search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா - ஏப்ரல் மாதம் 4-ந்தேதி நடக் கிறது
    X

    கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா - ஏப்ரல் மாதம் 4-ந்தேதி நடக் கிறது

    • கொண்டத்து காளியம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
    • கோவில் செயல் அலுவலர் காளிமுத்து மற்றும் தக்கார் பெரிய மருதுபாண்டி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு கொண்டத்து காளியம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா வருகிற ஏப்ரல் மாதம் 4-ந் தேதி நடக்கிறது.

    முன்னதாக வருகிற மார்ச் மாதம் 7-ந்தேதி சகுனம் கேட்டலும், மார்ச் 24-ந்தேதி தேர்முகூர்த்தம் மற்றும் ஆயக்கால் நடல், மார்ச் 29-ந்தேதி கிராமசாந்தி, கொடியேற்றம், ஏப்ரல் மாதம் 2-ந்தேதி மஞ்சள் நீர் மற்றும் பொங்கல், 3-ந்தேதி குண்டம திறந்து பூ போடுதல், விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் 4-ந்தேதி அதிகாலை 4 மணிக்கும், மாலை 3.30 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. ஏப்ரல் 8-ந்தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவுபெறுகிறது. இத்தகவலை கோவில் செயல் அலுவலர் காளிமுத்து மற்றும் தக்கார் பெரிய மருதுபாண்டி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×