search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அதிசயத் திருவிளக்குகள்!
    X

    அதிசயத் திருவிளக்குகள்!

    • விளக்கின் திருச்சுடர் எவ்வளவு காற்றடித்தாலும் சற்றும் அசையாமலும், ஆடாமலும் எரிகின்றது.
    • இந்த விளக்கானது, ஒரே சமயத்தில் மூன்று கிலோ எண்ணெய் ஊற்றும் அளவிற்கு பெரியது.

    திருப்பதி அருகே உள்ள ஸ்ரீ காளஹஸ்தி என்ற வாயுத் தலத்தின் கருவறைத் திருவிளக்குகளில்

    பல சுடர்களில் ஒரு திருச்சுடர் காற்றால் தாக்கப்படுவதைப் போல எப்போதும் அசைந்து ஆடிக் கொண்டே இருக்கின்றது.

    அந்தத் திருச்சுடரின் நடன கோலம், வாயுவின் வடிவில் இறைவன் நிலைத்து நிற்கின்றான் என்பதை உணர்த்துகிறது.

    மோகனூரில் உள்ள சிவன் கோவில் கருவறை விளக்கின் திருச்சுடர் எவ்வளவு காற்றடித்தாலும்

    சற்றும் அசையாமலும், ஆடாமலும் நின்று நிதானமாக நிலைத்து எரிகின்றது.

    இங்குள்ள இறைவனுக்கு "அசலதீபேசுவரர்" என்று பெயர்.

    மிகப்பெரிய திருவிளக்கு!

    ஏத்துமானூர் மகாதேவர் கோவிலின் திருவிளக்கு, அளவில் மிகப்பெரியது.

    அதன் குழி ஒரே சமயத்தில் மூன்று கிலோ எண்ணெய் ஊற்றும் அளவிற்கு பெரியது.

    கோவில்களில் எண்ணற்ற திருவிளக்குகள் உள்ளன.

    ஆனால் வேதாரண்யம் கோவிலில் உள்ள விளக்கு மட்டும் மிக்க அழகுடையது.

    Next Story
    ×