search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டம் விழா"

    • இரு மாநில பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.
    • இங்கு சிறப்பு அம்சம் என்னவென்றால் பூசாரி மட்டுமே தீமிதிப்பார்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. தமிழக-கர்நாடகா எல்லை அருகே இந்த கோவில் அமைந்துள்ளதால் இரு மாநில பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.

    இந்த கோவிலின் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த குண்டத்தில் சிறப்பு அம்சம் கோவில் பூசாரி மட்டுமே தீமிதிப்பார்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. நேற்று காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடந்தன மாலை 6 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு மலர் மற்றும் ஆபரணங்கள் அலங்கரிக்கப்பட்டன.

    தாளவாடி மாரியம்மனுடன் கும்டாபுரம் மாரியம்மனும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 9 மணிக்கு அம்மனுக்கு அலங்கார வீதி உலா தொடங்கியது. உற்சவ சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு தாளவாடியில் உள்ள அனைத்து வீதிகளிலும் உலா வந்தது. இரவு கோவிலின் முன்பு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. குண்டத்தில் போடப்பட்ட விறகுகள் முழுமையாக எரிந்து காலையில் குண்டம் தயார் செய்யப்பட்டது.

    தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் இருந்து மேல தாளங்கள் முழங்க உற்சவர் சிலைகள் தாளவாடி ஆற்றுக்கு புறப்பட்ட கோவிலின் தலைமை பூசாரி சிவண்ணா தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆற்றுக்கு சென்றனர்.

    அங்கு மாரியம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் உற்சவர் சிலை பூசாரி சிவண்ணா தலையில் சுமந்து அம்மனை அழைத்து வந்தார். அப்போது பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர்வலமாக வந்தனர்.

    இளைஞர்கள் காவல் தெய்வங்கள் வேடத்தில் அலங்காரம் செய்து ஆடி வந்தனர். இதேபோல குறவர் ஆட்டம் ஆடிக்கொண்டு சில பக்தர்கள் வந்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

    ஆற்றை கடந்து ஊர்வலம் வந்தபோது அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு காத்திருந்த பெண்கள் மலர் மற்றும் பழங்கள் வைத்து மாரியம்மனை வரவேற்றனர். பின்னார் தாளவாடி பஸ் நிலையம் பகுதியில் மாரியம்மனுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தலமலை ரோடு, ஓசூர் ரோடு பகுதியிலும் அம்மன் ஊர்வலம் சென்றது. அங்கிருந்து அம்மன் ஊர்வலம் போயர் வீதி, மற்றும் அம்பேத்கார் வீதிக்கு சென்றது. அங்கு பக்தர்கள் மலர்களால் மாலை அணிவித்து அம்மனை வரவேற்றனர்.

    அதை ஏற்றுக்கொண்ட மாரியம்மன் உற்சவ சிலை ஊர்வலமாக கோவில் வளாகத்துக்கு வந்தது. அதைத்தொடர்ந்து மேள தாளங்கள், தப்பட்டைகள் முழங்க தலைமை பூசாரி சிவண்ணா மாரியம்மன் உற்சவ சிலையை கொண்டு குண்டத்தை நோக்கி விரைந்து வந்தார்.

     அப்பொழுது கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பத்தி கோஷங்கள் எழுப்ப 30 அடி நீளம், 4 அடி உயரம் உள்ள குண்டத்தில் இறங்கி கோவில் கருவறைக்கு சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    விழாவையொட்டி தாளவாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பெரும்பாலான கர்நாடக முறையில் பூஜைகள் நடைமுறைப்பட்டது. இந்த பிரம்மாண்ட குண்டம் விழாவில் கோவிலின் பூசாரி சிவண்ணா மட்டுமே தீ மிதித்தார். வேற யாரும் குண்டம் இறங்க அனுமதி இல்லை. எனினும் பூசாரி தீ இறங்குவதை பார்க்க காலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் முன்பு குவிந்தனர்.

    கோவில் பூசாரி சிவண்ணா குண்டம் இறங்கும் போது கோவிலின் கோபுரத்தின் மேல் கருடர் வலம் வந்தார். அவர் குண்டம் இறங்கும்போது பக்தர்கள் எழுப்பிய கோஷம் விண்ணை தொட்டது. குண்டத்தில் இருந்து அவர் வெளியே றியதும் கூடியிருந்த பக்தர்கள் கையில் இருந்த பூமாலை, வேப்பிலை, உப்பு, சாம்பிராண்டி ஆகியவற்றை குண்டத்தில் வீசினார்கள். சாமி தரிசனம் செய்தனர்.

    குண்டம் விழாவையொட்டி தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    • அடிப்படை வசதிகள் செய்து தருவது உட்பட பல்வேறு பாதுகாப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கோபி:

    சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி யம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா மிகவும் விமர்சையாக நடந்து வருகிறது.

    இந்த விழாவில் ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமி ன்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். இதையொட்டி சத்திய மங்கலம், கோபிசெட்டி பாளையம், பவானி உள்பட மாவட்டத்தின் பல பகுதி களில் இருந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    இந்த நிலையில் இந்தாண்டுக்கான குண்டம் விழா நடத்து வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதையொட்டி பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நட வடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் வரு வாய்துறை, போலீஸ், வன த்துறை, அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, சுகா தாரத்துறை, போக்கு வரத்துதுறை உட்பட பல்வேறு துறை சார்ந்த அதி காரிகள் கலந்து கொண்ட னர்.

    இதில் கார், இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இட வசதி, கண்காணிப்பு கோபுரம் அமைப்பது, வாகப் போக்குவரத்தை திருப்பி விடுவது, கூட்ட த்தைக் கட்டுப்படுத்துவது, குண்டம் இறங்கும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் செய்து தருவது உட்பட பல்வேறு பாதுகாப்பு கள் குறித்து விவாதிக்க ப்பட்டது.

    இக்கூட்டத்தில் சத்தியமங்கலம் ஏ.எஸ்.பி. ஐமன் ஜமால், தாசில்தார் சங்கர் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    • பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டு, கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இன்று அதிகாலை குண்டம் இறங்கும் விழா நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி (மாசி 9) பூச்சாட்டு, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து கடந்த 5-ந் தேதி அம்மனுக்கு பால் அபிஷேகமும், 6-ந் தேதி அக்னி கபாலமும் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. பின்னர் பூ மிதித்தல் எனப்படும் குண்டம் இறங்கும் விழா காலை 5 மணிக்கு நடைபெற்றது. முதலில் தலைமை பூசாரி பிரதீப் குண்டம் இறங்கினர்.

    தொடர்ந்து கங்கணம் கட்டி விரதமிருந்த ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், சிறுவர், சிறுமியர்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

    இதில் கோவை, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல் உள்பட ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் 4 நாட்களாக வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    இதனைத்தொடர்ந்து இரவு பத்திரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் நகர் வலமும், நாளை மறு பூஜையும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் தங்காயம்மள் செய்திருந்தார்.

    குண்டம் விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • எல்லை மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.
    • குண்டம் இறங்குவதற்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி முத்தூர் ரோடு அருகே அமைந்துள்ள எல்லை மாகாளியம்மன் கோவில் பொங்கல், பூச்சாட்டு, குண்டம் விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்குவதற்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதனையடுத்து இன்று அதிகாலை சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கொடுமுடி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து சிவகிரி நான்கு ரத வீதி வழியாக வந்து எல்லை மாகாளியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து குண்டம் அமைக்கப்பட்டு மாலை 4 மணி அளவில் குண்டம் இறங்கும் விழா நடைபெற உள்ளது. இரவு அம்மன் சிங்க வாகனத்தில் சிவகிரி நான்கு ரத வீதி வழியாக மேளதாளம், கரகாட்டத்துடன் வீதி உலா நடைபெறும்.

    இதனையடுத்து நாளை அதிகாலை முதல் மாவிளக்கு பூஜை மற்றும் அக்னி சட்டி, கும்ப ஊர்வலம் நடைபெற உள்ளது. தொடர்ந்து நாளைமறுநாள் அம்மன் திருமஞ்சன திருவீதி உலா நடைபெற உள்ளது.

    திருவிழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • தேர் திருவிழாவில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் 15 நாட்கள் விரதம் இருந்து குண்டம் இருந்து நேர்த்தி க்கடன் செலுத்துவது வழக்கம்.
    • தொடர்ந்து கரும்பு, விறகுகள் கொண்டு குண்டம் திறப்பு விழா செய்யப்பட்டு குண்டத்திற்கு தீ மூட்டப்பட்டது.

    கோபி

    கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கோரக்காட்டூர் கரிய காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா வருடம் தோறும் தை மாதம் முதல் வாரம் தொடங்கும்.

    இந்த குண்டம் தேர் திருவிழாவில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் 15 நாட்கள் விரதம் இருந்து குண்டம் இருந்து நேர்த்தி க்கடன் செலுத்துவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த ஆண்டிற்கான குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது. தொடர்ந்து தீர்த்தம் கொண்டு வருதல், முதல் கால பூஜை, காப்பு கட்டுதல், கொடியேற்றம், சந்தன காப்பு, சுமங்கலி யாக பூஜை, உள்ளிட்டு பல்வேறு வழிபாடுகள் செய்யப்பட்டது.

    பின்னர் நேற்று இரவு மாடு கரும்பு கொண்டு வருதல், மாவிளக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கரும்பு, விறகுகள் கொண்டு குண்டம் திறப்பு விழா செய்யப்பட்டு குண்டத்திற்கு தீ மூட்டப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை யொட்டி அதிகாலை அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின் குதிரையிடம் வாக்கு கேட்ட பின்பு திருகோடி ஏற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து தலைமை பூசாரி சதீஷ்குமார் குண்டத்திற்கு பூஜை செய்து இறங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கோரக்காட்டூர், கடுக்காயம்பாளையம், கொளத்துப்பாளையம், புளியகாட்டூர், ஐய்யம்புதூர், வெள்ளாங்கோவில் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கையில் வேப்பிலையுடனும், அக்கினி சட்டியுடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

    • ழுக்குளி செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று காலை 8 மணி அளவில் நடைபெற்றது.
    • நாளை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், ரத உற்சவம் நடைபெற உள்ளது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அழுக்குளி செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 30-ந் தேதி காலை 6 மணிக்கு நந்தா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் கடந்த 3-ந் தேதி காலை 6 மணிக்கு மஞ்சள் காப்பு அலங்காரமும், கிராம சாந்தியும் நடந்தது. 4-ந் தேதி கொடியேற்று விழாவும், இரவு அம்மை அழைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக குண்டம் திருவிழா இன்று காலை 8 மணி அளவில் நடைபெற்றது. முதலில் தலைமை பூசாரி செந்தில்குமார் குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து ஆண்கள், பெண்கள், கைக்குழந்தைகளுடன் தீ மிதித்தனர்.

    தொடர்ந்து நாளை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், ரத உற்சவம் நடைபெற உள்ளது. 7-ந் தேதி அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரமும், பரிவேட்டையும், தெப்பத்தேர் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    8-ந் தேதி மஞ்சள் நீர் உற்சவம், ஸ்ரீ அம்மன் சிறப்பு தரிசனம், மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர்.
    • இதையடுத்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பெரிய, சின்ன மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டா–டப்படும்.

    அதன்படி நடப்பாண்டுக்கான விழா கடந்த மாதம் 29-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 26-ந் தேதி கோவில்களின் முன் கம்பம் நடப்பட்டு பூவோடு நிகழ்ச்சி நடந்தது.

    அதனைத் தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கம்பங்களுக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.

    மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. குண்டம் விழாவுக்காக நேற்று இரவு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழா இன்று காலை நடந்தது.

    கோவிலின் தலைமை பூசாரி குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர்.

    விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் அம்மனை வழிபட்டு சென்றனர். விழாவை–யொட்டி கருங்கல்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. நாளை கோவில் கரகம் எடுத்தலும், 13-ந் தேதி கோவில் முன் பொங்கல் வைத்தலும், மாவிளக்கு மாற்றுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    பின்னர் 14-ந் தேதி கம்பம் பிடுங்கும் விழாவும், 15-ந் தேதி மஞ்சள் நீராட்டு, அம்மன் வீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

    ×