என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பல்லடம் அங்காளம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
- மகாசிவராத்திரி, மயான பூஜை, சக்தி விந்தை அலகு தரிசனம், மாவிளக்கு நடைபெற்றது.
- ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு,மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
பல்லடம் :
பல்லடத்தில் புகழ்பெற்ற அங்காளம்மன் கோவில் 48வது குண்டம் திருவிழா கடந்த 17-ந் ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கிராம சாந்தியுடன் துவங்கியது. தொடர்ந்து கொடியேற்றம், யாகசாலை பூஜை, மகாசிவராத்திரி, மயான பூஜை, சக்தி விந்தை அலகு தரிசனம், மாவிளக்கு நடைபெற்றது.
இந்தநிலையில் நேற்று மாலை அக்னி குண்டம் வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது 2 அடி அகலம்,45 அடி நீளம் கொண்ட குண்டத்தில்,வேப்பமரங்களை போட்டு அக்னி வளர்க்கப்பட்டது.சுமார் 10 மணி நேரம் அக்னி வளர்த்து குண்டம் தயார் செய்யப்பட்டது. இதில் இன்று காலை 7 மணிமுதல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் கோவில் பூசாரிகள்,மற்றும் நிர்வாகிகள் குண்டத்தில் இறங்கினர்.
பின்னர் ஓம்சக்தி,பாரசக்தி என்று கோஷமிட்டபடி கைகுழந்தைகளுடன் பெண்கள், சிறுவர்கள், உள்பட ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி அங்காளம்மனை வழிபட்டனர். பின்னர் காலை 8 மணிக்கு அக்னி அபிஷேகம்,பொங்கல் வைத்தல்,பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது.
குண்டம் திருவிழாவை முன்னிட்டு முப்பெரும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் அன்னதானம் வழங்கினர். குண்டம் திருவிழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு,,மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். பல்லடம் போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்