search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "governor"

    • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நடத்த விடாமல் முடக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
    • தங்களை பாதுகாத்துக் கொள்ளவே தமிழக சட்டசபையில் இருந்து அ.தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் புதுவை தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திராவிட கழக தலைவர் கீ.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்களை கவர்னர்களாக நியமித்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அனுப்பி போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நடத்த விடாமல் முடக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றினால் ஆளுகின்ற அரசுக்கு நற்பெயர் ஏற்படும் என்ற காரணத்தினால் கவர்னர்களை வைத்து போட்டி அரசாங்கம் நடத்துகின்றனர். இது சட்டவிரோதம்.

    அ.தி.மு.கவின் குடுமி கவர்னர் கையில் உள்ளது. ஊழல் பட்டியல் அவரிடம் உள்ளது. தங்களை பாதுகாத்துக் கொள்ளவே தமிழக சட்டசபையில் இருந்து அ.தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர்.

    புதுவையில் பழங்குடியின மக்களை தரையில் அமர வைக்கப்பட்டதற்கு அதிகாரிகள் தான் பொறுப்பு என்பது பூசணிக்காயை அல்ல பெரிய மலையை சோத்துக்குள் மறைப்பதாகும்.

    புதுவை மக்கள் பா.ஜனதாவை சரியாக புரிந்து கொள்ளவில்லை. தற்போது தான் புரிந்து கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். ஒரு வேலை பழங்குடியின மக்களை புதுவையில் தரையில் அமர வைத்த சம்பவம் புதுவை மாடலாக இருக்குமோ.?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு குறிப்பிட்ட கட்சி, ஒரு குறிப்பிட்ட இயக்கம் மட்டும் தான் இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறது.
    • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டத்தின் கீழ் ஆட்சியை நடத்துவார்.

    ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறப்பட்டுள்ளதாவது:-

    2017ம் ஆண்டில் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பாஜகவின் தலைமையகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

    நேற்று ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுபோன்று மற்றொரு சம்பவம் உள்பட இந்த 4 சம்பவங்களிலும் ஒரே நபர் தொடர்பில் இருக்கிறார்.

    தமிழ்நாட்டில் பொறுத்தவரையில் உள்ள அரசியல் கட்சிகள் எனக்கு தெரிந்து இதுவரை யாரும் பெட்ரோல் குண்டுகள் வீசியது இல்லை.

    ஒரு முறை பாஜகவை சேர்ந்த கோவையில் ராமநாதன் என்பவர், திண்டுக்கல்லில் பிரவீன் குமார் திருவள்ளூரில் பரமானந்தம். இவர்களில் ராமநாதன் மற்றும் பிரவீன் குமார் 2013ம் ஆண்டிலும் மற்றொரு சம்பவம் 2017ம் ஆண்டிலும் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தினர்.

    போலீஸ் விசாரணையில், பாஜகவில் முக்கிய பொறுப்பு கிடைப்பதற்காகவும், பாதுகாப்பு கிடைப்பதற்காகவும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

    இதேபோல், இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 3 பேரும் பல்வேறு மூன்று சம்பவங்களில் ஈடுபட்டனர்.

    அதனால், பாஜகவும், இந்து மக்கள் கட்சியும் திட்டமிட்டு தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கவும் வன்முறையை தூண்டவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    கமலாலயத்தில் இரு அணிகளாக செயல்படுவதாகவும், அவர்களுக்குள்ளேயே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

    அதனால், ஒரு குறிப்பிட்ட கட்சி, ஒரு குறிப்பிட்ட இயக்கம் மட்டும் தான் இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறது. கட்சியின் கவனத்தை ஈர்க்கவே பெட்ரோல் வீச்சு சம்பவங்களை நடத்துகின்றனர்.

    ஆனால் ஒன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டத்தின் கீழ் ஆட்சியை நடத்துவார். அது எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் விசாரித்து உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்பதை உறுதியாக சொல்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • ஆளுநர் மாளிகை மீதான தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது.
    • நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது.

    ராஜ்பவன் தாக்குதல் குறித்த புகாரை காவல் துறை பதிவு செய்யவில்லை என ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டியுள்ளது.

    இதுகுறித்து ஆளுநர் மாளிகை அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:-

    ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது.

    அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 55 மாதமாக சம்பளம் இல்லாமல் பண்ணையில் பணியாற்றி வந்தோம்.
    • பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

    புதுச்சேரி:

    வேளாண் அறிவியல் நிலையத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அசோக்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் கவர்னர் தமிழிசையை சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில், வேளாண் அறிவியல் மையத்தில் 2009 முதல் 11 ஆண்டு தினக்கூலி ஊழியர்களாக பணிபுரிந்து வந்தோம். 2020 மார்ச் 7-ந் தேதி முன்னறிவிப்பின்றி 156 பேரை பணிநீக்கம் செய்தனர். 55 மாதமாக சம்பளம் இல்லாமல் பண்ணையில் பணியாற்றி வந்தோம்.

    எனவே அரசு கொள்கை முடிவு எடுத்த நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கவும், மீண்டும் பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

    இந்த சந்திப்பின்போது பா.ஜனதா விவசாய அணி தலைவர் புகழேந்தி, முத்தியால்பேட்டை தொகுதி தலைவர் ஹரிதாஸ், ஊழியர்கள் புத்துப்பட்டான், புவியரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
    • பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்து வர் அணி சார்பில் நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசையும், கவர்ன ரை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்ட த்தை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழி லாளர் நலத்துறை சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். 

    இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. க்கள் இள. புகழேந்தி, சரவணன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, பொதுக்குழு உறுப்பி னர் குறிஞ்சிப்பாடி பால முருகன், ஒன்றிய செய லாளர்கள் பொறியாளர் சிவக்குமார், காசிராஜன், சுப்பிரமணியன், நாராயண சாமி, வெங்கட்ராமன், தனஞ்ஜெயன், விஜய சுந்தரம், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்கள் கார்த்திகேயன், கணேஷ் குமார், மருத்துவர் அணி டாக்டர் கலைக்கோவன், நகர மன்ற தலைவர்கள் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன், சிவகுமார், சங்கவி முருகதாஸ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், பகுதி செய லாளர்கள் சலீம், நடராஜன், இளையராஜா, வெங்கடேசன், மாநகர துணை செயலாளர் சுந்தர மூர்த்தி , மண்டல குழு தலை வர்கள் பிரசன்னா, சங்கீதா செந்தில் முருகன், சங்கீதா, பேரூராட்சி மன்ற தலைவர் கோகிலா குமார், துணை தலைவர் ராமர், பகுதி துணை செயலாளர்கள் லெனின், ஜெயசீலன், கார் வெங்கடேசன், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி நிர்வாகிகள் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, கிளை, பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முன்னதாக காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கப்பட்டு இன்று மாலை 5 மணி வரை நடை பெற உள்ளது.

    • மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் நன்மை கிடைக்கும் என்பதற்கு புதுவை அரசு முன்மாதிரியாகத் திகழ்கிறது.
    • பெண் குழந்தைகள் ரூ.50 ஆயிரத்துடன் பிறக்கிறது என்ற புரட்சியை புதுவை அரசு செய்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் சமையல் கியாஸ் மானியம், பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் வைப்பு தொகை, முதல் அமைச்சரின் விபத்து உதவி காப்பீடு திட்டம், ஏழை குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி என 4 புதிய திட்டங்கள் தொடக்க விழா நடந்தது.

    விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சபா நாயகர் ஏம்பலம் செல்வம் முன்னிலை வகித்தார். கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திட்டங்களை தொடங்கி வைத்தனர்.

    பெண் குழந்தைகளுக்கான நிதி உதவித் திட்டம் பெருமை சேர்க்கும் திட்டமாகும். குடும்பத் தலைவிகளுக்கான நிதி உதவித் திட்டம் அறிவித்த பிற மாநிலங்கள் அதனை செயல்படுத்த முடியாத நிலையில் புதுவையில் அந்த திட்டத்தை செயல்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. அதுபோலத்தான் சமையல் கியாஸ் மானிய திட்டத்தை யும் அறிவித்த பிற மாநிலங்கள் முழுமையாகச் செயல்படுத்தவில்லை. ஆனால், புதுவையில் செயல் படுத்தப்பட்டுவிட்டது.

    புதுவை முதலமைச்சர், அமைச்சர்கள் எந்த புகழையும் எதிர்பாராமல் மக்களுக்கான சேவையை ஆற்றிவருவது பாராட்டுக்குரியது.

    மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் நன்மை கிடைக்கும் என்பதற்கு புதுவை அரசு முன்மாதிரியாகத் திகழ்கிறது.

    ஆகவே, புதுவையை சிறந்த மாநிலமாக மட்டுமல்லாது, அரசுத் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தும் மாநிலமாகவும் மாற்றி வருகிறோம். ஆனால், சிலர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது சரியல்ல.

    மத்திய அரசிடமிருந்து சிறப்பு நிதியாக ரூ.1400 கோடியும், ஜி.எஸ்.டி. வருவாயில் ரூ.3 ஆயிரம் கோடியும் கிடைத்திருப்பது நிர்வாகம் சிறப்பாக நடந்து வருவதையே காட்டுகிறது.

    பெண் குழந்தை பிறக்கிறது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலை மாறி புதுச்சேரியில் பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பமும் இறைவனை வேண்டிக் கொள்ளும் சூழ்நிலை புதுச்சேரியில் உருவாகி இருக்கிறது.

    ஒரு பெண்ணுக்கு உதவி செய்தோம் என்றால் அது அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சென்று சேரும். அந்த அடிப்படையில் தான் முதலமைச்சர் ரங்கசாமி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

    அந்த காலத்தில் பெண் குழந்தைகளை பாரமாக நினைத்தனர். ஆனால் புதுவையில் தற்போது பெண் குழந்தைகள் ரூ.50 ஆயிரத்துடன் பிறக்கிறது என்ற புரட்சியை புதுவை அரசு செய்துள்ளது. அவர்களின் பெயரில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யப்படுகிறது. இதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனி மேல் பெண் குழந்தை என்றால் தலை நிமிர்ந்து நடக்கலாம். பெண்களுக்கான திட்டங்கள் என்றால் நான் நிச்சயம் உறுதுணையாக இருப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு ரூ.5.20 லட்சம் மானியம் வழங்கவும் கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
    • விதைசான்று முகமைக்கு ரூ.51 லட்சம் மானியம், மகளிர் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.5 1/4 லட்சம் மானியம் வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை பல்வேறு அரசின் கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    பண்டசோழநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளிக்கு திருவருட்பிரகாச வள்ளலார் அரசு நடுநிலைப் பள்ளி என பெயர் மாற்றவும், ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லூரியில் தேர்வு செய்யப்பட்ட உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கும், புதுவை மாநில சமூகநல வாரியத்துக்கு ரூ.6 3/4 லட்சம் மானியம் வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

    ஏனாம் நகராட்சிக்கு ரூ.42 லட்சம் மானியம், ராஜீவ்காந்தி விளையாட்டு பள்ளிக்கு ரூ.56 லட்சம் மானியம், புதுவை விஸ்வகர்மா சமுதாய ஐந்தொழிலாளர் சங்கத்துக்கு ரூ.2 1/4 லட்சம் மானியம், விதைசான்று முகமைக்கு ரூ.51 லட்சம் மானியம், மகளிர் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.5 1/4 லட்சம் மானியம் வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

    மேலும் வக்பு வாரியத்துக்கு ரூ.30 லட்சம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வரைநிலை மேம்பாட்டு கழக்திற்கு (பாட்கோ) ரூ.2 கோடி மானியம், காரைக்கால் மார்க்கெட் கமிட்டிக்கு ரூ.47 லட்சம் வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார். அரசின் இலவச அரிசி திட்டத்துக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாத இலவச அரிசிக்கு பணம் வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.

    ஜவகர் சிறுவர் இல்லத்துக்கு பகுதிநேர பயிற்றுநர் நியமனம், கரியமாணிக்கம் கிராமத்தில் குடிநீர் மேம்பாட்டு பணி செலவுக்கு ரூ.3.20 கோடி, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு ரூ.5.20 லட்சம் மானியம் வழங்கவும் கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    இலவச அரிசிக்கான பணமாக சிகப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.600 வீதம், 3 மாதத்திற்கு ரூ.ஆயிரத்து 800, மஞ்சள் கார்டுதாரர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.300 வீதம் 3 மாதத்திற்கு ரூ.900 பயனாளிகள் வங்கிகணக்கில் விரைவில் செலுத்தப்பட உள்ளது.

    • கவர்னர் ரவிக்கு தமிழக அரசு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
    • பசும்பொன் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வழக் கறிஞர் பசும்பொன் பாண்டி யன் கூறியதாவது:-

    பேரறிஞர் அண்ணா ஆட்டுக்கு தாடியும், நாட் டுக்கு கவர்னரும் தேவை யில்லை என்று தீர்க்கதரிசன மாக அன்றே உரைத்தார். அவரது கருத்துக்கு சான்றாக தமிழக கவர்னர் ரவியின் செயல்பாடு உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கவர்னர் எந்த சட்டப் பிரிவை பயன்படுத்தி நட வடிக்கை எடுத்துள்ளார் என்பதை தெளிவுபடுத்த அவர் தயாராக இல்லை.

    தமிழகத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆளுநர் மாளி கையில் அரசியல் நடத்தி குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று கவர்னர் ரவி நினைக்கிறார். அவரது இந்த மக்கள் விரோத செயல் பாடுகளுக்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆளுநர் மாளிகை அரசின் கட்டுப் பாட்டில் உள்ளது. எனவே தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநர் மாளிகைக்கு மின்சாரம், தண்ணீர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.போலீஸ் பாதுகாப்பையும் திரும்ப பெற வேண்டும்.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறும் கவர்னர் ரவிக்கு உடனடியாக தமிழக அரசு சரியான பாடம் புகட்ட வேண்டும். என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • மாணவர்களுக்கு இது மிகுந்த ஏமாற்றத்தை ஆளும் என்.ஆர்-பா.ஜனதா கூட்டணி அரசு உருவாக்கியுள்ளது.
    • மாணவர் காங்கிரஸ் தலைவர் டாக்டர்.ஹர்ஷவர்தன் குற்றச்சாட்டு

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாணவர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டாக்டர். ஹர்ஷவர்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி கதிர்காமத்தில் இயங்கி வரும் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் ஆண்டுதோறும் முதலாம் ஆண்டு 180 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

     ஆண்டுதோறும் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த ஏழை எளிய நடுத்தர மாணவர்கள் 131 பேருக்கு இடம் கிடைத்து மருத்துவம் படிக்கின்றனர். இந்த ஆண்டு முதலாம் ஆண்டு சேர்க்கை ரத்து செய்யப்படுவதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்து இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

    மருத்துவக் கல்வி கனவோடு வாழும் புதுச்சேரி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் விதமாக இது அமைந்துள்ளது. மருத்துவ படிப்பிற்காக நீட் தேர்வை மோடி அரசு கொண்டு வந்ததால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு சிதைக்கப்பட்டது. பல நெருக்கடிகளையும் தாண்டி நீட் தேர்வுக்காக தயார் செய்து புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மாணவர்களுக்கு இது மிகுந்த ஏமாற்றத்தை ஆளும் என்.ஆர்-பாஜக கூட்டணி அரசு உருவாக்கியுள்ளது.

    இதற்கு கவர்னரும் , முதல்- அமைச்சரும் தான் பொறுப்பு. ஒரு அரசு மருத்துவக் கல்லூரி உள்கட்டமைப்பு வசதியை கூட முறையாக செய்ய முடியாத கையாலாகாத அரசாக உள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கை தடைக்கு கல்லூரி முதல்வர் காரணங்களை கூறியிருந்தாலும் இது மருத்துவ கனவில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும் வகையில் உள்ளது.

    மாணவர்களின் எதிர்கால நலனை அக்கறை கொண்டு மாணவர் காங்கிரஸ் சார்பில் என்.ஆர்-பா.ஜனதா கூட்டணி அரசை கண்டித்து விரைவில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி புதுவை மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், புதுச்சேரி மாநிலத்தின் தனித்துவமான தன்மானத்தை காக்க இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான அனுமதியை பெற எல்லா வகையிலும் முயற்சி வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விஷச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் விரிவான அறிக்கை கேட்டுள்ளார்.
    • அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் சாராயம் அருந்திய 22 பேர் பலியாகி உள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை அதிரடியாக கைது செய்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சாராயத்தை ஒழிக்க தவறிய குற்றத்துக்காக போலீஸ் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே, செங்கல்பட்டு, விழுப்புரத்தில் விஷச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி விரிவான அறிக்கை கேட்டுள்ளார்.

    இந்நிலையில், விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க அதிமுக முடிவு செய்துள்ளது.

    நேற்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
    • சாராயத்தை ஒழிக்க தவறிய குற்றத்துக்காக போலீஸ் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் சாராயம் அருந்திய 22 பேர் பலியாகி உள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

    மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சாராயத்தை ஒழிக்க தவறிய குற்றத்துக்காக போலீஸ் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் விஷச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி விரிவான  அறிக்கை கேட்டுள்ளார்.

    • கொடைக்கானல் செல்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மதுரை வந்தார்.
    • பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று கொடைக்கானல் செல்கிறார். இதற்காக சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் இன்று மதியம் வருகிறார். பின்பு மதுரை விமான நிலையத்தில் இருந்து கொடைக்கானலுக்கு கார் மூலம் புறப்பட்டு செல்கிறார்.

    கவர்னர் ஆர்.என்.ரவி வத்தலக் குண்டு வழியாக கொடைக்கா னலுக்கு மாலை 4.30 மணிக்கு செல்கிறார். எனவே மதியம் 2 மணி முதல் மாலை 4.30 வரை வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.

    இன்று இரவு கொடை க்கானல் கோகினூர் மாளிகையில் தங்கும் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை காலை 11 மணிக்கு அன்னைதெரசா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.மாலை 3 மணிக்கு பல்வேறு சுற்றுலா இடங்களை பார்வையிடுகிறார்.

    பின்னர் 16-ந்தேதி கொடைக்கானலில் இருந்து கார்மூலம் புறப்பட்டு மதுரை வரும் கவர்னர், இங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலையில் வேறு எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் அனைத்து வாகனங்களும் பழனி-பெருமாள்மலை வழியாக கொடைக்கா னலுக்கு செல்ல அறிவுறுத்த ப்பட்டுள்ளது. கவர்னர் வருகையையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளன. மதுரை வி மான நிலையம் மற்றும் கவர்னர் செல்லக்கூடிய சாலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    கொடைக்கானலில் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் தலைமையில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபினவ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன் (திண்டுக்கல்), பிரவீன்உமேஷ் ேடாங்கரே (தேனி), 2 ஏ.எஸ்.பி.க்கள், 10 டி.எஸ்.பிக்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கவர்னர் தங்கும் கோகினூர் மாளிகை, அன்னை தெரசா மகளிர்பல்கலைக்கழகம், சுற்றுலா இடங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×