search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt Festival"

    அரசு விழாக்கள் மற்றும் கூட்டங்களில் அசைவ உணவுக்கு தடை விதிக்கக்கோரி பாஜக எம்பி பாராளுமன்றத்தில் தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளார். #WinterSession #PrivateMembersBill
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அரசு தாக்கல் செய்த பல்வேறு மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், தனி நபர் சார்பிலும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மக்களவையில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    மேற்கு டெல்லி தொகுதி பாஜக எம்பி பர்வேஷ் சாகிப் சிங் தாக்கல் செய்துள்ள தனி நபர் மசோதாவில், அரசு விழாக்கள் மற்றும் கூட்டங்களின்போது அசைவ உணவு வழங்குவதை தடை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதேபோல், அரசு சின்னங்கள் (இலச்சினைகள்) மற்றும் பெயர்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் சட்டத்தில் திருத்தம் கேட்டு மற்றொரு மசோதாவும் தாக்கல் செய்துள்ளார்.


    விளையாட்டு மோசடிகளை தடுத்து அபராதம் விதிக்கவும், ஆன்லைன் கேம்களை கட்டுப்படுத்தவும் பயனுள்ள அமைப்பை உருவாக்க கோரி காங்கிரஸ் எம்பி சசி தரூர் தனி நபர் மசோதா தாக்கல் செய்துள்ளார்.

    வேலை நேரத்திற்குப் பிறகும், விடுமுறை தினங்களிலும் வேலை தொடர்பாக வரும் தொலைபேசி அழைப்புகளை ஏற்க மறுப்பதற்கு உரிமை அளிக்கும் வகையில், தொழிலாளர் நல ஆணையத்தை உருவாக்க கோரி தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி சுப்ரியா சுலே ஒரு மசோதா தாக்கல் செய்துள்ளார்.

    எல்ஜிபிடி சமூகத்தினருக்கு ராணுவத்தில் சம உரிமை வழங்கும் வகையில் ராணுவச் சட்டத்தில் திருத்தம் கோரி பாஜக எம்பி ஜகதாம்பிகா பால் மசோதா தாக்கல் செய்துள்ளார்.

    மக்களவையில் நேற்று மட்டும் 85க்கும் மேற்பட்ட தனிநபர் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #WinterSession #PrivateMembersBill
    தாமிரபரணி புஷ்கர விழாவை அரசு விழாவாக கொண்டாட அறிவிக்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். #BJP #TamilisaiSoundararajan #ThamirabaraniMahaPushkaram
    திருவொற்றியூர்:

    தாமிரபரணி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் விசுவ இந்து பரி‌ஷத் சார்பில் நடந்த புஷ்கரம் விழிப்புணர்வு ரத யாத்திரையை தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி புஷ்கரம் விழா வருகிற 11-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழக அரசு அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.


    தாமிரபரணி புஷ்கர விழாவை அரசு விழாவாக கொண்டாட அறிவிக்க வேண்டும். இதில் முதல்- அமைச்சர் பங்கேற்க வேண்டும். இந்த விழாவுக்கு மத்திய ரெயில்வே அமைச்சர் சிறப்பு ரெயில்களை ஏற்பாடு செய்து உள்ளார். அதே போன்று தமிழக அமைச்சரும் நெல்லை மாவட்டத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்துக்கள் விழாக்களுக்கு, சமயம் சார்ந்த பூஜைகளுக்கு தடை விதிப்பதும் அதற்காக போராடுவதும் சிறை செல்வதும் வழக்கமாகி விட்டது. தமிழகத்தில் இந்த சூழ்நிலை மாற வேண்டும். இந்த காலகட்டத்தில் இந்து சமய விழாக்கள் அனைத்திற்கும் தமிழகஅரசு தடையாக உள்ளது இந்த நிலை மாறவேண்டும். இந்துக்களுக்கு தமிழக அரசு அங்கீகாரம் அளித்து முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    பல்வேறு பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களாக இருந்தவர்கள் தற்பொழுது ஊழல் குற்றச்சாட்டுகளில் விசாரணையில் உட்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தமிழக அரசின் கடமையே தவிர ஆட்சியில் இல்லாத எங்களிடம் ஆதாரம் கேட்பது நியாயமா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தாமிரபரணி புஷ்கரம் குறித்த சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இதில் ராஜேந்திரன், தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன், பா.ஜனதா திருவள்ளூர் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய் கணேஷ், விசுவ இந்து பரி‌ஷத் மாநில தலைவர் வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #BJP #TamilisaiSoundararajan #ThamirabaraniMahaPushkaram
    தைப்பூச மண்டபம், குறுக்குத்துறையில் தடையை நீக்கி தாமிரபரணி புஷ்கரத்தை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று நெல்லையில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #ThamirabaraniPushkaram
    நெல்லை:

    காந்தி, லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாள், காமராஜர் நினைவு நாள் மற்றும் புஷ்கர விழாவை முன்னிட்டு பா.ஜ.க. சார்பாக நெல்லை சந்திப்பு தைப்பூச மண்டபம் அருகே தாமிரபரணி கரையோரம் தூய்மை படுத்தும் பணி இன்று நடைபெற்றது. இதனை மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து தைப்பூச மண்டபத்தை சுற்றி பார்த்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தாமிரபரணி மகா புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு பிறகு கொண்டாடப்பட இருக்கிறது. எனவே இதை சிறப்பாக நடத்த இந்து சமய மடாதிபதிகளும், சமய வல்லுனர்களும் முயற்சி எடுத்து வருகின்றனர். பிரதமர் மோடி விருச்சிக ராசியில் பிறந்தார்.

    எனவே இந்த ராசியில் வரும் தாமிரபரணி புஷ்கரத்தை சிறப்பாக கொண்டாட பா.ஜ.க. சார்பாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தைப்பூச மண்டபம் மற்றும் குறுக்குத்துறை ஆகியவற்றில் புஷ்கர விழா நடத்த பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு தடை விதித்துள்ளது.

    ஆனால் இங்கு தடை செய்வதற்கான காரணம் எதுவும் இல்லை. இது பலம் வாய்ந்த மண்டபமாக உள்ளது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து கொள்ளலாம். சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த பகுதியில் மட்டும் நீராடலாம். இது ஆன்மீக விழா.

    இந்த விழாவுடன் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் பலியான சம்பவத்தை ஒப்பிட்டு பேசுவது தவறு.

    விழா தொடங்க சில நாட்களே உள்ளது. அரசு இதுவரை எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை. எனவே இந்த பகுதியில் சுத்தப்படுத்தும் பணியை நாங்களே தொடங்கியுள்ளோம்.

    மாநில அரசு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். இதுபோல சிறப்பு ரெயில், விமானங்களை இயக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அரசு உடனடியாக தைப்பூச மண்டபம், குறுக்குத்துறையில் விழா கொண்டாட விதித்த தடையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும். மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் புஷ்கர விழாவை மாநில அரசே நடத்தியது. எனவே இதை அரசு விழாவாக நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #ThamirabaraniPushkaram

    ×