search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Google"

    • பிக்சல் 8 ப்ரோ மாடலில் பாலிஷ்டு அலுமினியம் ஃபிரேம், மேட் பேக் பிளாக் கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது.
    • பிக்சல் 8 ப்ரோ மாடலில் 5050 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பிக்சல் 8 மாடலில் 6.2 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் 8 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் குவாட் HD+ OLED டிஸ்ப்ளே, 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு உள்ளது.

    பிக்சல் 8 ப்ரோ மாடலில் பாலிஷ்டு அலுமினியம் ஃபிரேம், மேட் பேக் பிளாக் கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது. பிக்சல் 8 மாடலில் மெட்டல் ஃபினிஷ் மற்றும் பாலிஷ்டு கிளாஸ் பேக் உள்ளது. இரு மாடல்களிலும் டென்சார் G3 பிராசஸர், டைட்டன் M2 செக்யுரிட்டி சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 14 ஒ.எஸ். உள்ளது.

     

    இரு மாடல்களிலும் 50MP பிரைமரி கேமரா, பிக்சல் 8 மாடலில் 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 48MP அல்ட்ரா வைடு லென்ஸ் உள்ளது. பிக்சல் 8 ப்ரோ மாடலில் 48MP டெலிஃபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் 8 ஸ்மார்ட்போனில் 4575 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. பிக்சல் 8 ப்ரோ மாடலில் 5050 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    இந்திய சந்தையில் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் அப்சிடியன், ஹசெல் மற்றும் ரோஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 75 ஆயிரத்து 999 என்றும் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 82 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிக்சல் 8 ப்ரோ மாடல் அப்சிடியன் மற்றும் பே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    கூகுள் பிக்சல் 8 ப்ரோ மாடலின் 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 06 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • அமெரிக்க நீதித்துறை கூகுள் மீது "ஆன்டி டிரஸ்ட்" வழக்கு பதிவு செய்துள்ளது
    • எங்களால் சந்தையில் கால் பதிக்கவே முடியவில்லை என்றார் நாதெல்லா

    அமெரிக்க வியாபார நிறுவனங்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதற்காக, நேரடியாகவோ மறைமுகமாகவோ சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தால், பிற நிறுவனங்களின் எதிர்காலம் அதனால் பாதிக்கப்படலாம் என்பதால் அத்தகைய நிறுவனங்களின் மீது அந்நாட்டில் "ஆன்டி டிரஸ்ட்" (antitrust) எனப்படும் வழக்குகள் பதிவு செய்யப்படும்.

    உலகின் முன்னணி இணையவழி வலைதள தேடுதல் இயந்திரமான கூகுள் (Google) எனும் பிரபல நிறுவனத்தின் மீது அத்தகைய ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.

    தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட, ஐபோன் தயாரிக்கும் ஆப்பிள் (Apple) நிறுவனத்திற்கு கூகுள் பல கோடிகள் சட்ட விரோதமாக தந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்காவின் வாஷிங்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க நீதித்துறையால் வழக்கு தொடரப்பட்டு தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    உலகின் மற்றொரு முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் (Microsoft) தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெல்லா வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    வலைதள தேடுதல் இயந்திரங்களுக்கான சந்தையில் கூகுள் வலைதளத்தின் ஆதிக்கம் பிற போட்டியாளர்களை தலைதூக்கவே அனுமதிப்பதில்லை. அந்நிறுவனத்தின் வியாபார தந்திரங்கள் அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள், ஆப்பிள் நிறுவனத்தினரோடு போட்டிருக்கும் ஒப்பந்தங்களினால் எங்கள் வலைதள தேடுதல் இயந்திரமான 'பிங்' (Bing) 2009லிருந்து சந்தையில் ஒரு இடம் பிடிக்க எவ்வளவு முயன்றும் இயலவில்லை. கூகுள் தேடுதல் இயந்திரத்திலிருந்து பெறும் பயனர்களின் விவரங்களை கூகுள் நிறுவனம், தங்களின் தேடுதல் இயந்திரத்தின் விளம்பரத்திற்கே பயன்படுத்தி பெரும் வருமானம் ஈட்டுகிறது. அந்த தொகையை ஆதிக்கத்தை நிலைநாட்ட மீண்டும் செலவிடுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில் எங்களின் பிங் சேவையை பயன்படுத்த அனுமதித்தால் அதற்குண்டான செலவினை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், கூகுளின் ஆதிக்கத்திலிருந்து ஆப்பிள் வெளிவர முடியாததால், மைக்ரோசாப்ட், சந்தையிலேயே நுழைய முடியாமல் தவிக்கிறது.

    இவ்வாறு நாதெல்லா சாட்சியம் அளித்தார்.

    3 தசாப்தங்களுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களது விண்டோஸ் எனும் இயக்கமுறை மென்பொருளுக்கு  (Operating System) இதே போன்ற வழிமுறைகளை பயன்படுத்தி சந்தையில் முதலிடம் பிடித்ததை இப்போது கூறி தற்போது அதே நிலைமை தங்களுக்கு வந்ததும் மைக்ரோசாப்ட் புலம்புவதை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

    • பிக்சல் 7a மாடல் கடந்த மே மாதம் நடைபெற்ற கூகுள் I/O நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • கூகுள் பிக்சல் 7a மாடல் மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7a புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய நிற வேரியண்ட் இந்திய சந்தையில் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது. அதன்படி விரைவில் துவங்க இருக்கும் பிக் பில்லியன் டே சேல்-இல் பிக்சல் 7a புதிய நிற வேரியண்ட் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் பிக்சல் 7a மாடல் கடந்த மே மாதம் நடைபெற்ற கூகுள் I/O நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

    தற்போது கூகுள் பிக்சல் 7a மாடல் சீ, சார்கோல் மற்றும் ஸ்னோ என மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இவற்றுடன் கோரல் நிற வேரியண்ட் விரைவில் இணைய இருக்கிறது. கோரல் நிற வேரியண்ட் இந்தியா தவிர மற்ற நாடுகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நிற வேரியண்டிற்கான டீசர் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

     

    இந்திய சந்தையில் கூகுள் பிக்சல் 7a மாடல் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 43 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல்-இல் இதன் விலை சற்று குறைக்கப்படவோ அல்லது அதிக சலுகைகள் வழங்கப்படவோ வாய்ப்புகள் உண்டு.

    அக்டோபர் 5-ம் தேதி கூகுள் பிக்சல் மாடல்களுக்கான சலுகை விவரங்களை ப்ளிப்கார்ட் அறிவிக்க இருக்கிறது. இதுதவிர கூகுள் நிறுவனம் பிக்சல் 8 சீரிஸ் மாடல்களை அக்டோபர் 4-ம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய பிக்சல் 8 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு அக்டோபர் 4-ம் தேதி துவங்குகிறது.

    • கூகுள் கடந்த 1998-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.
    • இதுவரைக்கும் 170-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கூகுள் கையகப்படுத்தி இருக்கிறது.

    புதுடெல்லி:

    இணையத்தின் பிரபலமானதேடு பொறியான கூகுள் இன்று 25-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. வழக்கமாக பிரபலங்களின் பிறந்தநாளை நமக்கு நினைவூட்டும் கூகுள் இன்று தனது பிறந்த நாளையே முகப்பாக வைத்துள்ளது.

    அமெரிக்காவின் ஸ்டான் போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்று கணினி அறிவியல் திட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர்கள் வைன் லாரி பேஜ் மற்றும் செர்கி பிரின் ஆகிய 2 நண்பர்கள் உருவாக்கியது தான் கூகுள். தங்களுடைய புராஜெக்ட்டாக அவர்கள் ஒரு தேடு தளத்தை ஆன்லைனில் உருவாக்க நினைத்தார்கள்.

    நூலகத்தில் இருக்கும் நூல்கள், ஆவணங்களை தேடுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த தேடுபொறிதான், இன்று இணையதள உலகில் பிரபலமான கூகுளாக வளர்ந்து நிற்கிறது. கூகுள் கடந்த 1998-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது. 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இதுவரைக்கும் 170-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கூகுள் கையகப்படுத்தி இருக்கிறது. டேட்டா பாதுகாப்புக்காக உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 9 லட்சம் சர்வர்களை வைத்திருக்கிறது கூகுள். மேலும் ஒரு நாளில் 100 கோடிக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும், உலகம் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட மொழிகளில் தேடல்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூகுள் நிறுவனத்தில் 53 ஆயிரம் பணியாளர்களுக்கு மேல் பணிபுரிகிறார்கள்.

    • பிக்சல் வாட்ச் 2 மாடலுக்கான டீசர் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.
    • பிக்சல் வாட்ச் 2 விற்பனை ஃப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.

    கூகுள் நிறுவனம் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான டீசர்களை சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில், ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கான டீசர் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. டீசரில் பிக்சல் வாட்ச் 2 தோற்றம் மட்டுமின்றி அதன் இந்திய வெளியீடு பற்றிய தகவல்களும் தெரியவந்துள்ளது.

    பிக்சல் வாட்ச் 2 மாடலுக்கான டீசர் வீடியோ கூகுள் இந்தியா அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் பிக்சல் வாட்ச் 2 மாடல் அக்டோபர் 5-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதன் விற்பனை ஃப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறும் என்றும் தெரியவந்துள்ளது.

    இத்துடன் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் இந்திய முன்பதிவு அக்டோபர் 5-ம் தேதி துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு கூகுள் அறிமுகம் செய்த பிக்சல் வாட்ச் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை. எனினும், இந்த ஆண்டு கடந்தமுறை போன்றில்லாமல், பிக்சல் வாட்ச் 2 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

    தோற்றத்தில் பிக்சல் வாட்ச் 2 மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட அதிக மாற்றங்களை பெறவில்லை. இந்த மாடலுக்கான பேன்ட்-கள் பிக்சல் 8 ப்ரோ நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

    • பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
    • பிக்சல் 8 சீரிஸ் மாடல்களில் மென்பொருள் சார்ந்த பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட உள்ளன.

    பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் நிறம் மற்றும் ஸ்டோரேஜ் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்தது. தற்போது X (முன்னதாக டுவிட்டர்) தளத்தில் பயனர் ஒருவர் பிக்சல் 8 ஸ்மார்ட்போனின் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். இதில் பிக்சல் 8 அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது.

    குறிப்பாக புதிய அம்சம் ஆடியோ மேஜிக் இரேசர் என்று அழைக்கப்பட இருப்பது வீடியோவின் மூலம் தெரியவந்துள்ளது. X தளத்தில் லீக் ஆகி இருக்கும் வீடியோ 14 நொடிகள் ஓடுகின்றன. அதில் நபர் ஒருவர் ஸ்கேட் போர்டில் செல்வதும், பிறகு ஆடியோ மேஜிக் இரேசர் என்ற பெயர் கொண்ட புதிய அம்சம் இடம்பெற்று இருக்கிறது.

     

    இந்த அம்சம் வீடியோ ஒன்றில் இருக்கும் ஆடியோவை மாற்றியமைக்கும் திறன் அல்லது அவற்றை மேம்படுத்தவோ அல்லது முழுமையாக நீக்குவதற்கான வசதியை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. மென்பொருள் அப்கிரேடுகள் மூலம் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    அதன்படி மேஜிக் எடிட்டர், எமோஜி மற்றும் சினிமேடிக் வால்பேப்பர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது. பிக்சல் 8 சீரிஸ் மாடல்களில் ஆடியோ மேஜிக் இரேசர் வரிசையில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. தற்போது லீக் ஆகி இருக்கும் வீடியோவில் பிக்சல் 8 மாடலின் டிசைன் பற்றிய விவரங்களும் இடம்பெற்று இருக்கிறது.

    புதிய பிக்சல் 8 மாடல் வளைந்த ஓரங்கள், மெல்லிய மற்றும் அதிநவீன தோற்றம் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் புளூ நிறம் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. முன்னதாக வெளியான பிக்சல் 7a மாடல் இதே போன்ற நிறத்தில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்த மென்பொருள் கருவிகளால் பத்திரிகையாளர்கள் தங்களின் வேலை மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த முடியும்.
    • கட்டுரைகளை உருவாக்குவதில் பத்திரிகையாளர்கள் செய்யும் பணிகளுக்கு இந்த மென்பொருள் மாற்றாக அமையாது.

    செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence) பயன்பாடு உலகெங்கிலும் பிரபலமடைந்து வருகிறது. அதனை கொண்டு பல்வேறு தொழில்துறைகளில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதை அமெரிக்க முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன.

    பத்திரிக்கை துறையிலும், பதிப்பக துறையிலும் கட்டுரைகளையும், செய்திக்கட்டுரைகளையும் எழுதும் வேலை உட்பட ஏராளமான பணிகள் உள்ளன. இந்த துறையில் ஒரு புதிய முயற்சியாக கூகுள் நிறுவனம், இப்பணிகளுக்கு தனது செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கருவிகளை (software tools) பயன்படுத்துவதை பரிசோதித்து வருகிறது. எடுத்துக் காட்டாக பதிப்பக மற்றும் செய்தி நிறுவனங்கள், செய்திகளையும் கட்டுரைகளையும் இக்கருவிகளை பயன்படுத்தி எளிதாகவும், சிறப்பாகவும், விரைவாகவும் கொண்டு வர முடியும்.

    இதற்காக வாஷிங்டன் போஸ்ட், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், மற்றும் நியூயார்க் டைம்ஸ் ஆகிய செய்தி நிறுவனங்களுடன் கூகுள் ஆலோசனை நடத்தியிருப்பதாக தெரிகிறது.

    இக்கருவிகளால் பத்திரிகையாளர்கள் தங்களின் வேலை மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்த முடியும். எடுத்துக் காட்டாக, தலைப்புகளுக்கும், அவர்கள் பயன்படுத்தும் எழுத்து வடிவங்களுக்கும் எண்ணற்ற வாய்ப்புகளை மென்பொருள் வழங்கும். இதிலிருந்து ஒன்றை அவர்கள் தேர்ந்தெடுத்து விரைவாக தங்கள் பணிகளை முடிக்க முடியும்.

    ஆனால் கட்டுரைகளை உருவாக்குவதிலும், உண்மையை சரிபார்ப்பதிலும் பத்திரிகையாளர்கள் செய்யும் பணிகளுக்கு இந்த மென்பொருள் மாற்றாக அமையாது. ஆகையால் அவர்களின் வேலைக்கு எந்த பாதிப்பும் இருக்காது என தெரிகிறது.

    கூகுளின் இந்த முயற்சி தற்போது ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது.

    நியூயார்க் டைம்ஸ் நிறுவனத்திடம் பரிசீலிக்கப்பட்ட கூகுளின் ஏஐ கருவி "ஜெனிசிஸ்" என்று அழைக்கப்படுவதாக தெரிகிறது.

    முன்னரே சில பதிப்பகங்கள் தங்களுக்கு தேவைப்படும் உள்ளடக்கத்திற்கு (content) ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) கருவிகளை பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    பயனர்களுக்கு விரைவாக பல்வேறு தரவுகளின் அடிப்படையில் ஒரு புதிய உள்ளடக்கத்தை உருவாக்க, ஜெனரேட்டிவ் ஏஐ எனப்படும் மென்பொருள் கருவி பயன்படுகிறது.

    உரைகள், படங்கள், ஒலிகள், அனிமேஷன், முப்பரிமாணம் (3D) அல்லது பிற வடிவங்களில் இவற்றின் உள்ளீடுகள் (inputs) மற்றும் வெளியீடுகள் (outputs) இருக்கும்.

    இருந்தாலும், இது போன்ற மென்பொருள் கருவிகள், உண்மைக்கு புறம்பான தகவலை உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளது. மனிதர்கள் உருவாக்கும் உள்ளடக்கத்திற்கும் கணினி நிரல்களால் உருவாக்கப்படும் உள்ளடக்கத்திற்கும் உள்ள வேறுபாடுகளை கண்டறியும் திறனும் இவற்றிற்கு இல்லை. இக்காரணங்களால் செய்தி வெளியிடும் நிறுவனங்கள் இவற்றை பயன்படுத்துவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன.

    ஆனால் கூகுள் போன்ற நீண்ட அனுபவம் வாய்ந்த முன்னணி நிறுவனங்களின் மென்பொருள் கருவிகளில், இத்தகைய பயன்பாட்டு சிக்கல்கள் நீக்கப்படலாம். இதன் மூலம் பதிப்பக துறையிலும், செய்தி துறையிலும் மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதால் கூகுளின் முயற்சி எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.

    • ஒபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி முன்னணியில் இருந்து வருகிறது
    • கூகுள் நிறுவனத்தின் பார்ட் செயலியும் பிரபலமாகி வருகிறது

    செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சாட்பாட் எனப்படும் உரையாடல் மென்பொருளை உருவாக்குவதில் நாளுக்கு நாள் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே போட்டி வலுத்து வருகிறது.

    ஐ.டி. துறையில் சேவை மேலாண்மை அனுபவத்தை மேம்படுத்த சாட்பாட்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    ஒபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி முன்னணியில் இருக்கும் நிலையில், கூகுள் நிறுவனத்தின் பார்ட் செயலியும் பிரபலமாகி வருகிறது.

    இணையத்தில் இருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான பயனாளர்களின் தகவல்களை கொண்டு இயந்திர கற்றல் தொழில்நுட்பம் மூலம் 'லார்ஜ் லேங்குவேஜ் மாடல்' எனப்படும் ஒரு மென்பொருள் கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. இதனை கொண்டு உருவாக்கப்படும் செயலிகள்தான் சாட்பாட்கள்.

    ஆனால் சாட்ஜிபிடி மற்றும் பார்ட் இரண்டும் தனியுரிமை வகையை சேர்ந்தவை. இவற்றை இலவசமாக பயன்படுத்த முடியாது. இதில் உள்ள புரோகிராமிங் குறியீடுகளை கணினி ஆராய்ச்சியாளர்கள் பார்க்கவோ பரிசீலனை செய்யவோ அனுமதி கிடையாது.

    இந்நிலையில் முகநூல் வலைதளத்தை நடத்தி வரும் மெட்டா நிறுவனம் நேரடியாக ஒரு சாட்பாட்டை உருவாக்காமல் அதற்கு பதிலாக லாமா எனும் ஒரு 'லார்ஜ் லேங்குவேஜ் மாடல்' வடிவத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதனை காப்புரிமை கட்டுப்பாடில்லாத, பயன்படுத்த அனுமதி தேவைப்படாத, கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லாத இலவச ஓபன் ஸோர்ஸ் எனப்படும் வகையில் கொண்டு வந்திருக்கிறது.

    இதனைக் கொண்டு ஆராய்ச்சியாளர்களும் கணினி நிறுவனங்களும் இலவசமாக பதிவிறக்கி, பரிசீலித்து, பின்பு தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றங்களுடன் கட்டமைத்து புதிது புதிதாக பல சாட்பாட்களை உருவாக்க முடியும்.

    ஆர்வலர்களும் நிபுணர்களும் லாமா மொழி மாதிரியை கொண்டு பல புதுமைகளையும் உருவாக்க முடியும்.

    ஒரு செயலியை வடிவமைக்க உருவாக்கும் மென்பொருள் பரிசீலிக்கப்படும் வகையில் இருந்தால், தரவுகளின் பாதுகாப்பை வலுவாக்கவும், எதிர்கால செயலாக்க குறைபாடுகளையும், சிக்கல்களையும் முதலிலேயே கண்டறியவும் முடியும்.

    தற்போது பிரபலமாக இருக்கும் சாட்பாட்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஏற்கனவே விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. சாட்பாட்களின் உரையாடல்கள் பல நேரங்களில் திசை திரும்பி செல்வதாக கூறப்படுகிறது.

    உலகெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான மென்பொருள் நிபுணர்கள் இலவச பெரு மொழி மாதிரிகளை கொண்டு எண்ணற்ற சாட்பாட்களை உருவாக்க முடியும் என்பதால் லாமாவிற்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கனடா செய்திகளை நிறுத்தப்போவதாக மெட்டா அறிவிப்பு
    • செய்திகளை நிறுத்தினால் விளம்பரங்கள் நிறுத்தப்படும் என கனடா பதிலடி

    நீயா, நானா போட்டியில் மெட்டாவும், கனடாவும்: முற்றும் சச்சரவில் கூகுளும் சேருமா?உலகின் மிகப்பெரிய இணையவழி சமூக வலைதளமான முகநூலை நடத்தி வரும் மெட்டா நிறுவனத்திற்கும் கனடா நாட்டிற்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. இதன் பின்னணியில் உள்ளது, கனடா, அண்மையில் கொண்டு வந்த இணைய செய்தி சட்டம் (Online News Act) என்ற ஒரு சட்டம்.

    கனடா நாட்டின் செய்தி வெளியீட்டாளர்களிடமிருந்து மெட்டா, கூகுள், இன்ஸ்டாகிராம் போன்ற இணையவழி சமூக வலைதளங்கள் பெறும் உள்ளடக்கத்தை (content) இணையத்தில் இணைக்கவோ அல்லது மறுபயன்பாடு செய்வதற்கோ அந்தந்த கனடா செய்தி வெளியீட்டாளர்களுக்கு அவர்களுக்குரிய விகிதாசார பணத்தை அவை தரவில்லை என கனடா குற்றஞ்சாட்டியது.

    இதனால் அந்நாட்டின் பல அச்சு மற்றும் டிஜிட்டல் செய்தி பதிப்பகங்கள், வருவாய் குறைந்து பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டதால் உள்ளூர் வெளியீடுகள் நிதி ரீதியாக நிலை பெறுவதற்கு, இச்சட்டம் கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக கனடா கூறியிருந்தது.

    இதற்கு எதிர்வினையாக அமெரிக்காவின் மெட்டா நிறுவனம், கனடா நாட்டு செய்திகளை இனிமேல் தங்கள் வலைதளங்களில் நிறுத்த போவதாக அறிவித்தது.

    மெட்டா செய்தித்தொடர்பாளர் தெரிவித்ததாவது:-

    இணைய செய்திச் சட்டம் எங்கள் தளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கான உண்மைகளை அறியாத ஒரு குறைபாடுள்ள சட்டம். மெட்டாவின் சமூக தளங்களில் காண்பிக்கப்படும் செய்தி உள்ளடக்கத்திற்கான இணைப்புகளை மெட்டா சேகரிக்கவில்லை.

    அவற்றை முகநூல் அல்லது இன்ஸ்டாகிராமில் வெளியிட, அந்தந்த வெளியீட்டாளர்கள்தான் முடிவு செய்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இந்த சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் பல குறைகள் உள்ளன. ஆனால், செயல்முறை மாற்றங்களைச் செய்ய 'ஒழுங்குமுறை அமைப்பு' அனுமதிக்கவில்லை. எனவேதான், வரும் வாரங்களில் கனடாவில் செய்திகளை நிறுத்த திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், கனடாவின் பாரம்பரியத்துறை அமைச்சர் பாப்லோ ரோட்ரிக்ஸ் நேற்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அரசாங்கத்தின் முடிவை அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மெட்டாவின் முடிவு பொறுப்பற்றது. கனடா இனி மெட்டாவின் வலைதளங்களில் விளம்பரம் செய்வதை நிறுத்தப்போகிறது. இருப்பினும், ஒரு சுமூக முடிவிற்காக அரசாங்கம் இந்நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சி நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2021-2022-ம் ஆண்டில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்காக, கனடா அரசாங்கம் சுமார் ரூ.70 கோடி (8.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலவிட்டுள்ளதாக அரசாங்க செலவினங்கள் பற்றிய வருடாந்திர அறிக்கை காட்டுகிறது.

    மெட்டா நிறுவனத்தை தொடர்ந்து, கூகுள் நிறுவனமும், 6 மாதங்களில் கனடாவின் இந்த மசோதா நடைமுறைக்கு வரும்போது அந்நாட்டு செய்திகளை தடுக்கப்போவதாக கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2021-ல் ரஷியாவிற்கு எதிரான கருத்துக்களை நீக்க மறுத்ததால் அபராதம் விதிப்பு
    • 2 மாதங்களுக்குள் கூகுள் அபராத தொகையை செலுத்த வேண்டும்

    இணைய தகவல் தேடலில் முன்னணியில் இருக்கும் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனத்திற்கு, ரஷியாவின் ஏகபோக எதிர்ப்பு கண்காணிப்பு அமைப்பு அறிவித்திருந்த முந்தைய அபராதத்தை செலுத்த தவறியதற்காக, ரஷிய நீதிமன்றத்தால் சுமார் ரூ. 400 கோடி ($47 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    பெடரல் ஆன்டிமோனோபோலி சர்வீஸ் (FAS) எனும் அமைப்பு கூகுள், யூடியூப் வீடியோ ஹோஸ்டிங் சேவை சந்தையில் அதன் மேலாதிக்க நிலையை தவறாக பயன்படுத்தியது என்று குற்றஞ்சாட்டியுள்ளது. இருப்பினும், மேலும் குறிப்பான விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக, கூகுள், தனது அடுத்த நடவடிக்கையை தீர்மானிக்கும் முன் ரஷியாவின் அதிகாரப்பூர்வ முடிவை முதலில் ஆராய போவதாக தெரிவித்திருக்கிறது. பெடரல் ஆன்டிமோனோபோலி சர்வீஸ் அமைப்பின்படி, இந்த அபராதம் விதிக்கப்பட்ட 2 மாதங்களுக்குள் கூகுள் அபராத தொகையை செலுத்த வேண்டும்.

    சமீபத்திய மாதங்களில் கூகுளின் ரஷிய துணை நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தொடர் அபராதங்களில் இது மேலும் ஒன்றாக அதிகரிக்கிறது.

    முன்னதாக 2021 டிசம்பரில், சட்டவிரோதமாகக் கருதப்படும் உள்ளடக்கத்தை அகற்ற தவறியதற்காக ரஷிய நீதிமன்றம், ஆல்ஃபபெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான கூகுளுக்கு ரூ.800 கோடிக்கு ($98 மில்லியன்) மேல் அபராதம் விதித்திருந்தது.

    ரஷியாவால், உக்ரைனில் தொடங்கப்பட்ட ராணுவ நடவடிக்கை குறித்த விஷயங்களுக்காக இந்த அபராதங்கள் இடம் பெறுகின்றன.

    ஆன்லைன் தளங்களின் மீது அதிக கட்டுப்பாட்டை செலுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, மேற்கத்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் மீதான தாக்குதல்களை ரஷியா தீவிரப்படுத்தியுள்ளது. இதில், தனது நாட்டின் உள்நாட்டு நிறுவனங்களை மேற்கத்திய போட்டியாளர்களுக்கு போட்டியாக மாற்றுவதற்கான ஆதரவளிப்பதும் அடங்கும்.

    ரஷிய அரசின் நிதியுதவியுடன் இயங்கும் ஊடகங்களை உலகளவில் தடுத்துள்ள யூடியூப், ரஷியாவின் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்புகளிடமிருந்தும், அந்நாட்டு அரசியல்வாதிகளிடமிருந்தும் சமீப காலங்களில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2023 கூகுள் IO நிகழ்வில் பிக்சல் டேப்லெட் மாடல் அறிவிக்கப்பட்டது.
    • இதன் சார்ஜிங் டாக், டேப்லெட்-ஐ ஸ்மார்ட் ஸ்பீக்கராக மாற்றுகிறது.

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் டேப்லெட் மாடலுக்கான அக்சஸரீக்கள் பற்றிய தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி பிக்சல் டேப்லெட்-க்காக கீபோர்டு மற்றும் ஸ்டைலஸ் உருவாக்கப்படுவது கூகுள் கோட்-களில் அம்பலமாகி இருக்கிறது. 2023 கூகுள் IO நிகழ்வில் பிக்சல் டேப்லெட் மாடல் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டதில் இருந்தே பிக்சல் டேப்லெட் பற்றிய விவரங்கள் வெளியாகி வருகிறது.

    இந்த நிலையில், தான் பிக்சல் டேப்லெட் மாடலுடன் கீபோர்டு மற்றும் ஸ்டைலஸ் போன்ற அக்சஸரீக்கள் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இத்துடன் சார்ஜிங் டாக் ஒன்றும் வழங்கப்படுகிறது. இது டேப்லெட்-ஐ ஸ்மார்ட் ஸ்பீக்கராக மாற்றுகிறது. ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ் உடன் வரும் பிக்சல் டேப்லெட், வெளியீட்டுக்கு பிறகு அதிக அக்சஸரீக்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

     

    புதிய கீபோர்டு மற்றும் ஸ்டைலஸ் அக்சஸீர்கள், கீபோர்டு ஃபார் பிக்சல் டேப்லெட் மற்றும் ஸ்டைலஸ் ஃபார் பிக்சல் டேப்லெட் எனும் பெயர்களில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பிக்சல் அக்சஸரீக்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போதைய தகவல் பிக்சல் ரிடெயில் டெமோ செயலி மூலம் தெரியவந்துள்ளது.

    கூகுள் நிறுவனம் புதிய சாதனங்களை அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் ஹார்டுவேர் நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. பிக்சல் 8, பிக்சல் 8 ப்ரோ மற்றும் பிக்சல் வாட்ச் 2 மாடல்கள் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதே நிகழ்வில் பிக்சல் டேப்லெட் மாடல் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    • கூகுள் ஆப் வெர்ஷன் 14.24-ல் இரண்டு பிக்சல் வாட்ச் 2 மாடல்களின் குறியீட்டு பெயர்கள் உள்ளன.
    • பிக்சல் வாட்ச் 2 மாடலில் ஸ்னாப்டிராகன் W5 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என தகவல்.

    கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் வாட்ச் 2 மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. புதிய பிக்சல் வாட்ச் 2 இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் பிக்சல் 8 சீரிஸ் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிக்சல் வாட்ச் 2 மாடல் பற்றிய விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அதன் படி ஏற்கனவே வெளியான தகவல்களில் பிக்சல் வாட்ச் 2 மாடல் அக்டோபரில் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுதவிர பிக்சல் வாட்ச் 2 மாடலின் சிறுவர் மட்டும் பயன்படுத்தும் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும், இது ஃபிட்பிட் பிராண்டிங்கில் விற்பனை செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 

    புதிய பிக்சல் வாட்ச் 2 மாடலில் ஸ்னாப்டிராகன் W5 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது. சமீபத்திய கூகுள் ஆப் அப்டேட் வெர்ஷன் 14.24 இரண்டு பிக்சல் வாட்ச் 2 மாடல்களுக்கான குறியீட்டு பெயர்களை கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த குறியீட்டு பெயர்கள் அரோரா மற்றும் இயோஸ் ஆகும்.

    இவை ரோமன் மற்றும் கிரேக்க பெயர்களுடன் தொடர்புடையவை ஆகும். இதில் ஒரு மாடல் எல்டிஇ மோடெம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இரு மாடல்களிலும் 41 மில்லிமீட்டர் கேஸ் வழங்கப்படுகிறது. இவை கூகுள் வாட்ச் ஸ்டிராப்களுடன் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளன.

    டிசைன் அடிப்படையில் பிக்சல் வாட்ச் 2 மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. எனினும், தற்போதைய தகவல்களை கடந்து பிக்சல் வாட்ச் 2 மாடலின் அம்சங்களில் வெளியீட்டுக்கு முன் மாற்றங்கள் செய்யப்படலாம்.

    ×