search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "God"

    • கற்பகமரம் கேட்டதைக் கொடுக்கும் தன்மை கொண்டது.
    • படைத்தல், காத்தல், அழித்தல், மீண்டும் படைத்தல் என்னும் தத்துவ நிலையை உள்ளடக்கியது.
     

    கற்பகமரம் கேட்டதைக் கொடுக்கும் தன்மை கொண்டது.

    எனவே உயிரினங்கள் அனைத்திலும் இறைவன் உறைந்து விளங்குவான் என்னும்

    தத்துவத்தை நிலை நிறுத்தவே கற்பகத்தரு வாகனம் வீதி உலாவில் பயன்படுத்தப்படுகின்றது.

    இறைவனிலேயே எல்லாம் தொடக்கமாக அமைத்து அங்கேயே ஒடுங்குவதால், மீண்டும் படைப்புகள்

    உண்டாக்கப்படுவதால் படைத்தல், காத்தல், அழித்தல், மீண்டும் படைத்தல் என்னும் தத்துவ நிலையை

    உள்ளடக்கிய கற்பக விருட்சம் வாகனமாகப் பயன்படுத்தப் படுகின்றது.

    • ஆலயங்களில் நடைபெறும் விழாக்களில் இறைவனின் திருவீதி உலா முக்கியத்துவம் வாய்ந்தது.
    • இறைவன் ஐந்து தொழில்களையும் செய்து வருகிறான்.

    ஆலயங்களில் நடைபெறும் விழாக்களில் இறைவனின் திருவீதி உலா முக்கியத்துவம் வாய்ந்தது.

    உலக மக்களுக்கும், கோவிலுக்கு வர இயலாத முதியோர்கள், நோயாளிகளுக்காகவும் அருள் பாலிப்பதற்காக

    இறைவன் திருவீதி எழுந்தருள்கிறார்.

    அப்படி வீதி உலா வரும் இறைவனுக்காக பல்வேறு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    உலக உயிர்களின் நன்மைக்காக இறைவன் ஆற்றிவரும் ஐந்தொழில்களின் தத்துவக் கருத்துக்களை

    உணர்த்தும் நோக்கில் வாகனங்களும் உருவாக்கப்படுகின்றன.

    திருவண்ணாமலை ஆலயத்தில் நடைபெறும் விழாக்களில் கற்பக விருட்சம், சூரிய சந்திரப் பிரபை,

    இடப வாகனம், நாக வாகனம், பல்லக்கு லிங்கார வட்ட சொரூபப் பிரபை, யானை வாகனம், தேர்,

    குதிரை வாகனம், அதிகார நந்தி பூத வாகனம், ராவணனின் திருக்கயிலை வாகனம் முதலியன குறிப்பிடத்தக்கனவாகும்.

    இறைவன் ஐந்து தொழில்களையும் செய்து வருகிறான்.

    அவரை விழாக்காலங்களில் அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டு முடித்து

    வாகனங்களில் ஏற்றி அவர் அழகை ரசித்து இன்புற்று ஈடு இணையற்ற பேரின்பம் பெற வழிபாடு செய்கிறோம்.

    இதில் தீபத்திருவிழா உள்ளிட்ட உற்சவ நாட்களில் பத்து நாட்களும் அண்ணாமலையார்

    வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நமக்கு அருள்பாலிக்கின்றார்.

    அவ்வாகனங்களின் உட்பொருள் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்

    • கிராம மக்களிடம் அன்பாக பழகிய அவர் கிராமத்திலுள்ள குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்துள்ளார்.
    • அம்மனின் வடிவமாகக் கருதிய கிராம மக்கள் அந்த பெண்ணிற்கு எட்டிமரத்தடியிலேயே சிலை வைத்து கோவில் கட்டினர்.

    வாழப்பாடி:

    கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஏ.குமாரபாளையம் மெட்டுக்கல் கிராமம் வழியாக நிறைமாத கர்ப்பிணியான மலைவாழ் லம்பாடி இனப்பெண் ஒருவர் வந்துள்ளார். சொந்த கிராமத்திற்கு செல்ல முடியாத அவர் மெட்டுக்கல் மற்றும் குமாரபாளையம் கிராம எல்லையில் சாலையோரத்தில் இருந்த எட்டி மரத்தடியில் தங்கியுள்ளார்.

    கிராம மக்களிடம் அன்பாக பழகிய அவர் கிராமத்திலுள்ள குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்துள்ளார். சில தினங்களில் அந்த மரத்தடியிலேயே அழகான குழந்தையை பெற்றெடுத்த அவரும் குழந்தையும் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளனர். இவரை அம்மனின் வடிவமாகக் கருதிய கிராம மக்கள் அந்த பெண்ணிற்கு எட்டிமரத்தடியிலேயே சிலை வைத்து கோவில் கட்டினர். இச்சிலைக்கு அருகில் முறுக்கு மீசை முனியப்பன் சாமியையும் பிரதிஷ்டை செய்து எட்டிமரத்து முனியப்பன், லம்பாடி அம்மன் கோவில் என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர்.

    குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் குழந்தையுடன் சென்று லம்பாடி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டால் குழந்தைகளின் அழுகையை அம்மன் கட்டுப்படுத்தி நோய்நொடி வராமல் பாதுகாப்பதாக இப்பகுதி மக்களிடையே நம்பிக்கை தொடர்ந்து வருகிறது. இதன்படி ஏ.குமாரபாளையம் மெட்டுக்கல் கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் குழந்தையை அம்மன் சன்னதியில் படுக்க வைத்து குழந்தைப் பொங்கல் வைத்து நேற்று சிறப்பு பூஜை, வழிபாடு நடத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    • தேங்காயை இரு பாதியாக உடைத்து அதில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
    • இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.

    தேங்காய் விளக்குகள்

    தேங்காயை இரு பாதியாக உடைத்து அதில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

    இப்படி ஏற்றினால் எந்த காரியமும் சித்தியாகும் என்பது நம்பிக்கை.

    விளக்கு ஏற்றும் விதிமுறைகள்

    1. விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும்.

    குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.

    2. நெய் வேத்தியங்கள் நிவேதனம் செய்யும் வாழை இலையின் பக்கத்தில் விளக்கேற்றுவது மிகவும் சிறந்தது.

    3. ஊது பத்திகளை பூஜைக்கு வைத்த வாழைப்பழங்களின் மேல் குத்தி ஏற்றுதல் கூடாது.

    ஊது பத்திகளுக்கென்று உரிய ஸ்டாண்டை பயன்படுத்துதல் நல்லது.

    இல்லையேல் ஒரு சிறிய பாத்திரத்தில் அரிசியை நிரப்பி அதில் ஊது பத்திகளைக் குத்தலாம்.

    4. கற்பூரம் ஏற்றும் போது தட்டில் சிறிதளவு திருநீறை வைத்து அதன் மேல் கற்பூரத்தை ஏற்ற வேண்டும்.

    திருநீறு இல்லையேல் வாழை இலையிலோ வெற்றிலையையோ வைத்து ஏற்றலாம்.

    பூஜைக்குரிய வெற்றிலையை வைத்து கற்பூரம் ஏற்றுதல் தவறு.

    5. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

    6. சுபகாரியங்கள் வீட்டில் நடைபெற விளக்கு பூஜை செய்து வழிபட்டால் நற்பலன்களை கண்டிப்பாக பெறலாம்.

    7. விளக்கு பூஜை செய்யும் போது குத்து விளக்கிற்கு முன் சிறிது மஞ்சள் தூளால் சிறு விநாயகரின் சிலையை செய்து குங்குமமிட்டு அவரை அங்கு வீற்றிருக்க செய்ய வேண்டும்.

    8. தீபம் ஏற்ற தூய்மையான புதிய அகல்விளக்கை பயன்படுத்த வேண்டும்.

    ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோவில்களில் மறுபடியும் ஏற்றக் கூடாது.

    9. அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெ ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு

    திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.

    10. விநாயக பெருமானுக்கு-1, 7 தீபம், முருகருக்கு-6 தீபம், பெருமாளுக்கு-6 தீபம், நாக அம்மனுக்கு-4 தீபம்,

    சிவனுக்கு-3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு-2 தீபம், மகாலட்சுமிக்கு-8 தீபம் என ஏற்றி வழிபட வேண்டும்.

    11. தீபங்களை வாகனங்களுக்கு முன்பாகவும் ஏற்றலாம்.

    சிவன் கோவிலில் நந்திக்கு முன்பாகவும், அம்மன்-சிங்கம்-நந்தி முன்பாக, பிள்ளையார்- பெருச்சாளி முன்பாக,

    பெருமாள்- கருடன் முன்பாக, முருகர்- மயில் முன்பாக ஏற்ற வேண்டும்.

    12. தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும்,

    குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும்,

    துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு-2  என அம்மனை தீபம் நோக்கியவாறு ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.

    13. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றி பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

    அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு,

    வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி,

    சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.

    14. காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும்.

    15. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.

    16. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும்.

    நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

    17. புதிய மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் செய்வினை தீயசக்திகள் தொந்தரவுகள் அண்டாது.

    18. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக் கூடாது.

    19. தீப சரஸ்வதி என்று மூன்று முறையும், தீப லட்சுமி என்று மூன்று முறையும் குல தெய்வத்தை நினைத்து மூன்று முறையும் என தீபத்தை பன்னிரண்டு முறை வணங்க வேண்டும்.

    20. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு.

    மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம்.

    தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம்.

    • தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது.
    • பொது இடங்களில் பலரும் சேர்ந்து கூட்டாக தீப வழிபாடு செய்யலாம்.

    தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய 3 சக்திகளும் உள்ளனர்.

    தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது.

    அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.

    மனதில் உள்ள கவலைகளைப் போக்குகிறது.

    தினமும் மாலையில் தீபம் வைத்து வணங்கி பூஜை செய்ய வேண்டும்.

    பொது இடங்களில் பலரும் சேர்ந்து கூட்டாக தீப வழிபாடு செய்யலாம்.

    வீட்டிலே சாமிக்கு முன்னால் சின்னதாக அகல் விளக்கு ஏற்றி, மணி நேரமாவது எரிவதற்கு எண்ணெய் விட்டு,

     தேவியை மனதில் தியானித்துப் பூஜை செய்ய வேண்டும்.

    அப்படி செய்பவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி

    எல்லாவிதமான சந்தோஷங்களும், சவுபாக்கியங்களும் ஏற்படும்.

    வீட்டிலே நாம் இம்மாதிரி தீப பூஜை செய்யும்போது, பக்கத்திலேயே குழந்தைகளை வைத்துக் கொண்டு செய்ய வேண்டும்.

    அவர்களையும் நல்ல சுலோகங்களை பாடல்களைப் படிக்க வைத்து பூஜையில் ஈடுபடுத்த வேண்டும்.

    தினமும் காலையிலும், மாலையிலும், வீட்டிலும் வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும்.

    லட்சுமியின் அருள் கிடைக்கும்.

    • விளக்கின் திருச்சுடர் எவ்வளவு காற்றடித்தாலும் சற்றும் அசையாமலும், ஆடாமலும் எரிகின்றது.
    • இந்த விளக்கானது, ஒரே சமயத்தில் மூன்று கிலோ எண்ணெய் ஊற்றும் அளவிற்கு பெரியது.

    திருப்பதி அருகே உள்ள ஸ்ரீ காளஹஸ்தி என்ற வாயுத் தலத்தின் கருவறைத் திருவிளக்குகளில்

    பல சுடர்களில் ஒரு திருச்சுடர் காற்றால் தாக்கப்படுவதைப் போல எப்போதும் அசைந்து ஆடிக் கொண்டே இருக்கின்றது.

    அந்தத் திருச்சுடரின் நடன கோலம், வாயுவின் வடிவில் இறைவன் நிலைத்து நிற்கின்றான் என்பதை உணர்த்துகிறது.

    மோகனூரில் உள்ள சிவன் கோவில் கருவறை விளக்கின் திருச்சுடர் எவ்வளவு காற்றடித்தாலும்

    சற்றும் அசையாமலும், ஆடாமலும் நின்று நிதானமாக நிலைத்து எரிகின்றது.

    இங்குள்ள இறைவனுக்கு "அசலதீபேசுவரர்" என்று பெயர்.

    மிகப்பெரிய திருவிளக்கு!

    ஏத்துமானூர் மகாதேவர் கோவிலின் திருவிளக்கு, அளவில் மிகப்பெரியது.

    அதன் குழி ஒரே சமயத்தில் மூன்று கிலோ எண்ணெய் ஊற்றும் அளவிற்கு பெரியது.

    கோவில்களில் எண்ணற்ற திருவிளக்குகள் உள்ளன.

    ஆனால் வேதாரண்யம் கோவிலில் உள்ள விளக்கு மட்டும் மிக்க அழகுடையது.

    • அமாவாசையிலிருந்து ஐந்தாம் நாள், பவுர்ணமியில் இருந்து ஐந்தாம் நாள் இந்நாட்களில் வருவது பஞ்சமி திதி.
    • கல்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்து சுலோகங்கள் கூறி விளக்கிற்கு பூஜை செய்யவும்.

    அமாவாசையிலிருந்து ஐந்தாம் நாள், பவுர்ணமியில் இருந்து ஐந்தாம் நாள் இந்நாட்களில் வருவது பஞ்சமி திதி.

    "பஞ்ச" என்றால் ஐந்து என்று பொருள்.

    பஞ்சமி திதியன்று குத்துவிளக்கில் ஐந்து எண்ணெய் கலந்து ஐந்து முகத்தினையும் ஏற்றி

    கல்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்து சுலோகங்கள் கூறி விளக்கிற்கு பூஜை செய்யவும்.

    தீபத்தில் எரியும் ஐந்து முகங்களில் ஏதாவது ஓர் தீபத்தை உற்றுப் பார்த்தபடியே மனதை ஒரு முகப்படுத்தி

    நம்முடைய வேண்டுதல்களை மனதிற்குள் சொல்லி வந்தால் அது நிச்சயம் நிறைவேறும்.

    இப்படி ஜோதியை நோக்கி வழிபடும்போழுது "ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவும்.

    இப்படி செய்தால் அம்பிகையின் அருளாளல் நமது வேண்டுதல்கள் நிறைவேறும்.

    • பசு மாடுகள் லட்சுமி வடிவம் என்பதால் அவை வருவதற்கு முன்பே வீடுகளில் தீபம் ஏற்றி விடும் பழக்கம் இருந்தது.
    • குத்து விளக்கு அம்பாளின் வடிவம் ஆகும்.

    பழங்காலத்து வீடுகளில் விளக்கு வைப்பதற்கு என்றே தனி மாடங்கள் அமைக்கப்பட்டன.

    வாசல்படியின் இருபுறங்களிலும் தீபங்கள் ஏற்றப்படுவதற்கு என மாடங்கள் அமைக்கப்பட்டு இருக்கும்.

    கிராமப்புறங்களில் பசு மாடுகள் மேய்ந்து விட்டு மாலை நேரத்தில் வீடு திரும்பும்.

    பசு மாடுகள் லட்சுமி வடிவம் என்பதால் அவை வருவதற்கு முன்பே வீடுகளில் தீபம் ஏற்றி விடும் பழக்கம் இருந்தது.

    குத்து விளக்கு

    குத்து விளக்கு அம்பாளின் வடிவம் ஆகும்.

    இதன் அடிப்பாகம் பிரம்மா, தண்டு பாகம் விஷ்ணுவையும், தகழி சிவனையும்,

    திருவிளக்கின் ஐந்து முகம் பஞ்ச பூதங்களையும், எண்ண நாத தத்துவத்தையும்,

    குடம் லட்சுமியையும், ஒளி சரஸ்வதியையும், ஒளியால் பிறக்கின்ற சூடு சக்தியையும் குறிக்கும்.

    • தீபத்தில் லட்சுமியானவள் பதினாறு வகை “தீபலட்சுமி”யாக பரிணமிக்கிறாள்

    தீபத்தில் லட்சுமியானவள் பதினாறு வகை "தீபலட்சுமி"யாக பரிணமிக்கிறாள் என்று நமது ஆகமங்கள் கூறுகின்றன.

    அந்த பதினாறு வகை தீபலட்சுமிகள் விவரம் வருமாறு:

    ஆதிலட்சுமி,

    சவுந்தரிய லட்சுமி,

    சவுபாக்கிய லட்சுமி,

    கீர்த்தி லட்சுமி,

    வீர லட்சுமி,

    ஜெயலட்சுமி,

    சந்தான லட்சுமி,

    மேதா லட்சுமி,

    வித்யா லட்சுமி,

    துஷ்டி லட்சுமி,

    புஷ்டி லட்சுமி,

    ஞான லட்சுமி,

    சக்தி லட்சுமி,

    ராஜ்யலட்சுமி,

    தான்யலட்சுமி,

    ஆரோக்கிய லட்சுமி

    ஆகியோராவர்.

    • விளக்கெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றலாம்.
    • எவர்சில்வர் விளக்கை தீபமேற்ற பயன்படுத்தக் கூடாது.

    தீபத்தை நெய் விட்டு ஏற்றுவதே நல்லது.

    விளக்கெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றலாம்.

    தீபத்திற்கு பஞ்சு திரியிடுவது சிறப்பானது.

    தாமரைத் தண்டுத்திரி, வாழைத்தண்டு நூல், வெள்ளெருக்கு பட்டை, புது மஞ்சள், துணி,

    புதுவெள்ளை வஸ்திரம் ஆகியவையும் உபயோகிக்கலாம்.

    காலையில் அதிகாலை நேரத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும்.

    எவர்சில்வர் விளக்கை தீபமேற்ற பயன்படுத்தக் கூடாது.

    தீபத்தை வாயால் ஊதி அணைக்காமல், ஒரு பூவின் காம்பால் அணைக்க வேண்டும்.

    • சிவபெருமானுக்கு சிறப்பாக உள்ள நாட்கள் மூன்றாகும்.
    • ஆறு காலங்களுக்கும் அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறும்.

    சிவபெருமானுக்கு சிறப்பாக உள்ள நாட்கள் மூன்றாகும்.

    அவை மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகியவை ஆகும்.

    அதில் சிவராத்திரி தினங்களில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்புடையதாகும்.

    அன்றைய தினம் சிவன் கோவில்கள் இரவு முழுவதும் திறந்திருக்கும்.

    ஆறு காலங்களுக்கும் அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெறும்.

    அன்று ஈசனை நினைத்து விரதம் இருந்து ஆறு காலங்களையும் அபிஷேக ஆராதனையுடன் தரிசிப்பது மிகவும் புண்ணிய பலன்களை தரும்.

    முக்தி கிடைக்கும்.

    சிவராத்திரியில் யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று ஐந்து வகைகள் உண்டு.

    மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் மகா சிவராத்திரி வரும்.

    அன்றைய தினத்தில் உபவாசமிருந்து அவரவர்களுக்கு உகந்ததைப் பாராயணம் செய்தால் ஈசன் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

    • விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர்.
    • மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான்.

    விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர்.

    மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான்.

    ஒவ்வொரு விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.

    1. திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவனின் பரிபூர அன்பைப் பெறலாம்.

    2. செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீங்கி வாழலாம்.

    3. புதன் கிழமை விரதம் இருந்தால் நோய்கள் தீரும்.

    4. வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறலாம்.

    5. வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறலாம்.

    6. சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

    7. ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறலாம், நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

    ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால்

    எல்லா நன்மைகளும் கிட்டும்.

    எனவே உங்கள் நிலைக்கு ஏற்ப விரதம் இருங்கள்.

    ×