என் மலர்
நீங்கள் தேடியது "தாமிரபரணி புஷ்கரம்"
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்டு மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி எம்.சத்திய நாராயணன் ஒத்திவைத்து உத்தரவிட்டார். அநேகமாக நாளை தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குற்றாலம் வந்து சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். 18 பேரில் சிலர் வெளிநாடு செல்ல முடிவு செய்திருந்து தெரியவந்ததால், தீர்ப்பு வரும் வரை தமிழ்நாட்டில் இருக்கும்படி டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். அதன்படி குற்றாலம் வந்து தங்கியிருக்கின்றனர்.

மேலும், அமைச்சர் ஜெயக்குமார் தொடர்புடைய ஆடியோ வெளியானதில் அமமுகவுக்கு தொடர்பு இருப்பதாக ஜெயக்குமார் கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு, அந்த ஆடியோவுக்கும் அமமுக-வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.
தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என டிடிவி தரப்பினர் மிகுந்த நம்பிக்கையில் உள்ளனர். அவ்வாறு தீர்ப்பு வந்தால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்படும். அவர்கள் தரப்பில் இருந்து தொடர்பு கொள்வதை தவிர்க்கும் வகையில் குற்றாலம் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் பிளவு ஏற்பட்டபோது, எம்எல்ஏக்கள் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியிருந்ததுபோன்று இப்போது தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் முகாமிட்டிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #DisqualifiedMLAs #ThangaTamilSelvan
நேற்று 5-வது நாளிலும் ஏராளமான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் பல்வேறு இடங்களில் புனித நீராடி, ஆற்றுக்கு தீப ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
இந்த நிலையில் பாபநாசத்தில் தமிழ்நாடு ஐயப்ப சேவா சமாஜத்தை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் நேற்று அதிகாலையில் குவிந்தனர். அவர்கள் ஐயப்ப சுவாமி சிலைக்கு பூஜைகள் நடத்தி தாமிரபரணி ஆற்றில் நீராட்டு நடத்தினர். ஐயப்ப சுவாமி சிலையுடன் ஏராளமான ஐயப்ப பக்தர் கள் அங்கு புனித நீராடினர்.

நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டப படித்துறையில் ஏராளமான பக்தர்கள் வரிசையாக வந்து நீராடினர். அங்குள்ள தைப்பூச மண்டபத்தில் மறைந்த காஞ்சி ஜெயேந்திர சரசுவதி சுவாமி ஆசி வழங்குவது போல் மெழுகு சிலை வைக்கப்பட்டிருந்தது. அதனை பக்தர் கள் வணங்கி சென்றனர்.
குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறையில் நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். மேலும் அவர்கள் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு, குறுக்குத்துறை மேட்டில் நடைபெற்ற யாகசாலை பூஜையிலும் கலந்து கொண்டனர்.
இதேபோல் அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் அருகில் உள்ள ஜடாயு துறை மற்றும் மணிமூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் முன்பும் பக்தர்கள் புனித நீராடினர். சிந்துபூந்துறை சிப்தபுஷ்ப தீர்த்த கட்டத்திலும் ஏராளமானோர் புனித நீராடி தாமிரபரணி அன்னையை வணங்கினார்கள்.
பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி துர்க்காம்பிகை கோவிலில் நேற்று காலை வைரவ ஹோமமும், வடுகு பூஜையும் நடைபெற்றது. பின்னர் கோவிலில் இருந்து ஊர்வலமாக பக்தர் கள் தாமிரபரணி ஆற்றுக்கு வந்தனர். அங்கு கும்பம் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றுக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் 7 சிவாச்சாரியார்கள் தலைமையில் சிறப்பு தீப ஆரத்தி எடுக்கப்பட்டது. பின்னர் ஆற்றில் தீபம் ஏற்றி விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. வெளியூர்களில் இருந்து நெல்லைக்கு வந்த ரெயில்கள், பஸ்களில் ஏராளமான மக்கள் வந்தனர். இதுதவிர கார், வேன்களிலும் ஏராளமானோர் வந்தனர்.

இதுதவிர பலர் ஆற்றில் பரவலாக அனைத்து இடங்களிலும் குளித்தனர். தாமிரபரணி ஆற்றில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காட்சி அளித்தது. ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவு மக்கள் வந்திருந்தனர்.
கூட்ட நெரிசல் காரணமாக தாமிரபரணி ஆற்றில் பாதுகாப்பு நடவடிக்கையாக தண்ணீர் திறப்பு அளவு குறைக்கப்பட்டது. தைப்பூச மண்டப படித்துறையில் நேற்று காலை வேத பாராயணம், ஹோமங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து பன்னிரு திருமுறை பாராயணம் நடைபெற்றது.
மேலதிருவேங்கடநாதபுரம் தாமிரபரணி ஆற்றில் உள்ள சீனிவாச தீர்த்த கட்டத்தில் நேற்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இங்கு பக்தர்கள் புனிதநீராடி சீனிவாச பெருமாள் கோவிலில் தரிசனம் செய்தனர்.
தாமிரபரணி ஆற்றில் உள்ள தீர்த்தகட்டங்கள் பகுதியில் நேற்று கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னை:
நெல்லை மாவட்டம், தென்காசியை சேர்ந்தவர் ஈஸ்வரன் சித்தா. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நெல்லை மாவட்டம், தாமிரபரணியில் 12-ந்தேதி முதல் புஷ்கரம் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில், கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் புகுந்து பிரச்சினையை ஏற்படுத்தலாம்.
எனவே, நெல்லை மாவட்ட கலெக்டர் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் கொண்ட ஒரு கமிட்டியை உருவாக்கி, தகுந்த பாதுகாப்பை புஷ்கரம் நிகழ்ச்சிக்கு வழங்கவேண்டும் என்று உத்தரவிடவேண்டும்“ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் எம்.மகாராஜா, "நாத்திகர்கள் பிரச்சினை செய்ய வருவார்கள் என்று மனுதாரர் கற்பனை மற்றும் யூகத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டுகிறார். அவரிடம் அது தொடர்பான ஆதாரம் எதுவும் இல்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்" என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கற்பனை, யூகம் அடிப்படையில் பொதுநல வழக்கு தொடர கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு பல வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்வதுடன் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம் என்று உத்தரவிட்டனர். #ThamirabaraniMahaPushkaram #Highcourt
தாமிரபரணி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் விசுவ இந்து பரிஷத் சார்பில் நடந்த புஷ்கரம் விழிப்புணர்வு ரத யாத்திரையை தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்துக்கள் விழாக்களுக்கு, சமயம் சார்ந்த பூஜைகளுக்கு தடை விதிப்பதும் அதற்காக போராடுவதும் சிறை செல்வதும் வழக்கமாகி விட்டது. தமிழகத்தில் இந்த சூழ்நிலை மாற வேண்டும். இந்த காலகட்டத்தில் இந்து சமய விழாக்கள் அனைத்திற்கும் தமிழகஅரசு தடையாக உள்ளது இந்த நிலை மாறவேண்டும். இந்துக்களுக்கு தமிழக அரசு அங்கீகாரம் அளித்து முன்னுரிமை அளிக்க வேண்டும்.
பல்வேறு பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களாக இருந்தவர்கள் தற்பொழுது ஊழல் குற்றச்சாட்டுகளில் விசாரணையில் உட்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தமிழக அரசின் கடமையே தவிர ஆட்சியில் இல்லாத எங்களிடம் ஆதாரம் கேட்பது நியாயமா?
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தாமிரபரணி புஷ்கரம் குறித்த சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இதில் ராஜேந்திரன், தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன், பா.ஜனதா திருவள்ளூர் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய் கணேஷ், விசுவ இந்து பரிஷத் மாநில தலைவர் வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #BJP #TamilisaiSoundararajan #ThamirabaraniMahaPushkaram
காந்தி, லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாள், காமராஜர் நினைவு நாள் மற்றும் புஷ்கர விழாவை முன்னிட்டு பா.ஜ.க. சார்பாக நெல்லை சந்திப்பு தைப்பூச மண்டபம் அருகே தாமிரபரணி கரையோரம் தூய்மை படுத்தும் பணி இன்று நடைபெற்றது. இதனை மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து தைப்பூச மண்டபத்தை சுற்றி பார்த்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தாமிரபரணி மகா புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு பிறகு கொண்டாடப்பட இருக்கிறது. எனவே இதை சிறப்பாக நடத்த இந்து சமய மடாதிபதிகளும், சமய வல்லுனர்களும் முயற்சி எடுத்து வருகின்றனர். பிரதமர் மோடி விருச்சிக ராசியில் பிறந்தார்.
எனவே இந்த ராசியில் வரும் தாமிரபரணி புஷ்கரத்தை சிறப்பாக கொண்டாட பா.ஜ.க. சார்பாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தைப்பூச மண்டபம் மற்றும் குறுக்குத்துறை ஆகியவற்றில் புஷ்கர விழா நடத்த பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு தடை விதித்துள்ளது.
ஆனால் இங்கு தடை செய்வதற்கான காரணம் எதுவும் இல்லை. இது பலம் வாய்ந்த மண்டபமாக உள்ளது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து கொள்ளலாம். சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த பகுதியில் மட்டும் நீராடலாம். இது ஆன்மீக விழா.
இந்த விழாவுடன் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் பலியான சம்பவத்தை ஒப்பிட்டு பேசுவது தவறு.
விழா தொடங்க சில நாட்களே உள்ளது. அரசு இதுவரை எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை. எனவே இந்த பகுதியில் சுத்தப்படுத்தும் பணியை நாங்களே தொடங்கியுள்ளோம்.
மாநில அரசு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். இதுபோல சிறப்பு ரெயில், விமானங்களை இயக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அரசு உடனடியாக தைப்பூச மண்டபம், குறுக்குத்துறையில் விழா கொண்டாட விதித்த தடையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும். மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் புஷ்கர விழாவை மாநில அரசே நடத்தியது. எனவே இதை அரசு விழாவாக நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #ThamirabaraniPushkaram
சிவகிரி:
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் 303-வது பிறந்த நாளை முன்னிட்டு சிவகிரி அருகே உள்ள நெற்கட்டும் செவலில் உள்ள மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெற்கட்டும் செவலில் உள்ள பூலித்தேவன் மணி மண்டபத்தை பராமரிக்க ஏற்கனவே தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் விழா சிறப்பாக நடத்த அரசு முழு ஆதரவு வழங்கும்.
அடுத்த மாதம் நெல்லையில் நடைபெறும் தாமிரபரணி புஷ்கர விழா நிகழ்ச்சியை அரசு விழாவாக நடத்த பரிசீலனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






