search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pannariamman temple"

    • தமிழ் புத்தாண்டையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    பவானி:

    தமிழ் புத்தாண்டையொட்டி இன்று அதிகாலை முதலே பக்தர்கள் அதிகளவில் கோவில்களுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழ் புத்தாண்டை யொட்டி சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அருள் பாலித்தார். அதிகாலை முதலே ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி கோவை, திருப்பூர், சேலம், கரூர் என மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் நீண்ட சரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் என்றும் தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார தலம், சுற்றுலா தலம் என பலர் பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் இன்று தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு அதிகாலை வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதி கேசவப் பெருமாள் உட்பட பல்வேறு மூலவர்க ளுக்கு பல்வேறு திரவிய ங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பின்னர் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்கா ரம் செய்யப்பட்டு பக்தர்க ளுக்கு அருள் பாலித்தனர்.

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பவானி கூடுதுறைக்கு காலை முதலே பக்தர்கள் பலர் வந்து ஆற்றில் புனித நீராடி னர். மேலும் பவானி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு சென்றனர்.

    அதே போல் சென்னிமலை முருகன் கோவிலில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவிலில் காலை நேரத்தில் பக்தர்கள் அதிகளவில் வந்து வழிபாடு நடத்தினர்.

    இதே போல் கொடுமுடிக்கு இன்று காலை கொடுமுடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் வந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் காவிரி கரையில் புனித நீராடினர். இதையடுத்து மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாளை வழிபட்டு சென்றனர். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    மேலும் அந்தியூர் பத்ர காளியம்மன், கோபிசெட்டி-பாளையம் சாரதா மாரியம்மன், பாரியூர் கொண்டத்து காளியம்மன், பச்சை மலை, பவள மலை முருகன், பவானி செல்லியாண்டி யம்மன், கருமாரியம்மன், அம்மாபேட்டை காவிரி கரையில் உள்ள மீனாட்சி உடனமர் சொக்க நாதர் கோவில் உள்பட மாவட்ட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதை தொடர்ந்துபக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழ் புத்தாண்டை யொட்டி ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அம்ம னுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையொட்டி பக்தர்கள் பலர் வந்து அம்மனை வழிபட்டனர்.

    இதே போல் சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன், பார்க் ரோடு எல்லை மாரியம்மன், கொங்காலம்மன், கோட்டை பத்ரகாளியம்மன் கருங்கல் பாளையம் மாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன், சூரம்பட்டி மாரியம்மன், கோட்டை பெருமாள், ஈஸ்வரன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    இதே போல் ஈரோடு அடுத்த திணடல் வேலாயுதசாமி கோவிலில் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வள்ளி- தெய்வானையுடன் அருள் பாலித்தார். இதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் திண்டல் மலைக்கு வந்து வழிபட்டனர்.

    மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலர் பழ வகைளை அம்மனுக்கு படைத்து பூஜை செய்து வழிபட்டனர். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஆப்பிள், ஆரஞ்சு, மதுளை உள்பட பழ வகைகள் மற்றும் பணம், நகைகளை வைத்து வழிபாடு நடத்தினர்.

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் நஞ்சை ஊத்துக்குளி பஞ்சாயத்துக்குட்பட்ட காங்கேயம்பாளையம் காவிரி ஆற்றின் நடுவில் ஸ்ரீ நட்டாற்றீஸ்வரர் கோவில் உள்ளது. 6 ஆயிரம் ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாக பக்தர்களால் கருதப்படுகிறது.

    இக்கோவிலில் முருகன், அகஸ்தியர், காலபைரவர், துர்க்கை அம்மன், பிரம்மன், லட்சுமி, விநாயகர் மற்றும் நவகிரகங்கள் உள்ளிட்ட ஏராளமான சுவாமிகள் உள்ளன. ஸ்ரீநட்டாற்றீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தால் திருமண தடைகள், குழந்தை பேரின்மை, பிரம்மஹத்தி தோஷங்கள், பித்ரு சாபங்கள் இவைகள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

    இந்நிலையில் ஸ்ரீ நட்டாற்றீஸ்வரர் கோவிலில் இன்று சித்திரை முதல் நாள் என்பதால் கடந்த 2 நாட்களாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், லட்சார்ச்சனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று அதிகாலையில் 108 சங்காபிஷேக நிகழ்ச்சியும் நடைபெற்றன. சித்திரை முதல் நாளான இன்று ஸ்ரீநட்டாற்றீஸ்வரர் சாமியை வணங்கினால் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகும்.

    மேலும் குடும்பம் மற்றும் தொழில்களில் ஏற்படும் பிரச்சனைகள் விலகி செல்லும் என்ற ஐதீகம் பக்தர்களுக்கு இருப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலை முதல் ஸ்ரீநட்டாற்றீஸ்வரர் சாமியை தரிசனம் செய்து சென்றனர். பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் பாதுகாப்பிற்காக மொடக்குறிச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • பண்ணாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா நடக்கிறது.
    • சத்தியமங்கலம் பகுதியில் சப்பரம் வீதி உலா நடந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா ஆண்டு தோறும் பங்குனி மாதம் மிக விமர்சியாக நடந்து வருகிறது.

    இந்த ஆண்டுக்கான பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா கடந்த 20-ந் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடந்து வருகிறது.

    இதையொட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.

    மேலும் குண்டம் வளர்க்கும் இடத்தில் மஞ்சள், உப்பு, மிளகு போட்டு கற்பூரம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.

    குண்டம் விழாவில் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் அரசியல் கட்சியினர், அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குண்டம் இறங்குவார்கள். இதையொட்டி தற்காலிக பஸ் நிலையம், பக்தர்கள் குடிநீர் உள்பட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

    விழாவையொட்டி பண்ணாரியம்மன், சருகு மாரியம்மன் சப்பரம் புறப்பாடு தொடங்கியது. இதையடுத்து அம்மன் சப்பரம் சத்தியமங்கலம் சுற்று வட்டார கிராமங்களில் திருவீதி உலா நடந்து வருகிறது.

    இதில் 100-க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீர் ஊற்றி வழிபடுகிறார்கள். கடந்த 2 நாட்களாக சத்தியமங்கலம் பகுதியில் சப்பரம் வீதி உலா நடந்தது.

    நேற்று இரவு கோட்டூர் பாளையத்துக்கு சப்பரம் சென்றது. இதை தொடர்ந்து இன்று காலை அந்த பகுதியில் அம்மன் சப்பரம் திருவீதி உலா நடந்தது.

    இதை தொடர்ந்து இன்று இரவு பண்ணாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா நடக்கிறது. முன்னதாக இன்று அதிகாலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    இதைதொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கம்பம் நடப்படுவதால் இன்று காலை முதலே பக்தர்கள் ஏராளமானோர் வந்து அம்மனை வழிபட்டு வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

    • குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
    • ஆண், பெண் பக்தர்கள் நடனமாடி கொண்டாடினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக நள்ளிரவு 1 மணியளவில் கோவில் பூசாரிகள் மற்றும் பக்தர்கள்ஊர்வலமாக அருகில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றனர்.

    பின்னர் அங்கு உள்ள சிவலிங்கத்துக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சருகு மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு மாரியம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்தனர்.

    பின்னர் பக்தர்கள் புடைசூழ கோவில்பூசாரிகள் ஊர்வலமாக வந்து பண்ணாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    முன்னதாக இதில் கலந்து கொண்ட ஆண், பெண் பக்தர்கள் நடனமாடி கொண்டாடினர்.

    • பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    • அடிப்படை வசதிகள் செய்து தருவது உட்பட பல்வேறு பாதுகாப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கோபி:

    சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி யம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா மிகவும் விமர்சையாக நடந்து வருகிறது.

    இந்த விழாவில் ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமி ன்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். இதையொட்டி சத்திய மங்கலம், கோபிசெட்டி பாளையம், பவானி உள்பட மாவட்டத்தின் பல பகுதி களில் இருந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    இந்த நிலையில் இந்தாண்டுக்கான குண்டம் விழா நடத்து வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதையொட்டி பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நட வடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் வரு வாய்துறை, போலீஸ், வன த்துறை, அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, சுகா தாரத்துறை, போக்கு வரத்துதுறை உட்பட பல்வேறு துறை சார்ந்த அதி காரிகள் கலந்து கொண்ட னர்.

    இதில் கார், இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இட வசதி, கண்காணிப்பு கோபுரம் அமைப்பது, வாகப் போக்குவரத்தை திருப்பி விடுவது, கூட்ட த்தைக் கட்டுப்படுத்துவது, குண்டம் இறங்கும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் செய்து தருவது உட்பட பல்வேறு பாதுகாப்பு கள் குறித்து விவாதிக்க ப்பட்டது.

    இக்கூட்டத்தில் சத்தியமங்கலம் ஏ.எஸ்.பி. ஐமன் ஜமால், தாசில்தார் சங்கர் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    ×