என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆரத்தி, மகா தீபாராதனையுடன் காவிரி புஷ்கரம் ஓராண்டு விழா நிறைவு
Byமாலை மலர்25 Oct 2018 5:21 AM GMT (Updated: 25 Oct 2018 5:21 AM GMT)
காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழாவின் கடைசி நாளான நேற்று அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாய்க்கு பவுர்ணமி ஆரத்தி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறை விழா ஸ்ரீரங்கத்தில் கடந்த 21-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதையொட்டி அம்மா மண்டபம் சாலையில் உள்ள மாமுண்டி கோனார் திடலில் யாகசாலை அமைக்கப்பட்டு அங்கு கோபுரப்பட்டி பெருமாள் கோவில் உற்சவர்கள் ஆதிநாயக பெருமாள் மற்றும் ஆதிநாயகித் தாயாரை எழுந்தருள செய்தனர்.
அங்கு தினமும் பல்வேறு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று வந்தன. முதல் நாள் காரியசித்தி, தடங்கல்கள் நீங்க ஹோமம், தொழில், விவசாயம் சிறக்க, தனவிருத்திக்கான ஸ்ரீயாகம், 2-ம் நாள் விவாஹ பிராப்தி, கல்வி, செல்வம் பெருக ஸ்ரீலட்சுமி நாராயண யாகம், 3-வது நாளான நேற்று முன்தினம்் தைரியம், வழக்குகளில் வெற்றி பெறவும் வீரலட்சுமி யாகம், நன்மக்களை பெற சந்தான யாகமும் நடைபெற்றது.
காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழாவின் கடைசி நாளான நேற்று காலை 6 மணிக்கு திருமண தடை நீங்க, தம்பதிகள் ஒற்றுமையுடன் இருக்க, நினைத்த காரியங்களில் வெற்றிபெற, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் பெற ஸ்ரீநரசிம்ம, சுதர்சன, தன்வந்திரி யாகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு துலா காவிரி மாஹாத்மியம் பாராயணம் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாய்க்கு பவுர்ணமி ஆரத்தி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் காவிரி தாய்க்கு மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பக்தர்கள் காவிரி ஆற்றில் மலர் தூவி வணங்கினர். இத்துடன் காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு விழா நிறைவடைந்தது.
அங்கு தினமும் பல்வேறு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று வந்தன. முதல் நாள் காரியசித்தி, தடங்கல்கள் நீங்க ஹோமம், தொழில், விவசாயம் சிறக்க, தனவிருத்திக்கான ஸ்ரீயாகம், 2-ம் நாள் விவாஹ பிராப்தி, கல்வி, செல்வம் பெருக ஸ்ரீலட்சுமி நாராயண யாகம், 3-வது நாளான நேற்று முன்தினம்் தைரியம், வழக்குகளில் வெற்றி பெறவும் வீரலட்சுமி யாகம், நன்மக்களை பெற சந்தான யாகமும் நடைபெற்றது.
காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழாவின் கடைசி நாளான நேற்று காலை 6 மணிக்கு திருமண தடை நீங்க, தம்பதிகள் ஒற்றுமையுடன் இருக்க, நினைத்த காரியங்களில் வெற்றிபெற, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் பெற ஸ்ரீநரசிம்ம, சுதர்சன, தன்வந்திரி யாகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு துலா காவிரி மாஹாத்மியம் பாராயணம் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாய்க்கு பவுர்ணமி ஆரத்தி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் காவிரி தாய்க்கு மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பக்தர்கள் காவிரி ஆற்றில் மலர் தூவி வணங்கினர். இத்துடன் காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு விழா நிறைவடைந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X