search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆனைமலை  திரவுபதி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
    X

    ஆனைமலை திரவுபதி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

    • ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
    • கொடிக்கம்பம் கோவில் வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டு, பூக்களால் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    ஆனைமலை,

    ஆனைமலையில் தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று காலை ஆழியாற்றங்கரைக்கு பக்தர்கள் கம்பத்தை எடுத்து சென்று, அங்கு வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் ஆனைமலை போலீஸ் நிலையம் வீதி வழியாக ஊர்வலமாக வாண வேடிக்கைகளுடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொடி கம்பத்தை தோளில் சுமந்துகோவிலுக்கு கொண்டு வந்தனர்.இதைத்தொடர்ந்து அம்மன் அருளாளி பச்சரிசி மற்றும் மஞ்சள் கலந்த விபூதியை பக்தர்களுக்கு வழங்கினார். பின்னர் கொடிக்கம்பம் கோவில் வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டு, பூக்களால் அலங்கரித்து சிறப்பு பூஜை கள் செய்யப்பட்டது.

    பின்னர் கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி கட்டப்பட்டது. தொடர்ந்து மேள, தாளம், சேகண்டி முழங்க, சங்கு நாதம், ஆலய மணி ஒலிக்க வாண வேடிக்கையுடன் கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி கம்பம் கோவில் வளாகத்தில் நடப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. இதை கண்ட பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்தில் கோஷமிட்டனர்.

    வருகிற 25- ந்தேதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி கண்ணபிரான் தூது, சாமி புறப்பாடு, குண்டத்து காட்டில் விஸ்வரூப தரிசனம், 6-ந் தேதி இரவு அம்மன் ஆபரணம் பூணுதல், அரவான் சிரசு, 7-ந் தேதி காலை குண்டம் கட்டுதல், அலங்கார திருத்தேர் வடம் பிடித்தல், குண்டம் பூ வளர்த்தல் நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபடுதல் 8-ந் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது. பின்னர் 9-ந் தேதி திருத்தேர் நிலை நிறுத்துதல், ஊஞ்சல் உற்சவம், பட்டாபிஷேகம், 10-ந்தேதி மஞ்சள் நீராடுதல், போர் மன்னன் காவு ஆகியவை நடக்கிறது.

    Next Story
    ×