ரீலட்சுமி நாராயண யாகம், 3-வது நாளான நேற்று முன்தினம்் தைரியம், வழக்குகளில் வெற்றி பெறவும் வீரலட்சுமி யாகம், நன்மக்களை பெற சந்தான யாகமும் நடைபெற்றது.

    காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழாவின் கடைசி நாளான நேற்று காலை 6 மணிக்கு திருமண தடை நீங்க, தம்பதிகள் ஒற்றுமையுடன் இருக்க, நினைத்த காரியங்களில் வெற்றிபெற, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் பெற ஸ்ரீநரசிம்ம, சுதர்சன, தன்வந்திரி யாகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு துலா காவிரி மாஹாத்மியம் பாராயணம் நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாய்க்கு பவுர்ணமி ஆரத்தி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் காவிரி தாய்க்கு மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பக்தர்கள் காவிரி ஆற்றில் மலர் தூவி வணங்கினர். இத்துடன் காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு விழா நிறைவடைந்தது.
    Next Story
    ×