குண்டம் திருவிழாவையொட்டி 15 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம்

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆய்வு மேற்கொண்டார்.1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதை யொட்டி தினமும் அம்மனு க்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடந்து வருகிறது.

விழாவையொட்டி பண்ணாரியம்மன் சப்பரம் திருவீதி உலா தொடங்கி சத்தியமங்கலத்தை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்க ளில் நடந்து வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு வருகிறார்கள்.

இதனையடுத்து குண்டம் விழா வரும் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி அதிகாலை நடக்கிறது. இந்த நிலையில் குண்டம் விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிர ண்டு சசிமோகன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:

பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் தமிழகம், கர்நாடக பக்தர்கள் சுமார் 4 லட்சம் பேர் பங்கறேர்பார்கள். இதனால் இந்தாண்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குண்டம் இறங்கும் பக்தர்க ளுக்கு தனி வழியும், சாமி தரிசனம் செய்யும் பக்தர்களு க்கு தனி வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக 15 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்க ப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குண்டம் திருவிழாவை யொட்டி 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com