search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மீன ராசியில் இருந்து மேஷத்திற்கு பெயர்ச்சி: குருவித்துறையில் 22-ந் தேதி குருப்பெயர்ச்சி விழா
    X

    குருவித்துறை குருபகவான் மற்றும் சக்கரத்தாழ்வார்.

    மீன ராசியில் இருந்து மேஷத்திற்கு பெயர்ச்சி: குருவித்துறையில் 22-ந் தேதி குருப்பெயர்ச்சி விழா

    • 22-ந் தேதி முதல் மூன்று நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும்.
    • கோவிலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரதவல்லப பெருமாள் கோவில் மிகவும் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு சித்திர ரத வல்லப பெருமாளை நோக்கி குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக இருக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார். ஒவ்வொரு குருப்பெயர்ச்சி அன்றும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது முன்னிட்டு குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக 3 நாட்கள் நடைபெறும்.

    இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து குரு பகவானைத் தரிசித்து செல்வார்கள்.

    இந்த நிலையில் வருகிற 20-ந் தேதி வியாழக்கிழமை காலை 10.45 அளவில் லட்சார்ச்சனை தொடங்குகிறது. 22-ந் தேதி சனிக்கிழமை மதியம் 12 மணி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும். இரவு 9 மணி அளவில் யாகசாலை தொடங்கி 11.24 மணிக்குள் பரிகார மகா யாகம், மகாபூர்ணாகுதி, திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    குருப்பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு பரிகாரம் செய்யவேண்டும். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் பாலமுருகன், தக்கார் இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன், சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம், தீயணைப்பு நிலைய அலுவலர் ரூபன் ஆகியோர் குருப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×