search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gundam Festival"

    • பக்தர்கள் குண்டத்தில் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    • இரவு கம்பம் பிடுங்குதல் நடக்கிறது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே கணக்கம்பாளையம் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலின் குண்டம் திருவிழாவையொட்டி இன்று அதிகாலை 4 மணியளவில் அம்மை அழைப்பு, அம்பாள் ஊஞ்சலாடுதல் மற்றும் அக்னி கும்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் சுமார் 7 மணியளவில் குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. 60 அடி குண்டத்தில் பூசாரி பவுன் என்கிற பழனிச்சாமி மாலை அணிந்து முதலில் தீ மிதித்தார்.

    அதனை தொடர்ந்து ஆண்கள், பெண்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டத்தில் தீ மிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    மேலும் குண்டம் திருவிழாவில் கணக்கம்பா ளையம், பெருமுகை, கொண்டையம்பாளையம் ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு மாரியம்மன் மாவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு அம்மை அழைத்து கம்பம் பிடுங்குதல் மற்றும் அபிஷேக ஆராதனை நடக்கிறது.

    • கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா வருகிற 4-ந் தேதி நடைபெ றுகிறது.
    • இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.

    பெருமாநல்லூர் :

    பெருமாநல்லூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கொண்ட த்துக்காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்தி ருவிழா வருகிற 4-ந் தேதி நடைபெ றுகிறது. இவ்விழாவை முன்னிட்டு தற்போது தமிழக அரசின் இந்து சமய அறநிலைய த்துறை சார்பில் கோவில் முன்புறம் கூடாரம் அமைத்தல் உள்பட பல முன்னேற்பாடு வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது.இன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. இன்று இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து 10 மணிக்கு கிராம சாந்தியும், இரவு 11 மணிக்கு குண்டம் விழாவின் கொடியேற்றம் அதைத் தொடர்ந்து காப்பு கட்டுதல், அஷ்டதிக் பாலகர் வழிபாடு, அம்மன் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    நாளை 30ந் தேதி காலை 7.30 மணிக்கு அம்மன் திருவீதி உலா, இரவு 7 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, காமதேனு வாகனத்தில் அம்மன் புற ப்பாடு, மண்டபக்கட்டளை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தொடர்ந்து வருகிற 8-ந்தேதி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள். விழாவை யொட்டி போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பெருமாநல்லூர் போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் செய்யப்பட்டு வருகிறது.

    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆய்வு மேற்கொண்டார்.
    • 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதை யொட்டி தினமும் அம்மனு க்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடந்து வருகிறது.

    விழாவையொட்டி பண்ணாரியம்மன் சப்பரம் திருவீதி உலா தொடங்கி சத்தியமங்கலத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்க ளில் நடந்து வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.

    இதனையடுத்து குண்டம் விழா வரும் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி அதிகாலை நடக்கிறது. இந்த நிலையில் குண்டம் விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிர ண்டு சசிமோகன் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:

    பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் தமிழகம், கர்நாடக பக்தர்கள் சுமார் 4 லட்சம் பேர் பங்கறேர்பார்கள். இதனால் இந்தாண்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    குண்டம் இறங்கும் பக்தர்க ளுக்கு தனி வழியும், சாமி தரிசனம் செய்யும் பக்தர்களு க்கு தனி வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக 15 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்க ப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    குண்டம் திருவிழாவை யொட்டி 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாளவாடி மல்லிகார்ஜுனா சுவாமி கோவில் குண்டம் திருவிழா நடைபெற்றது.
    • பூசாரிகள் 5 பேர் மட்டும் குண்டம் இறங்கினர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மல்லிகார்ஜுனா சுவாமி கோவில் குண்டம் திருவிழா நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு வில்வர்ச்சனையுடன் விழா தொடங்கியது.

    அதை தொடர்ந்து இரவு மல்லிகார்ஜுனா சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்ய–பட்டு மலர்களால் அலங்க–ரிக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் சாமி உற்சவர் சிலை மேளதாளங்களுடன் ஆற்றாங்கறைக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து முக்கிய வீதிகளில் வீதி உலாவாக ஒசூர் ரோடு, தலமலை ரோடு, சத்திரோடு வழியாக எடுத்து செல்லப் பட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

    பின்னர் கோவில் முன்பு அமைக்கப் பட்டு இருந்த குண்டத்தில் பூசாரிகள் 5 பேர் மட்டும் குண்டம் இறங்கினர்.

    அதேபோல் தொட்டகாஜணூர் மண்டேசாமி கோவில் குண்டம் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு புலி ஆட்டத்துடன் விழா தொடங்கியது.

    இக்கோவிலில் மண்டேசாமி, பீரேஸ்வரசாமி, லட்சுமிதேவி, மாரியம்மன், சவுடேஸ்வரி, மசனம்மாள், ராக்காயி அம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளன.

    இரவு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து மலர்களால் அலங்கரிக்கபட்டு இருந்தது. பின்னர் மேளாதாளங்களுடன் சுவாமிகள் வீதி உலாவாக எடுத்து செல்லப்பட்டது.

    பின்னர் ஆற்றாங்கரை சென்று சிறப்பு பூஜைகள் செய்ய ப்பட்டு மேளதாளம் முழங்க தொட்டகாஜணூர் அனைத்து வீதிகளில் திரு வீதி உலாவாக எடுத்து செல்லப்பட்டது.

    அப்போது பக்தர்கள் சுவாமிக்கு மாலை அணிவித்து தேங்காய், பழம் உடைத்து வழிபட்டனர். ஆர்.சி. வீதியில் 400 கிலோ பூக்களால் மலர் பாதத்தில் சுவாமிகளை அழைத்து சென்றனர்.

    காலை 9 மணியளவில் சுவாமிகள் கோவிலை வந்தடைந்தது. பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த 30 அடி உள்ள குண்டத்தில் 7 பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினர்.

    பக்தர்கள் யாரும் குண்டம் இறங்க அனுமதி இல்லை. பக்தர்கள் குண்டத்தை தொட்டு கும்பிட்டனர் .

    விழாவில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர், மைசூர், சிக்கொலா, அட்டுகுளிபுரம் என பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தாளவாடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வடிவேல்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
    • ஆண், பெண் பக்தர்கள் நடனமாடி கொண்டாடினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக நள்ளிரவு 1 மணியளவில் கோவில் பூசாரிகள் மற்றும் பக்தர்கள்ஊர்வலமாக அருகில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றனர்.

    பின்னர் அங்கு உள்ள சிவலிங்கத்துக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சருகு மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு மாரியம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்தனர்.

    பின்னர் பக்தர்கள் புடைசூழ கோவில்பூசாரிகள் ஊர்வலமாக வந்து பண்ணாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    முன்னதாக இதில் கலந்து கொண்ட ஆண், பெண் பக்தர்கள் நடனமாடி கொண்டாடினர்.

    • பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    • அடிப்படை வசதிகள் செய்து தருவது உட்பட பல்வேறு பாதுகாப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கோபி:

    சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி யம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா மிகவும் விமர்சையாக நடந்து வருகிறது.

    இந்த விழாவில் ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமி ன்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். இதையொட்டி சத்திய மங்கலம், கோபிசெட்டி பாளையம், பவானி உள்பட மாவட்டத்தின் பல பகுதி களில் இருந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    இந்த நிலையில் இந்தாண்டுக்கான குண்டம் விழா நடத்து வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதையொட்டி பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நட வடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் வரு வாய்துறை, போலீஸ், வன த்துறை, அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, சுகா தாரத்துறை, போக்கு வரத்துதுறை உட்பட பல்வேறு துறை சார்ந்த அதி காரிகள் கலந்து கொண்ட னர்.

    இதில் கார், இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இட வசதி, கண்காணிப்பு கோபுரம் அமைப்பது, வாகப் போக்குவரத்தை திருப்பி விடுவது, கூட்ட த்தைக் கட்டுப்படுத்துவது, குண்டம் இறங்கும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் செய்து தருவது உட்பட பல்வேறு பாதுகாப்பு கள் குறித்து விவாதிக்க ப்பட்டது.

    இக்கூட்டத்தில் சத்தியமங்கலம் ஏ.எஸ்.பி. ஐமன் ஜமால், தாசில்தார் சங்கர் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    • பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டு, கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இன்று அதிகாலை குண்டம் இறங்கும் விழா நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி (மாசி 9) பூச்சாட்டு, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து கடந்த 5-ந் தேதி அம்மனுக்கு பால் அபிஷேகமும், 6-ந் தேதி அக்னி கபாலமும் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. பின்னர் பூ மிதித்தல் எனப்படும் குண்டம் இறங்கும் விழா காலை 5 மணிக்கு நடைபெற்றது. முதலில் தலைமை பூசாரி பிரதீப் குண்டம் இறங்கினர்.

    தொடர்ந்து கங்கணம் கட்டி விரதமிருந்த ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், சிறுவர், சிறுமியர்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

    இதில் கோவை, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல் உள்பட ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் 4 நாட்களாக வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    இதனைத்தொடர்ந்து இரவு பத்திரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் நகர் வலமும், நாளை மறு பூஜையும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் தங்காயம்மள் செய்திருந்தார்.

    குண்டம் விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • 100-க்கும் ேமற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • இந்த திருவிழாவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 8 ஊர் சேர்ந்த மக்கள் கலந்து கொள்வார்கள்.

    அரவேணு,

    கோத்தகிரி அருகே ஜக்கனாரை கிராமத்தில் இருந்து ஜெடையலிங்கா சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் இறுதி அல்லது மார்ச் மாத முதல் வாரத்தில் நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழாவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 8 ஊர் சேர்ந்த மக்கள் கலந்து கொள்வார்கள். அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி கடந்த நவம்பர் மாதத்தில் ஜக்கனாரை ஊர் பிரமுகர்கள் ஜெடையலிங்க சுவாமி கோவிலுக்கு சென்று, அங்குள்ள வளாகத்தில் வளர்ந்திருந்த நகா மரத்தை வெட்டி, பூக்குண்டத்திற்கு பயன்படுத்துவதற்காக அதே பகுதியில் காய வைத்துவிட்டு வந்தனர். இந்த மரத்தின் விறகை மட்டுமே குண்டம் திருவிழாவிற்கு பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.

    இதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே குண்டத்தில் இறங்குவதற்காக கோவில் பூசாரி உள்பட பக்தர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கடும் விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து விழாவை நடத்த சுவாமியிடம் அனுமதி பெற்று ஜக்கனாரை கிராமத்தில் உள்ள தெவ்வமனை ஹிரியோடையா கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கடந்த 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை 8 ஊர்களுக்கு சுவாமி ஊர்வலமாக உலா சென்றார்.

    அங்கு வீடு, வீடாக பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் நேற்று அதிகாலை ஜெடையலிங்கா சுவாமி கோவில் மற்றும் அதன் அருகே உள்ள ரங்கநாதர் கோவிலுக்கு விரதம் இருந்த பக்தர்கள் சென்று சிறப்பு பூஜைகளை செய்தனர். தொடர்ந்து குண்டம் இறங்குவதற்காக அமைக்கப்பட்ட இடத்தில் நகா மரத்தின் விறகுகளை வைத்தனர். இதைத்தொடர்ந்து குரும்பர் இன மக்கள் ஜெடையலிங்கா சுவாமி கோவிலுக்கு வந்து, குண்டம் இறங்க உள்ள இடத்தில் கற்களை உரசி விறகுகளில் தீ மூட்டினர். அதாவது குண்டத்திற்கு தீ மூட்டுவதற்கு தீப்பெட்டியை பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பின்னர் குரும்பர் இன மக்கள் தங்களது பாரம்பரிய இசை கருவிகளை வாசித்து பூஜைகள் செய்தனர். தொடர்ந்து குண்டம் இறங்குவதற்கு பக்தர்கள் தயாராக இருந்தனர். அப்போது காலநிலை சற்று மாறி சில நிமிடங்கள் மட்டும் பலத்த காற்று வீசினால் மட்டுமே சுவாமி குண்டம் இறங்க அனுமதி அளித்ததாக ஐதீகம். அதன்படி பலத்த காற்று வீசியது. தொடர்ந்து முதலில் பூசாரியும், அவரை தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்களும் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.

    • கொண்டத்து காளியம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
    • கோவில் செயல் அலுவலர் காளிமுத்து மற்றும் தக்கார் பெரிய மருதுபாண்டி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு கொண்டத்து காளியம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா வருகிற ஏப்ரல் மாதம் 4-ந் தேதி நடக்கிறது.

    முன்னதாக வருகிற மார்ச் மாதம் 7-ந்தேதி சகுனம் கேட்டலும், மார்ச் 24-ந்தேதி தேர்முகூர்த்தம் மற்றும் ஆயக்கால் நடல், மார்ச் 29-ந்தேதி கிராமசாந்தி, கொடியேற்றம், ஏப்ரல் மாதம் 2-ந்தேதி மஞ்சள் நீர் மற்றும் பொங்கல், 3-ந்தேதி குண்டம திறந்து பூ போடுதல், விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் 4-ந்தேதி அதிகாலை 4 மணிக்கும், மாலை 3.30 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. ஏப்ரல் 8-ந்தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவுபெறுகிறது. இத்தகவலை கோவில் செயல் அலுவலர் காளிமுத்து மற்றும் தக்கார் பெரிய மருதுபாண்டி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
    • கொடிக்கம்பம் கோவில் வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டு, பூக்களால் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    ஆனைமலை,

    ஆனைமலையில் தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று காலை ஆழியாற்றங்கரைக்கு பக்தர்கள் கம்பத்தை எடுத்து சென்று, அங்கு வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் ஆனைமலை போலீஸ் நிலையம் வீதி வழியாக ஊர்வலமாக வாண வேடிக்கைகளுடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொடி கம்பத்தை தோளில் சுமந்துகோவிலுக்கு கொண்டு வந்தனர்.இதைத்தொடர்ந்து அம்மன் அருளாளி பச்சரிசி மற்றும் மஞ்சள் கலந்த விபூதியை பக்தர்களுக்கு வழங்கினார். பின்னர் கொடிக்கம்பம் கோவில் வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டு, பூக்களால் அலங்கரித்து சிறப்பு பூஜை கள் செய்யப்பட்டது.

    பின்னர் கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி கட்டப்பட்டது. தொடர்ந்து மேள, தாளம், சேகண்டி முழங்க, சங்கு நாதம், ஆலய மணி ஒலிக்க வாண வேடிக்கையுடன் கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி கம்பம் கோவில் வளாகத்தில் நடப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. இதை கண்ட பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்தில் கோஷமிட்டனர்.

    வருகிற 25- ந்தேதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி கண்ணபிரான் தூது, சாமி புறப்பாடு, குண்டத்து காட்டில் விஸ்வரூப தரிசனம், 6-ந் தேதி இரவு அம்மன் ஆபரணம் பூணுதல், அரவான் சிரசு, 7-ந் தேதி காலை குண்டம் கட்டுதல், அலங்கார திருத்தேர் வடம் பிடித்தல், குண்டம் பூ வளர்த்தல் நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபடுதல் 8-ந் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது. பின்னர் 9-ந் தேதி திருத்தேர் நிலை நிறுத்துதல், ஊஞ்சல் உற்சவம், பட்டாபிஷேகம், 10-ந்தேதி மஞ்சள் நீராடுதல், போர் மன்னன் காவு ஆகியவை நடக்கிறது.

    • மகாசிவராத்திரி, மயான பூஜை, சக்தி விந்தை அலகு தரிசனம், மாவிளக்கு நடைபெற்றது.
    • ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு,மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

    பல்லடம் :

    பல்லடத்தில் புகழ்பெற்ற அங்காளம்மன் கோவில் 48வது குண்டம் திருவிழா கடந்த 17-ந் ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கிராம சாந்தியுடன் துவங்கியது. தொடர்ந்து கொடியேற்றம், யாகசாலை பூஜை, மகாசிவராத்திரி, மயான பூஜை, சக்தி விந்தை அலகு தரிசனம், மாவிளக்கு நடைபெற்றது.

    இந்தநிலையில் நேற்று மாலை அக்னி குண்டம் வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது 2 அடி அகலம்,45 அடி நீளம் கொண்ட குண்டத்தில்,வேப்பமரங்களை போட்டு அக்னி வளர்க்கப்பட்டது.சுமார் 10 மணி நேரம் அக்னி வளர்த்து குண்டம் தயார் செய்யப்பட்டது. இதில் இன்று காலை 7 மணிமுதல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் கோவில் பூசாரிகள்,மற்றும் நிர்வாகிகள் குண்டத்தில் இறங்கினர்.

    பின்னர் ஓம்சக்தி,பாரசக்தி என்று கோஷமிட்டபடி கைகுழந்தைகளுடன் பெண்கள், சிறுவர்கள், உள்பட ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி அங்காளம்மனை வழிபட்டனர். பின்னர் காலை 8 மணிக்கு அக்னி அபிஷேகம்,பொங்கல் வைத்தல்,பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது.

    குண்டம் திருவிழாவை முன்னிட்டு முப்பெரும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் அன்னதானம் வழங்கினர். குண்டம் திருவிழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு,,மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். பல்லடம் போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

    • எல்லை மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.
    • குண்டம் இறங்குவதற்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி முத்தூர் ரோடு அருகே அமைந்துள்ள எல்லை மாகாளியம்மன் கோவில் பொங்கல், பூச்சாட்டு, குண்டம் விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்குவதற்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதனையடுத்து இன்று அதிகாலை சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கொடுமுடி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து சிவகிரி நான்கு ரத வீதி வழியாக வந்து எல்லை மாகாளியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து குண்டம் அமைக்கப்பட்டு மாலை 4 மணி அளவில் குண்டம் இறங்கும் விழா நடைபெற உள்ளது. இரவு அம்மன் சிங்க வாகனத்தில் சிவகிரி நான்கு ரத வீதி வழியாக மேளதாளம், கரகாட்டத்துடன் வீதி உலா நடைபெறும்.

    இதனையடுத்து நாளை அதிகாலை முதல் மாவிளக்கு பூஜை மற்றும் அக்னி சட்டி, கும்ப ஊர்வலம் நடைபெற உள்ளது. தொடர்ந்து நாளைமறுநாள் அம்மன் திருமஞ்சன திருவீதி உலா நடைபெற உள்ளது.

    திருவிழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×